Posts

Showing posts from 2021

16 நெருங்கினா(ள்)ல்?

Image
  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்த வருடம் உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்க நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்🎉🎊🎀🎁✨️🎇🌟 கையில் கோடாரியோடு அமர்ந்திருப்பவனை காண்கையில் குண்டலகேசிக்கு அடி வயிற்றைக் கலக்கியது. ஏற்கனவே நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தது வேறு அவளுக்கு குளிரை கிளப்பியது. இதில் கமலியை சுமந்துகொண்டு நிற்பது  இன்னும் உடல் தள்ளாட்டத்தை  கொடுத்தது.. அவன் கொலைகாரன் என்று அவளுக்கு தெரியும். ஆனால் இப்பொழுது எதற்காக கையில் கோடாரியோடு அமர்ந்திருக்கிறான்..  இந்த ரகசிய அறைக்குள் வரத்தான் அவள் கமலியோடு குளக்கரைக்கு சென்றாள் என்று அவன் கண்டு பிடித்து விட்டானா..  பேயை கண்டதுபோல தன்னை பார்த்து சுவரோடு சுவராக சாய்ந்து நின்ற மனைவியை ஈவு இரக்கமே இல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான் வந்தியதேவன்." இந்த ரூம கண்டுபிடிக்க தான் நீ குளத்துக்கு போன.. அப்படித்தானே"(ஒன்று சொல்ல மறந்து விட்டேன். வந்தியதேவனை பற்றி நிறைய தகவலை கொடுத்த நான் முக்கியமான ஒரு தகவலை கொடுக்க மறந்து விட்டேன். அந்தத் தகவல் அவனின் குரல்  மிகவும் கடினமான குரல்.  அவன் ஹஸ்கி க

15 நெருங்கினா(ள்)ல்?

Image
குண்டலகேசி வந்தியத்தேவனின் கோபம் தெரிந்தும் அவளின் அடக்கமுடியாத ஆர்வக் கோளாறினால் மிகப் பெரிய தவறு ஒன்றை இழைக்க தயாராகி விட்டாள். அவள் அந்த தவறை செய்யக்கூடாது என தன்னால் முடிந்தவரை தடுத்தான் வந்தியதேவன்.  ஆனால் விதி யாரை விட்டது?கமலியை இழுத்துக்கொண்டு அவள் சென்று விட இப்பொழுது வந்தியதேவன் அந்த மர்ம அறையின் முன் நின்று கொண்டிருந்தான். அன்று குண்டலகேசி பார்த்தது உண்மையான அறையை தான்.ஆனால் அந்த அறைக்கு மறுபடியும் அவள் காலடி எடுத்து வைப்பதை அவன் விரும்பவில்லை.எனவே இரவோடு இரவாக அவள் மயக்கத்தில் இருக்கும் போது இந்த ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தான். பார்க்கத்தான் அது பெரிய சுவர் போல் இருந்தது.. அந்த சுவரின் ஒரு மூலையில் சென்று வந்தியதேவன் கைகளால் எதையோ அளந்தான். பின் அளவு முடிவடையும் இடத்தில் ஓங்கி ஒரு குத்து குத்த அந்த இடம் வட்டமாக பெயர்ந்து வந்தது. இப்பொழுது காலியான அந்த இடத்திற்குள் ஒரு விசை இருந்தது. அந்த விசையை பிடித்து இழுக்கு சுவர் ஒரு பாதி உள்ளே போனது. அன்று குண்டலகேசி உள்ளே சென்ற மர்ம அறை இப்பொழுது வெளியே தெரிந்தது.. கிணற்றை காணவில்லை என்று வடிவேலு திகைத்துப் போனது போ

14 நெருங்கினா(ள்)ல்?

Image
அனைவருக்கும் மேரி கிறிஸ்மஸ்..  விழாவை சிறப்பிச்சிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. மன்னிச்சு டியரிஸ்🎄🎄🎄🎄🎄 வந்தியதேவன் தனது வேக நடையை குறைத்து மெது நடையாக நடந்து குண்டலகேசியின் அருகே வந்தான். அவன் வாங்கிக் கொடுத்திருந்த உடையை தான் அவள் அப்பொழுது அணிந்திருந்தாள். அணியக்கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால்  இந்த சாதாரண உடை பிரச்சனையால் வேறு ஏதாவது ஒரு எமகண்டம் வந்துவிட்டால் என்ன செய்வது. எதற்கு வம்பு என்று அவன் வாங்கி தந்த அரைகுறை உடையை அணிந்து கொண்டு அவன் எதிரே நின்றாள். வெட்கம் ஒரு புறம் பிடுங்கித் தின்ன அவனை பார்க்க தெம்பில்லாமல் திரும்பி நின்று கொண்டாள். அவளை மெல்ல நெருங்கிய வந்தியதேவன் மெல்லக் குனிந்து அவளின் காதருகே " உனக்கு இதுல சம்பந்தமா"என்று வினவினான் அவனின் விரல் நுனி கூட அவன் மீது படவில்லை.அவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது அவன் எவ்வளவு பெரிய ரவுடி.. ஒருவேளை டானாக கூட இருக்கலாம்.இல்லையென்றால் மரண தண்டனை கிடைத்து சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முடியுமா. அப்படி ஒருவன் கற்புள்ளவனாக இருப்பானா?இந்நேரம் எத்தனை பேரை பெண்ணாண்டு இருப்பான்.. பல திரைப

13 நெருங்கினா(ள்)ல்?

Image
ஹாய் டியரிஸ் அப்டியே நம்ம blog க follow பண்ணலாம் தப்பு இல்ல. ரெண்டே பேருதான் follow பண்ணிருக்காங்க.உடனே notification வர follow பண்ணிருங்க.. சூரியன் உச்சிக்கு வந்த வேளையில் கண்விழித்த குண்டலகேசி நேற்றைய நிகழ்வுகளை தனக்குள் ஒட்டி பார்த்தாள். அவளின் நினைவுகளில் அந்த மர்ம அறை வந்து போனது. உடனே அடித்து பிடித்து எழுந்தவள் அந்த அறை இருந்த திசைக்கு ஒரே ஓட்டமாக ஓடினாள். அந்தோ பரிதாபம் பல்லு கூட விளக்காமல் அவள் பரபரப்பாக ஓடி வந்தது அந்த அறையை பார்க்கத்தான். ஆனால் அப்படி ஒரு அரை அங்கே இருந்த சுவடே தெரியவில்லை. பெரிய சுவர் ஒன்று தான்  முட்டுக் கட்டையாக நடுவில் நின்றது. " நேற்று இந்த ரூமுக்கு தான வந்தோம்.. இங்கதான ரூம் இருந்துச்சு..  என்னடா செவுரு இருக்கு.. ரூமு எங்க.. ரூம் கூடவா காணா போவும்"வடிவேலுக்கு கிணறு காணாமல் போனது போல குண்டலகேசிக்கு அறை காணாமல் போய்விட்டது. அவளும் நன்றாக தனது மூளையை ரிவைண்ட் செய்து பார்த்தாள். ஒவ்வொரு அறையாக கணக்கிட்டு அவள் வந்து அந்த அறையை காணவில்லை. ஒரே இரவில் எப்படி இந்த இடத்தில் சுவர் வரும்? அவள் குழம்பி நிற்கையில் அங்கே வந்து நின்றான் வந்

நெருங்கினா(ள்)ல்? 12

Image
வந்தியதேவன் விருவிருவென குண்டலகேசி இருந்த அறைக்கு வந்து கொண்டிருந்தான்.. அவன் முகத்தில் ஏன் என்று காரணம் அறியாமலேயே அவ்வளவு கோபம் குடி கொண்டிருந்தது.அவன் தன்னைத் தேடி வருகிறான் என்பதை அறிந்து கொள்ளாத குண்டலகேசி தன்னுடைய கையில் வைத்திருந்த பூட்டை எவ்வாறு திறப்பது என யோசனை செய்து கொண்டிருந்தாள்.அவளது வலது கையின் நடுவிரல் வேறு விண் விண்ணென்று வலியை கிளப்பியது.அந்தக் கல் கொஞ்சம் அழுத்தமாகவே அவளது விரலை தாக்கியிருந்தது. " என்ன இந்த பொட்டி ரத்த காவு வாங்குது.. இந்த பூட்டு உள்ள என்ன இருக்கு..பூட்டு இம்மாம் பெருசா இருக்கு.. சாவி போடுற ஓட்ட இத்தனூண்டு கொடுத்திருக்கான்.. எந்த அறிவு கெட்ட முண்டம் இத செஞ்சது.இந்தக் கோட்டைய பார்க்கும் போதே நினைச்சேன்.இதுல சந்திரமுகி மாதிரி என்னமோ பெரிய ரகசியம் இருக்கு. ஒருவேளை காஷ்மோரா மாதிரி என்னோட ராசி நட்சத்திரம் பொருந்தி போய் என்ன பலி கொடுக்க தூக்கிட்டு வந்துருக்கானோ..ஆத்தி விஷயம் தெரியாம இங்க உயிர் வாழ்ந்துட்டு இருக்கியே கேசி."அவள் பயத்தில் மிரண்டு கொண்டிருக்க அவள் உள்ளே வந்த கதவு வழியே இறங்கி வந்தான் வந்தியதேவன். அவன் வருவதைக் கூட உணரா

11 நெருங்கினா(ள்)ல்

Image
தன்னுடைய குட்டி மூளை சூடாக அவளும் பார்த்து பார்த்துதான் பல யோசனைகளை கையாண்டு தோற்றுப் போகிறாள்.  தோல்வி குண்டலகேசிக்கு ஒன்றும் புதிதல்ல.  ஆனால் அதனை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்த பிரச்சனையில் அவள் மட்டுமே சிக்கியிருந்தால் ஒருவேளை சுலபமாக அவள் தப்பித்து சென்று இருக்கலாம்.  இல்லையேல் ஒரு வைராக்கியத்தில் தன்னையே அழித்துக்கொண்டு இருக்கலாம். எதுவுமே செய்ய இயலாத நிலையில் அவளது குடும்பம் மொத்தமும் அவனது பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அவள் எது செய்தாலும் அது கண்டிப்பாக அவள் குடும்பத்திற்கு நேர் வினையாக சென்று சேர்ந்துவிடும். இப்பொழுதே அவளுடைய மாமன்மார்கள் ஆவுடையப்பனை ஆட்டுரலில் இட்லிக்கு மாவு ஆட்டுவது போல ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அக்காமார்கள் என்னதான் தன் கணவன்மார்களை அடக்கினாலும் அடங்கிப் போகிற ஜென்மமா அவர்கள்?இங்கே வந்து சரியாக ஒரு வாரமாகி விட்டது.இன்னும் இங்க இருந்து தப்பிக்கும் வழியை அவள் கண்டறிய முடியவில்லை. பார்வைக்கு வேண்டுமென்றால் வந்தியதேவன் வில்லனாக தெரியலாம். ஆனால் அவனிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் கடத்தி வந்தவளை உடனே கற

10 நெருங்கினா(ள்)ல்?

Image
வந்தியதேவன் இனி தான் உண்ணும் உணவுகளை குண்டலகேசியே சமைக்க வேண்டும் என்று கூறிவிட தலையிலடித்துக் கொண்டு அவனுக்காக சமையல் செய்து கொண்டிருந்தாள் குண்டலகேசி. எங்கிருந்து எப்படி கவனிப்பார்களோ தெரியவில்லை, அவள் அறையில் இருந்து வெளிவரும் போது அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் வேலையாட்கள் அனைவரும் எங்கேயோ போய் ஒளிந்து விடுகிறார்கள். ஒருவேளை இந்த கோட்டைக்குள் அதலபாதாளத்தில் ஏதாவது அறைகள் இருக்கிறதோ. அப்படி இருந்தால் அந்த அறைகளின் கதவுகள் எங்கே இருக்கும். ஒருநாள் இந்தக் கோட்டை முழுவதையும் சுற்றி அலசி ஆராய்ந்து விடவேண்டும் என்ற எண்ணத்தோடு அம்மியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்தாள்..  உயிருள்ள பால் நண்டுகளை சற்று நேரம் முன்புதான் சுத்தம் செய்து வைத்திருந்தாள்.அதுவும் யூடியூப் பார்த்து. அவள் வீட்டில் ஆவுடையப்பன் வாங்கும் சம்பளத்தில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் கோழியே வாங்குவார்கள். இப்படி இருக்க நண்டு இறால் இவைகளையெல்லாம் அவள் பாடப் புத்தகங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டும்தான் பார்த்திருக்கிறாள். ஒருவழியாக நண்டை சுத்தம் செய்து ஓரமாக வைத்துவிட்டு குழம்புக்கு தேவையான மசாலாக்களை அம்மியில்

9 நெருங்கினா(ள்)ல்?

Image
உடல் நிலை அவ்வப்போது வேலையை காட்டுவதால் ud தாமதமாகி விட்டது.. 🙏🏻🙏🏻🙏🏻 "என்ன குடும்பமே சேத்துல உருளுற பன்னிங்க கணக்கா உருண்டுட்டு இருக்கீங்க.."என்றான் கோவலன். "அதானே வேளா வேளைக்கு எந்த வேலையத்த பொறம்போக்கோ இதுங்கள அள்ளிக்கிட்டு வந்து சோத்த போட்றான்ல, அதான் மூக்கு புடிக்க தின்னுட்டு உருண்டுட்டு இருக்குங்க"என்றான் வைரமுத்து. "இந்தாடி மாது, கண்ணகி உங்க புருசனுங்க பேசுற பேச்ச பாத்து பேச சொல்லு.நாம என்ன ஆசப்பட்டாடி இங்குட்டு வந்து ஒக்காந்து இருக்கோம்.. எவனோ எடுபட்டவன் குண்டலகேசிய தூக்கிட்டு போய் வெச்சிருக்கேன். அந்த கட்டயில போறவன் எதுக்குடி அவளோட சேர்த்து நம்மளையும் அள்ளிக்கிட்டு வந்துருக்கான்"சிந்தாமணி நீட்டி முழங்க "அவன் கடத்தலே கொஞ்சம் டிப்பிரண்டா இருக்குடி.. அவள யாராச்சும் தூக்க முடியமா.. ஆனா தூக்கிட்டான் பாரேன்"வளையாபதி அங்கலாய்த்தாள். "சீ சரியான பீட புடிச்ச குடும்பத்தில சம்பந்தம் பண்ணிகிட்டோம்.. பாரு மாமனார் எப்படி கால நீட்டி படுத்துருக்கானு.. ஐயோ என் வியாபாரம் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ.. நான் இருந்தாலே ஒழுங்காக கடை பையனுங்க வேல

8 நெருங்கினா(ள்)ல்?

Image
உடல் நலமில்லாத காரணத்தினால் அப்டேட் கொடுக்க தாமதமாகி விட்டது🙂 சமையலுக்கு மசாலாவை அம்மியில் வைத்து அரைத்துக் கொண்டிருந்தாள் குண்டலகேசி.அவள் கழுத்தில் நேற்று புத்தம் புதிதாக இடம் பிடித்திருந்த தாலி மார்புக்கும் காற்றுக்கும் இடையே உஞ்சலாடிக் கொண்டிருந்தது. அதனை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு எடுத்து ஆடையின் உள்ளே மறைத்து வைத்தாள்.என்ன மறைத்து என்ன தெய்வ சாட்சியாக வந்தியதேவனின் வாழ்க்கையின் பாதியாகி விட்டாளே. அவளின் நினைவுகள் ஒரு நாளுக்கு பின்னோக்கி சென்றது. அன்று புதைகுழியில் தூக்கிப் போட்டு அவளுக்கு உயிர் பயத்தை காட்டியவனை ஒன்றும் செய்ய இயலாத தனது விதியை நொந்துக் கொண்டு அவள் கண்ணீருடன் படுத்து கொண்டிருக்க அம்மா எனும் குரல் கேட்டு படக்கென்று திரும்பி பார்த்தாள்.அங்கே பன்னிரண்டு வயது சிறுமி ஒருவள் உச்சியில் கொண்டையோடு நின்றிருந்தாள். இதுவரை அவனை தவிர வேறு யாரையும் இந்த கோட்டையில் அவள் பார்த்ததில்லை. புதிதாக இந்த குழந்தை வந்து நிற்கவும் அவளின் அழுகை மறைந்து விட்டது. வேகமாக எழுந்தவள்"பாப்பா யாரு நீயு. உன்னயும் தூக்கிட்டானா அவன்" "என்ன யாரும் தூக்கலக்கா.. என்