தாகம் 35
பூங்காவிற்கு சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. மின்னலின் தனயன் என்பவனுக்கும் சோலை பாண்டியனுக்கும் கூட சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது..
மின்னல் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தான் நாகா.
"ண்ணே அண்ணியோட அம்மாவுக்கு சொல்லலையா" மின்னிலிடம் பேச்சில்லை.. நீண்ட நேரமாக அவனிடம் தோன்றிய மயான அமைதி நாகாவை பயமுறுத்தியது. மின்னலை மீறி தேவகியிடம் பூங்காவனத்தின் நிலையை அவனால் கூற முடியாது. பூங்காவனத்திற்கு அழைத்து அவள் அழைப்பை ஏற்காமல் போக மருமகனுக்கும் அழைத்து பார்த்திருந்தார் தேவகி. இருவருமே அழைப்பை ஏற்காமல் இருக்க
" அம்மா எதுக்கு இப்படி நீ அவங்கள டார்ச்சர் பண்ற? அக்கா மாமாவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னைக்கு தான் சந்தோஷமா வெளியே போறாங்க.. அவங்க எங்கேயாச்சும் ஜாலியா போயிட்டு இருப்பாங்க.. நீ எதுக்கு அவங்களுக்கு கால் பண்ணி தொல்லை கொடுக்கிற.. சாப்பாடு வேணும்னா அக்காவே ஃபோன் பண்ணிருப்பா.. அவங்களுக்கு சாப்பிட தெரியாதா.. நீ வாம்மா"அம்மாவை அழைத்தாள் செல்வி.
" அது இல்லடி எனக்கு என்னமோ படபடன்னு வருது. இவ்ளோ நேரம் நான் போன் அடிச்சா எடுக்காம பூங்கா இருக்க மாட்டாளே.. அதான் மாப்பிள்ளைக்கும் போட்டு பார்க்கிறேன் அவரும் எடுக்க மாட்டறாரு.. என்னவோ ஏதோனு பயமா இருக்குடி." தன் கவலையை பகிர்ந்தார் தேவகி.
"ம்க்கும் உன் மாப்பிள்ளை வேலை வெட்டி இல்லாம சும்மா தான் இருக்காரு பாரு நீ போன் அடிச்சா எடுக்கறதுக்கு.. மாமாவுக்கு ஆயிரம் வேலை. இருக்கிற நேரத்துல அக்கா கூட சந்தோஷமா இருக்காரு. நீ ஏம்மா அதையும் இதையும் நெனச்சு உன் மனசு கெடுத்துக்கறதும் இல்லாம அந்தத் தாட்ட அக்கா மேல போடுற.. நீ எதையும் நினைக்காம அமைதியா இரு அக்கா அங்க நல்லா தான் இருக்கா.." தேவகியின் பரிதவிப்பு புரியாமல் பேசினாள் செல்வி..
செல்வி சொல்லிய பிறகு பூங்காவுக்கு அழைக்க தேவகிக்கும் சங்கடமாக இருந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இடையே இருந்த பிணக்குகள் அனைத்தும் சரியாகி இப்பொழுது தான் இருவரும் ராசியாகி இருக்கிறார்கள். பூஜை வேளை கரடி போல தான் இருக்கக் கூடாது என்று மனதார மகளும் மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டார் தேவகி.
மகாலட்சுமியை வீட்டில் இருக்க சொன்னாலும் அவளும் சகோதரிகளோடு மருத்துவமனைக்கு வந்தே ஆகுவேன் என்று வந்து கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தாள்..
நேரங்கள் கடக்க முதலில் சோலை பாண்டியனை பரிசோதித்த மருத்துவர் தான் வெளியே வந்தார்.. நேராக மின்னலிடம் வந்தவர் அங்கிருந்த மூன்று பெண்களையும் பார்த்தார். அவர் வேறு யாருமில்லை சோலை பாண்டியனின் குடும்ப மருத்துவர் தான்..
"அது வந்து.." மருத்துவர் சொல்ல வந்து தயங்க செல்வ லட்சுமி முன்பு வந்தாள்..
"என்னாச்சு டாக்டர்.. எங்கப்பா இருக்காரா இல்ல செத்துட்டாரா?" சோலை பாண்டியனின் நிலையை எப்படி கூறுவது என்று மருத்துவர் யோசித்துக் கொண்டிருக்க அது ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போல செல்வலட்சுமி பேச மறுத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை..
"செல்வா நீயாம்மா இப்படி பேசுற?" மருத்துவர் ஆச்சரியமாக கேட்க..
" நானே தான் டாக்டர் என்னன்னு சொல்லுங்க.. அவரு இருப்பாரா போயிடுவாரா" தந்தை மகள்களின் இடையே ஏதோ பிணக்கு என்பதை மருத்துவர் புரிந்து கொண்டார். எனவே சொல்ல வந்ததை கனகச்சிதமாக சொல்லி சென்றார்.
"செல்வா உங்க அப்பா படில இருந்து கீழ விழுந்ததுனால அவரோட முதுகெலும்புல பலமா அடிபட்டு இருக்கு. அவரோட ஆண் குறியிலயும் பலமா அடிபட்டிருக்கு.. சோ இனிமே உங்க அப்பாவுக்கு கழுத்துக்கு இடுப்புக்கு கீழே எந்த பார்ட்ஸ்ம் வேலை செய்யாது. கைய கூட ஓரளவுக்கு தான் அசைக்க முடியும்.. இங்கே வச்சு அவரை பார்த்துக்குறிங்களா?இல்லை வீட்டுக்கு கூட்டிட்டு போய் நர்ஸ் வச்சு பாத்துக்குறிங்களா?" செல்வ லட்சுமி அமைதியாக இருக்க
" வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் டாக்டர்" மின்னல் இடைப் புகுந்து பேசினான்..
" தென் ஆல்ரைட் பேஷண்ட் இப்பதான் கண்ணு முழிச்சி இருக்காரு உடனே போய் யாரும் அவரை பார்த்து டிஸ்டர்ப் பண்ண வேணாம். கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க எல்லாம் போய் பார்க்கலாம்" மருத்துவர் சென்றுவிட
"பாத்தியா மின்னலு.. நாமதான் சில நேரத்துல கடவுளே இல்லைன்னு சொல்றோம்.. இங்க நடக்குற அநியாயம் அக்கிரமத்தை எல்லாம் பார்த்தா கடவுள் செத்துப் போய்ட்டாருன்னு கூட முடிவு பண்ணிடறோம்.. ஆனா அப்படி இல்ல கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காரு. யாருக்கு எப்ப எந்த நேரத்துல கொடுக்கணும்னு அவருக்கு சரியா தெரிஞ்சிருக்கு இல்லையா.. மூனு பிள்ளைங்களையும் எங்க அப்பாவுக்கு ரொம்ப செல்லம்னா அது மகா தான்.. இன்னிக்கு அவ பெத்த பிள்ளைய கூட தொட முடியாத ஒரு கேவலமான நிலைமை.." சொல்லிவிட்டு கேவி அழுதாள் செல்வ லட்சுமி..
"அழாத செல்வா.. நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க.." மின்னல் அமைதியாக கூற
"இல்ல மின்னலு.. நாங்க இங்க இருக்கோம்.. பூங்காவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? அவளுக்கு உண்மை தெரியாது இல்லையா? நாங்க இங்க இருந்தே ஆகணும்.." சந்தான லட்சுமி அங்கிருக்கும் நிலவரத்தை அவனுக்கு சுட்டி காட்டினாள். அதற்கு மேல் அவர்களை போக சொல்ல மின்னலுக்கும் இயலவில்லை.
மேலும் நிமிடங்கள் கழிய பூங்காவனம் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவயே பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்..
அன்று ஒரு நாள் பூங்கா அவனை சாடியது நினைவுக்கு வந்தது..
"உங்க மனசுல என்னவோ இருக்கு.. என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு.. சொல்ல மாட்றீங்க. ஒரு கண் ஜாடை கூட இல்லை. ஆனா என்னால உணர முடியுது.. நீங்க பக்கத்துல இருந்தாலும் தூரமா இருந்தாலும் என் மனசுல உங்க நினைப்பு இருந்துகிட்டே இருக்கு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு ஏழு கழுதை வயசாச்சு உங்களுக்கு தெரியாதா.. இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா..
நீங்களே அரசியல்வாதி உங்களுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கணும்? நடிச்சு நடிச்சு தானே மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க. இந்த நடிப்பு எல்லாம் நீங்க வெளிய வச்சுக்க கூடாதா.. நான் யாரு உங்க பொண்டாட்டி தானே.. அப்படித்தானே நீங்க சொல்றீங்க. வெளிய மட்டும் எம்பி பொண்டாட்டின்னு பந்தாவா என்ன சொல்றாங்க. ஆனா உள்ள நான் யாரு உங்களுக்கு?"அவளது கேள்விகளுக்கு வழக்கமான தனது மௌன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான் மின்னல்.
சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் "என்னோட துடிப்பும் என்னோட தவிப்பும் உங்களுக்கு.. ஒரு நாள் வரும்.. எனக்காக நீங்க துடிப்பீங்க. எனக்காக நீங்க தவிப்பீங்க. ஐயோ ஐயோன்னு அடிச்சுகுவிங்க. அப்ப சத்தியமா நான் உங்க பக்கத்துல இருக்க மாட்டேன். பக்கத்துல இருக்கிற வரைக்கும் தானே உங்க கால் தூசிக்கும் சமானமா என்ன நினைக்கிறீங்க.. நீங்க வேணும்னா பாத்துக்கிட்டே இருங்க அப்படி ஒரு நாள் கூடிய சீக்கிரம் வரத்தான் போகுது" எந்த நேரத்தில் எவ்வித மனநிலையில் கூறினாலோ தெரியவில்லை அவள் கூறியதற்கு ஆயிரம் மடங்கான துடிப்பும் தவிப்பும் மின்னலின் மனதிற்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ஐயோ ஐயோவென்று வெளிப்படையாக அடித்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு வினாடியும் மனதிற்குள் அவளை நினைத்து கத்தி கதறிக் கொண்டிருக்கிறான் மின்னல் வீரபாண்டியன்..
நேரங்கள் செல்லச் செல்ல மின்னலின் மனோதிடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்தது.
"ம்மா நீ என்கிட்ட சத்தியம் பண்ணிருக்க.. எப்பவும் என் கூட இருப்பேன்னு. என்னால முடியல அம்மா. சுத்தமா முடியல. வெளிப்பார்வைக்கு நான் அமைதியா உட்கார்ந்து இருக்கிற மாதிரி தோணும். ஆனா உள்ள ஒவ்வொரு வினாடியும் நான் செத்துகிட்டு இருக்கேன்.. ஏம்மா எனக்கு இப்படி?
கடவுள் நம்பிக்கையை விட உன்மேல நான் வெச்சிருக்கிற நம்பிக்கை பெருசு.. உண்மையாவே இந்த நிமிஷம் என்ன சுத்தி நீ இருந்தா எப்படியாவது என் பொண்டாட்டிய காப்பாத்தி கொடு.. அவ என்ன புரிஞ்சுக்கலனாலும் பரவாயில்லை. அவ நல்லபடியா திரும்பி வந்தா போதும்.. நான் சொல்றத கேட்டு என்கூட வாழ்ந்தாலும் சரி, இல்ல தனியா வாழனும்னு அவ ஆசைப்பட்டாலும் சரி அது அவளோட விருப்பம்.. எனக்கு என் கண்ணு முன்னாடி அவ முழுசா திரும்பி வந்துடனும் அவ்ளோ தான்..
தம்பிய பாத்துக்கோன்னு கடைசியா என்கிட்ட சொன்ன. என் கையாலேயே அவனை? அந்த இடத்துல நீ இருந்திருந்தா என்னம்மா செஞ்சிருப்ப? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலம்மா. மண்டலாம் ஓடுது.. யோசிக்க முடியல.. அவனையும் காப்பாத்தி கொடுத்துரு.." மானசிகமாக தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான் மின்னல்.
நாகா மின்னலை சுரண்டினான்.
"ண்ணே டாக்டர் வராரு" நிமிர்ந்து பார்க்க டாக்டர் மின்னலை நெருங்கினார்.
"உங்க ப்ரோதர் கையில பட்டிருந்த புல்லட்ஸ நாங்க வெளியே எடுத்திட்டோம்..ஹெவி பிளட் லாஸ்.. ரெண்டு கையும் இப்ப தூக்க முடியாது. ஸ்ட்ரெய்ன் பண்ண வேணா..தேன் உங்க வைஃப் கண்ணு முழிச்சுட்டாங்க சார்.. உடம்பு முழுக்க வீக்கமா இருக்கு. அவங்க பேபிய ஸ்கேன் பண்ணி பார்த்தாச்சு. பேபி இஸ் சேவ் நொவ்.. ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல.. அவங்க பிரக்னண்டா இருக்கிறதுனால எங்களால ஹெவி டோஸ் மெடிசன்ஸ் எதுவும் கொடுக்க முடியல.. இப்போ நீங்க போய் அவங்கள பாக்கலாம்.." மருத்துவர் பேசிவிட்டு செல்ல அமர்ந்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.
"ண்ணே என்ன அப்படியே உட்கார்ந்துருக்க வா போய் அண்ணிய பார்க்கலாம்.." நாகா அவசரப்படுத்தினான்.. இருந்தும் எழாமல் ஒரு நிமிடம் கண்ணை மூடினான் மின்னல்.
தெய்வமாக அவனது அம்மா கண் முன் தோன்றினாள் மானசீகமாக.
"ம்மா நீ என் கூட தான் இருக்க" என்றவன் கண்களை திறந்து படக்கென நாற்காலியில் இருந்து எழுந்தான். வேகமாக நடந்து சென்று பூங்காவனம் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். அமைச்சர் என்பதால் யாருமே அங்கே தடுக்கவில்லை. மின்னலைப் பின் தொடர்ந்து நாகா மற்றும் மூன்று சகோதரிகளும் சென்றார்கள்.
முகமெல்லாம் வீங்கி ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது பூங்காவனத்தின் வலது கையில்.. செக்கச் சிவந்த அவள் மேனியில் அந்தக் காயங்கள் படும் பயங்கரமாக காட்சியளித்தது.. கண்களைத் திறந்திருந்தவள் தன் அருகே மின்னல் வர அவனையே பார்த்தான்.. அவள் கண்களில் ஏகப்பட்ட கேள்விகள்.. முகம் முழுவதும் குழப்பத்தில் வாடியிருந்தது..
அவள் அருகே வந்த மின்னல் அமைதியாக நிற்க இடது கையை நீட்டினாள் பூங்காவனம். நீட்டிய கரத்தை வேகமாக பற்றிக் கொண்டான் மின்னல்.. அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள பூங்காவின் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் பக்கவாட்டில் வழிந்தது..
குனிந்து பூங்காவனத்தின் நெற்றியில் முத்தமிட்டான் மின்னல் வீரபாண்டியன். அப்பொழுது அவனது விழி நீர் அவளது நெற்றியில் விழுந்தது..
"அழறிங்களா.."அவனிடம் அமைதி.
" எனக்காகவா" அப்பொழுதும் அமைதி ஆனால் இம்முறை குனிந்து அவளது இதழில் தன் இதழை ஆழமாக பதித்தான் மின்னல் வீரபாண்டியன். எத்தனையோ முறை அவளை முத்தமிட்டு இருக்கிறான். ஆனால் இந்த முத்தத்தில் காமம் தவிர்த்து கொட்டிக் கிடந்த காதலை அவளால் உணர முடிந்தது.
" ரொம்ப வலிக்குதா? என்ன மன்னிச்சிடுடி.. உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்"மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் மின்னல்.
" இப்படி அடிச்சு போட்டா வலிக்காம? உங்களோட மன்னிப்பு எனக்கு தேவையில்லை. ஆனா எனக்கு நிறைய கேள்வி இருக்கு அதுக்கு நீங்க பதில் சொல்லணும்".. அந்த நிலையிலும் தனக்கு சரிசமமாக வாயாடும் அவளை எண்ணி சிரிப்பு வந்தது அவனுக்கு.
" வீட்டுக்கு போயிட்டு அப்புறம் பதில் சொல்றேன்" அவளுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினான் நானும் மின்னல்.
"ம்ஹும்.. இப்பவே.. இங்கயே.. வீட்டுக்கு போயிட்டா திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்.." கனிவாக அவளை பார்த்தவன் மெல்ல அவளை தூக்கி அவள் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான். நாகா, செல்வ லட்சுமி, அவளது குழந்தை சந்தான லட்சுமி, மகாலட்சுமி அவளது குழந்தை இப்படி அனைவரும் அங்கிருந்தாலும் யாரைப் பற்றியும் அவன் கவலை கொள்ளவில்லை.
தன்னவளை தன்மீது சாய்த்துக் கொண்டு வாழ்வில் முதன்முறையாக மின்னல் வீரபாண்டியன் யார் என்பதை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.
" உன் மனசுல ஓடுற கேள்வி எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு. அந்த பதிலை கேட்டதுக்கு அப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். தாலிய கழட்டிய மூஞ்சில விட்டு எறிஞ்சிட்டு போனாலும் இல்ல கடைசி வரைக்கும் என் கூட வாழ்ந்தாலும் சரி எதுவாயிருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்.. முடிவு உன் கையில.. அதுவரைக்கும் என் கைக்குள்ள நீ இரு" அவளை தன்னுடைய இரு கரத்திற்குள்ளேயும் அடக்கிக் கொண்டான்..
"அங்க நீ பார்த்தது என்னோட தம்பி.. வர்மா.. நான் பொறந்து பத்து நிமிஷம் கழிச்சு பொறந்தவன்.. எங்க ஊரு தேனி பக்கத்துல ஒரு கிராமம்.. சின்ன வயசிலேயே அப்பா இறந்து போயிட்டாரு. இருந்து கொஞ்சூண்டு நிலத்துல அம்மா எங்கள நல்லா வளர்த்தாங்க. எனக்கு ஒரு அக்கா இருந்தா.. ரொம்ப சின்ன குடும்பம். சந்தோஷமான வாழ்க்கை.
ஒரே நாள்ல அது எல்லாமே உன்னை விட்டு போனா உனக்கு எப்படி இருக்கும்? அந்த ஒரு நாள் என்னோட வாழ்க்கையில வந்துச்சு. எலக்ஷன் டைம். மீட்டிங்ல பேசறதுக்காக சோலை பாண்டியன் எங்க ஊருக்கு வந்தான். எங்க ஊரு வளந்து வர கிராமம்.. மீட்டிங்ல பேசினவன் கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டு இருக்கும்போது எப்படியோ எங்க அக்கா அவன் கண்ணுல விழுந்துடுச்சு..
அப்போ என் அக்காவுக்கு வயசு பதினாலு.. எப்படி எங்க அக்காவ தூக்கினானு எனக்கு இன்ன வரைக்கும் தெரியல.. அதுவும் எங்க வீடு பூந்து. ஊருக்குள்ள இருக்க பிடிக்காம எங்க அப்பா தென்னந்தோப்புக்குள்ளே சின்னதா வீடு கட்டி தான் இருந்திருக்காரு. அவருக்கு பிடிச்ச தனிமை தான் எங்க அக்காவுக்கு எமனா ஆச்சு.
சின்னப்பொண்ணு கூட பாக்காம என் அக்காவை.. எங்களுக்கு ரெண்டு காடு இருக்கு. தென்னந்தோப்பு.. அதுக்கு கொஞ்சம் தூரம் உள்ள போனா மாந்தோப்பு.. மாந்தோப்புக்கு போயிட்டு வந்த எங்க அம்மா வீட்டுக்குள்ளே எங்க அக்கா கத்துறத கேட்டு வேகமா ஓடி இருக்காங்க. அவங்க போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. என் அக்காவை கட்டிப்பிடிச்சு அழ தான் முடிஞ்சது.
அந்தப் பொறுக்கி அதோட போய் இருந்திருக்கலாம். ஆனா அவன் என் அம்மாவையும் விட்டு வைக்கல.. நடுத் தோப்புக்குள்ள ஊருக்குள்ள கத்துறது ஊருக்குள்ள யாரு காதுலையும் விழல.. இல்ல விழுந்தும் நம்மளுக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கி போயிட்டானுங்களானு தெரியல.. அப்பதான் நானும் என் தம்பியும் விளையாடிட்டு வீட்டுக்கு வந்தோம்.
எந்த மகனும் பார்க்க கூடாத காட்சி.. நாங்க பாக்குறப்போ சோலை பாண்டியன் எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளியே போயிட்டு இருந்தான். எங்கள அவன் பாக்கல.. சின்ன பொண்ணு எங்க அக்கா.. அதோட பாத்ரூம் போற இடம் எல்லாம் ஒரே இரத்தம். என் அக்காவ கட்டி புடிச்சிட்டு உடம்புல விட்டு துணி இல்லாம என் அம்மா..
எங்கள பார்த்ததும் "ஓ"ன்னு எங்க அம்மா அழுத அழுக இன்னும் என் நினைப்புல அப்படியே இருக்கு. நான் வேகமா கொடியில காஞ்சுட்டு இருந்த என் அம்மா சேலை உருவி எடுத்துட்டு போய் அவங்க மேல போர்த்தி விட்டேன்..
என் தம்பி அம்மாவை கட்டி பிடிச்சி அழுந்தான்.. என்னம்மா ஆச்சு யாருமா அவன்? உன்னையும் அக்காவையும் என்னமா பண்ணான்னு.. எங்க அம்மா எதுவுமே சொல்லல. எங்க அக்காவுக்கு பேச்சு மூச்சே இல்ல..
என்னையே தம்பியும் கட்டிப்பிடிச்சு எங்க அம்மா அழுதாங்க. அப்புறம் என்ன நினைச்சாங்களோ வீரா சோத்துப் பானையும் குழம்பு பானையும் தூக்கிட்டு வான்னு சொன்னாங்க.. நானும் தூக்கிட்டு வந்தேன். குழம்பு சோத்துல ஊத்தி எனக்கும் என் தம்பிக்கும் ஊட்டி விட்டாங்க..
நாங்க வேணான்னு சொல்லியும் அவங்க கேட்கல. பேச்சு மூச்சு இல்லாத எங்க அக்காவ பாக்க எங்களுக்கு பயமா இருந்துச்சு. ரெண்டு பேத்துக்கும் சோறு ஊட்டி விட்ட எங்க அம்மா வேகமா எந்திரிச்சாங்க. மர பீரோல அவங்க சேர்த்து வச்சிருந்த பத்து பவுன் நகை மூவாயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாத்தையும் எடுத்து என் கையில கொடுத்தாங்க.
தம்பியை நீ நல்லா பாத்துக்கணும் வீரா. நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். இங்க நடந்ததை பத்தி யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. தனியா இருக்கிற பொம்பளைங்கள தான் இந்த ஊரு உலகம் தப்பா பேசும். எந்த சூழ்நிலை வந்தாலும் தம்பிய மட்டும் விட்றாத.. நீயும் உன்ன பாத்துக்கோ. அம்மா எப்பவும் கூடவே இருப்பேன்.. அப்படின்னு எனக்கும் என் தம்பிக்கும் முத்தம் கொடுத்து நீங்க ரெண்டு பேரும் போயி உங்க பெரியப்பாவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க..
நம்பி வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் தான் ஓடிருப்போம். அதுக்குள்ள வீடு நெருப்பு புடிச்சு எரிய ஆரம்பிச்சு.. நானும் என் தம்பியும் திரும்பவும் வீட்டுக்கு ஓடி வந்தோம். நெருப்பு எரியிறத பார்த்து அக்கம் பக்கத்து தோப்புக்காரங்க எல்லாரும் ஓடி வந்தாங்க. வீடு நெருப்பு புடிச்சுகிச்சுன்னு நினைச்சு அணைக்க முயற்சி பண்ணாங்க. என் அம்மாவும் அக்காவும் எங்க கண்ணு முன்னாடியே..
பிறவியிலிருந்து என் தம்பி ரொம்ப அமைதி. எங்க அப்பா மாதிரி. பயந்த சுபாவம்.. ஊரும் உறங்க நினைச்ச மாதிரி அது சாதாரண விபத்து இல்லன்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். மானம் போயிடும்னு எங்க அம்மா அவங்கள அவங்களே அழிச்சிக்கிட்டாங்க..
காரியம் எல்லாம் முடிகிற வரைக்கும் பெரியப்பா வீட்ல இருந்தோம்.. அப்போ எங்களுக்கு பத்து வயசு தான்.. அம்மா கொடுத்துட்டு போன நகையும் காசும் என்கிட்ட அப்படியே இருந்துச்சு. அதுக்கப்புறம் ஸ்கூல் முடிகிற வரைக்கும் பெரியப்பா வீடு தான்.. என் தம்பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. முன்ன விட ரொம்ப அமைதியாயிட்டான். அவன் தான் அம்மாவை என்னமோ பண்ணிட்டான் அக்காவை என்னமோ பண்ணிட்டான்.. அவன விடக்கூடாதுனு சொல்லிக்கிட்டே இருப்பான்.
என் மனசுலயும் அது மட்டும் தான் பட்டுச்சு.. பத்தாவது முடிச்ச கையோட சென்னை வந்துட்டேன் என் தம்பிய கூட்டிட்டு. தோப்பு எல்லாத்தையும் என் பெரியப்பா கிட்ட சொல்லி வித்துட்டு அவரு ஒரு பெரிய தொகையை ஆட்டைய போட்டுட்டாரு.இவ்ளோ தான்டானு கொஞ்சூண்டு காச கையில கொடுத்து அனுப்பிட்டாரு...
என் தம்பி இங்க இருந்தா அவனோட மனநிலை பாதிக்கப்பட்டாலும் என் ஃரெண்டோட அப்பா கிட்ட பேசி அவன கொடைக்கானலில் சேர்த்தேன். சின்ன வயசுல இருந்து நான் அரசியலுக்குள்ள நுழைஞ்சேன்.. 18 வயசுல முத சம்பவம் செஞ்சேன். அதுவரைக்கும் சின்ன பையனா எடுபுடி வேலை செஞ்சுகிட்டு இருந்த என்ன மத்தவங்க திரும்பி பார்த்தாங்க. அடிதடி கட்டப்பஞ்சாயத்துனு அந்த வயசுல கத்தியை தூக்கனேன்..
என் தம்பியை எதுலையும் நான் இழுக்கல. அவன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வச்சேன்.. படிச்சு முடிச்சதுக்கு அப்புறமும் அவன் இங்க வரவே இல்லை. ஏன்னா நான் சோல பாண்டியன் கிட்ட சேர்ந்தத அவனால ஏத்துக்க முடியல.. நானும் ஒன்னும் ஆசைப்பட்ட அவன் கிட்ட சேரல. கூடவே இருந்து அவனோட நம்பிக்கைய சம்பாதிச்சு அவனை வேரோடு அழிக்கணும்னு பார்த்தேன்.
நானே என் தம்பிய போய் பார்த்து அவன் கிட்ட இதெல்லாம் சொன்னேன். நேரம் வரும்போது அவன் கதையை முடிக்கிறன்னு என் தம்பிக்கு தைரியம் சொல்லிட்டு வந்தேன். வர்மாவ பொறுத்த வரைக்கும் கத்தியை எடுத்தோமா அவனை ஒரே போடா போட்டமான்னு இருக்கணும்னு ஆசைப்பட்டான்.
ஆனா சோலை பாண்டியன் அப்படி சாகக்கூடாது.. எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கையை அவன் கெடுத்துருக்கான். ஒரே போடா அவனை போட்டு? நான் ஏன் ஜெயிலுக்கு போகணும்.. என்னோட வாழ்க்கையை தாரவார்க்க எனக்கு விருப்பம் கிடையாது. அதேசமயம் இவ்வளவு தப்பு செஞ்சவன் ஒரே வெட்டுல சாவரதையும் என்னால ஏத்துக்க முடியாது..
எனக்கு தெரிஞ்சு அவன் தப்பு செஞ்சாலும் அதனால தான் நான் வாயை மூடிக்கிட்டு நின்னேன்.. உன்ன கல்யாணம் பண்ணது எல்லாமே என் தம்பிக்கு தெரியும்.. திடீர்னு நேத்து சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டான்.
ஒரு ஹோட்டல்ல தங்கி இருந்தவன நான் போய் பார்க்க இப்ப நீ ரொம்ப மாறிப்போயிட்ட அம்மா அக்காவை நீ மறந்துட்ட. அந்த சோலை பாண்டியன் ஓட வாரிசா மாறிட்ட. உன் பொண்டாட்டி உன் அடியோடு மாத்திட்டான்னு கிறுக்கன் மாதிரி கத்திக்கிட்டு இருந்தான்..
அவன சமாதானப்படுத்தி பேசிட்டு இருக்கும்போது தான் செல்வா எனக்கு போன் பண்ணுச்சு. செல்வாவும் சந்தனாவும் அவங்க அப்பாவுக்கு சப்ரைஸ் கொடுக்கணும்னு சொல்லாம கொள்ளாம ஊருக்கு வந்துட்டாங்க.. அவங்கள விசிட் பண்ண தான் மகாலட்சுமி ஃரண்டுக்கு விசேஷம்னு சொல்லிட்டு போனா..
கொஞ்ச நாளாவே மகாலட்சுமிக்கு சோலை பாண்டியன் நடத்த மேல ஏதோ சந்தேகம்.. இப்பல்லாம் பொண்ணுங்கள தொடாம என்னமோ போல சுரேஷ் கிட்ட சொன்னத மகாலட்சுமி ஒரு நாள் கேட்டுட்டா. அப்போல இருந்து அவ அப்பாவ கண்காணிக்க ஆரம்பிச்சா. நினைச்ச மாதிரி எதுவும் சிக்கலானாலும் என்னமோ தப்பா இருக்குனு அவ மனசுல பட்டுச்சு..
என்கிட்ட கேட்டா. அப்போ நான் சொல்லல.. ஆனா இந்த நேரத்துக்காக தான் நான் காத்திருந்தேன். சோலை பாண்டியனோட உயிரே அவரோட மூணு பொண்ணுங்க தான். அதுக்கு தகுந்த மாதிரி மூணு பொண்ணுங்களும் ஒரே நேரத்துல வந்தாங்க. என் தம்பி வந்த அதே நேரம் தான் செல்வா சந்தனா மகா மூணு பேரும் என்ன உடனே பாக்கணும்னு வர சொன்னாங்க.
அந்த நேரம் எனக்கு முக்கியமான மீட்டிங். உன்ன வேற கிளம்பி இருனு சொல்லிட்டேன். ஆபீஸ்ல இருந்தாக வேண்டிய கட்டாயம் வேற வழியே இல்லாம என் தம்பியை என்ன மாதிரி வேஷம் போட வெச்சு என்னோட போன அவன் கிட்ட கொடுத்து அனுப்பி வச்சேன்.. நீ போன் பண்ணா இன்னைக்கு எங்கேயும் போகல வீட்டிலேயே இருன்னு சொல்ல சொன்னேன்..
நேரா இவங்க வர சொன்ன இடத்துக்கு போனேன்.. மொத மூணு பேரும் நான் சொன்னதை நம்பவே இல்ல.ஆனா மகா கொஞ்சம் யோசிச்சா.. அப்போதான் அவளுக்கு வலி வந்தது.. அவள கூட்டிட்டு போய் பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல் சேர்த்து கூடவே இருந்து எல்லாத்தையும் கவனிக்க, சரியா அவளுக்கு குழந்தை பொறக்குற நேரம் என் மனசுல எதுவோ தப்பா பட்டுச்சு.
செல்வா ஃபோனை வாங்கி நாகாவுக்கு கால் பண்ணேன். அவன் வேண்டா வெறுப்பா பேச என்னன்னு கேட்டேன். கட்டுன பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கிறவன் கிட்ட எனக்கு என்னென்ன பேச்சு. இனியும் உங்ககிட்ட வேலை செய்ய எனக்கு விருப்பம். நீங்க என்ன சொன்னாலும் சரி இல்ல விட்டு வச்சாலும் சரி நான் உங்க கிட்ட வேலை செய்ய போறது இல்லனு நாகா சொல்லவும் தான் அங்க வேற என்னமோ நடந்து இருக்குன்னு எனக்கு புரிஞ்சது..
நாகா கிட்ட அவசரமா உண்மையை சொல்ல அவனும் அங்க நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா.. பக்கத்துல இருந்து செல்வாமோ சந்தனாவும் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. உன்ன காப்பாத்த நான் வரும்போது தான் மகாவுக்கு குழந்தை பொறந்துச்சு. அவளும் விஷயத்தை கேட்டு பச்ச உடம்புக்காரி டாக்டர் எவ்வளவு சொல்லியும் கேட்காம எங்க கூட வந்து ஆகணும்னு அடம் பிடிச்சு வந்தா. அங்க பாரு நிக்க முடியாம ஒரு ஓரமா உக்காந்து உன்னையே பாத்துட்டு இருக்கா.. சத்தியமா என் தம்பி ஏன் இப்படி செஞ்சானு எனக்கு புரியல அம்மாடி.. அவன் செஞ்சத நான் நியாயப்படுத்தல. ஆனா அவங்க கிட்ட ஏன்னு கேட்டுட்டு என்ன தண்டனை வேணாலும் கொடுக்கலாம். அதுவரைக்கும் தயவு செஞ்சு என் தம்பியை தப்பா நினைக்காத. இந்த உலகத்துல எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவன் மட்டும் தான். ப்ளீஸ் டீ.. என்ன பத்தின எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன்.. இதுக்கு மேல நீ தான் முடிவு எடுக்கணும் " மின்னலின் கண்களில் காய்ந்து போன கண்ணீர் ரேகை. அவன் அனுபவித்த வேதனைகளை கேட்டு அங்கிருந்து அனைவருமே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
பூங்காவனத்திற்கு கண்ணீரோடு சேர்ந்து கேள்விகளும் தோன்றியது.
" இவ்ளோ அனுபவச்ச நீங்க ஏன் உனக்கு பொண்ணுங்கள கூட்டி கொடுத்தீங்க? அந்த மாரியப்பன் எவ்வளவு கெஞ்சுனாரு.. நீங்க நினைச்சிருந்தா அவரை காப்பாத்தி இருக்கலாமே.. இது எல்லாத்தையும் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனை ஆயிருக்காதே"
" குடும்பத்து பொண்ணுங்களையோ இல்ல அப்பாவி பொண்ணுங்களையோ அவனுக்கு நான் கூட்டி விடல. இதுக்காகவே தொழில் பண்ணிட்டு இருந்த பொண்ணுங்கள தான் அவன் கேட்கிறப்ப நான் பேசி அனுப்பி விட்டேன். என் உடம்பெல்லாம் கூசும். ஆனா யோசிச்சு பாரு நான் ஒரு சாமானியம். இந்த பொறுக்கி நாய் செஞ்ச தப்புக்காக இவன போட்டு தள்ளிட்டு நான் எதுக்கு உள்ள போகணும்? அப்படி நான் செஞ்சிருந்தா இதோ இங்க நிக்கிறாங்களே மூணு அக்கா தங்கச்சிங்க இவங்களே நான் வெளிய வரும்போது ஆளு வச்சு என்ன முடிச்சிருப்பாங்க.. என் வாழ்க்கை எதுக்கு நான் வீணாக்கணும்..
இன்னொன்னு என்ன கேட்ட மாரியப்பன்.. அவன் ஒன்னும் யோக்கியம் கிடையாது.. அவனியா அவனோட பேத்திய சோலை பாண்டியனுக்கு அனுப்பத்தான் இருந்தான்.. பேத்திய சோலை பாண்டியன் கிட்ட அனுப்பி பெரிய அமௌன்ட் ஒன்னு அடிக்க இருந்தான்.. பேத்தி அவன் கூட அந்த மாதிரி இருக்கும்போது வீடியோ எடுத்தது சோலை பாண்டியன் கண்டுபிடிச்சிட்டான்.. மாரியப்பன் அடிச்சு வீடியோவ பிடுங்கி கடன் வாங்கிய பணத்தை கேட்க பெரிய நல்லவன் மாதிரி நம்ம வீட்டுக்கு வந்து சீன் போட்டான்..
நான் என்ன இங்க கொட்டியா வச்சிருக்கேன்? ஆரம்பத்திலேயே என்கிட்ட வந்து உதவி கேட்டு இருந்தா நான் செஞ்சிருப்பேன். பேராசைக்காக சொந்த பேத்தியவே கூட்டி கொடுத்துட்டு கடைசியில மாட்டிக்கிட்டு வந்து பேசினா நான் உதவி செய்யணுமா?
வாங்குன பணத்தை கொடுக்க துப்பு இல்லை. இவன் எடுத்த வீடியோவையே இவனுக்கு எதிரா போடுவேன்னு சோல பாண்டிய மிரட்டுனா கையோட வேற வழியே இல்லாம குடும்பமே தற்கொலை பண்ணிக்கிச்சு..
அம்மாடி நான் தப்பு பண்ணியிருக்கேன். ஆனா உன்ன தவிர எந்த பொண்ணையும் நான் தொட்டது கிடையாது. தேடி ஓடி காதலிச்ச கல்யாணம் பண்ணனும்னு எனக்கு ஆசை இல்லை. ஆனா எனக்காக ஒருத்தி கண்டிப்பா வருவான்னு என் மனசுல சொல்லிக்கிட்டே இருந்துச்சு. உன்ன மொத மொத பாக்குறப்ப அந்த எண்ணம் என் மனசுல ரொம்ப வலுவா இருந்துச்சு.
ஆனா உனக்காக நான் இறங்க போய் இத்தனை வருஷம் நான் பட்ட கஷ்டம் வீணா போயிடக் கூடாது.. அப்போ நான் என் அம்மா கிட்ட கேட்ட விஷயம் இந்த பொண்ணு என் வாழ்க்கையில இருந்தா நல்லா இருக்கும்னு. என்னால நம்பவே முடியல சோல பாண்டியனே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சான்.
நீ என் வாழ்க்கையில நான் எதிர்பார்க்காம கிடைச்ச வரம். உன்னை இழக்க எனக்கு மனசு வரல. அதேசமயம் நான் நினைச்சதை என் வாழ்க்கையில அப்ப தான் நடந்துச்சு. என்ன முழுசா நம்பி வாரிசுன்னு அறிவிச்சான்.. நேரமும் காலமும் எனக்கு சாதகமா இருந்துச்சு. வெண்ண திரண்டு வர நேரத்துல தாலியை உடைக்க கூடாதுன்னு உன் மேல இருந்த பாசத்தை எல்லாம் எனக்குள்ளே மறைச்சு வச்சு இன்னைக்கு உன்னை இந்த நிலைமைக்கு ஆளாகிட்டேன்..
இனிமே என்கூட நீ இருக்கிறதோ இல்ல உன் வாழ்க்கையை பார்த்துட்டு போறதும் உன் கையில இருக்கு.. நீ என்ன முடிவு எடுக்கிற அம்மாடி?" பூங்காவனம் இப்பொழுது அமைதியை தன்முறையாக்கி கொண்டாள். பரிதவிப்பாக அவளது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.
"பூங்கா மின்னல் சொன்ன எல்லாமே உண்மைதான். முன்னாடி மின்னல் எங்ககிட்ட அப்பாவ பத்தி சொல்லி இருந்தா கண்டிப்பா நாங்க நம்பி இருக்க மாட்டோம். அதேசமயம் மின்னல் எங்க அப்பாவ கொன்னு இருந்தா அவனை நாங்க சும்மா விட்டிருக்கவும் மாட்டோம்.. மின்னல் எடத்துல இருந்து யோசிச்சு பாரு. அவன் இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்ல. இப்படி ஒரு ஆளை எங்க அப்பனு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு..
என் பொண்ணு பொறந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. இவ மேல சத்தியமா சொல்றேன்.. மின்னல் சொன்ன எல்லாமே உண்மைதான் பூங்கா.. தயவு செஞ்சு அவசரப்பட்டு எந்த தப்பான முடிவும் எடுத்துடாத" செல்வா ஆரம்பித்து மகா முடித்தாள்.
" ஆமா அண்ணி.. மொத உங்ககிட்ட பேசினது மட்டும் தான் அண்ணே அதுக்கப்புறம் உங்க கிட்ட பேசினது அண்ணன் கிடையாது.. நானே முதல்ல ஷாக் ஆயிட்டேன் அண்ணன் எப்படி இந்த மாதிரி.. ஆனா அண்ணன் உண்மையாவே உங்கள விரும்புறாரு. அண்ணே ரொம்ப நல்லவரு அண்ணி. உங்களுக்கு தெரியாது சோல பாண்டியன் கிட்ட எத்தனையோ பேரு உங்கள மாதிரி தான் மாட்டிக்க இருந்தான். அண்ணன் தான் அவங்களுக்கெல்லாம் மறைமுகமா உதவி செஞ்சு காப்பாத்தி இருக்காரு.. எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க அண்ணி?" அப்பொழுதும் பூங்கா அமைதியாக இருக்க தாதி ஒருவர் உள்ளே வந்தார்.
"சார் உங்க தம்பி ரொம்ப பிரச்சனை பண்றாரு.. உடனே உங்கள பாக்கணும்னு சொல்றாரு" மின்னல் திரும்ப நாகாவை பார்க்க வேகமாக அங்கிருந்து சென்றான். பூங்காவை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்த மின்னல் இப்பொழுது எழுந்து நின்று கொண்டான். சற்று நேரத்திற்கு எல்லாம் வர்மாவை வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தான் நாகா.
வர்மாவின் முகத்தையும் மின்னலின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் பூங்காவனம். அச்சில் வார்த்ததைப் போல ஒரே முகம்.. இரண்டு கையிலும் பேண்டேஜ் போட்டு இருந்தார்கள். கையை சற்று அசைத்தாலும் உதிரம் கசிந்தது.
மின்னலின் முன்பு வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினான் நாகா. மின்னலின் பார்வை தம்பியை அளந்தது. வர்மாவும் மின்னலை நேர் பார்வை பார்த்தான். அடுத்த நொடி அவனது பார்வை பூங்காவனத்தை தழுவியது.. சற்று நேரம் புரியாமல் அவளை பார்த்தவன்
"நீ.. நீ என் அம்மா மாறி இருக்கியே எப்படி".. அடிப்பட்ட பூங்காவனத்தின் முகம் அவனின் அம்மா இறப்பதற்கு முன் இருந்ததைப் போல இருந்தது. சோலை பாண்டியனின் கை வண்ணத்தால் அவனது அம்மா முகமும் இப்படித்தான் கன்றி சிவந்திருந்தது.
" ஏன்டா இப்படி பண்ண? பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்பதான் அவ பார்க்க நம்ம அம்மா மாதிரி இருக்காளா?" தம்பியை கேட்டான் மின்னல்.
" நான் என்ன பண்ணேன்? எத்தனை தடவை சொன்ன அந்த சோல பாண்டியன போட்டு தள்ளுனு. நீயும் அவனை எதுவும் செய்யல. என்னையும் இத்தனை வருஷம் செய்ய விடல. கடைசில பாத்தா நீ அவனோட வாரிசாவே மாறிட்ட. உனக்கு நம்ம அம்மா அக்கா மூஞ்சி மறந்து போச்சா.. எல்லாம் உனக்கு கல்யாணம் ஆனதனால தானே. உனக்குன்னு ஒரு குடும்பம் வந்த உடனே அம்மா அக்காவை மறந்து போய்ட்ட.. ஆனா என்னால மறக்க முடியல..
உன்னை மீறி என்னால எதுவும் செய்ய முடியல. அன்னைக்கு நீ சொன்ன மாதிரி நான் பாட்டுக்கு ஆபீஸ் போய் உட்கார்ந்து தான் இருந்தேன். அப்பதான் அந்த பரதேசி நீனு நெனச்சு என்ன பாக்க வந்தான். உன் பொண்டாட்டிய என்கிட்ட அனுப்பி வையுன்னு சொன்னான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அங்கேயே அவன் கதைய முடிச்சுருப்பேன். ஆனா நான் செய்யல..
அம்மா அக்காவை மறந்துட்டு உன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கல்ல.. உன்னையும் பழி வாங்க நினைச்சேன். அதனாலதான் அம்மாவும் அக்காவும் அனுபவிச்சு அதே வேதனையை உன் பொண்டாட்டியும் அனுபவிச்சா தான் உனக்கு புரியும்னு, "சட்டென்று பேச்சை நிறுத்தினான் வர்மா..
"என்னால முடியலண்ணே எனக்கு அம்மா வேணும்.. ஒவ்வொரு பொண்ண பாக்குறப்பவும் யாராச்சும் அம்மா மாறி இருக்க மாட்டாங்களானு தேடி, என்னால முடியல.. நீ அம்மாவ மறந்துட்டு இவ கூட இருக்குறத பாக்க முடியல.. ஆனா இவ இவள இப்ப பாக்க நம்ம அம்மா மாறியே இல்ல.." மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் திடீரென்று அழுதவன் இப்பொழுது அழுகையை மறந்து விட்டு மீண்டும் பூங்காவனத்தின் முகத்தையே பார்த்தான்.
" அவளோட பேரு கூட நம்ம அம்மா பேரு தான்.. " மின்னல் சொல்ல பூங்காவின் முகத்தை பார்த்தவன் திடுக்கிட்டான்..
"பூங்காவனம்?" காற்றுக்கும் வலிக்காத குரலில் அவன் வாய் அசைக்க பூங்காவுக்கு வர்மாவின் நிலை நன்றாக புரிந்தது.. மெல்ல தன்னுடைய இடது கையை உயர்த்தி
"வர்மா" என்று அவனை அழைக்க அவளது கையைப் பிடித்தவன் அம்மா என்று கதறியே விட்டான்.. தன்னுடைய மனைவியின் கரத்தை பிடித்து கதறும் தம்பியின் தலைமுடியை கோதி விட்டான் தமையன்..
இரண்டு வாரங்களுக்கு பிறகு,
மருத்துவரின் ஆலோசனைப்படி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வர்மாவுக்கு மருத்துவமனையிலேயே தங்கி அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.. தாய் தமக்கையின் மரணம் அவனது சின்ன மனதை வெகுவாக பாதித்திருந்ததை அறிய முடிந்தது.
செல்வாவும் சந்தனாவும் மகாவை தங்களோடு அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.. செல்லும்போது இந்தியாவிலிருந்து அனைத்து சொத்துக்களையும் விற்கும் படி மின்னலிடம் கூறியவர்கள் தங்களுக்கு வரும் பங்கில் ஒரு பங்கு தங்கள் தகப்பனார் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கும்படி கூறி சென்றார்கள். சோலை பாண்டியன் என்ன நினைத்து மின்னலை வாரிசாக அறிவித்தாரோ? ஆனால் அவரது புதல்விகள் மிகவும் நேர்மையாக பாதி சொத்தை மின்னலுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
மின்னல் வேண்டாமென்றாலும், " இந்த சொத்தோட மூலதனம் என் அம்மா கொண்டு வந்த சொத்து.. உன் பொண்ணுக்கு இந்த அத்தைங்க செய்ற சீரா இருக்கட்டும்.."மின்னலால் அவர்கள் கூறியதை மறக்க முடியவில்லை. சோலைப் பாண்டியனின் மிகப்பெரிய கிழித்து வெளி உலகத்துக்கு காட்ட நினைத்தான். ஆனால் செல்வா சந்தனாவின் புகுந்த வீட்டு நிலை நினைத்து அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி விட்டான். இப்பொழுது வரை மருமகன்களுக்கு மாமனாரின் வண்டவாளம் தெரியாது.
இந்தியா வருவதாக கூறிய தங்களுடைய கணவன்மார்களை அடக்கி விட்டு புகுந்தகம் சென்று விட்டார்கள் பெண்கள். கூடவே மகாவையும் அழைத்துக் கொண்டு..
தேவகிக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. சின்ன விபத்து என்று மட்டும் தான் பூங்கா தன்னுடைய அம்மாவிடம் கூறியிருந்தாள். அதற்கே சாப்பிடாமல் கொள்ளாமல் மகளை வந்து பார்த்து குடம் குடமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் தேவகி.. மின்னலுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
முகத்திலிருந்து வீக்கங்கள் முழுதுமாக குணமாகி மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பூங்காவனம். அவளது வீங்கிய பாதத்திற்கு தைலம் தேய்த்துக் கொண்டிருந்தான் மின்னல்.
எவ்வளவு இன்னல்கள் அவர்கள் வாழ்வில்? இன்று வரை வாய் விட்டு தன்னுடைய மனதில் இருப்பதை மின்னல் கூறவில்லை தான். ஆனால் பூங்கா அதனை எதிர்பார்க்கவில்லை. இது காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறானே இதை விடவா அவன் காதலை வாய் விட்டு கூற வேண்டும்?
ஒவ்வொரு முறையும் தன்னுடைய லட்சியத்தையும் விட முடியாமல் தன் முன்னே கதறும் மனைவியையும் சமாதானம் படுத்த முடியாமல் அவன் இருதலை கொள்ளி எறும்பாக எப்படி தவித்திருப்பான்? அனைத்தையும் யோசித்துப் பார்க்கும்போது கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
"போதும்" தன்னுடைய பாதத்தை இழுத்துக் கொண்டாள் பூங்கா. கையை கழுவி விட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் மின்னல்.
" சரி இன்னைக்கு வெளிய போலாமா.. "
"என்ன'
"வெளிய.."
" மறுபடியும் முதல்ல இருந்தா"
" என்ன மீறி என் அம்மாடியை எவனாலயும் தொட முடியாது.. " மின்னலின் மீசையை பிடித்து திருகிக்கொண்டு
" யார் சொன்னா என் வயித்துல இருந்து ஒருத்தன் வருவான் அவன் தொடுவான்.. " குறும்பாக சிரித்தாள் பூங்காவனம்.
" அது என்ன ஒருத்தன் ஒருத்தி தான்.. "
"ம்ஹும் மொத பையன்"
"பொண்ணு"
"பையன்"
"பொண்ணுடி"
"அதெல்லாம் முடியாது.. பாப்போமா?"
"பாப்போம்டி"
"பையன் பொறந்தா என்ன செய்வீங்க"
"ம்ம்ம்ம் பின்னாடியே பொண்ணுக்கு ரெடி பண்ணிடுவேன்.." பூங்கா வெட்கத்தில் இதனை சிரிக்க சொல்லித்த அவளது இதழில் தன் இதழை ஆழமாக பதித்தான் மின்னல் வீரபாண்டியன்..
இடுப்புக்கு கீழே உணர்ச்சியற்ற சோலை பாண்டியன் இப்பொழுது அவரது வீட்டில் மருத்துவ பாதுகாப்போடு இருக்கிறார்.. எந்த வீட்டில் ராஜ தோரணையில் அவர் உலா வந்தாரோ அதே வீட்டில் ஒரு காய்கறியை போல அவர் படுத்து கிடப்பதை எண்ணி ஒவ்வொரு நாளும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு மத்த அனைத்து சொத்துக்களையும் விற்க்கும்படி பெண்கள் கூறி விட்டார்கள்.
யாருமே கடைசியில் கூட தந்தையின் முகத்தில் முழிக்கவில்லை.. தனிமையின் கொடுமையில் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறார் சோலை பாண்டியன். தன்னுடைய புதல்விகள் இல்லாமல் மானம் மரியாதை இழந்து, இப்படி ஒரு வாழ்வை வாழ்வதற்கு ஒரேடியாக செத்து விட்டாலும் தேவலாம் என்று இருந்தது.
பலரின் உயிரை பறித்த சோலை பாண்டியனால் தன்னுடைய உயிரை கூட சொந்தமாக போக்கிக் கொள்ள இயலவில்லை. இதுதான் விதியோ?
அவரின் நிலையை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தாதி.
" அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லனும்னு சொல்லுவாங்க.. அது எவ்வளவு உண்மை? பணம் இருக்கிற திமிருல, அதிகாரம் கொடுத்த பலத்துல எத்தனை பொண்ணுங்க வயித்தெரிச்சல நீ சம்பாதித்திருப்ப. இதே மாதிரி எத்தனை பேரு வேற வழியே இல்லாம பொணம் மாதிரி உன் பக்கத்துல படுத்து கிடந்துருப்பாங்க..
நீ எல்லாம் ஒரே நாளுல படக்குனு செத்துருந்தா உனக்கு இந்த வலியே தெரிஞ்சிருக்காது..இப்போ அனுபவி.. நல்லா அனுபவி.. எப்படி இருக்கு பெத்த பொண்ணுங்களே காரி துப்பிட்டு போனது.. நீங்களாம் பொம்பள சாமியா இருந்தா கும்பிடுவீங்க.. அதுவே பொண்ணா மட்டும் இருந்த கெடுப்பிங்க.. என்னடா உங்க நியாயம் த்தூ.இனிமே இதால உனக்கு பிரயோஜனமே கிடையாதுல.. "சோலை பாண்டியனின் ஆண் குறியை பார்த்து அவரின் யூரின் பேக்கை மாற்றினாள் தாதி துர்கா.. (முதல் அத்தியாயத்தில் சோலை பாண்டியனால் பாதிக்கப்பட்டவள்)..
துர்காவின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் வாய் இழுத்துக் கொள்ள
"என்னமா எப்படி இருக்க கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான் மின்னல்.
அவனைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவள்" நான் நல்லா இருக்கேன் சார்"
'சரிமா கொஞ்சம் வெளியே இரு " அவளை வெளியே அனுப்பி விட்டு சோலை பாண்டியன் முன்பு நின்றான் மின்னல்.
" இத்தனை வருஷமா உனக்குள்ள ஒரு கேள்வி ஓடிக்கிட்டே இருந்திருக்கும். நான் யாரு நான் யாருனு? நான் யாரு உன்னால பாதிக்கப்பட்ட ஒரு தாய்க்கு மகனா பதினாலு வயசு பொண்ணுக்கு தம்பியா இந்த பூமியில பொறந்தவன்.. அதிகாரமும் பணமும் உன்கிட்ட இருக்குன்னு எத்தனை பேர் குடியை கெடுத்துருப்ப..
எப்படி கடைசி வரைக்கும் உன்கூடயே இருந்து உன் கழுத்த அறுத்தேன் பாத்தியா.. இப்படியே இரு.. உன் விதி முடிகிற வரைக்கும் நீ இப்படித்தான். உனக்குன்னு தனி வீடு தனி நர்ஸ்னு உன்ன நல்லா பாத்துக்குவேன். ஏன்னா நீ படக்குனு சாகக்கூடாது.. வரட்டா டா சோலை பாண்டி" சட்டையின் மேல் பகுதியில் மட்டும் இருந்த கூலர்சை எடுத்து கண்களில் அணிந்து கொண்டவன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
"வீரா ரொம்ப சந்தோஷமா இருக்குடா" வழக்கம்போல அவனது அம்மாவும் அக்காவும் மானசீகமாக அவனிடம் பேசினார்கள்.. தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையான இதழ் பிரியாத சிரிப்பினால் அவர்களுக்கு மறுமொழி கூறியவன் தன்னுடைய காரில் ஏறி கிளம்பி விட்டான் ஆசை மனைவியை வெளியே அழைத்துச் செல்ல..
வாய் விட்டு சொல்லாத தன்னுடைய காதலை,
வாழ்நாள் முழுவதும்
அவளோடு வாழ்ந்து காட்ட நினைத்தான் மின்னல் வீர பாண்டியன்..
முற்றும்..
Comments
Post a Comment