நெருங்கினா(ள்)ல்? 6
காலை சூரியன் தன் பணியை செவ்வன செய்துக் கொண்டிருக்க உணவு மேஜையில் ஏகலைவன் வரவிற்காக காத்திருந்தாள் குண்டலகேசி. இன்றோடு மூன்றாவது நாள். இன்னும் நான்கே நாட்களில் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும். சட்டப் பூர்வமாக இறந்து போனதாக சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவனை எப்படி திருமணம் செய்வது? பாவம் கல்யாண கனவுகளோடு மிதந்து கொண்டிருக்கும் சுந்தருக்கு எவ்வாறு துரோகம் இழைப்பது? அவளுக்கு சுந்தரை பிடிக்கவில்லை தான், அதற்காக நம்பவைத்து ஏமாற்றலாமா? தாய் இல்லாமல் தானே பெண்களை வளர்த்த போதிலும் ஆவுடையப்பன் ஏழு பெண்களையும் முன்னே அமர்த்தி சிறுவயதிலிருந்தே யாரையும் ஏமாற்றக் கூடாது.. நாம் ஏமாந்து போனாலும் கூட அந்த வலியை இன்னொருவர் மேல் சுமத்த கூடாது.. நான் ஏமாந்து போனேன் அதேபோல் அடுத்தவரை ஏமாற்றுவேன் என்று கிளம்ப கூடாது..என்பார். இதனாலேயே ஏப்ரல் ஃபுல் அன்று கூட கேசி யாரையும் ஏமாற்றியது கிடையாது. அப்படிப்பட்டவள் திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும்போது கல்யாண கனவுகளோடு மிதக்கும் சுந்தரை எப்படி ஏமாற்றுவாள்? மூளை இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மனமும்"நீ எங்கடி செல்லம