அதரா 21 to 28
அதரா - 21 "வேந்தே உங்களது தோழர் அங்கே நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறார் நீங்கள் என்னவோ அவரை சென்று அழைத்து வராமல் இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் கடல் கன்னியை வைத்த கண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"வஜ்ரா பொறுக்காமல் கேட்டு விட வர்ணிகாவின் மேலிருக்கும் பார்வையை அகற்றாமல்"தோடா அவன் இன்னா போருக்கா போறான் அவனான்ட போயி சொல்லி உஷார் பண்ண..அத்தெல்லாம் என் நண்பன் பாத்துக்குவான்.. நீ பிரீயா வுடு வஜ்ஜு" "என்ன வஜ்ஜுவா" "உன் பேர தா சுருக்கி கூப்டேன். மாமா லவ் மூடுல இருக்கேன் அனாவசியமா என் மூட வந்து கெடுத்து விட்றாத.. அங்க தாரு தாரா வாழைபழம் இருக்காம் அத்த தின்னு.. நான் கொஞ்ச நேரம் என் செல்லா கிளி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வரேன்" " வேந்தே நீங்கள் என்னவோ பண்ணிவிட்டு போங்கள்.. ஆனால் அந்த சூனியக்காரி பொல்லாதவள். அவளால் மாய இளவரசிக்கும் நண்பருக்கும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் கொஞ்சல் படலத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு சற்று நாட்டு காரியங்களை கவனித்தால் நன்றாக இருக்கும் என என் அபிப்ப