23 நெருங்கினா(ள்)ல்?
ஒயிலழகி கடுப்போடு நடந்து கொண்டிருந்தாள்..காரணம் வேறு எதுவுமல்ல அவள் முன்னால் நடந்து கொண்டிருக்கும் நந்தன் தான் அவளின் கடுப்புக்கும் கட்டுக்கடங்காத கோபத்திற்கும் காரணம்.. என்ன தைரியம் இருந்திருந்தால் தன் கழுத்தை நெரித்துக் கொல்ல பார்த்திருப்பான்.. அப்படி என்ன தேசப்பற்று இவனுக்கு? சொல்லப் போனால் இவன் ஒன்றும் முழுதாக பாரத தேசத்தவன் கிடையாதே.. இவனுடைய தந்தை ஆயிரம் சொன்னாலும் வெள்ளைக்காரன் தானே.. இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என் கழுத்தை பிடித்து நெறிக்க.. நேரம் கிடைக்கட்டும் நான் யார் என்று காட்டுகிறேன் என்று கறுவிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் அழகி.அவளுக்கு பாட்டியை பற்றிய ஞாபகமாகவே இருந்தது.. தன்னை காணாமல் தன்னுடைய பாட்டி எப்படி பரிதவிக்கிறாறோ.. அந்த வெள்ளைக்காரன் பாட்டியை போட்டு என்ன பாடு படுத்துகிறானோ? எப்படியெல்லாம் தான் வளர்த்த பாட்டி கஷ்டப்படுகிறாரோ.. ஆம் பாட்டி அழகியை வளர்ந்ததை விட அழகி தான் பாட்டியைப் பார்த்து பார்த்து வளர்த்து கொண்டிருக்கிறாள். அவரின் ஆரோக்கியத்தில் இருந்து அவர் அணியும் உடை வரை அழகி தான் கண்ணும் கருத்துமாக இருந்து அனைத்தையும