39 நெருங்கினாள்(ல்)? இறுதி பாகம்
ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் இந்த இரண்டு வருடமாக தவமிருக்கிறார்கள் குண்டலகேசியை பார்ப்பதற்கு. அவர்கள் மட்டுமல்ல ஆவுடையப்பன் அவரது மற்ற மகள்கள் இப்படி அனைவருமே குண்டலகேசி எப்போது வருவாள் என்று வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆவுடையப்பன் மட்டும் அவளின் தற்போதைய நிலையை அறிந்து அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார். குண்டலகேசியின் ஆறு சகோதரிகளும் தினம் தோறும் பூஜை புனஸ்காரங்கள் செய்து தங்களுடைய சகோதரி விரைவாக வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அவள் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு வருடத்தில் ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் தங்களுடைய இல்லீகள் தொழிலை விட்டுவிட்டு நன்முறையில் பிசினஸ் செய்து வருகிறார்கள். தனிமை வேண்டும் என்று கேட்டுச் சென்றாளா? அல்ல அந்த தனிமையை தங்களுக்கு பரிசாகக் கொடுத்து விட்டு சென்றாளா என்று இருவருக்கும் புரியவில்லை.அவள் இல்லாத இந்த தனிமை அவர்களை கொலையாய் கொன்றது. அவள் என்ன செய்கிறாள்? யாரோடு இருக்கிறாள்? இப்படி அனைத்து கேள்