பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 25
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா.. எம் பி ட்ரீயில் பாடல் ஒலிக்க அது தன்னவளை நினைவு படுத்த ராஜ் மித்ரனின் யோசனை சில மாதங்களுக்கு முன் சென்றது.திருமணம் ஆனதிலிருந்து எத்தனை பிரச்சனைகள். ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வருவதற்குள் எத்தனை மன வேதனைகள்..எண்ணிப்பார்க்கவே ஆயாசமாக இருந்தது.வெண்ணிலா அவள் தான் எவ்வளவு மென்மையானவள். இதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் அவன் தாயும் சகோதரியும் பேசிய பேச்சிற்கு எப்பொழுதோ மூட்டை கட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருப்பாள். சாதாரண நிறக் குறைபாட்டை பெரிய தொத்து வியாதியாக நினைத்து கங்காவும் கமலாவும் பேசிய பேச்சுகள் அவனாலேயே மறக்க முடியவில்லையே. அவளுக்கும் அப்படித்தானே இருக்கும். ஆனாலும் இவன் தன் மேல் காட்டும் அன்பிற்காக எதையும் வாய்விட்டு கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருக்கிறாள். அவளது அம்மா அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்த பின்பும் அவளால் அவர்களுடன் இழைய முடியவில்லையே.காரணம் தன் கணவன் அவன் தாயாரோடு பேசாமல் இருக்கும் இந்த நேரத்தில் தான் மட்டும் தன்னுடைய குடும்பத்தோடு