16 நெருங்கினா(ள்)ல்?
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்த வருடம் உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்க நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்🎉🎊🎀🎁✨️🎇🌟 கையில் கோடாரியோடு அமர்ந்திருப்பவனை காண்கையில் குண்டலகேசிக்கு அடி வயிற்றைக் கலக்கியது. ஏற்கனவே நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தது வேறு அவளுக்கு குளிரை கிளப்பியது. இதில் கமலியை சுமந்துகொண்டு நிற்பது இன்னும் உடல் தள்ளாட்டத்தை கொடுத்தது.. அவன் கொலைகாரன் என்று அவளுக்கு தெரியும். ஆனால் இப்பொழுது எதற்காக கையில் கோடாரியோடு அமர்ந்திருக்கிறான்.. இந்த ரகசிய அறைக்குள் வரத்தான் அவள் கமலியோடு குளக்கரைக்கு சென்றாள் என்று அவன் கண்டு பிடித்து விட்டானா.. பேயை கண்டதுபோல தன்னை பார்த்து சுவரோடு சுவராக சாய்ந்து நின்ற மனைவியை ஈவு இரக்கமே இல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான் வந்தியதேவன்." இந்த ரூம கண்டுபிடிக்க தான் நீ குளத்துக்கு போன.. அப்படித்தானே"(ஒன்று சொல்ல மறந்து விட்டேன். வந்தியதேவனை பற்றி நிறைய தகவலை கொடுத்த நான் முக்கியமான ஒரு தகவலை கொடுக்க மறந்து விட்டேன். அந்தத் தகவல் அவனின் குரல் மிகவும் கடினமான குரல். அவன் ஹஸ்கி க