Posts

Showing posts from September, 2021

இஞ்சி இடையழகி 30(இறுதி பாகம்)

Image
மறுநாள் காலை இங்கு பெண்டரில் இருந்த தங்கள் உயிர்களை காண மனைவியை அழைத்து சென்றான் பாரி..தேவதைகளை நேரில் கண்டிறாத முல்லை இதோ காண்கிறாள் தன் மகள்களின் ரூபத்தில்..அவள் முகமலர்ந்து சிரிப்பை இன்னும் பெரியதாக்க வளரி கண் விழித்து விட்டதை கூறினான் பாரி..முல்லை கொடியின் இதழ்களும் விழிகளும் ஒருங்கே மலர்ந்தன..அன்பு கண்ணா ரியோ மூவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்..  முல்லையையும் அவளின் இரு தேவதைகளையும் பார்த்து பூரித்து போயினர்..அவர்களை அழகாக படமெடுத்து தன் மனைவிக்கு அனுப்பி வைத்தான் அன்பு.. கிரேசிற்கு மகிழ்ச்சி தாளவில்லை..எப்படியோ தன் தோழி உயிர் போரட்டத்தில் வென்று மீண்டும் வந்ததை எண்ணி நிம்மதி அடைந்தான் ரியோ..முல்லையை தவிர ரியோ கண்ணா அன்பு பாரி நால்வரும் வளரியை காண சென்றனர்..அவனிடம் இருகரம் கூப்பி நன்றி கூறுவதை தவிர்த்து அன்பாலும் ரியோவாழும் என்ன செய்திட முடியும். சின்ன சிரிப்பில் அவர்களின் நன்றியை ஏற்று கொண்டான் வளரி..கமலி மருமகளையும் மகனையும் மாறி மாறி கவனித்து கொண்டார்.. முல்லை மருத்துவமனையில் வளரியை காண விரும்பவில்லை.மீண்டும் அவனை அதே படுக்கையின் மேல் பார்க்க அவளுக்கு சக்தி இல

இஞ்சி இடையழகி 29

Image
பாரி வேந்தனின் வேகம் காற்றை கிழித்து கொண்டு சென்றது..அந்த பொட்டல் காட்டிலிருந்து அசுர வேகத்தில் மருத்துவமனை நோக்கி சென்றான்.. அவன் கண்கள் கலங்கவில்லை..மனமோ தடுமாறவில்லை..ஒரு கணவனாக பதறாமல் ஒரு மருத்துவனாக மூன்று உயிர்களின் பொறுப்பை கையிலெடுத்தான்..சிங்னல் கிடைக்கிறதா என்று பார்த்து கொண்டே இருந்தான்.. சிங்னல் கிடைத்தவுடன் கமலியின் அண்ணனுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறி வளரியை காப்பாற்றும் படியும் கமலியிடம் நிலைமையை எடுத்து கூறி மருத்துவமனை வர பணித்தான்..திரும்பி தன்னுயிரை பார்த்தான்.."முல்ல என்ன விட்டு நீ எங்கயும் போக முடியாதுடி நா விட மாட்டேன் நேத்து நீ சொன்ன மாறி நாம வயசான காலத்துல இங்க வரணும்.. நமக்குன்னு சின்னதா வீடு வீட்ட சுத்தி பூச்செடி..உன் ஆசைப்படியே வீடு.. மொட்ட மாடி நிலா..காலம்பூரா நம்ம லவ் அப்ரோ தான் நீ செத்து போவேன்னு சொன்ன.. இதுலாம் நடக்காம இப்பயே போயிறலாம்னு நெனச்சே கொன்றுவேண்டி.. ஒழுங்கா உசுரோட வந்து சேருற".. அவள் கேட்க்கிறாளா இல்லையா என பாராமல் குருட்டாம்போக்கில் சொல்லி கொண்டிருந்தான் பாரி.. முல்லையோ அசைவின்றி கிடந்தாள்..இரு கால்களுக்கு இடையே குர

இஞ்சி இடையழகி 28

Image
நெருங்கிய உறவுகள் நண்பர்கள் மட்டுமே..கண்ணா வெண்பாவுடன் வந்திருந்தான்..ரியோவின் கண்கள் ஒரு முழு நிமிடம் வெண்பாவிடம் நிலைத்தது.. அது அவள் முகத்தில் இருந்த புன்னகையால்..அதற்கு மேல் அவன் பார்வைக்கு வெண்பா தெரியவில்லை.. முல்லையுடன் பேசி சிரித்து கொண்டிருந்த தன் மனைவியின் முத்து சிரிப்பில் ஒட்டி கொண்டது ரியோவின் பார்வை.. எதேர்சையாக திரும்பிய சக்தி ரியோவை கண்டாள்.. இப்போது அவன் கண்களில் வழியும் காதல் தனக்கே உரித்தென கர்வம் அவளுள் எழுந்தது..அருகில் வெண்பா இருந்தும் அவனின் மனம் நாடுவது சக்தியை..இது போதாதா அவளுக்கு.. சக்தி இப்போது தன் பழைய உடலை அடைந்து விட்டாள்.. தாய்மை பூரிப்பில் ஒரு சுற்று உடல் ஏறி மாநிறம் கொண்ட வட்ட முகம் மாங்கனியாக ஜொலித்தது..  வளைகாப்பில் யாரும் அழைக்காவிடினும் முல்லையின் அழைப்பை ஏற்று வந்திருந்தான் வளரி..அவனை கண்டதும் மலர்ந்த அவள் முகமே அவனுக்கு போதுமானதாக இருந்தது..வளைகாப்பு நல்ல விதமாக முடிந்தது..பாரிக்கு தான் அவளை பிரியவே மனமில்லாமல் அவளுடனே தங்கி கொண்டான்..அவர்கள் மூவரின் வாழ்வில் நடக்க போகும் மாற்றத்தை காண அனைவருமே பீதியுடன் இருந்தனர்..நெஞ்சுக்குள் திக் தி

இஞ்சி இடையழகி 27

Image
நாளை பாரிவேந்தனின் பிறந்தநாள் சொல்லப்போனால் வளரி வேந்தனின் பிறந்தநாளும் கூட..ஒருமுறை பேச்சில் முல்லை வளரியின் பிறந்தநாளை வினவ அவன் பாரியையும் கமளியையும் பார்த்து கொண்டே உண்மையான பிறந்தநாளை கூறினான்..முல்லை தான் ஆச்சர்ய பட்டு போனாள்..பெயர் பொருத்தம் தான் ஒரே மாதிரி என்றால் பிறந்தநாளும் கூடவே ஒரே மாதிரி இருக்கும் என..முதலில் ஒரு நகை கடைக்கு சென்றார்கள் ஏற்க்கனவே முல்லை ஆர்டர் கொடுத்திருந்தாள் போல..எந்த டிசைன்னும் இல்லாமல் மையப்பகுதியில் மட்டும் வட்டமாக சற்று மேல் தூக்கி அதன் மேல் ஆழ்கடல் நிறத்தில் ஒரு கல் பதித்திருந்தது..அவள் அந்த கல் பதித்த இடத்தை அழுத்தி நகர்த்த அதனுள் பாதி வெள்ளை முத்து போன்ற ஒரு கல்லில் பாரி முல்லையின் உருவ படங்கள் பதிந்திருந்தது..அவள் மூளையை உருக்கி கண்டு பிடித்த டிசைன்..மேலும் சில பொருட்கள் வாங்கி கொண்டு வளரியுடன் பேசியவாறே வீட்டிற்கு வந்தாள்..அங்கே சுஜாதா வந்திருந்தார்..அவருக்கு மட்டும் வளரியை பற்றி தெரியும்..முல்லை அவருடன் பேசி நகர்ந்ததும் சுஜாதா வளரிக்கு அறிவுரை கூறினார்..அவனோ எதுவும் கூறாமல் எழுந்து சென்று விட்டான்..அவனுக்கு மனம் முழுக்க வேதனை தீ பற

இஞ்சி இடையழகி 26

Image
பாரி வந்தவுடன் வீடு பரபரப்பானது..முல்லை எழுந்து சென்று காபி கலந்து வந்தாள் கூடவே கொறிப்பதற்கும் எடுத்து வந்து பாரியின் பக்கத்தில் அமர்ந்தாள்..கமலி முல்லை பாரி அனைவரும் பேசிக்கொண்டிருக்க வளரி எதிலும் கலந்து கொள்ளவில்லை அவனையும் தங்களுடன் பேச்சில் இழுத்து கொண்டாள் முல்லை..அப்போதும் அவன் சிறு சிரிப்புடன் அமைதியாக இருந்தான்..பாரி வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருத்தி தன் தன் பதினைந்து வயது மகளுடன் வந்தாள்..ஊரில் நெருங்கிய சொந்தம் திடீரென இறந்து விட கை செலவுக்கு பணம் வாங்கி செல்ல வந்தாள்..கணவனை இழந்து பாரியின் வீட்டோடு மேலும் இருவீட்டில் வேலை செய்து மகளை வளர்கிறாள்.. ஆனாலும் அந்த சிறுமியின் படிப்பு செலவு முழுதும் பாரியே பார்த்து கொள்கிறான் மற்ற வீட்டை விட இந்த வீட்டில் வயிற்று பாட்டிற்காக அல்லாமல் குடும்ப உறுப்பினராக இருந்து வேலை செய்பவள் சுந்தரி.. அவளை இந்த நேரம் கண்டதும் விசாரித்த கமலி பணமெடுக்க உள்ளே சென்றார்..சுந்தரியின் மகள் கன்னிகா என்றால் கொள்ளை பிரியம் முல்லைக்கு..எப்போது முல்லையை கண்டாலும் அக்கா என்று அவளுக்காக தான் வாங்கி வந்த கடலை மிட்டாயை கொடுப்பாள்..இப்போது சில தினங்க

இஞ்சி இடையழகி 25

Image
பாரி வீட்டிற்கு வருவதற்குள் அனைவரும் சாப்பிட்டு விட்டனர்..கமலிக்கு உணவே இறங்கவில்லை..முல்லை கட்டாயபடுத்தி உணவு கொடுத்து மருந்து குடிக்க வைத்தாள்..வளரியை காணும் போது சிறு சிரிப்புடன் வாங்க சாப்டலாம் என கூறி பரிமாறினாள்.பொதுவாக அவர்களிடையே நாட்டு நடப்பு பற்றியே பேச்சு சென்றது கமலிக்கு ஒவ்வொரு கவளமும் தொண்டையில் அடைத்து இறங்கியது..முல்லைக்காக சாப்பிட்டார்..சாப்பிட்டு முடித்து விரைவாக தூங்கிடும் கமலி இன்று வளரிக்கு பயந்து அங்கேயே அமர்ந்திருந்தார்..முல்லை சோபாவில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தாள்.. இடையிடையே அந்த படத்தை பற்றி வளரி விமர்சிக்க முல்லையும் சிரித்து கொண்டிருந்தாள்..கமலிக்கு பகீர் என்றது..நொடிக்கொரு தரம் வாசலை பார்த்தார்..கமலியை புரிந்து கொண்ட வளரி மெல்ல நகர்ந்து அவர் காதில்"என்னமா என் மேல நம்பிக்க இல்ல சரி உன் மருமக மேலயும் நம்பிக்க இல்லையா"..அவ்வளவு தான் மகனை கண்டன பார்வை பார்த்தவர் மெல்ல"என் மருமக நெருப்புடா..."..என கூறி தூங்க சென்று விட்டார்.. பாரி களைத்து போய் வீடு வந்தான்..அவனை கண்டதும் முல்லை முகத்தில் அதுவரை இருந்த சோர்வு மறைந்து புன்ன