30 நெருங்கினா(ள்)ல்?
ஹாய் டியரிஸ் ப்ளீஸ் என் சேனளுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. 🙏🏻🙏🏻❤️❤️❤️ https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw எது அவளுக்கு தெரியக் கூடாது என்று வந்தியதேவன் இத்தனை நாள் நினைத்தானோ அது இன்று அவளுக்கு தெரிந்து விட்டது. அந்த நிலையிலும் அவனுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்களின் பிடிவாத குணம் மட்டும் என்றுமே மாறாது என்பது ஐயம் திரிபற அவனுக்கு புரிந்து விட்டது. பேழையை கையில் வைத்துக் கொண்டே சிலையாக நின்றாள் குண்டலகேசி. அவளால் இதனை நம்ப முடியவில்லை. அவள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதை புரிந்து கொண்ட வந்தியதேவன் அவள் தோளைத் தொட்டு உலுக்கினான். தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல திடுக்கிட்டவள் அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன் " இதுக்கு தான் சொல்றது புருஷன் பேச்ச கேட்கணும்னு" " கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா.. " அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான். அங்கே வந்ததும் மெத்தையில் அவளை அமர வைத்து விட்டு இவன் சமையலறைக்குச் சென்று அவளுக்கு சூடாக குடிப்பதற்குத் காய்ந்த சூரியகாந்தி பூவை சுடு