22 நெருங்கினா(ள்)ல்?


இந்த தொடரில் அழகியின் வயது வித்தியாசத்தை கண்டு பொங்கி விடாதீர்கள்.. ஏனென்றால் என் கொள்ளுப் பாட்டியை பத்து வயது சிறுமியாக இருக்கும் போது கல்யாணம் செய்து மலேஷியாவிற்கு என் கொள்ளுத் தாத்தா தூக்கி வந்தார் என்று கூறுவார். இங்கே வந்து பூப்படைந்த பின் பதினாறு குழந்தைகள் பெற்றார்.1930 நடந்தது இது..அதே போல வெள்ளையன்களின் அட்டூழியங்கள் இப்படி இருந்தது என என் கொள்ளுப் பாட்டி சொல்லியது உண்டாம்.

கதை நடைபெறும் காலம் 1900 களின் ஆரம்பம்..எனவே வயது வித்தியாசத்தை கண்டு பொங்கினால் கம்பெனி பொறுப்பாகாது..🙏🏻🙏🏻😁😁😁

சுகதம்மை பாட்டி கூறியதைக் கேட்காமல் அந்த வெள்ளையன் அழகியை பிடிக்க தனது ஆட்களை நாலாபக்கமும் அனுப்பினான். பாட்டிக்கு கிலி பிடித்து கொண்டது. இந்த நடு இரவில் தன்னுடைய பேத்தி எங்கு மறைந்திருக்கிறாளோ என்று அவரை பயம் பேயாய் பிடுங்கித் தின்றது.ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய போன தன் பேத்திக்கு அதே அவல நிலை வந்து விடக் கூடாது என்று தனது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தார் பாட்டி.

அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் நந்தன். யாரென்றே அறியாத அவனின் முகம் பாட்டியின் மனதில் தைரியத்தையும் நிம்மதியையும் கொடுத்தது.. வெள்ளைக்காரன் சட்டமாக பாட்டியின் குடிசை முன்பு அமர்ந்து விட்டான் திண்ணையில்.இந்த ஜென்மத்துக்கு அழகியை பாராமல் அவன் நகரவே மாட்டான்.. பாட்டியை வேறு அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்..

"துறை என் பேத்தி காஞ்சிபுரம் தான் போயிருக்கா.. சும்மா இருந்தவன் பொண்டாட்டி முடிய புடிச்சு செரச்சானாம் அப்டி இருக்கு நீங்க பண்ற வேல..".. பேச்சு வழக்கை கற்று வைத்திருந்த வெள்ளையனுக்கு பாட்டி கூறிய பழமொழி புரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.. ஆனாலும் தன் பேத்தி காஞ்சிபுரத்தில் இருப்பதாக அவர் கூறியதை நம்பும் அளவிற்கு அவன் ஒன்றும் முட்டாளில்லையே..இந்த அடிமை இன மக்கள் தன்னிடம் பொய் சொல்லும் அளவிற்கு தைரியம் அடைந்து விட்டார்களா என்று அவனுக்கு இன்னும் பொசு பொசுவென கோபம் ஏறியது உள்ளே..

"ஹேய் ஓல்ட் ஓமன்.. உன் பேத்திக்கு கல்யாணமா"

"ஆமா துரை"..

"அவளுக்கு எத்தின வயசு இர்க்கும்"

"ஒரு பதினாலு பதினைஞ்சு இருக்கும் துரை.."

"ரொம்ப சின்ன வய்சுல"

"ஆமா துரை.."

"துரை அந்த பொண்ணு இங்க எங்கயும் இல்ல"என்று வந்து சொன்னான் துரையின் கையாள்.

"கோ அண்ட் சர்ச் ஹெர்.. அந்த கேர்ள் இல்லாம வராதீங்க யூ ப்ளடி இடியட்ஸ்".. வெள்ளையன் அவனிடம் கர்ஜித்தான்.. அவன் முதலில் சொன்ன வார்த்தை பாட்டிக்கு புரியாமல் போனாலும் பின்னால் கூறிய வார்த்தைகள் நன்றாக செவியில் விழுந்தது.

"ஐயோ மகமாயி இந்த கட்டைல போறவன் எதுக்கு என் பேத்திய பார்த்தே ஆகணும்னு இங்க உட்கார்ந்துருக்கான்..எனக்கு ஈரக் கொல எல்லாம் நடுங்குதே..கல்யாணம் முடிச்சு புருஷன் வீட்டுக்கு போற பொண்ணு ஆத்தா.. இன்னொரு பொண்ணுக்கு ஒதவி செய்ய போயி என் பேத்திக்கு கண்டம் வந்துருச்சே.. இந்த நாசமத்து போறவனுக்கு பயந்து புள்ள எங்க ஒளிஞ்சு கெடக்கோ.. நீதான் ஆத்தா காத்து கருப்பு அண்டாம புள்ளைய காபந்து பண்ணனும்" காத்து கருப்பிடமிருந்து தன் பேத்தியை காப்பாற்றி கொடுக்குமாறு வேண்டிய பாட்டிக்கு அரகர்களிடமிருந்து தன் பேத்தியை காப்பாற்றி கொடு என்று தெய்வத்தை பிரார்த்திக்காமல் போனது விதியின் சூழ்ச்சி.

நந்தன் அழகி கையை பிடித்து காட்டுக்குள் பாதி தூரம் அழைத்து வந்திருந்தான். வெள்ளையனின் ஆட்கள் தீப்பந்தத்தின் உதவியோடு கானகத்தின் கீழ்த்திசையில் தேடிக் கொண்டிருக்க மலைப்பாங்கான அந்த காட்டுப் பாதையில் பாதி தொலைவு வரை அவர்கள் இருவரும் ஓடி வந்திருந்தனர்.அழகி அங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் பாட்டி அவளை காட்டிற்குள் காலடி எடுத்து வைக்க கூட அனுமதித்திருக்கவில்லை.. பூச்சி பொட்டிருக்கு பயப்படுகிறாரோ இல்லையோ காத்து கருப்புக்கு ரொம்பவும் பயம் கொள்வார் பாட்டி.

"ஐயோ ஆத்தா என்னால முடியாது சாமி.."என மூச்சிறைக்க கத்தினாள் அழகி.அவளின் வாய் கப்பென்று பொத்தினான் நந்தன்.

"ஏய் குட்டி இப்ப எந்தா இப்டி கத்தும்.. ஆ வெள்ளக்கார பட்டியிண்ட ஆளுங்க இவட வந்தா எந்தா செய்யுனு"

"ம்ம்ம்ம் ம்ம்ம்ம்"அவன் அவளது வாயை இறுக்கமாக மூடி இருந்ததால் சத்தம் மட்டுமே கொடுத்தாள் அழகி.. தன்னுடைய தவறை உணர்ந்து வேகமாக கையை எடுத்தான்.  மூச்சை நன்றாக ஆழமாக எடுத்துக் கொண்டவள்

"என்ன என் ஆச்சி கிட்ட வெள்ளக்காரன் பேசுவானா?"

"ஆச்சியோ"

"ஆமா பாட்டினு என்னமோ சொன்னியேய்யா"

"என்ட குருவாயூரப்பா அது பாட்டியல்ல குட்டி.. பட்டி.. பட்டின்னா நாயாக்கும்"..

"நாயா நான் நாயா.. யோவ் வெள்ளை நானும் உன்ன பாத்துட்டு தான்ய்யா வரேன்..உன் பேச்சே சரியில்ல.. வார்த்தைக்கு வார்த்தை குட்டி குட்டினு சொல்ற.. இப்ப பாத்தா நாயினு சொல்ற.. என்னய்யா உடம்பு எப்படி இருக்கு"

"அது கொறச்சு சூடா தான் இருக்கு குட்டி"

"கொறஞ்சு இருக்கா..மல மாட்ல பாதி இருக்க.. நீ கொறஞ்சு இருக்கியா.. எதுக்குய்யா என்ன நாயினு சொல்ற"

"அடோ உன்ன எங்க நான் பட்டின்னு பறைஞ்சேன்.. ஆ வெள்ளைக்காரன பறைஞ்சேன் மதியோ"

"இது மதியம் இல்லையா ராத்திரி..யோவ் என்னய்யா கண்ணு தெரியாம போச்சா.. குருட்டு பேய் ஏதாச்சும் உன் கண்ண புடிங்கிருச்சோ அய்யய்யோ இந்த காட்ல காத்து சேட்ட இருக்கும்னு ஆச்சி சொல்லும்.. இப்ப பாரு உன் கண்ணு பொட்டயா போச்சு.. அடுத்து என் கண்ணு போவப் போது. குருடிய யாருய்யா கட்டிக்குவா"..

"கரையன்டா குட்டி..யான் உண்டு"..

"கரையானா..எங்கய்யா..யோவ் கரையான் புத்துல தான்யா பாம்பு இருக்கும்..".. நந்தனுக்கு தான் பேசுவது அவளுக்கு புரியாமல் அவள் செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது சிரிப்பாய் இருந்தது. அவனுக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும். ஆனால் அதனை அவளிடம்  பேச அவனுக்கு இஷ்டமில்லை. தான் பேசும் மலையாளம் அவளுக்குப் புரியாமல் தப்பாக அர்த்தம் கொண்டு அவள் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்காகவே அவளிடம் வேண்டுமென்றே மலையாளத்தில் பேசினான்.

நந்தனுக்கு அபார செவித்திறன் உண்டு.. பல நூறு அடிகள்  கீழேயுள்ள கானகத்தில் ஆட்கள் அவர்களை தேடிக் கொண்டிருப்பதும் அவர்கள் கத்தி பேசுவதும் அவனுக்கு மெல்லக் கேட்டது. கால் வலி தாங்காமல்  இருட்டில் தடவி மண்ணை சுத்தம் செய்து அமர்ந்திருந்தாள் அழகி.இப்பொழுது இருட்டு இருவர் கண்ணுக்கும் நன்றாக பழகி விட்டது. நின்று கொண்டே சுற்றுமுற்றும் பார்த்து அவனைப் பார்த்து

"யோவ் வெள்ள எதுக்குய்யா பேய் மாறி நிக்குற.. உன்னிய பாத்தாலே அடி வயிறு கலக்குத்தைய்யா.."

"ஹேய் குட்டி பட்டுனு வரும்.. ஆ ஆளுங்க நம்மள நோக்கி வன்னு"

"என்னய்யா சொல்ற.. கட்டயில போறவனுங்க காட்டுக்குள்ள ஒளிஞ்சாலும் விட மாட்டானுங்களா"சலித்து கொண்டே எழுந்தவள்

"யோவ் எங்கய்யா போறது.. எனக்கு காலு ரொம்ப வலிக்குது.. நடக்கவே முடியல.. பேசாம அந்த துரை வந்தா அவன் காலுல வுழுந்து என்ன விட்ருனு கெஞ்சி கேட்டுக்குறேன்.. என்னால முடியலய்யா"என்று அவள் சொல்லி முடிக்க கூட இல்லை.. அவளின் குரல் வளையில் கை வைத்திருந்தான் நந்தன்.

அந்த நிசப்ததில் அவனின் மூச்சுக் காற்றுக் கூட கர்ண கொடூரமான ஓசையாக கேட்டது அவளுக்கு. அவள் மூச்சுக்கு திணறி அவனை தாக்க அவள் குரல் வலையில் இருந்து கரத்தை அகற்றியவன் அவளின் பின்னந்தலையில் கை விட்டு தன் முகம் நோக்கி இழுத்து

"பேச்சுக்கு கூட வெள்ளைக்காரன் காலுல விழணும்னு சொல்லாத.. என் தேசத்த அடிமையாக்குறவன் காலுல விழுந்து தான் நீ உயிரோட இருக்கணும்னு மரிச்சு போடி"என பற்களை கடித்து கொண்டே அவன் உறும ஆடி போய் விட்டாள் அழகி.. அவளின் மிரண்ட விழிகளை கண்டு சிறுப் பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் இப்படியாக அவன் மனம் எடுத்துச் சொல்லியது..

"நம்மள நோக்கி அவங்க வரறது குள்ள நாம போயிரலாம்"என்றவன் அவள் பேச்சை கேட்க்காமல் முன்னால் நடக்க வேறு வழியின்றி வார்த்தையின்றி நடந்தாள்.

அவர்கள் இருவரையும் காணாமல் வெள்ளையனின் ஆட்கள் தலைக் குனிந்து அவன் முன்னால் நின்றிருந்தார்கள்."யூ பாஸ்தட். ஹொவ் டேர் ஆர் யூ..செயிங் லைக் திஸ் டு மீ..என்க்கு அந்த கேர்ள் வேணும்.. அவ இல்லாம வராதீங்க.."

"துரை"நடுக்கமாக அழைத்தார் பாட்டி..திரும்பி தீயாய் முறைத்தான் வெள்ளைக்காரன்.

"துரை என் பேத்திய விட்ருங்க.. உங்கள கெஞ்சி கேக்குறேன்.. எங்களுக்கு யாருமே இல்ல. ஏதோ பரிசல் ஓட்டி பொழப்பு நடத்துறோம். கல்யாணம் நடக்க போது. அவள விட்ருங்க துரை"..

"ம்ம்ம்"மோவாய் கட்டையில் விரல் தேய்த்து யோசித்தான்.. பிறகு சுகந்தம்மை பாட்டியை அழைத்து"லுக் ஓல்ட் ஓமன்.. நீ வந்து என் கால்ல விழு. உன் பேத்திய சர்ச் பண்றது நான் கிவ் அப் பண்ண சொல்றேன்"..

"துரை"விக்கித்து நின்றார் பாட்டி..

"கம் ஒன்.. என்க்கு டைம் இல்ல"..பாட்டிக்கு தன் உடலில் ஓடும் ரத்தமும் பரம்பரியமும் கலாச்சாரம் போட்டி போட்டுக் கொண்டு கண் முன் வந்து போயின. எப்பேர்ப்பட்ட மண்ணில் வீர தமிழச்சியாக பிறந்து கேவலம் அடிமைப்படுத்த வந்தவன் காலில் விழுவதா என தன்மானம் வீறுக் கொண்டு எழுந்தது. ஆனால் ஒரே வினாடி தான்.

மறு நிமிடம் வெள்ளைக்காரனின் காலில் விழுந்து கதறினார் சுகதம்மை பாட்டி."ஐயா சாமி என் பேத்திய விட்ருங்க சாமி.. எங்க மேல கருண காட்டுங்க துரை"பாட்டி கதற அவரை எட்டி உதைத்து விட்டு சென்றான் அந்த ஈவு இரக்கமில்லாத மிருகம்.

தொடரும்.


Comments

  1. அச்சோ கடைசில பேத்திக்காக இந்த கட்டையில போறவன் காலுல விழுந்தா உதைச்சி தள்ளிட்டு போயிட்டானே எடுபட்டபய(பாட்டி மைண்ட் வாய்ஸ்ப்பா).ஏம்மா அழகி உனக்கு வாய் வலிக்கவே வலிக்காதா.சலிக்காம பேசுற.அதுலயும் அவன் மவையாளத்துல சொல்றத நீ தப்பா புரிஞ்சிட்டு புலம்புற பாரு சூப்பரு.டேய் நந்தா உனக்கு ஏண்டா இம்புட்டு கோவம் அந்த புள்ளைமேல.அவளே சின்ன பொண்ணு.அவளை பயமுறுத்துற நீ.எப்படி தப்பிச்சி போனாலும் அந்த வெள்ளைக்கார பய உங்களை சும்மாவிட்டுருவானா.👏🤝🤝👏🏻👌🏼👌🏼👍🏻👍🏻👏🏻💖💜💜💜👌🏼

    ReplyDelete
  2. Dai vellaikkarra unaku evalo teiriyam irundha patthiya un kalla villuga vechirppa😡😡😡

    ReplyDelete
  3. Iyyo antha vailkarana podu thalunga

    ReplyDelete
  4. Akka enak inonu thonuthu crct ah nu therla..may be inh kundalkesi Deva mogatha mulusa pakala la..so avan intha nandha mari irupano..😅

    ReplyDelete
  5. 😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  6. Interesting ud sis nice adapavingala ipdi poi andha patti ah kodumai panringa achooo nandhan azhagi convo nalla iruku

    ReplyDelete
  7. Ada lusu vellakara 😡😡😡😤😤😤👌👌👌👌👌👌

    ReplyDelete
  8. Epdiyum Azhagi ah thedathane pora aprm enna hairku paatti ah vizhuga sonna bldy hell🤬 waiting for Nxt ka🚶‍♀️

    ReplyDelete
  9. பாவிங்க என்னயெல்லம் கொடுமை செய்து வச்சிருக்காங்க 😳😳😳😳😡😡😡😡😡😡😡பாவம் பாட்டி

    ReplyDelete
  10. Waiting nxt ud dr nice going

    ReplyDelete
  11. Super arumai kadaisiyila pethikaga Patti kalula vil vendiyatha pochu enna kodumai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்