17 நெருங்கினா(ள்)ல்?


"தேவா.."..

 மாலையில் தோட்டத்தில் அமர்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தவனை அழைத்தாள் குண்டலகேசி..  அந்த ஆற்றில் குதித்து மர்ம அறைக்குள் நடந்த மர்மங்கள் யாவும் நடந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது.  அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவளிடம் அளந்தே பேசி வந்தவன் இந்த மூன்று நாட்களாக அடியோடு தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டான்.கமலிக்கு இறுதியாக தாங்கள் இருவரும் குளத்தில் குதித்தது மட்டும் தான் நினைவுக்கு இருந்தது. அதன் பிறகு என்ன ஆயிற்று என்று குண்டலகேசியிடம் அவள் வினவினாள்.

உண்மையை கூறாமல் இவர்கள் இருவரும் சென்று நீண்ட நேரம் ஆகி விட்டதால் இவர்களைத் தேடி வந்தியதேவன் அங்கே வந்தான். அவன் தான் அவர்கள் இருவரையும் குளத்தில் குதித்து காப்பாற்றினான் என்று ஒரு பொய்யை அளந்து விட்டாள் குண்டலகேசி. என்னதான் அவனுக்கான வேலைகளை அவளே பார்த்து பார்த்து செய்தாலும் அவன் அவளின் முகத்தை பார்த்து பேசவே இல்லை. தன்னுடைய தலை முழுவதும் கேள்வியை நிரப்பி வைத்திருந்த குண்டலகேசிக்கு இந்த மவுனம் ரொம்பவே கொடுமையாக தெரிந்தது.

ஒன்றுமே தெரியாமல் தன்னுடைய வாழ்க்கை இந்த சில தினங்களில் ஒரு பெரிய மர்ம தொடராக இருப்பதை எண்ணி அவள் ஆயாசம் அடைந்தாள். காலையில் உறங்கி எழுபவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே சென்று விடுவான். பிறகு மதியம் வீட்டிற்கு வருபவன் மதிய உணவை உண்டு விட்டு அவனுடைய அலுவலக அறைக்கு சென்று விடுவான். அதோடு ராத்திரி உணவின் போது மட்டுமே அவனை காண முடியும்.  அதன் பிறகு அவன் உறங்கி விடுவான்..அவனது ஆழ்ந்த மூச்சை மட்டும் தான் அவளால் கேட்க முடியும்.

இப்படியே போனால் தனக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த குண்டலகேசி இன்று அவனை ஒரே அமுக்காக அமுக்கி விட முடிவு எடுத்தாள். அதிசயத்திலும் அதிசயமாக அன்று லக் எனும் தென்றல் அவள் பக்கம் வீசிக் கொண்டிருந்தது.  அந்த லக் என்னும் தென்றலின் உதவியால் அவன் மாலையில் தோட்டத்தில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். வேகமாக சென்றவள் அவன் முன்பு வந்து நின்றாள்.. அவளை நிமிர்ந்து பார்த்தான் இது தவிர வேறு எந்த ஒரு வார்த்தையும் அவன் பேசவில்லை.

"ஏன் என்கூட பேச மாட்ற.. அன்னைக்கு நடந்ததுக்கு நான் சாரி கேட்டுட்டேன்..  அப்பவும் என்ன மன்னிக்காம நீ என் கூட பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு.. அப்படியா இல்ல இப்படியா.."தன்னுடைய பெரிய உடலை இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைத்து அவள் கேட்க அவனுக்கு சிரிப்பு எட்டி பார்த்தது.ஆனால் அடக்கி கொண்டான்.

"நான் தெரியாம தான் கேக்குறேன் உன்ன உன்னோட அம்மா பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா..சிரிச்சி தொலைய மாட்றா..பேசி தொலைய மாட்ற..சரி கருமம் இதெல்லாம் கெடக்குது..ஏன்யா ஒரு மனுஷனுக்கு மூடு கூடவா வராது.. அன்னிக்கு ஒரு தடவ விழாவ சிறப்பிச்ச.. அதுக்கு அப்றம் விலா எலும்புல கோடு விழுந்துருச்சா உனக்கு.. என் சைட்டு கூடா திரும்ப மாட்றா.. என்ன அப்டி பாக்குற.. நான் ஒன்னும் இதுக்காக அலையல.. அவசரமா கல்யாணம் பண்ண. அதுவும் செஞ்ச.. அதுக்கப்புறம் எட்டிக் கூட பார்க்கலானா கம்பெனிக்கு சந்தேகம் வராதா.."

"இன்னைக்கு பண்றேன்".. ஏதோ இன்று பால்கோவா  பண்ணி தருகிறேன் என்பதைப் போல உடலுறவு கொள்கிறேன் என்று அவன் சாவகாசமாக சொல்லியது அவளின் கோபத்தை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றது.

"எனக்கு மூடு இல்ல.. என் அனுமதி இல்லாம என்ன தொட்ட?கத்தி எடுத்து"

"வெட்டிருவியா"

"ஆமா"

"முடிஞ்சா செய்"

"உனக்கு ஓசியில ஒப்ரேஷன் பண்ணவா என் அப்பா ஆவுட என்ன பெத்து போட்டாரு.. நான் சொன்னது கத்தி எடுத்து என்னையே நான் குத்திக்குவேன்"

"ஏன் இந்த தற்கொலை முடிவு"

"ஏன்னா என்னால முடியல.. இன்னும் எத்தன நாளைக்கு என்ன இப்படி அடைச்சு வச்சு சித்திரவத செய்யப் போற.. அந்த மர்ம ரூம் பத்தி வாய திறக்க மாட்ற..சரி ஒழிஞ்சு போது.. உன்ன பத்தியாச்சும் சொல்லு..நீ எப்படி ஜெயில்ல இருந்து தப்பிச்ச.. நீ ஏன் ஜெயிலுக்கு போன.. உன் வாழ்க்க வரலாற்ற பத்தி சொல்லு..  எதுவுமே தெரியாம இருக்குறதுக்கு இதையாச்சும் தெரிஞ்சுக்கிறேன்.." மூச்சு வாங்க பேசியவள் அப்படியே புல்தரையில் காலை நீட்டி போட்டு அமர்ந்து விட்டாள்.

 கண்களை மூடிக் கொண்டவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றி விட்டு  மீண்டும் கண்களைத் திறந்து அவளை கூர்மையாக பார்த்தான். அவளும் சளைக்காமல் அவன் பார்வையை தாங்கிக்கொள்ள அன்று பாதியில் நிறுத்திய தன்னுடைய கதையை அவளிடம் கூற தொடங்கினான் வந்தியதேவன்." அன்னைக்கு அந்த பொண்ணுக்காக ஒருத்தன போட்டுத் தள்ளிட்டு அந்த பொண்ணு கொடுத்த துட்ட கையில வாங்குன கையோட  போலீஸ் வந்துருச்சு.. பயத்துல போலீஸ் கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு ஓடிப்போய் திருட்டு ரயில் ஏறி எந்த ஊருன்னு தெரியாம ஒரு ஊர்ல இறங்கி அங்க இருந்து ஆந்திராவுக்கு போற லாரில ஏறி ஆந்திரா போயிட்டேன்..

 விஜயவாடா மார்க்கெட்ல வேலைக்கு சேர்ந்தேன்..அங்கயும் எடுபுடி தான்.. என்ன மாதிரி அங்க நிறைய பசங்க இருந்தாங்க. கொடுக்கிற சம்பளத்துக்கு விடிய விடிய வேலை செய்றவங்க கூலிக்காரங்க.. கூலியோட ஒரு கூலியா நானும் என்னோட பதினாலு வயசு வரைக்கும் அங்க இருந்தேன்..கூலியா மட்டுமில்ல புரோக்கரா.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணுங்க புரோக்கர் இல்ல.. பொருளுங்க ரேட்ட ஏத்தி இறக்கி பேசி வித்து கொடுக்குறதுல என்ன அடிச்சுக்க ஆளே இல்ல..பவின்.. என்ன விட எழு வயசு கூட.. என்னோட பிரண்ட்டு சொந்தம் பந்தம் எல்லாமே அவன் தான்..

அவனும் தினக்கூலி தான்..என்ன மாதிரி திருட்டு ரயில் ஏறி ஓடி வந்தவன். அவனோட அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டவன் இவன போட்டு டார்ச்சர் பண்ண அவன போட்டுத் தள்ளிட்டு ஓடி வந்தவன்.ரொம்ப சாது..மாடு மாதிரி வேலை செய்வான். என்னோட வேலைய கூட சில நேரம் அவன் தான் செய்வான். எனக்கு சாப்பிட சாப்பாடு இல்லனா எங்கேயாச்சும் எப்படியாச்சும் ஏன் பிச்ச கூட எடுத்து  எனக்கு சோறு வாங்கி கொடுத்துருக்கான்..

 அவன் தினமும் மார்க்கெட்டுக்கு வர ஒரு பொண்ண லவ் பண்ணான். அந்த பொண்ணு மொத எல்லாம் அவங்க அம்மா கூட வந்துச்சு..  அப்புறம் கண்ணால பாத்து ரெண்டு பேருக்கும் பிடிச்சு போன நேரம் அந்த பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போயிருச்சு.. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு தான் தினமும் மார்க்கெட்டுக்கு வரும்.. அப்படியே இவங்களுக்குள்ள லவ்வாச்சு.. ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம பேசிக்குவாங்க.. அந்த பொண்ணு இவனுக்கு ஃபோன் எல்லாம் வாங்கிக் கொடுத்துச்சு.

எல்லாமே நல்லாத்தான் போச்சு.இவனும் காசு சேர்த்து மார்க்கெட்டில தனியா கடை போடலாம்னு இருந்தான். அந்த நேரம் தான் அந்த பொண்ணு வீட்டுல மாட்டிக்கிச்சு.அதோட நம்ம பையனும் மாட்டிக்கிட்டான்..ரெண்டு பேரயும் அடி அடின்னு அடிச்சு அந்தப் பொண்ணு வேறு ஒருத்தனுக்கு கட்டி வெச்சுட்டாங்க. இவன  மிரட்டி ஊர விட்டுப் போக சொன்னாங்க. அங்க இருந்தா அவன் உயிருக்கு ஆபத்துனு அவன இழுத்துட்டு மும்பை போயிட்டேன்.

 சேத்து வச்ச காசுல ஒரு ரூம் பாத்து அங்கயும் மார்க்கெட்ல கூலி வேலைக்கு போனோம். அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு. அங்க இன்னொரு பையன் இருந்தான். அவன் தான் எங்கள ஒரு நாள் அந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போனான். அப்படி சந்தேகமாக பாக்காத. முழு கதைய கேளு.வயசுக் கோளாறு.. பவின் வேணா வேணானு எவ்வளவோ சொல்லியும் நான் தான் அவன இழுத்துட்டு போனேன்..

 அங்க பொண்ணுங்க எல்லாம் வரிசையா வந்து நின்னுச்சுங்க... அதுல பவின் லவ் பண்ண  அந்தப் பொண்ணும் இருந்துச்சு.பவின் துடிச்சு போய்ட்டான்..  அந்த பொண்ணு வேணும்னு சொல்லி அது கூட ரூமுக்கு போய் அப்போ தான் அந்த பொண்ணு கதைய சொன்னுச்சு..

 அந்தப் பொண்ண அடிச்சு ஒருத்தனுக்கு கட்டி வெச்சிருக்காங்க..  கல்யாணம் நடந்த அன்னைக்கு ராத்திரி அந்தப் பொண்ணு யாருக்கும் தெரியாம வீட்ட விட்டு ஓடி வந்துருக்கு..மார்க்கெட்ல பவின் இல்ல..  அவங்க சந்திக்கிற எல்லா இடத்திலேயும் போய்த் தேடிப் பார்த்துருக்கு..  அப்ப தான் ஒரு ரவுடி கும்பல் அந்த பொண்ண கடத்தி இங்க கொண்டு வந்து வித்துட்டாங்க..

 அங்க இருந்து அந்த பொண்ண காப்பாத்த ட்ரை பண்ணாண் பவின்.ஆனா அப்போ காப்பாத்த முடியல..மறுநாள் நாங்க திரும்ப அங்க போனோம். பவின் அவன் லவ் பண்ண பொண்ணு வேணும்னு கேட்டு போய்டான். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுனு நானும் ஒரு பொண்ணு கூட ரூம்ல இருந்தேன்.. அவ வித்யா.. என்னோட தலையெழுத்தயே மாத்துன பொண்ணு.. வித்யா மும்பையில பெரிய ஒரு தாதாவோட பொண்ணு. வித்யா அப்பாவோட  எதிரி ஒருத்தன் காலேஜ் போன வித்யாவ கடத்தி அவ அப்பாவ பழிவாங்க இங்க கொண்டு வந்து விட்டுட்டான்.. அன்னைக்கு தான் வித்யா வந்திருக்கா..

வித்யா கிட்ட போனா மொத ஆளு நான் தான்..ப்ளீஸ் என்ன காப்பாத்து பய்யானு அவ கதறுனா.. அந்த நேரம் தான்  பவின் எனக்கு போன் பண்ணி இன்னைக்கு எப்படியாச்சும் அந்த பொண்ணு அங்க இருந்து கூட்டிட்டு போனும்னு சொன்னான்.எனக்கு வேற வழி தெரியல. வித்யாவ கூட்டிட்டு ரூம விட்டு வெளிய வந்தேன்.. அவள எங்க கூட்டிட்டு போறேனு என்ன தடுத்தானுங்க..நெறைய பேர் வந்தாங்கனுங்க. கையில பொருளோட.

பொருள புடிங்கி அவனுங்க எல்லாரயும் போட்டேன்.. பவின் மெரண்டு போய்டான். வெறி புடிச்ச மாதிரி ஆயிட்டேன். சின்ன வயசுல இருந்து என்ன அடிமைப்படுத்தின அத்தன பேரோட மூஞ்சும் ஞாபகத்துக்கு வந்து அடிக்க வந்தவன எல்லாம் வெட்டி வீசுனேன்.. பவின் அவன் ஆளு அப்றம் வித்யா இவங்களோட அங்க புடிப்பட்ருந்த அத்தன பொண்ணுங்களும் தப்பிச்சி ஓடுனாங்க.. அவங்க கண்ணுல அப்டி ஒரு நன்றி..

வித்யா நேரா அங்கேருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு எங்களயும் கூட்டிட்டு போய்ட்டா.. அங்கெருந்து அவ அப்பாவுக்கு தகவல் சொல்ல சுகிர் பாய வந்தாரு. அவரு தான் வித்யாவோட அப்பா. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்  வித்யா அப்பாவோட ஆளு. வித்யா அவ அப்பா  கிட்ட எல்லாத்தையும் சொன்னா. சுகிர் பாய் எனக்கு ரொம்ப நன்றி சொன்னாரு.

 அவரோட பவர வெச்சு இதெல்லாம் ஒன்னும் இல்லனு ஆக்கிட்டாரு..எனக்கு பவின் எங்கள அங்க கூட்டிட்டு போன சுஜின் எல்லோருக்கும் அவரே வேல போட்டு கொடுத்தாரு. பவின் அவன் லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். சுகிர் பாயிக்கு என் வேகம் பிடிச்சிருந்தது..என்ன அவரு கூடவே வெச்சிகிட்டாரு..நாளு தடவ அவரோட உயிர காப்பாத்திருக்கேன் என் உயிர பணயம் வெச்சு..

சுகிர் பாயிக்கு அப்றம் நான் தான் அவரோட இடத்த புடிப்பேன்னு எல்லோரும் சொன்னாங்க. பாய்க்கு இதுல சந்தோசம் தான். அப்டியே வாழ்க்கை மாறி போச்சு."

"அப்றம் எப்டி இங்க வந்த.. ஏன் வாழ்க்கை மாறிப் போன கதைய சொல்லு தேவா"என்றாள் குண்டலகேசி.  அவளின் வாழ்க்கையை தான் மாற்றிய கதையைக் கூறத் தொடங்கினான் வந்தியதேவன்.

Comments

  1. Paavam andha ponnu 😐😐 ennama vela paathurukka athuvum spot la.. cool 😎 aama aama sollu VD kekka rmba eager ah iruku 🤩

    ReplyDelete
  2. Enna oa ethu 🤔🤔🤔deva apdi enna solla poran🤔🤔🤔kesi story kekara mari ukanthu erukka😂😂😂papom enna aguthunu😍😍😍waiting sagi😍😍😍

    ReplyDelete
  3. Very interesting epi akka...😍😍😍

    ReplyDelete
  4. Wow.... takkar anniyare... Deva kalakura

    ReplyDelete
  5. செம்ம செம்ம ❤❤❤👍👍

    ReplyDelete
  6. Cha pavam pavan nalla vela kapathinga avloda lover ah super ud sis pavin deva kaga evlo senji irukan super nice ud sis vidhya nalla vela avalala deva ellam thapichitan super

    ReplyDelete
  7. செம்ம சூப்பர் நிலா, ஆனா அவனுகும் இவலுகும் சம்பந்தம் எப்படி😯🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  8. Super arumai pavam theva ennalaam kodumaiya anupavichchurukan aduththu ennachu seekkiram sollungaa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்