18 நெருங்கினா(ள்)ல்?



குண்டலகேசி ஒரு பக்கம் ஆர்வத்தோடும் ஒரு பக்கம் தன் விதியை மாற்றிய விடுகதையை அறிந்து கொள்ளும் பதற்றத்தோடும்  மழைக்காக வானம் பார்த்து நிற்கும் விவசாயி போல தன் வாழ்வை திசை திருப்பிய சம்பவத்தை  தெரிந்து கொள்ள வந்தியதேவனின் முகம் நோக்கி பார்த்திருந்தாள். தன் கால் அருகே சட்டமாக அமர்ந்து கதை கேட்கும் அவளைப் பார்க்கையில் ஆசை பொங்கி வழிந்தது அவனுக்கு.  அதே சமயம் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.

" இப்படியே என் மூஞ்ச பார்த்துக் கிட்டு இருந்தா எப்போ தான் நீ கத சொல்லி முடிப்ப..சட்டு புட்டுன்னு கதைய சொல்லு..புல்லு குத்துது.. அரிக்குது வேற" சலிப்பாக சொல்லியவள் சற்று எம்பி தன்னுடைய பின் பக்கத்தை  சொறிந்தாள். அவளின் செய்கையை பார்த்து தலையாட்டிக் கொண்டவன் மீதி கதையை சொல்லத் தொடங்கினான்..

"சுகிர் பாய் கிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தேன்..சுகிர் பாய்க்கு நேஷனல் லெவெல்ல பிஸ்னஸ் இருந்துச்சு.. என்ன அப்படி பார்க்கிற.. நீ நினைக்கிறது சரிதான்..  அண்டர் கிரவுண்ட் பிசினஸ்.  சென்னையில அவரோட பிசினஸ பார்த்துட்டு இருந்தவன் ஒப்போசிட் டீம் கிட்ட காச வாங்கிட்டு பாய்க்கு துரோகம் செஞ்சுட்டான்.அவனால பல கோடி ரூபா லாஸ்..பாய் அவன போட்டுத் தள்ளிட்டு அவனுக்கு பதிலாக இங்க இருந்து வேலை பார்க்க நம்பிக்கையான ஆள் வேணும்னு யோசிச்சாரு.அப்போ தான் என்ன இங்க வர சொன்னாரு. நான் முடியாதுன்னு சொன்னேன். ஆனா பாய் ரோம்ப கேட்க என்னால மறுக்க முடியல.

 அதோட சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க அவருக்காக நான் தான் வேல பார்த்தேன். அப்படி இருக்கும் போது தான் எனக்கு கமலியோட குடும்பம் பழக்கம்.. பாய் என்ன அவரோட பார்ட்னரா ஆக்கிட்டார்.. ஒரு நாள் எங்கள தொழில் செய்ய விடாம  அட்டூழியம் பண்ணிக்கிட்டு இருந்த மினிஸ்டர் ஒருத்தன போட்டுத் தள்ள பாய் என்ன போவ சொன்னாரு..மினிஸ்டர போட்டுத் தள்ளியாச்சு.ஆனா போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்.."

"எப்டி மாட்டுன"

"நானே சரணடைஞ்சிட்டேன்"

"அடப்பாவி பயலே. கிறுக்கா புடிச்சிருக்கு உனக்கு..போட்டுத் தள்ளிட்டு ஊர விட்டு ஓட வேண்டியதுதானே.. எதுக்கு நீ போய் போலீஸ் கிட்ட சரணடைஞ்ச.."ஆர்வமாக கதை கேட்டாள் குண்டலகேசி.

" நான் போட்டுத் தள்ளுனது என்ன பஞ்சு முட்டாய் விக்கிறவனையா? மினிஸ்டர் லூசு..வேற லெவல் பிரஷர்.. ஆனா நான் போலீஸ் கிட்ட சரணடைஞ்சது எல்லாமே எங்களோட பிளான். கோர்ட்ல  எனக்கு தூக்கு தண்டன கொடுத்துட்டாங்க.. தனி செல்லுல சகல வசதியோட இருந்தேன். அப்பதான் நீ என்ன பாக்க வந்த"

"ச்சீ கிரக்கத்த... ஆச தான் ஆகாசத்துல ஆட்டிகிட்டு நிக்குது.. அந்த மூதேவி முடிச்சவிக்கி டைரக்டருக்கு ஐடியா கொடுத்த பாவம் என்னயே சுத்திக்கிட்டு அடிச்சிருச்சு..என்னமோ ஆசைப்பட்டு உன்ன பார்க்க வந்த மாதிரி பேசுற..நீ தானயா நான் தான் உன்ன பேட்டி எடுக்கணும்னு அந்த சூப்ரின்டர் கிட்ட சொன்ன..ஆமா உனக்கு அப்பவே என்ன தெரியுமா"

" ஆமா நீ ஏஞ்சலினா ஜோலி பாரு..  குண்டலகேசினு உன் பேர கேட்டோன தெரியறதுக்கு..பேரு வித்தியாசமா இருக்கே..  ஆளு பாக்க எப்படி இருப்பேனு உன்ன வர சொன்னேன்..  ஆனா உன்ன பார்த்த அந்த நிமிஷம் சத்தியமா சொல்றேன் என் உயிரே ஓடி வந்து உன்ன கட்டிப்புடிச்ச மாதிரி உணர்ந்தேன்.. அந்த கேமராமேன் பின்னாடி பல்லி மாதிரி ஒட்டிகிட்டு நடுங்கிட்டே நீ வந்த..  அந்த இருட்டு ரூம் குள்ள மெழுகுவர்த்தி வெளிச்சத்தில  தேவதை மாதிரி என் முன்னாடி நின்ன.

 ஏகலைவனு என்ன கூப்பிட்ட பாத்தியா உன் கண்ண  நிமுந்து பார்த்த அந்த நிமிஷம் முடிவு பண்ணேன்.. நீ எனக்கு தான்.. எனக்கு தெரியும் நான் சாக மாட்டேனு.  ஆனா ஒருவேளை நான் செத்துட்டா என் ஆசை என்னோட போயிருக்கும்.. அதனால தான் சொன்னேன். நான் செத்துப் போயிடனும்னு வேண்டிக்கோனு. சுகிர் பாய் நாங்க பிளான் பண்ண மாதிரி மேலடத்துல அழகான மூவ் பண்ணி எனக்கு பதிலா என்ன மாறியே உருவ ஒத்தும இருக்குற ஒருத்தன புடிச்சு உள்ள தள்ள அவன் தூக்குக்கு போய்ட்டான்.நான் வெளிய வந்துட்டேன்.. "

"ஒரு அப்பாவிய நீ செஞ்ச தப்புக்காக உன் சுயநலத்துக்காக போட்டு தள்ளிருக்கியே  இது எவளோ பெரிய பாவம் தெரியுமா.." பொரிந்து கொட்டினாள் குண்டலகேசி..

" ஹலோ மேடம் அவன் ஒன்றும் அவ்ளோ பெரிய யோக்கியன் இல்ல..அந்த நாய் பெரிய ரேப்பிஸ்ட்.. பெத்த அம்மா கிட்டயே போதைய போட்டுட்டு தப்பா நடக்க பாத்தவன்.. அவனோட அம்மா சுகிர் பாய் வூட்ல வேல செய்றது. அதுவே இப்டி ஒரு மூதேவி உசுரோட இருக்க கூடாது. அவன போட்டு தள்ளுங்கன்னு சுகிர் பாய் கிட்ட கேட்ருக்கு. அவனும் போத தெளிஞ்சு பெத்த அம்மாவயே இப்டி பண்ண பாத்தத நெனச்சு ரொம்ப பீல் பண்ணி அவனுக்கு உயிரோடு இருக்கவே இஷ்டமில்ல.. என்ன கொன்னுருங்க பாய்னு அழுந்துருக்கான்.

அவனோட ஒசரம் வெயிட்டு எல்லாமே எனக்கு ஒத்து போகவும் பாய் அவன் கிட்ட உன் அம்மாவுக்கு எல்லா வசதியும் செஞ்சு தரேன். காலேஜ்ல படிச்சிட்டு இருக்குற உன் தங்கச்சிக்கு நானே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்குறேன். அதுக்கு பதிலா நீ தூக்குக்கு போரியான்னு கேட்க அவனே தான் இஷ்டப்பட்டு தூக்குல தொங்க வந்தான்"

"நல்ல வேல அந்த சனியன் செத்து தொலைஞ்சு போச்சு.. பெத்த அம்மாவயே ச்சீ...  அடுத்த ஜென்மத்தில கூட இவன் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டான்.."கோபத்தில் சாபமிட்டாள் குண்டலகேசி.

"என்ன வளர்த்த ஆயா சொன்னுச்சு.. அதோட புருஷனுக்கு பொன்னியின் செல்வன்னா ரொம்ப இஷ்டமாம். அவங்களுக்கு புள்ளைங்க பொறக்கும் போது வந்தியதேவன்னு பேரு வைக்க நெனைப்பாராம். ஆனா ஒருத்தன் மூஞ்சு கூட குழந்தையிலேயே சரியில்லையாம். அந்த பேருக்குனு ஒரு மரியாதை இருக்கு. அத கெடுக்க கூடாதுனு பெருசு யாருக்குமே அந்த பேர வைக்கலையாம்.என் அம்மா ஆயா கிட்ட என்ன போட்டுட்டு செத்து போனதும் என்ன தூக்கிட்டு வூட்டுக்கு போன ஆயா அது புருசனுக்கு புடிச்ச பேர எனக்கு வெச்சது..

ஆனா சின்ன வயசுல இருந்தே என்ன பசங்க எல்லோரும் ஏகலைவனு தான் கூப்பிடுவாங்க..நான் யாரும் சொல்லிக் கொடுகாமயே வேலைய கத்துப்பேன் அதுக்காக. அப்றம் அதுவே பேரா ஆச்சு.அதனால தான் ஏகலைவன் செத்து போய்டான். வந்தியதேவன் உயிரோட இருக்கான்.".. அவன் தன்னுடைய ப்ளாஷ் பேக்கை சொல்லி முடித்ததும் கன்னத்தில் கை வைத்து கதை கேட்டுக் கொண்டிருந்தவள்

"கதையும் முடிஞ்சிருச்சு.. கட்ட வெளக்குமாறு பிஞ்சிருச்சு.. ம்ம்ம்"என சம்மந்தமே இல்லாமல் பழமொழி ஒன்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.

"ஹேய் என்ன புதுசு புதுசா பழமொழி சொல்ற..  நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்"

" யாருக்கு தெரியும் வாய்க்கு வந்தத அடிச்சு விடுறேன்..என் விதிய பாரேன்.. ஒரே கன்றாவியா இருக்குல்ல..இரும்படிக்குற எடத்துல ஈக்கு என்ன வேல.. டைரக்டர் அவரு பாட்டுக்கு ஒரு மொக்க ஐடியாவ யோசிச்சிருப்பாரு.. நான் ஐடியே வேங்கை மாறி பாஞ்சு இந்த மண்ணாங்கட்டி ஐடியாவ கொடுக்க அது மண்ணள்ளி என் மண்டயில போட்ருச்சி..ஓ காட்.. இருந்தாலும் இது ஒரு செவ்வாய் அதிசயம்"

"என்ன செவ்வாய் அதிசயமா"

"ஏன் ஒலக அதிசயம்னு சொன்னா ஒத்துக்குறீங்க.. உலகம் மாறி செவ்வாய் ஒரு கோள் தானே.அதோட அதிசயம்னு சொன்னா ஒத்துக்க மாட்டிங்களா.."

"ஆண்டவா.. சரி என்ன செவ்வாய் அதிசயம்"

"ஆமா ஊரு ஊரா சுத்திருக்க..அங்க எவளும் உன் கண்ணுல சிக்கலயா.. இவ்ளோ கன்றாவியா இருக்குற நான் தான் உனக்கு ரதியா தெரிஞ்சேனா"

"நீ கன்றாவினு யாரு சொன்னா.. நீ தான் என்னோட அண்ட சராசர அழகி..  உன்னோட பேச்சுக்கும் உன்னோட மனசுக்கும் நிகரான ஒரு அழகிய நான் இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது.."

"இனிமே பார்த்தா ஓடிருவேன்னு நாசுக்கா சொல்றியா.."

"பைத்தியம்..இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாது.. அதான் இப்போ உன்ன பார்த்துட்டேனே.. இனிமே  எவளயும் பார்க்க வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது.."நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவன் அவள் எழ தன்னுடைய வலது கையை நீட்டினான்.தனக்கு இருந்த பல கேள்விகளில் சில கேள்விகளுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம்,  சிறுவயதில் இருந்தே தன்னுடைய உருவத்தைப் பார்த்து கேலி செய்தவர்களின் வார்த்தைகளால் புண்பட்டிருந்த அவளின் மனதிற்கு தன்னை உலக அழகி அல்ல அண்டசராசரதுக்கும் அழகி என்று ஒருவன் கண்களில் காதலோடு கூறுகையில் அதனால் ஏற்பட்ட பூரிப்பு ஒரு பக்கம் என எழுந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளின் நிலை உணர்ந்தவன் குனிந்து அவளின் இருக்கரங்களின் நடுவே கை விட்டு அப்படியே தூக்கினான். தன்னை தூக்கியவனை ஆச்சர்யமாக பார்த்தாள் கேசி. சொல்ல போனால் சைட் அடித்தாள். செதுக்கிய முக வெட்டும் சதைப் பற்றில்லாத உடல் வாகும், அண்ணார்ந்து பார்க்கும் உயரமும், ஆழ்ந்து நோக்கும் கண்களும் எந்த விதத்தில் இவன் குறைந்து போய் விட்டான்...  அவனின் தொழில் கூட தப்பு என்று சொல்ல முடியாது.  தாய் தகப்பனின் ஆதரவற்று,இந்த சமுதாயத்தில் பசி இல்லாமல் உயிர் வாழ அவன் இந்தத் தொழிலில் இறங்கி விட்டான். இனி இதிலிருந்து அவனுக்கு நல்லதை எடுத்துச் சொல்லி வெளி வரச் சொல்ல வேண்டும்.

" என்ன அப்படி பார்க்கிறா"

" கண்ண மூடு"

" எதுக்கு"

"கண்ண மூடுங்க மிரு சார்".. கண்ணை மூடினான் அவன். அவனது கன்னத்தில் இதழ் பதிய முத்தமிட்டவள் அங்கிருந்து ஓடினாள். கண்ணை திறந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி.

"ஓய்"

 தூரமாக நின்று கொண்டவள்"என்ன ஷாக்கா இருக்கா.. அதிசயம்லாம் அப்பப்ப தான் நடக்கும்.. அத ஆராய கூடாது அனுபவிக்கனும் மாமோய்"என அவனிடம் வாய் அடித்தவள் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள். இத்தனை நாட்களில் அவளாக அவனுக்கு தந்த முத்தத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது வந்தியதேவன் முகத்தில்.

 மற்ற நாட்களைப் போல் அல்லாமல் அன்றைய பொழுதும் இனிமையாக ஓடியது. மாலையில் இருந்த  மன நிம்மதி இரவில் அடியோடு தொலைய போவதை பாவம் அவள் உணரவில்லை.. தன்னுடைய இன்னொரு கேள்விக்கும் அப்படியே பதில் கிடைத்து விட்டால் அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விடும் என அதற்கான வழியை யோசித்துக் கொண்டிருந்தாள் குண்டலகேசி. இரவு உணவை உண்ட வந்தியதேவன் உறங்க அறைக்கு வந்ததும் அவனின் கதையை கேட்ட குண்டலகேசியால் அவன் மீது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

 சிறுவயதிலிருந்தே எவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருக்கிறான். ஏதோ கண்டதும் காதல் போல. இப்படியெல்லாம் நடக்க வேண்டியதாகி விட்டது. நாமும் அவனை வேதனைப்படுத்தினால் யாரிடம் சென்று முறையிடுவான். அவன் மேல் இருந்த பரிதாபம் மாறி அன்பு சுனாமி போல திரண்டு வந்தது. அருகே படுத்திருந்தவன் மீது  கால்களை போட்டு இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

"ஹேய் என்னாச்சு"

"ஒன்னும் இல்ல.. நீ எதுக்கும் கவல படாத தேவா.. இனிமே உனக்கு நான் இருக்கேன்.."விழி விரிய அவளை பார்த்தான்.

"நீ சொன்னது நிஜமா.."அவனை முறைத்தவள் தாமாக அவன் இதழில் தன் இதழ் பொறுத்த அதற்கு மேல் அங்கே நடந்தது காதல் போராட்டம் தான்.கூடல் முடிந்து நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தவனை பார்த்தவள் மெல்ல அவன் கழுத்தில் இருந்த டாலரில் இருந்து அந்த சாவியை எடுத்து கொண்டு சத்தம் செய்யாமல் எழுந்து முன்பே தயாராக எடுத்து வைத்திருந்த டார்ச் லைட்டை தூக்கி கொண்டு கமலி அழைத்து போன வழியே குளத்தை நோக்கி ஓடினாள்.

நாய்களின் குறைப்பு சத்தம் வேறு அவளின் ஓட்டத்தை அதிகரிக்க காவலுக்கு இருந்த நாய்கள் அவளைத் துரத்த நின்று மூச்சு கூட வாங்க முடியாத நிலையில் தன்னுடைய உடலை தூக்கிக் கொண்டு நிற்காமல் ஓடினாள் குண்டலகேசி.நாய் துரத்தலின் பயனாக  சற்று விரைவாகவே அந்த குளத்தை அடைந்தவள் டார்ச் லைட்டோடு நாய் அருகே வந்துவிட மூச்சை இழுத்து அந்த குளத்தில் விழுந்தாள்.

 அன்று போலவே இப்பொழுதும் அவளால் நன்றாக நீந்த முடிந்தது. டார்ச் லைட்டின் உதவியோடு அன்று ரோஜா குத்திட்டு நின்ற இடத்தை கண்களால் தேடினாள். பாசிகள் அகற்றப்பட்ட சக்கரம் அவள் கண்களுக்கு தெரிய வேகமாக சென்று  அதனை பிடித்து இழுத்தாள் ஒரு கையால். அது திறந்து கொள்ள அன்று போலவே  அதனுள் நீந்திச் சென்றாள். அவ்வளவுதான் முன்பை போல பைப்பிள் வழுக்கி அந்த மர்ம அறைக்குள் வந்து விழுந்தாள்.

 அவள் அந்த அறைக்குள் விழுகவும் இங்கே வந்தியதேவன் பதறி எழவும் சரியாக இருந்தது. எழுந்தவன் பக்கத்தில் படுத்திருந்தவளை  தேடினான். அவள் அறையில் இல்லாமல் போக ஏதோ தோன்ற தன்னுடைய டாலரை எடுத்து பார்த்தான். அவன் பதுக்கி வைத்திருந்த சாவியை காணவில்லை. அந்த நிமிடத்திலிருந்து ஓட ஆரம்பித்த தான் வந்தியதேவன் அந்த மர்ம அறையில் வந்து நின்றான். ஆனால் அதற்குள் குண்டலகேசி அந்தப் பேழையை திறந்து பூட்டுக்குள் சாவியை போட்டு திறந்தே விட்டாள். 

Comments

  1. Apdi enna pa ragasiyam erukum🤔🤔🤔🤔oru vela poorva jenmam mari ethenum eruku mooo papommm😍😍

    ReplyDelete
  2. Eagerly waiting for this moment sis

    ReplyDelete
  3. Apdi enna dha irukum flashback kesi adangudha paren konjamadhu

    ReplyDelete
  4. En athula enna iruku 🤔🤔🤔👌👌👌👌👌👏

    ReplyDelete
  5. VD Kesi secret ah eppo reveal panna poringalo rmba eager ah iruku 🤩🤩

    ReplyDelete
  6. Apdi enna ragasiyam irukkum 🤔🙄

    ReplyDelete
  7. Super arumai pochu payapulla mattikichchu enna nadakka pokuthu

    ReplyDelete
  8. Semma interesting a iruku akka😍😍

    ReplyDelete
  9. Romba eager ah wait panran sis,,,sikram andha marmam enna nnu sollirunga

    ReplyDelete
  10. ஏம்மா கேசி சும்மாவே இருக்க மாட்டியா..நல்லா அவனை தூங்க வச்சிட்டு வந்து இப்ப பிரச்சனைல மாட்டிக்கபோற.அவனோட கடந்த காலத்தை அவன் இன்னும் முழுசா சொல்லலை.அதுக்குள்ள ஆர்வக்கோளாறுல இப்புடி பண்ணிட்டியேம்மா. உனக்கு ஏதோ ஆபத்து இருக்கிறதாலதான் அவன் உங்கிட்ட அந்த சாவியை பத்தி சொல்லலை.ஆனா நீ தேவையில்லாம சிஐடி வேலை பாத்து வாங்கி கட்ட போற.🤝🤝👏👍🏻👍🏻👏🏻👌🏼💜🤝🤝🤝👏👍🏻👍🏻👏🏻👌🏼👌🏼💜💖🤝👍🏻👌🏼💜💜

    ReplyDelete
  11. ஐயோ ஏன் இப்படி செய்த கேசி,அவன் கிட்டயே கேட்டிருக்கலாம் இல்ல,😳😳😳😳😳😳😳😳😳👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்