25 நெருங்கினா(ள்)ல்?
நந்தன் அழகியை அழைத்துக்கொண்டு மலையடிவாரத்துக்கு வந்தபோது தூரத்தில் தெரிந்த தனது குடிசையின் முன் சுகந்தம்மை பாட்டி மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுவது நிழல் போல அழகியின் கண்களுக்கு தெரிந்தது."யோவ் அது என் ஆச்சி தான.. அது யாரோட காலுலயோ விழற மாறி இருக்கே.. நல்லா பாரு"..
அவனும் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நிற்க அழகி கேள்வி கேட்ட மறுநிமிடம் ஓட ஆரம்பித்தவன் "ஆமா குட்டி அது நின்ன பாட்டி தான்" என்று நிற்காமல் ஓடினான்.. மனம் படபடக்க அவனையும் விட வேகமாக ஓடினாள் அழகி. என்னதான் வேகமாக ஓடினாலும் அதற்குள் மாப்பிள்ளை வீட்டார் காலில் விழுந்து
"ஐயா என் சாமி.. என் பேச்ச கேளுங்கய்யா.. என் பேத்தி சொக்கத் தங்கம்ய்யா. இந்த வெள்ளைக்காரனுக்கு பயந்து தான் புள்ள காட்டுக்குள்ள ஓடிருச்சு.. அது எந்த தப்பும் பண்ணலய்யா.. அது மேல பழிய போட்டு இந்த கண்ணாலத்த நிறுத்திடாதீங்க".. அழுதார் பாட்டி.
அழகி வெள்ளைக்காரனுக்கு பயந்து காட்டுக்குள் ஓடி முழுதாக ஒரு நாள் கடந்தும் வராத நிலையில் யாரோ ஒரு விஷமி இந்த செய்தியை மாப்பிள்ளை வீட்டார் காதில் போட்டு விட்டான். அந்த கலகக்காரனின் வார்த்தையை நம்பி மாப்பிள்ளை அவனின் சொந்த பந்தங்கள் என ஒரு பெரும் கூட்டமே சுகந்தமை பாட்டி வீட்டின் முன்பு கூடி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். பாட்டி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை எதையும் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. அழகி நடத்தைக் கெட்டவள். அவளுக்கும் அவளுக்கு உதவி செய்த புரட்சியாளனுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த திருமணம் பிடிக்காமல் அழகி அவனோடு ஓடிவிட்டாள் என்று இவர்களே கதை கட்டி அதை சுற்றி நிற்பவர்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தனர்.யாருமே இல்லை என்று மறுத்து கூறவில்லை.வெள்ளைக்காரனுக்கு பயந்து அந்த இரவு வேண்டுமானால் அழகி பதுங்கி இருக்கலாம்.ஆனால் ஒரு நாள் ஆகியும் ஏன் இன்னும் வந்து வீடு சேரவில்லை..
அன்னிய ஆடவனோடு இவளுக்கு என்ன காட்டிற்குள் வேலை.. அழகிக்கு பரிந்து பேசினால் நடத்தை கெட்டவளோடு தொடர்பு வைத்திருக்கும் குடும்பம் என்றும் இதனால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிடும் என்பதாலும் யாருமே வாயை திறக்கவில்லை.அவர்களின் வாக்குமூலத்தை பாட்டியும் எதிர்பார்க்கவில்லை. தான் வளர்த்த பேத்தி அவளின் திருமணம் சில நாட்களே இருக்கும் வேளையில் நின்று போனால் அவளை இனி யார் திருமணம் செய்து கொள்வார்கள்?
இதை நினைத்துதான் பாட்டி மிகவும் கலங்கினார். என் பேத்தி அப்படிப்பட்டவள் இல்லை என்று அவர்களிடம் மன்றாடி இறுதியில் வேறு வழியில்லாமல் மாப்பிள்ளையின் தாயார் காலில் விழுந்து கதறிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் தானும் ஒரு பெண் என்பதை மறந்து காலில் விழுந்து கதறி கொண்டிருக்கும் வயதான பாட்டியை மேலும் தன்னுடைய கொடும் சொற்களால் காயப்படுத்தி கொண்டிருந்தார்..
இதனை தூரத்திலிருந்து பார்த்த அழகியும் நந்தனும் ஓடிவர அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்"ஹேய் ஆத்தா தோ பாரு உன் பேத்தி வரா" என்றது தான் தாமதம்.. பாட்டி திரும்பிப் பார்ப்பதற்குள் அவரின் அருகே ஓடிவந்த அழகி பாட்டியை பிடித்து இழுத்தாள்.
"கண்ணு அழகி" பாட்டி அவளை மேலிருந்து கீழ்வரை கண்களால் அலச
"ஹேய் கெழவி கூறு கெட்டுப் போச்சா உனக்கு.. இந்த கழிசடைங்க காலுல எதுக்கு வுழுந்து அழற".. அழகி மிகவும் கோபமாக இருந்தாள். அதனை சற்றும் பொருட்படுத்தாத பாட்டி
"ஆத்தா மகமாயி என் புள்ளய கட்டி காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்ட ஆத்தா.. உனக்கு நேந்துக்கிட்ட மாறியே பொங்க வைக்குறேன் தாயி".. கண்ணீர் மழுக வேண்டிக் கொண்டார்..
" இந்தா கெழவி இந்த நீலி கண்ணீர் வடிக்கிற வேல எல்லாம் இங்க வேணாம்.. ரா முச்சூடும் ஊர் பேர் தெரியாத ஒருத்தனோட ஊர் மேய்ஞ்சிட்டு வந்திருக்கா தேவடியா.. இவள போயி என் பையனுக்கு கட்டி வைக்க பாத்துருக்க.. உன்னால என் குடும்ப மானமே போச்சு.. ஒழுங்கு மறுவதையா நாங்க பட்ட அவமானதுக்கும் செஞ்ச கல்யாண செலவுக்கும் வரதட்சனையா கொடுக்குறதா சொன்ன காசு கொடுத்துரு.. இல்லனா இந்தா ஜில்லா முழுக்க உன் பேத்தியோட ஊரு பொறுக்குன கதைய நாறடிச்சிருவேன்"
"ஏத்தா உனக்கே இது நியாயமா.. என் பேத்தி மூஞ்ச பாருத்தா..தப்பு பண்ற புள்ளயா இது.. கண்ணாலம் வர வந்து நின்னா இனி என் பேத்திய எவன் கட்டுவான்..என் தலைய வித்தாவது நீ கேக்குற காசுக்கு மேல தரேன்..உன் மவன என் பேத்தி கழுத்துல தாலி கட்ட சொல்லுத்தா"அழகி அந்த பெண்மணி பேசிய பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுவதற்குள் பாட்டி அவளை அடக்கி விட்டு மீண்டும் தனது மன்றாட்டை தொடங்கினார்.
அந்தப் பெண்ணும் அவளின் உறவினர்களும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அழகி குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விட்டு" சரி கெழவி எங்களுக்கும் மனசாட்சி இருக்கு.. பொட்ட சிறுக்கி ஆம்பள சொகத்துக்கு ஆசப்பட்டு இப்டி பண்ணிட்டா..நீயும் இந்த மூதிய வெச்சு இனி காபந்து பண்ண முடியாது.. பேசின படியே மேக்கொண்டு ஒரு அஞ்சு பவுனு சேத்து போடு.. ஆனா ஒன்னு என் மவனுக்கு இன்னும் மூனு நாள்ல வேற ஒருத்திய பாத்து கட்டி வச்சிட்டு அதுக்கு அடுத்து வர முகூர்த்ததுல உன் பேத்திய ரெண்டாவதா கட்டிக்க சொல்றேன்.. சீராழிஞ்சு வந்தவள எல்லாம் மொறையா மருமவன்னு சொல்ல முடியுமா?
சாதி சனம் ஒரவு மொறை எல்லாம் காறித் துப்பாது.. கண்ணாலத்துக்கு முன்னாடி மருத்துவச்சிய கூப்டு ஏதாச்சும் மருந்து வெச்சி கொடு.. வயித்த கழுவட்டும் சனியன்.. பொறவு எவனோ போட்ட விதைக்கு என் மவன் தண்ணி ஊத்துன மாறி ஆயிரும்..சீருல ஒத்த காசு குறைஞ்சாலும் அங்கனமே கண்ணாலத்த நிறுத்திப் புடுவேன்.. "
"என்னத்தா என் பேத்திய ரெண்டாதாரமா கேக்குற.." அந்தப் பெண்மணி பேசியதில் அதிர்ந்து போனார் சுகந்தம்மை பாட்டி.
"ரெண்டாதாரமென்ன ரெண்டாதாரம்.. கூத்தியானே சொல்லு கெழவி.. உன் பேத்தி கண்ணாலதுக்கு முன்னாடியே சீராழிஞ்சு வருவா. அவள ஆரத்தி எடுத்து மொறையா வூட்டுக்கு கூப்டணுமாக்கும்.. என் மகனுக்கு கூத்தியாலா இருக்குறதுக்கே ஒரு பவுசு வேணும்" அந்தப் பெண்மணி தன் மகனின் பெருமையை எங்கு காட்டுகிறார்?
அந்தப் பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையும் அழகியின் கோபத்தை பன்மடங்கு பெருகி காட்டியது. பாட்டி நிலைமை கைமீறி விட்டதை அறிந்து கொண்டார். சுற்றி நின்ற கூட்டத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்தார். யாருமே அவர்களுக்காக வந்து இந்தப் பெண் இப்படிப்பட்டவள் அல்ல என்று ஆதரவாகப் பேசவில்லை. தாய் பிள்ளை ஆனாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா.. இதுவே இந்த நிலைமையில் அவர்கள் இருந்திருந்தால் பாட்டி முதல் ஆளாக சென்று அவர்கள் பக்கம் ஆதரவாக பேசி இருப்பார். அவர்களுக்காக சண்டை கூட போட்டிருப்பார்.
இத்தனை ஆண்டுகள் தாய் பிள்ளையாக பழகிய அனைவருமே தன் முதுகில் குத்த, இறக்கும் தருவாயில் தன்னுடைய மகள் தன் கையை பிடித்து என் மகளை உன்னை நம்பி விட்டு செல்கிறேன் பார்த்துக் கொள்ளம்மா என்று சொல்லி சென்றது அவரின் நினைவலைகளில் தழும்பி வழிந்தது. தன்னையே நம்பிருந்த தன்னுடைய பேத்திக்கு தானே இம்மாதிரி கேடுகெட்ட வரனை பார்த்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் நெஞ்சை பிடித்து கீழே சரிந்தார் பாட்டி.
அதையெல்லாம் பார்க்கும் நிலையில் அழகி இல்லை. தன்னைப் பற்றியும் தன்னுடைய பாட்டியை பற்றியும் கேவலமாக பேசிய பெண்மணியின் தலை முடியை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு குத்து விட்டாள் அவரின் மூக்கில். அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. தன் தாயை தன்னுடைய கண்முன்னால் அடித்த அழகியை அடிப்பதற்காக கையை ஓங்கிக் கொண்டு அருகே வந்தான் மாப்பிள்ளையாக இதுவரை கருதப்பட்டவன்..
இவ்வளவு நேரம் இங்கே நடக்கும் விஷயங்களை ஒரு பார்வையாளனாக பார்த்துக்கொண்டிருந்த நந்தனுக்கு அவர்கள் பேசியது பாதி புரிந்தது பாதி புரியவில்லை ஆனால் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவனும் புரிந்து கொண்டான். அழகி அந்த பெண்மணியை அடித்ததை அவனும் எதிர்பார்க்கவில்லை.அடுத்த கணமே சுதாகரித்து விட்டான். அழகியை அடிக்க கையை ஓங்கிய முன்னாள் மாப்பிள்ளையை அவனது ஆண்குறியில் மிதித்தான்.
இனி அவன் எந்தப் பெண்ணுடனும் உடலுறவில் ஈடுபட முடியாத அளவிற்கு பலமான உதையாக இருந்தது அது.. அதற்குள் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுதுதான் அவர்களின் மனிதாபிமானத்திற்கு உயிர் வந்தது போல கீழே நெஞ்சை பிடித்து விழுந்து கிடந்த பாட்டியை தூக்கினார்கள். அழகியும் அவர்களது குரல் கேட்டு திரும்பி தன்னுடைய பாட்டியை பார்த்தாள். மற்றது அனைத்தையும் மறந்துவிட்டு அவரிடம் ஓடினாள்.
தன்னை தூக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறிய பாட்டி அழகியின் கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்"என்ன மன்னிச்சிருடி கண்ணு.. கண்ணலாமே வேணான்னு சொன்ன நீ.. பாவி மவ கேக்கல.. உன்ன ஊரு சிரிக்க செஞ்சிப்புட்டேன்.என் மவ ஆத்துமா சத்தியமா என்ன மன்னிக்காதுடி..
என் புள்ளய ஊரே நடத்த கெட்டவனு சொல்லுதே இத கேக்கவா கண்ணு உன்ன பொத்திப் பொத்தி வளத்தேன்.. ஊரானுக்கு ஒதவ போயி என் புள்ளைக்கு இந்த நெலமயா..இனி உன்ன யாருடி கட்டிக்குவா" நெஞ்சை ஒரு கையால் அழுத்தமாக பற்றிக் கொண்டு இழுத்து இழுத்து பேசினார் பாட்டி.
"ஏன் ஆச்சி இப்டி பேசுற.. எனக்கு கண்ணாலமே வேணா.. ஒரு மசுரும் வேணா.. காலத்துக்கும் உன் கூடவே இருந்துட்டு போறேன்.. இந்த கட்டயில உசுரு இருக்குற வர உன்ன விட்டு போகவே மாட்டேன் ஆச்சி.."
"அப்டி சொல்லதடி.. உனக்கொரு கண்ணாலத்த செஞ்சு பாத்துட்டு தான் இந்த கட்ட சாயும்னு சொல்லிட்டு திறிஞ்சேன்.அத செய்ய துப்பில்லாத வக்கத்த முண்டயா போய்ட்டேன்.. இனி நான் இருந்தா அது உனக்கு பாரம்டி..உன்ன அனாதையா விட்டு போறேன்டி கண்ணு.. ஆச்சிய மன்னிச்சுடு புள்ள"..சுற்றி நின்றவர்கள் சமயத்திற்கு உதவவில்லை என்றாலும் பாட்டியின் நிலைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.
அங்கே நந்தன் ஒற்றை ஆளாய் முன்னால் மாப்பிள்ளையின் கோஸ்ட்டியை வெளுத்து வாங்கி துரத்தி அடித்தான். என்னதான் அடிக்க வந்தவனின் விலா எலும்பை எண்ணிக் கொண்டிருந்தாலும் பாட்டியின் வார்த்தைகள் அவன் செவியில் விழத் தான் செய்தது. தன்னுடைய தாயாரும் இதையேதான் கூறி தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.. அனாதையாக தன்னுடைய குழந்தையை விட்டு செல்வது எவ்வளவு பெரிய சோகம் ஒரு அம்மாவிற்கு..
சண்டை செய்து கொண்டே பாட்டியை திரும்பி பார்த்தான். அவரது கண்களில் ஒளி மங்கிக் கொண்டே வந்தது. இனி அவர் உடலில் உயிர் தங்காது என்பதை புரிந்து கொண்டான் நந்தன்.. தன்னை அடிக்க வந்தவனை கையை மடக்கி அவனது நெற்றிப் பொட்டில் ஒரு குத்து விட்டு அவன் நிலை தடுமாறி விழ சில அடி தூரத்தில் வேப்ப மரத்தின் கீழே சிறியதாக கருங்கல்லில் மாரியம்மன் அமர்ந்திருந்தாள்.
அழுது துடிக்கும் அழகியை திரும்பி பார்த்தான். ஒளி மங்கும் பாட்டியின் கண்களை கண்டான். ஓடினான் வேப்ப மரத்தடிக்கு. அங்கே அம்மனின் வேப்பமரத்தை சுற்றியும் மக்கள் வேண்டுதலுக்காக கட்டி வைத்திருந்த மஞ்சள் கிழங்கு போட்டிருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்த்து எடுத்தவன்
"என்ட அம்மே.. நெனக்கு நீதான் அருள் புரியும்.. உன்ன நம்பி அந்த குட்டி கழுத்துல இத கட்டுனு..எத்தன ஜென்மம் எடுத்துமே இது மாறா கூடாது"..
தாலியை எடுத்து வந்தவன் அங்கே பாட்டி இறுதி வினாடியை நெருங்கி விட்டதை உணர்ந்தான். நொடியும் தாமதிக்காமல் அழகியின் சம்மதம் இல்லாமல் அவளின் கழுத்தில் தாலியை கட்டினான். கால் மடிந்து அமர்ந்திருந்த அழகி தன் கழுத்தில் ஏறும் மாங்கல்யத்தை கண்டு பதறி கட்டுபவனை திரும்பி பார்த்தாள்.. பாட்டி இறுதி மூச்சிலும் தன் கண் முன்னால் நிகழும் பேத்தியின் திருமணத்தை கண் நிறைய கண்டார்..
சண்டையால் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த உதிர துளிகளை வழித்தவன் அதனை அழகியின் நெற்றி வகிட்டில் வைக்க பாட்டியின் இறுதி மூச்சு நிம்மதியாக விடைப்பெற்றது.
தொடரும்.
Wow interesting epi akka...pavam patti poitangale😪
ReplyDeleteSuper pavam pati
ReplyDeleteNalla poguthu kadai....eagerly waiting for the next update
ReplyDeleteஆத்தாடி இந்த தேனும்மா என்ன பாட்டியை பரலோகத்துக்கு பார்சல் பண்ணிட்டாங்க. டேய் விளங்காதவனுங்களா நாக்குல நரம்பு இல்லேங்குறதுக்காக இம்புட்டு மோசமாவா பேசுவாங்க. அடியே குந்தானி நீ பெத்த புள்ளைக்கு ரெண்டு கல்யாணமும் பண்ணுவியா சண்டிகார். இதுல அவளை வைப்பாட்டின்னு வேற சொல்ற.உன்னை எல்லாம் உசுரோடவே விடக்கூடாது.டேய் மாப்பி உனக்கு இனி கல்யாணமே கிடையாதுடா. வச்சான் பாரு ஆப்பு. டேய் நந்து என்னடா பொசுக்குன்னு தாலி கட்டிட்ட.அவ உன்னை என்ன பண்ண போறாளோ. பெண்களின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கண்டு அவளின் சம்மதம் இல்லாமல் மங்களநாண் சூடினாலும் இனி எத்தனை பிறவி எடுத்தாலும் அவளே என் சரித்திரம் வேண்டும் என ஆடவன் பிரார்த்தித்து அருமை. அச்சு இந்த அழகி அடுத்து என்ன பண்ண போறாளோ. 🤝🤝👏🏻👍🏻👍🏻👏🏻👏👍🏻👍🏻👏👏👌🏼👏🏻🤝🤝👏👍🏻👍🏻👏👍🏻👏👏
ReplyDeleteSuper
ReplyDeleteOru ponna ipdi kevalama pesuranga cha enna pombala ava ellam pocha ini un paiyan ku kalyaname agadhu super nandha azhagi ah mrg pannikitadhu super patti athma santhi adaiyum
ReplyDeleteVera Vera level semaaaa semaaaa semaaaa 👍👌👌👌👌👌👌👏👏👏👏👏
ReplyDeleteசெம்ம சூப்பர் நந்தா,ஆனா இதுக்கு அவளோட ரியாக்ஸன் என்னன்னு தெரியலை 👌👌👌👌👌 super நிலா
ReplyDeleteOru pona evalo asinga padhuta mudiyum oh aval padhithiyachu cha,,,super
ReplyDeleteAvangalam ippo varaikkum maraveyilla, vedikka pakka mattum than varuvanga
ReplyDeleteNice going super
ReplyDelete😑😑😑 cha manasatchi illatha mirugangal.. mrg aagiruchu thn enna aagum 🧘♀️🧘♀️
ReplyDeleteSuper arumai saghi intha mathiri senmangal thirunthathu eppadi pesuthu paru
ReplyDelete