30 நெருங்கினா(ள்)ல்?


ஹாய் டியரிஸ் ப்ளீஸ் என் சேனளுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. 🙏🏻🙏🏻❤️❤️❤️



எது அவளுக்கு தெரியக் கூடாது என்று வந்தியதேவன் இத்தனை நாள் நினைத்தானோ அது இன்று அவளுக்கு தெரிந்து விட்டது. அந்த நிலையிலும் அவனுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்களின் பிடிவாத குணம் மட்டும் என்றுமே மாறாது என்பது ஐயம் திரிபற அவனுக்கு புரிந்து விட்டது.

பேழையை கையில் வைத்துக் கொண்டே சிலையாக நின்றாள் குண்டலகேசி. அவளால் இதனை நம்ப முடியவில்லை.  அவள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதை புரிந்து கொண்ட வந்தியதேவன் அவள் தோளைத் தொட்டு உலுக்கினான். தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல திடுக்கிட்டவள் அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன்

" இதுக்கு தான் சொல்றது புருஷன் பேச்ச கேட்கணும்னு"

" கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா.. " அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான். அங்கே வந்ததும் மெத்தையில் அவளை அமர வைத்து விட்டு இவன் சமையலறைக்குச் சென்று அவளுக்கு சூடாக குடிப்பதற்குத் காய்ந்த சூரியகாந்தி பூவை சுடுநீரில் போட்டு  வடிகட்டி எடுத்து வந்தான். கூடவே கொஞ்சம் பட்டர் பிஸ்கட்டும் எடுத்து வந்தான்.. அவளருகே வந்து

" குடி..  கொஞ்சம் தெம்பா இருக்கும்" அவள் எதுவுமே சொல்லாமல் அந்த சூரியகாந்திப்பூ தேநீரைக் குடித்து விட்டு ஒரு பட்டர் பிஸ்கட் எடுத்து கடித்துக் கொண்டே

"இது டைம் டிராவல்லா இல்ல போன ஜென்ம ஞாபகமா"

"போன ஜென்ம ஞாபகம்.. நம்மளோட போன ஜென்மம் இப்படித்தான் இருந்தது.. டைம் டிராவல் பண்ற அளவுக்கு நான் இன்னும் டெவலப் ஆகல..குட்டி உனக்கு என்ன அடையாளம் தெரியுதா"

" எப்படியா தெரியும்.. போன ஜென்மத்துல சேட்டு சுண்ணாம்பு போட்டு துப்புன வெத்தல கணக்கா செக்கச் செவேலெனு இருந்த.. இந்த ஜென்மத்துல அடுப்புல இருந்த எடுத்த தந்தூரி சிக்கன் மாதிரி கருகிப் போய் கெடக்க.. உன்ன எப்படி அடையாளம் தெரியும்.. ஆமா போன ஜென்மம் எனக்கு இப்படி நியாபகம் வந்துச்சு.. உனக்கு எப்படி நியாபகம் வந்துச்சு." அவள் மிகவும் இயல்பாக பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியான வந்தியதேவன்

" அது.. உன்ன ஜெயில்ல பார்த்த அப்பவே வந்துருச்சு.. "

"பாத்தா செகண்ட்டே பத்திக்குச்சா"

"இல்ல.. உன்ன பாத்ததும் என்னமோ ஒன்னு.. உன்ன விட்ற கூடாதுனு ஒரு வேகம்.. உன்ன பிரிய கூடாதுனு ஒரு.. ஒரு"

"ஒரு கல் ஒரு கண்ணாடியா"

"இல்ல.. ஒரு எண்ணம்.. ஆமா உனக்கு எதுவுமே தோணலையா"

"எப்படி தோணாம இருக்கும்.. இது எவ்ளோ பெரிய உலக அதிசயம்.. எவ்ளோ பேர் மறுஜென்மம் இருக்கானு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அவங்க கிட்ட நம்ம கதைய சொன்னா லம்பா ஒரு அமௌன்ட் கிடைக்கும்.."

வந்தியதேவன் இவ்வளவு தான் அவளின் ரியாக்சனா என்பது போல் அவளை பார்த்துக் கொண்டிருக்க

"என்ன தேவா.. இவ்ளோ ஷோக்கா என்ன பார்த்துகிட்டு இருக்கே.. ஆமா படத்துல பாத்தேன்.. போன ஜென்மத்துல எப்டி இருக்காங்களோ இந்த ஜென்மத்துலயும் அப்படியே இருப்பாங்க.. நாம மட்டும் ஏன் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கோம்.."

"என்ன"

"ம்ம்ம்ம் போன ஜென்மத்துல பாரேன்.. நா  கொஞ்சம் தான் குண்டா இருக்கேன்..இந்த ஜென்மத்துல பாரு என்ன சுத்தி வரவே ஒரு நாளாகும்.. போன ஜென்மத்துல நீ வெள்ளயா ஒல்லியா எவ்ளோ க்யூட்டா இருக்க.. இந்த ஜென்மத்துல யாரு செயின்ன அத்துட்டு ஓடுற மாதிரியே நிக்கிற.. அப்பலாம் நீ பேசுறது ஒன்னுமே வெளங்காது.. இப்ப பாரேன்.. எவ்ளோ அழகா தமிழ் பேசுற.."

"ஹேய்.. நா தெரியாமதான்டி கேக்குற.. உனக்கு எந்த ரியாக்சனும் இல்லயா.. இவ்ளோ தான் உன் ரியாக்சனா.."

"மிஸ்டர் மிரு சார் இங்கட கூச்சோ.." தன்னருகில் மெத்தையை தட்டி அவனை அமரச் சொன்னவள் அவன் அமர்ந்ததும் அவன் மடியில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டாள்.

"மிரு குட்டி இவ்வட நோக்கு.. அதெல்லாம் போன ஜென்மம்.. அத அப்பவே மறந்துரனும்.. அதுல ஏதாச்சும் பொதையல் பொதச்சி வெச்சிருந்தா இந்நேரம் நான் மம்பட்டி கையோட பின்னால தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியானு பாட்டு போட்டு தோண்ட போயிருப்பேன்.. இது சாதாரணமான விஷயமா தான இருக்கு இதுல என்ன எமோஷனல் வேண்டி கிடக்கு.. என்ன அப்படி பாக்குற நான் ஒத்துக்குறேன்..

போன ஜென்மத்துல நான் ரொம்ப செல்ஃபிஷா இருக்கேன்.. பயங்கர திமிரு..ரொம்ப பிடிவாதம்.. அறிவே இல்ல.. அப்புறம் அதுல கொஞ்சம் ஒல்லியா இருக்கேன். அப்படி இருந்தாலும் என்ன எவ்ளோ லவ் பண்ணி இருக்க பாரேன்.. உன் லவ் செம்ம.. அதே மாறி இந்த ஜென்மத்திலயும் நீ என்ன லவ் பண்ணனும்.."

அவள் மிகவும் இயல்பாக இருக்கிறாள்.. எப்பொழுதும் போல அவனிடம் வாயடிக்கிறாள். ஆனால் அவனால் தான் அதனை தாங்க முடியவில்லை. அவனுக்கும் அவனது புனர்ஜென்மம் நினைவு வந்தவுடன்  முதலில் அதை நம்ப முடியாமல் திண்டாடினான். பிறகு மெல்லமாக யோசித்து பார்த்தான். இப்பொழுது இருக்கும் இந்த மாளிகை வெள்ளைக்காரன் காலத்தில் வந்தியதேவனின் முதலாளி டானுடைய தாத்தா விலைக்கு வாங்கி விட்டார்.

அவரது வியாபாரங்கள் அனைத்தும் மும்பையில் இருக்க எந்த இடத்திற்கு அவர் சுத்தி பார்க்க வந்தாலும் அங்கே அவருக்கு பிடித்த இடத்தை வாங்கி போட்டு விடுவார். அப்படித்தான் இந்த மாளிகையையும் வெள்ளைக்காரன் ஆட்சிக்குப் பின் அவர் வாங்கியது. பாட்டன் சொத்து பேரனுக்கு தான் என்பது போல இந்த சொத்து வந்தியதேவனுடைய  முதலாளிக்கு வந்து சேர்ந்தது. வந்தியதேவன் முதன்முதலில் இந்த மாளிகையை ஒழுங்குபடுத்த தான் இங்கே வந்தான். வந்த உடனே அவனுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. இந்த மாளிகை அவன் வாழ்வில் பின்னிப் பிணைக்கப்பட்டது போல் ஒரு எண்ணம்.

உடனே தன்னுடைய முதலாளிக்கு அழைத்து தான் இந்த மாளிகையை வாங்கிக் கொள்வதாகக் கூறினான். அவன் மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்த அவர் பணமே வேண்டாம் எனக்கு ஒரு மகன் இருந்தால் இந்த மாளிகை அவனுக்கு தான் சொந்தம். அதுபோல் என்னுடைய பெறாத மகன் நீ.. நீயே இதனை எடுத்துக் கொள் என்று பெயர் மாற்றி கொடுத்து விட்டார்..

இந்த மாளிகையில் யாருக்குமே தெரியாத ரகசிய அறை கூட அவனுக்கு தெரிந்தது. ஆனால் அது எப்படி என்று தான் அவனுக்கு அப்போது புரியவில்லை. குண்டலகேசியை சிறைச்சாலையில் பார்த்த பின்பு தான் அவனுக்கு அனைத்துமே புரிய வந்தது.

அவன் எவ்வளவு துடித்தான். ஒவ்வொரு வினாடியும் அவளைக் காண புழுவாய் துடித்துப் போனானே.. அவளது நிழல் படத்தைக் கண்டே தன் துடிப்பை அடக்கி கொண்டான். அவளை அடைந்தே தீர வேண்டுமென என்னென்ன காரியங்கள் செய்தான்.  இங்கே அவளை யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்தது முதல் அவள் குடும்பத்தை கடத்தி வைத்திருப்பதில் ஆரம்பித்து அவளை அவன் செய்த அனைத்து கொடுமைகளுக்கும் சொல்லப் போனால் அவன் பாஷையில் அது தண்டனை.. ஆம் போன ஜென்மத்தில் அவள் செய்த குற்றத்திற்கு தண்டனையை தான் இந்த ஜென்மத்தில் அவளுக்கு அவன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இதை அனைத்தையும் அவள் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டது அவனுக்கு பெரிய அதிர்ச்சி. அவள் பேசிக் கொண்டே போக அவன் எதுவும் பேசாமல் இருந்து அவனது அலுவலக அறைக்குள் சென்று விட்டான்.

போகும் அவன் முதுகை பார்த்த குண்டலகேசி தனக்குள் சொல்லிக் கொண்டாள்

"என்ன மன்னிச்சிரு நந்தன்.. உன் லவ் எவ்ளோ பெருசுனு இப்ப எனக்கு புரியுது..போன ஜென்மத்துல அறிவு கெட்டு போய் நான் செஞ்ச தப்ப இந்த ஜென்மத்துல செய்ய மாட்டேன்.. உன்ன பயங்கரமா லவ் பண்ண போறேன்..லவ் பண்ணியே டார்ச்சர் பண்ண போறேன்.. ஹிஹிஹி அடேய் வந்தியத்தேவா இந்த குண்டலகேசியோட லவ் மூடு ஸ்டார்ட் ஆயிருச்சு.. இதுல இருந்து நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.." அவளின் வாய் அடங்காமல் இம்மாதிரி வார்த்தைகளைக் கூறினாலும் அவளது மனம் ஏன் தான் போன ஜென்மத்தில் இந்த மாதிரி குற்றத்தை செய்தேன் என்று அவளையே கேட்டது. பதில் தான் அவளிடமில்லை.

இருட்டு அறையில் ஒருவனை சங்கிலியில் பிணைத்து வைத்திருந்தார்கள். அவனுக்கு உணவு ஊட்ட சென்ற பெண்ணை இழுத்து கற்பழித்தான் அவன்.அந்த பெண் கதறித் துடித்தாள். தன்னை விட்டுவிடும்படி அவனிடம் கெஞ்சினாள்.  அவனும் பைத்தியமாக இருந்தாலும் தன் காரியத்தில் கச்சிதமாக இருந்து அவள் கற்பை வெற்றிகரமாக சூறையாடி முடித்ததும் அவளை அடித்து அங்கிருந்து துரத்தினான்.

அவள் அரையும் குறையுமாக ஓடி வந்த பின் கையில் இன்னொரு உணவுத் தட்டுடன் உள்ளே நுழைந்தான் அந்த ஆடவன். நிர்வாணமாக படுத்திருந்த தன் தமையனின் முன் நின்றவன்   

"அண்ணா இன்னும் எத்தன நாள் இப்படி இருக்க போற.. நல்லா தானே இருந்த..திடீர்னு உனக்கு என்ன ஆச்சு..எத்தன டாக்டர்ஸ் பாத்தாச்சு.. அத்தன பேரும் உனக்கு பைத்தியம்னு சொல்லி உன்ன மெண்டல் ஆஸ்பத்திரியில சேர்க்க சொல்றாங்க.. என்னால அத நம்ப முடியாது.. உனக்கு எப்படி பைத்தியம் புடிச்சது.. எதனால இப்படி ஆன.. இதுவரைக்கும் நீ ரேப் பண்ண பொண்ணுங்க எத்தன பேரு தெரியுமா..கணக்கு வழக்கு இல்லாம போய்கிட்டு இருக்கு.. ஏதோ நாம பொண்ணுங்கள வைச்சு பிசினஸ் பண்றதால சரியா போச்சு.. இல்லனா  எந்த பொண்ண போய் தினமும் புடிச்சிட்டு வரறது..

சீக்கிரம் சரியாயிடு.. என்னால  தனியா சமாளிக்க முடியல.. நீ இருந்தா தான் எனக்கு பலம்.. நீ இல்லாம என்ன போட்டுத்தள்ள எத்தன பேரு சுத்திகிட்டு இருக்காங்க தெரியுமா.. சீக்கிரம் சரியாயிரு அண்ணா.." தன் கையோடு கொண்டு வந்த உணவை சங்கிலியால் கட்டப்பட்டிருந்தவனுக்கு ஊட்டி விட்டு அவனுக்கு வேறு உடை அணிவித்து விட்டு  அங்கிருந்து சென்றான் அமீர்.

செல்லும் அவனையே வெறித்துப் பார்த்தது அந்த நீல நிற கண்கள்.

தொடரும்..


Comments

  1. Blue eyes tha antha vellakRan pola

    ReplyDelete
  2. Villain yarra irukkum,,,,,oru vella andha english karranna irukummo

    ReplyDelete
  3. Adai vellakara neum Maru piravi eduthu irukiya 😨😨👌👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟🌟

    ReplyDelete
  4. Who is the new entry
    Villan ha ha

    ReplyDelete
  5. Ippo than innum superah move agudhu, next update sekrama potturunga sis

    ReplyDelete
  6. அச்சச்சோ அப்போ அந்த வெள்ளைகரணும் திரும்ப பிறந்துட்டானா ,😳😳😳😳😳கேசி உஷார் பத்திரம் மா,😳😳😳👌👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete
  7. Ada nasama ponavane neeyuma marupiravi eduthirukka.. ithu VD ku theriyuma..😩😩😩😩

    ReplyDelete
  8. Andha englishkaranum pirandhu irukana kesi deva carefulla irukanum kesi deva kita un lov solradha vida seiyala kattu adha best nice ud sis

    ReplyDelete
  9. Super arumai avan sonna mathiri unnoda reaction ivva thana super kesikku love mood start aakiduchu villan entry

    ReplyDelete
  10. I thing pona jenmathula anthaaa idathula eti uthachala antha vella panniyum maru jenmam eduthu vanthirukum nu nan நினைக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்