28 நெருங்கினா(ள்)ல்?
கதை நேரம்.. உங்களுக்கு பிடித்த கதைகள் ஆடியோ வடிவில் கேட்க❤️
என் சேனலை subscribe செய்து சப்போர்ட் செய்யுங்க டியரிஸ்❤️
குக்கிங் சேனல்
நந்தனை கழுவேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அவனை அடித்த அடியில் அவன் பிணமாகத் தான் கிடந்தான். அவனது மனைவியை காணும் ஆசையில் மட்டுமே அவனின் உயிர் தொண்டை குழியில் ஒட்டிக் கொண்டு நின்றது.இந்த சூது வாது நிறைந்த உலகத்தில் அவளை எப்படி தனியாக விட்டுச் செல்வது என்று அவன் மனம் வினாடிக்கு ஒருமுறை நினைத்து வருந்தியது.ஆனால் என்ன செய்வது.. விதியை மாற்ற அவன் ஒன்றும் கடவுள் இல்லையே?
அழகி தான் செய்த காரியத்தின் செயலால் தன்னுடைய கணவனுக்கு கிடைத்த தண்டனையை எண்ணி விக்கித்து போனாள்.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அழகியை வசை பாடினார்கள்.
"நான் அப்பவே தல பாடா அடிச்சிக்கிட்டேன்.. பொட்டச்சி பேச்சு நாய் பேயுற மூத்திரத்துக்கு சமானம்னு கேட்டியா..ஊருல நாலு பெரிய மனுஷ மாருங்க இல்லாமையா போயிட்டானுங்க.. என்னமோ பெரிய சாவித்ரி மாதிரி போனியே புருஷன மீட்டுட்டு வர.. என்ன ஆச்சின்னு கேக்குறேன்.உன் மொலைய புடிச்சிட்டானு அவன் மண்டைய ஒடச்சியே இப்ப உன் தாலியவே அறுக்க போறான்டி வெள்ளக்காரன். என்ன பண்ண போற இனி.. உனக்கு ஏதுடி வேற நாதி.. உன் சுயநலத்தால இத்தன நாளு அந்த மனுசன எட்ட நிறுத்தி வெச்ச.. நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. அந்தாளு என்னத்த பண்ணிப்புட்டான் உனக்கு.. ஆத்தா அப்பன் இல்லாம வளத்த கெழவியும் பொசுக்குன்னு பாடையில போக ஊரு சனம் உன்ன நடத்த கெட்டவனு நாக்கு மேல பல்லப் போட்டு பேசிப்புடுமேனு தான உன் கழுத்துல மஞ்ச கயித்த கட்டுனான்..அவன சாமியா மதிக்காம இப்படி பண்ணிப்புட்டியேடி"
பக்கத்து வீட்டு மரகதம் அக்கா தான் மனத்தாங்கல் தாங்க முடியாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அழகியை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும்.அவரும் எவ்வளவோ முறை எடுத்து சொல்லி விட்டார்.அப்பொழுது எல்லாம் காதில் வாங்காமல் சுற்றிக் கொண்டிருந்த அழகிக்கு இப்பொழுது வெள்ளம் கரைப் புரண்டு வந்து ஊரையே அழித்த பின்பு தன் காதலை உணர்ந்து கணவனை பறி கொடுக்க தயாராக இருந்தாள்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அதே ஊரில் இத்தனை நாள் அவள் இருக்கிறாளா என்று எட்டிப் பார்க்காத தாய் மாமனுக்கும் விஷயம் காற்றில் பறந்து சென்று காதில் விழுந்து விட அவனும் வந்து தன் பங்கிற்கு அழகியை கறித்துக் கொட்டி விட்டுச் சென்றான்.. அவர்கள் யாருடைய பேச்சுக்கும் பதில் பேசாமல் நந்தனின் நினைவில் கரைந்தாள் அழகி.
அந்த ஊரில் நன்கு படித்த ஒருவரின் துணையோடு வெள்ளைக்காரனிடம் மன்றாடி இறுதி முறையாக நந்தனை சிறையில் சென்று பார்க்க அனுமதி பெற்றாள். அன்று போல் யாரும் அவளை பயம் கொடுக்கவில்லை. சிறைக்குள் நந்தனின் அறையைத் தேடி அவள் செல்ல அங்கே பிணம் போல கிடந்தான் நந்தன். அவனருகே வந்து அவனின் முகத்தை எடுத்து தன் மடியில் வைத்து தலை கோதினாள் அழகி. அவ்வளவு அடியிலும் மயக்கத்தின் பிடியிலும் அவன் மனைவியின் தொடுதலை உணர்ந்தான் நந்தன். அவள் மடியில் தன் முகத்தை லேசாக மேலும் கீழுமாக அசைத்தான்.
அதை மட்டும் தான் அவனால் செய்ய முடிந்தது. அவளுடைய கையை பிடித்து ஆறுதல் கூற அவனுடைய கரங்கள் நீள வில்லை.துடிக்கும் இதழ்களின் துடிப்பை அடக்க அவனது இதழ்களுக்கு தெம்பில்லை. அழுது வீங்கிய கண்களை நாசியால் நிமிட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு அவன் உயிருள்ள பிணமாக கிடந்தான்.
"யோவ் வெள்ள நான் தான் ராசி கெட்ட மூதேவி.. என்ன ஏன்யா கண்ணாலம் பண்ண.. இப்ப பாரு உன் நெலமைய.. இந்த வெளங்காத மூதியா கட்டி உசுர விட போற..நீ என்ன பாத்துருக்கவே கூடாதுய்யா.. கண்ணாலம் கட்டி உனக்கு என் உடம்ப கூட காட்டாத பாவியா போய்ட்டேன்யா.. இனி நான் என்ன செய்ய சொல்லு.. பொறந்ததும் பெத்ததுங்கள முழுங்குனேன். வளந்ததும் கண்ணாலம் கட்டி வைக்க பாத்த ஆச்சிய முழுங்குனேன். இப்ப உன்ன.. எல்லாம் என் நேரம்.."அவளின் வேதனை அவனுக்கும் இதயத்தில் உதிரத்தை வர வைத்தது.
ஆனால் ஆறுதல் கூறும் நிலையில் அவன் இல்லையே. தன் மனதில் உள்ள அனைத்தையும் அவனிடம் கொட்டியவள் சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்தாள். பின் மெல்ல அவன் செவியின் அருகே குனிந்து
"இந்த உடம்புல உசுரு இருக்குற வர உன்ன சாவ விட மாட்டேன்..என்ன ஆனாலும் சரி உன்ன காப்பாத்தியே தீருவேன்"
என அழகி கூறிவிட்டு அவனை தரையில் கிடத்தி அங்கிருந்து வெளியேறினாள். நேராகச் சென்றவள் அவளிருந்த ஊரில் அவளை துரத்திக் கொண்டிருந்த துரை இந்த ஊரில் தங்கியிருந்த பங்களாவிற்கு சென்றாள். அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை காவலாளி. தான் துரையை பார்க்க வேண்டும் என அழகி பிடிவாதமாக கூற அந்நேரம் வெளியே வந்த துரை அழகியை பார்த்தான். அவளை தன்னை பார்க்க அனுமதித்தான்.
துரை தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு டீ குடித்தப்படியே அவளை பார்க்க அவன் முன் நின்றுக் கொண்டிருந்தவள்"துரை நான் உங்க கிட்ட தனியா பேசணும்"என்றாள்..
"ஹேய் கேர்ள்.. உன்கு என்ன பைத்தியமா.. என்க்கே ஆர்டர் போட்ற"துரையின் பதிலில் சுற்றி நின்ற வெள்ளையன் கூட்டம் சிரித்தது.
அவனை விரக்தியாக பார்த்துக் கொண்டே "அன்னிக்கு ஒன்னு சொன்னிங்களே துரை.. அதுக்கு சம்மதம்".. கண்ணீர் கூட காய்ந்து விட்ட நிலையில் அவள் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க துரையின் கண்கள் இடுங்கியது. சுற்றி இருந்தவர்களை பார்வையால் தள்ளிப் போகச் சொல்ல அவர்கள் விலகி சென்றார்கள்.
துரை அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே தொண்டையை செருமி"இப்ப என்ன சொன்ன"
"அன்னிக்கு சொன்னிங்களே துரை"அவளுக்கு வார்த்தை வரவில்லை.
"ம்ம்ம் அதுக்கு பதிலா என்ன செய்னும்"துரை நேரடியாக விஷயத்துக்கு வந்தான்..
"என் புருஷன விட்ருங்க துரை"
"ஹாஹாஹா.. இதுக்கு அவ்ளோ பெரிய ரேட் கொடுக்கனுமா"
"துரை.. எனக்கு என் மானத்தோட என் புருஷன் உசுரு தான் பெருசு.. மனசு வைங்க துரை"வறண்ட குரலில் கூறினாள்.. சற்று நேரம் யோசித்த துரை
"ம்ம்ம்.. உன் புருஷன ரிலீஸ் பண்ண சொல்றேன். இப்ப நீ என்கூட செக்ஸ் வெச்சிக்க வேணா.. உன் புருஷன் வந்ததும் அவன் முன்னாடி உன்ன ரேப் பண்றேன்.. எவ்ளோ டேர் இருந்தா எங்கள தொரத்த பாப்பான்.. நீ போ.. நா சொல்றப்போ வா"துரை அவளை திரும்பி போக சொல்ல நந்தனை காக்க தன்னை இழக்க துணிந்து விட்டாள் அழகி.
துரை என்ன செய்தானோ அடுத்த ஒரு மணி நேரத்தில் நந்தனை இரு காவலாளிகள் நந்தனை அள்ளிக் கொண்டு வந்து அழகி வீட்டின் முன் போட்டு விட்டு சென்றனர். வீட்டின் உள்ளே வெறித்து பார்த்தபடி அமர்ந்து கொண்டிருந்த அழகிக்கு அக்கம் பக்கத்தார் கூக்குரள் கேட்க வெளியே ஓடி வந்தாள். அங்கே நந்தனை சுற்றி மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
அழகி அவனை பார்த்தபடி நிற்க மரகதம்"ஹேய் புள்ள என்னடி அங்கேயே நிக்குற.. உன் வீட்டுக்காரனுக்கு ஆயுசு கெட்டிடீ.. அதான் வெள்ளக்காரன் மன்னிச்சு விட்ருக்கான்..ஹேய் நான் பேசிட்டு இருக்கேன் என்னடி புருஷன அப்டி பாக்குற.. பாவம் அடிபட்டு உடம்பு நொந்துக் கெடக்கு..மஞ்ச அரைச்சு பத்து போடு.. மொத வெண்ணி வெச்சு தலையோட ஊத்தி விடு.. நல்லா நாட்டு கோழி அடிச்சு கொழம்பு வைடீ.. அழகி அடியே அழகி" உறக்கத்திலிருந்து எழுந்தவளை போல மரகதம் அக்கா பேசியதைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அழகி.
அதற்குள் சில ஆண்கள் நந்தனை தூக்கி வந்து வீட்டுக்குள் படுக்க வைத்து விட்டு சென்றனர். அவனால் நடக்கவே முடியவில்லை இதில் எங்கிருந்து எழுந்து குளிக்க செல்வது. அழகி விறகு அடுப்பில் வெந்நீர் போட்டு அதை வீட்டிற்குள் இருக்கும் அண்டாவில் நிரப்பி தண்ணீர் விட்டு விளாவி அதில் நனைத்து துணியை பிழிந்து நந்தன் உடல் முழுக்க துடைத்து விட்டாள். மஞ்சள் அரைத்து அவன் தழும்புகள் அனைத்திற்கும் பத்து போட்டாள்.
பின் தான் வளர்த்த கோழியில் ஒன்றை பிடித்து வெட்டி அவனுக்கு குழம்பு வைத்து சோறை குழைய வடித்து அதில் குழம்பை ஊற்றி திறக்கவே முடியாத அவன் வாயை லேசாக திறந்த ஊடடினாள்.மூடிய நந்தனின் கண்களில் கண்ணீர் வடிந்தது.. பொழுது சாயும் வேளை மருத்துவச்சி வந்து பார்த்து அவன் காயங்களுக்கு களிம்பு தந்து செல்ல கணவனின் உயிருக்காக தான் பணயம் வைத்த ஒன்றை எண்ணி தனக்குள்ளயே மறுக்கினாள் அழகி..
தொடரும்
😭😭😭😭😭😭😭
ReplyDeletePavam pa epo present stry varum
ReplyDeletePavam alagi
ReplyDeleteSemaaaa semaaaa super 😭😭😭😭😭😭😭
ReplyDeletePavam alagi😪😪😪
ReplyDeleteSemma intresting ah poguthu superb.
ReplyDeletePavan azhagi
Azhagi rmba pavam dha nandhan enna panna porano
ReplyDeleteAachoo romba pavam sis
ReplyDeletePavam alaghi nanthan enna seiya poranu theriyala
ReplyDeleteஅச்சச்சோ அப்படி செய்யாதே அழகி,நிச்சயம் அவன் எப்படியாவது உன்னை காப்பாத்துவாண் 😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😳😳😳
ReplyDelete