13 நெருங்கினா(ள்)ல்?

ஹாய் டியரிஸ் அப்டியே நம்ம blog க follow பண்ணலாம் தப்பு இல்ல. ரெண்டே பேருதான் follow பண்ணிருக்காங்க.உடனே notification வர follow பண்ணிருங்க..

சூரியன் உச்சிக்கு வந்த வேளையில் கண்விழித்த குண்டலகேசி நேற்றைய நிகழ்வுகளை தனக்குள் ஒட்டி பார்த்தாள். அவளின் நினைவுகளில் அந்த மர்ம அறை வந்து போனது. உடனே அடித்து பிடித்து எழுந்தவள் அந்த அறை இருந்த திசைக்கு ஒரே ஓட்டமாக ஓடினாள். அந்தோ பரிதாபம் பல்லு கூட விளக்காமல் அவள் பரபரப்பாக ஓடி வந்தது அந்த அறையை பார்க்கத்தான். ஆனால் அப்படி ஒரு அரை அங்கே இருந்த சுவடே தெரியவில்லை. பெரிய சுவர் ஒன்று தான்  முட்டுக் கட்டையாக நடுவில் நின்றது.


" நேற்று இந்த ரூமுக்கு தான வந்தோம்.. இங்கதான ரூம் இருந்துச்சு..  என்னடா செவுரு இருக்கு.. ரூமு எங்க.. ரூம் கூடவா காணா போவும்"வடிவேலுக்கு கிணறு காணாமல் போனது போல குண்டலகேசிக்கு அறை காணாமல் போய்விட்டது. அவளும் நன்றாக தனது மூளையை ரிவைண்ட் செய்து பார்த்தாள். ஒவ்வொரு அறையாக கணக்கிட்டு அவள் வந்து அந்த அறையை காணவில்லை. ஒரே இரவில் எப்படி இந்த இடத்தில் சுவர் வரும்?


அவள் குழம்பி நிற்கையில் அங்கே வந்து நின்றான் வந்தியதேவன். " மணி என்ன தெரியுமா.. காலைல எந்திரிச்சோமா பல்ல வெளக்குனோமா குளிச்சோமா வேலைய பாத்தோமான்னு இல்லாம உனக்கு மதியம் வரைக்கும் தூக்கம்? "


"அது இருக்கட்டும்.. இங்க ஒரு ரூம் இருந்துச்சே.. நேத்து கூட இதுக்குள்ள போனோமே.. ரூம் குள்ள ஒரு ரூம் இருந்துச்சே"


"இந்த வீட்ல இருக்குறதே இவ்ளோ ரூம் தான். அது பத்தலையா உனக்கு. இன்னும் புதுசா ரூம் கட்டணுமா"


"ஹேய் நான் எங்க ரூம் கட்ட சொன்னேன்.. இங்க இருந்துச்சே.. நேத்து கூட ஒரு ரகசிய ரூம் குள்ள போணோமே. அங்க ஒரு பொட்டி,அது என்ன கீறி வெச்சு, ரத்தம் நிக்காம வந்து, நீ வெச்சிருந்தியே மலைப்பாம்பு கழிசடை அது வந்து என் விரல நக்கி நான் பயந்து"


"ஹேய் ஹேய்.. நிப்பாட்டு.. என்ன ஒளறிட்டு இருக்க நீயு.. எந்திரிச்சதே லேட்டு. என்ன கனவு கண்டு ஒளறிட்டு இருக்கியா.. நான் என்ன சொன்னேன்.எனக்கு இனிமே எல்லா சாப்பாடும் நீ தான் சமைக்கணும். என் வேலைய நீ தான் பாக்கணும்னு சொன்னேன் தான.. ஒரு நாள் செஞ்ச மறுநாள் வேல செய்யாம டிமிக்கி கொடுக்க பார்க்கிற.. ஒழுங்கு மரியாதையா இந்த மாதிரி கதை விடுறத நிப்பாட்டிட்டு போய் வேலைய பாரு." வந்தியதேவன் கடுமையாக அவளை எச்சரித்தும் குண்டலகேசி அவனின் எச்சரிக்கையை காதில் வாங்காமல் அந்த சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


நேற்று இரத்தம் கசிந்த அவளின் விரலை பார்க்கையில் இப்பொழுது அடி பட்டத்திற்கான ஒரு தடயம் கூட அங்கே இல்லை. விரல் வெண்டைக்காய் போல அழகாக பளபளவென இருந்தது. ஒருவேளை நேற்று தான் கண்டது கனவா என்று குழம்பித் தவித்தாள் குண்டலகேசி. தான் எடுத்துச் சொல்லியும் கேளாமல் அங்கே நின்று தலையை சொரிந்து கொண்டு இருந்த குண்டலகேசியை காண்கையில் கோபம் தலைக்கு ஏறி அவள் கையை பிடித்து கொண்டு போய் நேராக பாத்ரூம் உள்ளே தள்ளி விட்டான் வந்தியதேவன்.


அவனை கருவிக் கொண்டு குளிக்கையில் கூட அவளுக்கு அதே நினைப்புதான்..  நன்றாக யோசித்து பார்த்தாள்.  அவள் கண்ட யாவும் கனவு கிடையாது. இந்த கோட்டையில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது.. வேகமாக குளித்து விட்டு உடை மாற்றியவள் சமையலறைக்குச் சென்றாள். அங்கே அவள் சமைப்பதற்கு அவசியம் இல்லாத அளவிற்கு மதிய உணவு தயாராக இருந்தது. அவை அனைத்தையும் எடுத்து வந்து மேஜையில் அடுக்கவும் வந்தியதேவன் வந்து அமர்ந்தான். அவனுக்கு பரிமாறி தானும் உணவை தட்டில் வைத்து கொண்டவளுக்கு அவன் எப்பொழுதும் வீட்டை விட்டு வெளியேறுவான் என்று இருந்தது.


சாப்பிடும்போது பேசவும் தயக்கம். அவள் அனுபவித்த அனுபவம் அப்படி. ஒருவழியாக உணவு முடிந்ததும் கைகழுவி அவன் வாய் துடைக்க அவன் பின்னால் வந்து நின்றவள்"ஏன் இங்கயே நிக்குற.. உனக்கு வேற வேல இல்லயா.. போய் வேலைய பாரு"


" ஏய் சாப்பிட்டு வாய் தொடச்சிகிட்டு இருக்கேன்.. அதுல என்ன வந்துச்சு உனக்கு. எதுக்கு என்ன விரட்டுற"


" இல்ல அப்படி சொல்லல.. குட்டி போட்ட பூனை மாதிரி இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கியே. உனக்கு வேலை வெட்டியே கிடையாதா. நீ வீட்டிலயே இருந்தா எனக்கு எப்படி சோறு போடுவ. நாளப் பின்ன குழந்தை குட்டி வந்தா அதுங்க நிலைம என்ன.."அவன் போய்த் தொலைய மாட்டானா என்ற ஆதங்கத்தில் வாய்க்கு வந்த எதையோ அடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.


" சோறு போடுறது என் புள்ளைய எப்படி வளர்த்து ஆளாக்குறது எல்லாம் எனக்கு தெரியும்.. அத பத்தி நீ பீல் பண்ணாத.. இன்னும் ஒண்ணுமே நடக்கல அதுக்குள்ள உனக்கு புள்ள குட்டி கேக்குதா.."


" ஒன்னுமே நடக்காதது என் தப்பா. அது உன்னோட மிஸ்டேக் யூ சில்லி மேன்.."


" சரி இன்னிக்கு வெச்சுக்கலாம்"


"அந்த எழவு கெடக்கட்டும்.. நீ என் வீட்டிலேயே இருக்கியே உனக்கு வேலை இல்லையா.. நீ என்ன வேலை செய்ற. எப்படி நீ இவ்ளோ பெரிய கோட்டைய வாங்கி வச்சிருக்க"


"எல்லாம் ஒரு நாள் உனக்கே புரியும். இது என்னோட சொந்த கோட்டை. இங்க நான் வச்சதுதான் சட்டம். இந்தக் கோட்டைக்கு நான் ராஜானா நீ என் ராணி.. தேவையில்லாத கேள்வி கேட்கிறத நிப்பாட்டு. நான் சொன்னத மட்டும் செய். அப்பப்ப உன்னோட குடும்பம் என்கிட்ட இருக்கிறத மறந்துட்டு பேசுற. இது உனக்கு நல்லது இல்ல.. நைட்டு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். அதுக்கு ரெடியாயிரு."அவன் முதலிரவைப் பற்றி சொல்லியே எதுவுமே அவளுக்குப் பெரிதாக தெரியவில்லை. அவன் எப்பொழுது இந்த கோட்டையை விட்டு வெளியேறினான். கமலியை கண்டுபிடித்து அவள் வாயை நோண்டி இந்த மர்ம சுவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அவள் நினைத்திருக்க இவனோ முதலிரவை பற்றி பினாதி கொண்டிருக்கிறான்.


" நான் என்ன சொல்ல வர்றேன்னா  ஆ அது வந்து எனக்கு போட்டுக்க அதாவது நான் யூஸ் பண்ண எனக்கு கொஞ்சம் திங்ஸ் வேணும். என்ன வெளிய கூட்டிட்டு போறியா"


அவனின் புருவம் மேலே ஏறியது." வெளிய கூட்டிட்டு போக முடியாது. என்ன வேணும்ன்னு சொல்லு.  அது வீடு தேடி வரும்" இவன் ஒழிய மாட்டான் போலிருக்கிறதே என்று என்ன சொல்லலாம் என வேகமாக யோசித்தாள். சொல்லப்போனால் அவள் பயன்படுத்தாதது கூட அவளுக்காக வாங்கி அலமாரி முழுவதும் அடுக்கி இருந்தான் வந்தியதேவன். இருந்தாலும் அவனை உடனே வெளியேற்ற ஏதாவது ஒன்றை சொல்லியே ஆகவேண்டும் என தீவிரமாக யோசித்தவளுக்கு அவன் முதலிரவு என்று குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.


உடனே" நீ ஃபர்ஸ்ட் நைட்டுனு சொன்னியே அதுக்கு சாரி கட்டணுமா இல்ல லிங்கரி எதாச்சும் போடணுமா"


" லிங்கரியா அப்படினா"


"நீ விவரம் தெரியாம பேசுறியா இல்ல நடிக்கிறியா எனக்கு தெரியலையே. லிங்கரி அப்படினா செக்ஸியான நைட்டி. அரையும் குறையுமா போட்டுகிட்டு புருஷன் முன்னுக்கு ஆடிக்கிட்டு நிப்பாங்களே".. வேகமாக தனது அலைபேசியை எடுத்து அதில் லிங்கரி என கூகுளில் தேடிப் பார்த்தான். இது உடையா இல்லை அங்கங்கே பிட்டு துணிகளைத் தொங்கவிட்டு இருக்கிறார்களா என்று புரியாத வகையில் படும் ஆபாச தரமான இரவு உடைகள் தாராளமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தன. அதிலும் வியாபார நோக்கத்திற்காக கொழுக் மொழுக் என்று உடலமைப்பு இருக்கும் பெண்களை அம்மாதிரி உடைகளை அணிய வைத்து  படம் போட்டிருந்தார்கள்.


அவன் எதை இவ்வளவு நேரம் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எட்டிப்பார்த்த குண்டலகேசிக்கு பகீரென்றது.."யோவ் என்னயா பொம்பள படத்தயே இவ்ளோ நேரம் பாத்துட்டு இருக்க..இந்த பொண்ணுங்க எல்லாம் நேர்ல வந்தா பாஞ்சிருவ போலயே.."


"நீ மூடு. இதுல என்ன மாதிரி டிரஸ் வேணும் சொல்லு".. அவன் அலைபேசியை அவள் கையில் கொடுக்க அதில் இருக்கும் படங்களைப் பார்க்கையில் அவளுக்கு கண்கள் வெளியே வந்துவிட்டது. இம்மாதிரி உரைகளை ஆசை காதல் கணவனாக இருந்தால் அவன் முன்பு போட்டு அவர்களின் உறவை இன்னும் பலப்படுத்தலாம். ஆனால் இந்த அரக்கனின் முன்பு இம்மாதிரி உடைகளைப் போட்டால் அவளின் நிலை என்னாவது?


"இல்ல வேணா.. எனக்கு இதுல எதுவும் பிடிக்கலை.. நான் வேணும்னா சாரீ கட்டிக்கிறேன்"


"நோ நோ.. எனக்கு இந்த டிரஸ்ல உன்ன பாக்கணும்னு ஆசையா இருக்கு. நானே உனக்கு ஒரு ட்ரஸ் ஆர்டர் பண்றேன்.. இன்னும் ஒரு மணி நேரத்தில டிரஸ் வீட்டுல இருக்கும்.  அத நீ போட்டுட்டு நைட் டு ரெடியா இரு." சும்மா இருந்தவனை சுரண்டி விட்டு விட்டோமே என்று அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது. இன்று என்ன பார்த்து அவன் வீட்டை விட்டு அசையவே இல்லை. இறுதியில் அவன் சொன்னது போல அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க கையில் பெரிய பார்சல்லோடு உள்ளே வந்தான் வந்தியதேவன்.


" இந்த பார்சல்ல உனக்கு ட்ரஸ் இருக்கு.. இந்த பாக்ஸ்க் உள்ள உனக்கு ஒரு கிப்ட் இருக்கு.. தொறந்து பாரு உனக்கு பிடிக்கும்." என்றவன் அவள் அருகில் வந்து அவளின் முகத்தை கைகளில் ஏந்தி


" உனக்கு ஃபர்ஸ்ட் நைட் ஓகேவா.. பிடிக்கலைனா சொல்லு நிப்பாட்டிருலாம்" அவனுடைய நெருக்கமும் அந்த ஆழ்ந்த குரலும் அவளை சிந்திக்க வைத்தது.  மணம் முடிந்து விட்ட நிலையில் தன்னுடைய குடும்பமே அவனிடம் இருக்கும் பட்சத்தில் இதனை மறுக்க அவளுக்கு தைரியம் வரவில்லை. இன்னொரு பெரிய விஷயம் இதில் ஒளிந்திருந்தது.


அவள் சிறு வயதாக இருக்கும் போது திவ்யா எனும் தோழி வீட்டிற்கு அடிக்கடி செல்வாள். குண்டலகேசியின் நெருங்கிய தோழி திவியா என்று கூட சொல்லலாம். திவ்யாவின் பாட்டி திருமணமான இன்னொரு பேத்திக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார். அதை விளையாட்டுத்தனமாக குண்டலகேசியும் திவ்யாவும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.


"கட்டுன புருஷன கட்டில்ல தான் கவுக்கணும்.. ஆம்பளைங்கள புடிச்சு வைக்க கை பக்குவம் மட்டும் காணாது. அதுக்கு கொஞ்சம் புத்தி பக்குவமும் வேணும்டி." என அந்த திருமணமான பேத்திக்கு பாட்டி காமசூத்ரா புத்தகத்தையே தலைகீழாக ஒப்பித்து கொண்டிருக்க பதினைந்து வயதான குண்டலகேசிக்கு அறவே புரியவில்லை. வார்த்தைகள் மட்டும் மிகவும் நாராசமாக காதில் ஒலித்தது. இறுதியாக பாட்டி சொன்ன ஒன்று அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது.


"அந்த காலத்துல பொம்பளைங்கள ஆம்பள மாறி வளப்பங்களாம்.அவங்களுக்கு புருஷன் கூட எப்டி இருக்கணும்னு சொல்லி கொடுக்கவே ஒரு வாத்தியாரு பொம்பள இருக்குமாம். எப்படி பட்டவனா இருந்தாலும் ஒரு பொம்பள கிட்ட அவன் புஸ்வானம் தான்.. பொம்பளய விட போத எதுலயும் இல்லடி.. பகையாளிய கூட பொம்பளய அனுப்பி மயக்கி போட்டு தள்ளிருவாங்களாம்.நிராயுதபாணியா ஒருத்தன் முன்னாடி இருந்தாலும் உயிர் தப்பிக்கணும்னா இந்த காமத்த பயன்படுத்தலாம் என்ன கேட்டா தப்பே இல்லனு சொல்லுவேன்" அப்பொழுது அந்தப் பாட்டி சொல்லியது குண்டலகேசிக்கு அபத்தமாக பட்டது.

கற்பு தான் சிறந்தது என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்பட்டு வளர்ந்த இருந்தாள்.  ஆபத்து நேரத்தில் கற்பை பணையம் வைத்து உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பாட்டி சொன்னது அவளுக்கு பிடித்தமாக இல்லை. ஆனால் இப்பொழுது அவளுக்கு அது எந்த அளவுக்கு உண்மை என்று புரிந்தது. உயிர் போகும் நேரத்தில் எதையோ ஒன்றை இழந்து உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமென்றால்  அது கற்பாக இருந்தாலும் இழக்க தயாராக இருக்க வேண்டும்.. நமது உயிர் நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் வரை கற்பு நமக்கு பெரிதாக படும். ஆனால் நமது உயிர் நமது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தால் அங்கே கற்பு என்பது இரண்டாம் பட்சம் ஆகிவிடும்.( இது என் தனிப்பட்ட கருத்து.. யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.)

எனவே அந்த பாட்டி கூறிய வழியில் வந்தியதேவனை மடக்க திட்டம் தீட்டினாள் குண்டலகேசி. கண்டிப்பாக அவளிடம் அவன் மயங்கி இருக்கும் வேளையில் அந்த சுவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள். அவள் என்ன அடுத்தவன் கூட முதலிரவு கொண்டாட இருக்கிறாள். தொட்டுத் கடவுள் சாட்சியாக தாலி கட்டிய கணவன். எப்படி இருந்தாலும் இது நடக்க வேண்டியது தானே. அவன் தன்னுடைய பதிலுக்காக காத்து இருப்பது அவளுக்கு புரிந்தது. எனவே சம்மந்தமாக அவள் தலையசைக்க அவளது நெற்றியில் முத்தமிட்டு சென்றான் வந்தியதேவன்.

அவன் சென்றதும் அந்த உடையை எடுத்து பார்த்தாள். எந்தப்பக்கம் பார்த்தாலும் அவளின் உடலழகை அப்படியே வெளியே காட்டும் கண்ணாடி உடை. அதனை ஓரமாக வைத்துவிட்டு இன்னொரு பெரிய பெட்டியை தொடர்ந்து பார்த்தாள்.  உள்ளே சாக்லேட் நிறத்தில் எட்டிப்பார்த்தது நாய்க்குட்டி ஒன்று.  ஆசையாக அதனைத் தூக்கி முத்தமிட்டவள் உடனே அதற்கு "லட்டு" எனப் பெயரிட்டாள்.

என்னதான் முதலிரவுக்கு அவள் ஒத்துக் கொண்டாலும் மனதில் ரயில் ஓடிக் கொண்டிருந்தது. இரவு வரவே வரக்கூடாது என்று அவள் மானசீகமாக வேண்டிக் கொண்டாலும் வந்தே விட்டது. எந்த அலங்காரமும் இல்லாமல் அறை எப்பொழுதும் போல காட்சி அளித்தது. அவன் வாங்கி தந்த அந்த உடையை அணிந்து அவள் நடுக்கத்தில் அமர்ந்திருக்க அறைக்குள் வந்தான் வந்தியதேவன். அவனைக் கண்டதும் போர்வையை எடுத்து தன்னை பொருத்திக் கொண்டாள்.

மங்கலான  விளக்கொளியில் மிரண்ட பார்வையோடு தன்னை மிரட்சியாக பார்க்கும் பெண்ணை நோக்கி மிதமான காலடிகளோடு முன்னேறினான் வந்தியதேவன்.

தொடரும்.

Comments

  1. Very interesting 🔥🔥🔥🔥 verithanam eagerly waiting for next 😍😍😍

    ReplyDelete
  2. Semaaaaa semaaaaa super 👌👌👌👌👌❤❤❤❤👏👏👏👏👏

    ReplyDelete
  3. குண்டலகேசி நீயே ஆப்பா தேடி கிட்ட

    ReplyDelete
  4. Ithula epdi follow pannanum sollunga nila

    ReplyDelete
  5. Iyoyo ena nadaka pokuthoo pavam kundamma matikitta

    ReplyDelete
  6. Super ud sis nice kesi un vai dha unakku emana vandhu iruku pola konjamadhu adangiriya ne pocha mattikitiya

    ReplyDelete
  7. 😄😄😄😄matikkitaaaaa kesi😄😄... Laddu name 👌🏻👌🏻👌🏻👌🏻💞🐕

    ReplyDelete
  8. Super arumai yeoman unakku vaai summa irukka needs vanki kattikira

    ReplyDelete
  9. உனக்கு ஏழரை வேற எங்கையும் இல்லை கேசி உன்னோட வாய்தான்.ஏம்மா டிரஸ் பத்தி நீயா பேசி மாட்டிகிட்ட.பேர் சொன்னதோட விட்டியா.இல்லை இதுல கூகுள் ஆண்டவரை சர்ச் பண்ணி அவன்ட்ட இமேஜ் வேற காடாடுற.எம்புட்டு பெரிற அழகி வந்தாலும் அவன் கவுந்துரமாட்டான். உன்னால மட்டும்தான் அவனோட உணர்வு உயிர்ப்பிக்கபடும்.பார்ப்போம் என்ன ஆகுதுன்னு.👏🏻👍🏻👏👏👌🏼👌👏🏻👏🏻👍🏻👏💖💜💖💖👏🏻👏🏻👍🏻👏👏🏻💜

    ReplyDelete
  10. செம்ம காமடி உனக்கு இது தேவையா சும்மா இருந்தவணை இப்படியா கேட்ப😳😳😳😳😳🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  11. Ithellam unaku thevaithan Kesiii.. Eleii VD nalla panra neenu..😝😝

    ReplyDelete
  12. Gundamma.. unaku thevai ya ithu??? Sontha selavil sooniyam vaichukitiye!.. plz kalli UD podunga...

    ReplyDelete
  13. Epdi follow panradhu sis.. enaku notification varala..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்