10 நெருங்கினா(ள்)ல்?
வந்தியதேவன் இனி தான் உண்ணும் உணவுகளை குண்டலகேசியே சமைக்க வேண்டும் என்று கூறிவிட தலையிலடித்துக் கொண்டு அவனுக்காக சமையல் செய்து கொண்டிருந்தாள் குண்டலகேசி. எங்கிருந்து எப்படி கவனிப்பார்களோ தெரியவில்லை, அவள் அறையில் இருந்து வெளிவரும் போது அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் வேலையாட்கள் அனைவரும் எங்கேயோ போய் ஒளிந்து விடுகிறார்கள்.
ஒருவேளை இந்த கோட்டைக்குள் அதலபாதாளத்தில் ஏதாவது அறைகள் இருக்கிறதோ. அப்படி இருந்தால் அந்த அறைகளின் கதவுகள் எங்கே இருக்கும். ஒருநாள் இந்தக் கோட்டை முழுவதையும் சுற்றி அலசி ஆராய்ந்து விடவேண்டும் என்ற எண்ணத்தோடு அம்மியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்தாள்.. உயிருள்ள பால் நண்டுகளை சற்று நேரம் முன்புதான் சுத்தம் செய்து வைத்திருந்தாள்.அதுவும் யூடியூப் பார்த்து. அவள் வீட்டில் ஆவுடையப்பன் வாங்கும் சம்பளத்தில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் கோழியே வாங்குவார்கள். இப்படி இருக்க நண்டு இறால் இவைகளையெல்லாம் அவள் பாடப் புத்தகங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டும்தான் பார்த்திருக்கிறாள்.
ஒருவழியாக நண்டை சுத்தம் செய்து ஓரமாக வைத்துவிட்டு குழம்புக்கு தேவையான மசாலாக்களை அம்மியில் வைத்து அரைத்துக் கொண்டிருக்கும் போது கமலி வந்து அவளோடு சேர்ந்து கொண்டாள். கமலிடம் பேசிக்கொண்டே உணவு சமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டாள் குண்டலகேசி. குண்டலகேசி கேட்கும் பெரும்பாலான கேள்விக்கு பதில் சொல்லும் கமலி சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அமைதி காப்பாள். குண்டலகேசி அவளை பதில் சொல்லுமாறு வற்புறுத்தினால்"அக்கா ப்ளீஸ் இந்த கேள்விய மட்டும் என்கிட்ட கேட்காதீங்க..நீங்க எப்படி கேட்டாலும் என்னால சொல்ல முடியாது.நான் சொல்லவும் கூடாது.. தேவ் அண்ணே சொல்லிருக்காரு."
" ஆமா ஆமா.. உங்க அண்ணே சொல்லிட்டாரு.. அந்த வார்த்தைய மீறினா சாமி கண்ண குத்திறாது.. நீ வாயே திறக்காத தாயி"என்று கடுப்போடு மொழிந்தாள் குண்டலகேசி. ஒருவாராக சமையல் அனைத்தும் முடிந்த நிலையில் குழம்பு எப்படி இருக்கிறது என்று ருசி பார்க்க சொன்னாள் கமலியை. அதற்கு கமலி
" ஐயோ அக்கா நான் எப்படி தேவ் அண்ணே சாப்பிடாம சாப்பிடுறது.. அதும் இது நீங்க அண்ணனுக்காக ஃப்ரஸ்ட் டைம் செஞ்சிருக்கீங்க.. மொத போனி அண்ணே தான்" அந்த சிறுமி என்னவோ எதார்த்தமாக சொல்ல தான் உண்ட பிறகுதான் பிறர் உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சர்வாதிகாரி என்று வந்தியதேவனை மனதுக்குள் சபித்தாள் குண்டலகேசி. கமலி குண்டலகேசியிடம் கதை அளந்துகொண்டு இருக்க அந்நேரம் பார்த்து அவளின் வயிறு வலிக்க தொடங்கி விட்டது.
"காலையில தான போனோம்.. திரும்பவுமா.. கமலி அக்காவுக்கு வயித்த வலிக்குது.போய்ட்டு வந்து கண்டினியூ பண்றேன்.." என்றவள் ஓட்டமும் நடையுமாக தன்னுடைய அறைக்கு வந்து சேரும் போது
"வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது" பாடிக்கொண்டே அறைக் கதவை திறந்தாள்.. வந்தது கூட உள்ளே சென்று விட்டது அவளுக்கு. ஏனென்றால் அந்த அறையில் புரண்டு கொண்டிருந்தது வந்தியதேவனின் செல்லப்பிராணியான மலைப்பாம்பு.. யார் அதனை எடுத்து வந்து இங்கே விட்டிருப்பார்கள் என்பதை அப்போது ஆராய அவளால் முடியவில்லை.. ஒரு நிமிடம்தான் மறுநிமிடமே முன்பைவிட வேகமாக அவளின் வயிறு வலிக்க தொடங்க ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தாள் வந்தியதேவனின் அறைக்கு.
அவன் எப்பொழுது வந்து அறையில் அமர்ந்திருந்தான் என்றே தெரியவில்லை.அறைக் கதவைத் தட்டாமல் அவசரமாக உள்ளே ஓடியவள் அங்கே அவன் அமர்ந்து அவளை பார்ப்பதை கூட அறிந்து கொள்ளாமல் நேராக கழிவறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். போன வேலை சுமூகமாக முடிய அப்பாடா என்று கதவைத் திறந்தவளுக்கு அங்கே மூளையின் போட்டிருந்த ஸோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து தன்னை பார்த்துக் கொண்டிருந்த வந்தியதேவனை கண்டதும் வெட்கத்திற்கு மாறாக கோபம் கொப்பளித்தது.
நேராக அவனிடம் சென்று"உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க..என்னத்துக்கு அந்த எழவெடுத்த மலைப்பாம்ப என்னோட ரூம்ல விட்டிருக்க.அந்த சனியன் எங்கேயோ ஒரு தொட்டியில தானே இருந்துச்சு.. இப்ப நான் எப்படி அந்த ரூம்க்குள்ள போவேன்"
" இனிமே அது ஸ்நொவ் வைட்டோட ரூம்.. "
"ஸ்நொவ் வைட்டா"
"ஆமா அந்த பாம்பு பேரு அதுதான்.."குண்டலகேசிக்கு தலை சுற்றிவிட்டது. யாராவது இந்த உலகத்தில் பாம்புக்கு போய் அதுவும் மலைப்பாம்பிற்கு ஸ்நொவ் வைட் என்று பெயர் வைப்பார்களா? இந்த கொடுமையை அவள் எங்கே போய் சொல்ல?
"பெரிய வெள்ளைக்காரன் பேர பாரு ஸ்நொவ் வைட்டு.. யோவ் இம்சை உன் மலைபாம்புக்கு என் ரூம கொடுத்துட்ட. சரி இது உன் வீடு. நான் என்னத்த சொல்ல. ஒழுங்கு மரியாதையா எனக்கு இன்னொரு ரூம் ஏற்பாடு பண்ணு.."
"எதுக்கு உனக்கு இன்னொரு ரூம் வேணும்.. அதான் இவ்ளோ பெரிய ரூம் இருக்கே..நீ ஒருத்தி தங்குறதுக்கு எதுக்கு வேஸ்டா ஒரு ரூம்.."
"எதே இங்கயா.. நேத்து என்னமோ ஃபர்ஸ்ட் நைட்டு..உன் முகர கட்டைய பார்த்தா சிட்டுக் குருவி லேகிய கம்பெனியயே வாங்கி வெச்சிருப்பேன்னு நெனச்சேன்.. நீ வெறும் குஸ்கா மட்டும் சாப்பிட்டு படுத்துட்ட.. அதுக்கு நானா பொறுப்பு.. இன்னிக்கும் நீ வெறும் குஸ்கா மட்டும்தான் சாப்பிட போற..இதுக்கு நா இங்க படுத்தா என்ன அங்க படுத்தா என்ன.."
"ஓ பிரியாணி போடலைனு வருத்தமா உனக்கு"
"நான் அன்னிக்கே பத்து விதிமுறைகள பக்காவா சொல்லிட்டேன்.ஃபோர் யுவர் கைண்ட் இன்போர்மெஸன் இன்னொரு வாட்டி சொல்றேன்..
1.உணர்ச்சி வேகத்தில நீங்க என் மேல விழுந்து உங்க எலும்பு உடைஞ்சா நான் பொறுப்பு இல்ல.
2. அதே மாதிரி உங்கள தள்ற முயற்சியில உங்க எலும்பு ஒடஞ்சாலும் நான் பொறுப்பு இல்ல.
3. தூக்கத்துல உருண்டு படுத்து உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தா நான் பொறுப்பு இல்ல..
4. சரியா கோபேரெட் பண்ண முடியலைன்னா நான் பொறுப்பு இல்ல.
5. தாம்பத்திய வாழ்க்கை தாம்பு கையிறா மாறுனா நான் பொறுப்பு இல்ல.
6. என் இம்ச தாங்க முடியாம நீங்க சட்டைய கிழிச்சிட்டு நடந்தா நான் பொறுப்பு இல்ல.
7. நீங்க செய்ற கொடுமையெல்லாம் ஒரு நாள் திருப்பி செய்ற நாள் வரும்.. அப்ப நீங்க விடுற ஆனந்த கண்ணீருக்கு நான் பொறுப்பு இல்ல.
8. உங்க மேல் லவ்வே வராது அதுக்கு நான் பொறுப்பு இல்ல.
9.செக்ஸ் பண்ணும் போது எனக்கு கடுப்பாச்சுன்னா கடிச்சு வெச்சிருவேன். இங்கிலிஷ்ல என்னவோ சொல்லுவாங்களே லவ் பைட்னு அப்டி ரத்தம் வர அளவு கடிச்சா நான் பொறுப்பு இல்ல.
10.நான் பேசுற பேச்சு தாங்க முடியாம தாலிய கழட்டி கொடுத்துட்டு போனு நீங்க சொன்னா நான் பொறுப்பு இல்ல..
"தெளிவா கேட்டுச்சா இதெல்லாம் கம்பெனி ரூல்ஸ்.. எனக்கும் இதுக்கும் சம்மதம் இல்ல. பாத்து நடந்துக்கோங்க.. இந்த ரூம்ல தான் நான் தூங்கணுமா.. ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்.. நான் சொன்னதெல்லாம் நெனப்புல வச்சுக்கோ. இப்ப வந்து சாப்பிடு.." இவ்வளவு நேரம் அவள் போட்ட பத்து கண்டிஷன்களைக் கேட்டு முதன்முறையாக அவள் முன்பு வாய்விட்டு சிரித்தான் வந்தியதேவன். அவன் சிரிப்பதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் குண்டலகேசி.
"என்ன அப்டி பாக்குற"
"ஒரு மிருகம் சிரிச்சு இன்னைக்கு தான் பாக்குறேன் அதான்" அதற்கும் சிரித்து வைத்தான் அவன்.
" உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்.. உன்ன பார்த்ததும் பிடிச்சது.."
"பாக்க பாக்க பிடிக்கலையா"
" குறுக்க பேசாத. உன்னப் பாத்ததும் பிடிச்சது.. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு. உன்ன கூடவே வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா இந்த இந்த அளவுக்கு நீ எனக்குள்ள இருப்பேன்னு எனக்கே தெரியல. நீ எது செஞ்சாலும் பிடிக்குது. உன்னப் பார்த்தாலே பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு.. ஏன் அப்படி"
"ம்ம்ம்ம் ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேணானாம்..ஊரான் வீட்டு பொண்ண லவட்டிட்டு வந்துட்டு கேள்வியா கேக்குற"..அதற்கும் சிரித்தான் அவன்.. கடுப்பாகி காண்டாகி அங்கிருந்து வெளியேற போனவளை இழுத்து சுவரோடு சாய்தவன் இருப்பக்கம் அணைக்கட்ட
"இதெல்லாம் நாங்க படத்துலயே பாத்துட்டோம்.புதுசா ட்ரை பண்ணுங்க மிரு சார்..".. அவன் நெஞ்சின் வரையே இருந்தவளை குனிந்து பார்த்தவன் குனிந்து அவளின் கழுத்தில் இதழ் பதித்து சிறிது சதையை பார்க்களால் கடித்து இழுக்க வலியில் துடிக்க தொடங்கினாள் கேசி..
"அடேய் ரத்தக் காட்டேரி எதுக்குடா என்ன கடிச்சி வைக்குற.."அவள் கத்த அவளை விடுவித்தவன் சிரிக்க வந்த கோபத்தில் அவன் கழுத்தை எக்கி பிடித்து அவனது கீழுதடையை கவ்வி இழுத்து முத்தம் என்ற பெயரில் கண்டபடி கடித்து வைக்க அசையாமல் நின்றான் வந்தியதேவன். அசையாதது அதுமட்டுமல்ல அவள் இன்னும் தன்னுடைய உதட்டை நன்றாக கடித்து இழுக்க ஏதுவாக அவளின் இடையை பிடித்து உயர்த்திப் பிடித்தான். குண்டலகேசி காலையில் அவன் மிளகாய் தின்ன வைத்த கடுப்பில் அவனது கீழுதட்டை ரத்தம் வருமளவிற்கு கடித்து வைத்தாள்.
வெற்றி சிரிப்போடு அவனது உதட்டை விடுதலை செய்து விட்டு"நண்டு கேக்குதா உனக்கு நண்டு..வெச்சேன்டா உன் வாயில குண்டு.. நீ போட நவுந்து என் பூண்டு.. இல்லனா ஆயிருவேன் காண்டு..எப்டி ரைமிங்கா டைமிங்ல அடிக்குறேன் பாத்தியா. நம்ம கையில வெச்சிக்காதப்பு.. நான் ஒரு மாதிரி.. நவுரு நவுரு நீ எப்டி நண்டு தின்னு ஆட்டம் போடுறேனு நானும் பாக்குறேன்"என்றவள் அவன் கைவலைவில் புகுந்து செல்ல பார்க்க அவளுக்கு சிறிய இடம் பத்தவில்லை.
"நான் என்ன இலியானாவா இத்துனோன்டு எடம் எனக்கு எப்டியா பத்தும்.. கை ஒடயுற குள்ள நவுந்துரு" என தன்னுடைய பாணியில் அவனுக்கு ஒரு பொதுநல அறிவிப்பை அறிவிக்க தலையை ஆட்டிக் கொண்டே நகர்ந்து நின்றான் வந்தியதேவன்.. உதடு வீங்கி கடுக்கடுத்தது அவனுக்கு.அவள் கடுப்பாய் செய்த காரியம் அவனுக்கு இனிப்பாய் இனித்தது.
புயலென்று
நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய்
வந்தாள் மலை என்று
நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை
சாய்த்தாள் நெற்றி பொட்டில்
என்னை உருட்டி வைத்தாளே
அவனைத் தொட்டு பேசவே பயப்படும் ஆட்களின் மத்தியில் அவனைப் பற்றி ஒன்றுமே அறியாமல் தன்னால் முடிந்த அளவுக்கு அவனுக்கு தொல்லை கொடுக்க முடிவு செய்திருந்தாள் குண்டலகேசி. அவளின் பாஷையில் சொல்லப்போனால் இது தான் அவனுக்கு அளிக்கும் தண்டனை. இப்பொழுது கண்டிப்பாக உதடு வீங்கி அவனால் ஆசையாக கேட்ட நண்டு கறியை சாப்பிட முடியாது. ஏக்கமாக அவள் உண்ணும் நண்டை பார்த்து பெருமூச்சு விடுவான்.
வேண்டுமென்றே அவன் முன்பு மூச்சுவிட முடியாத அளவுக்கு சாப்பிடவேண்டும் என்று அவள் நினைத்திருக்க அதற்கு ஏறுக்கு மாறாக அவன் ஒரு தடவைக்கு இரண்டு தடவை போட்டு சாப்பிட்டுவிட்டு கூடவே அவளை அமர வைத்தும் சாப்பிட அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. குழம்பு வைக்கும் முன்னாடியே கறியில் அளவுக்கதிகமான காரத்தை சேர்த்திருந்தாள் குண்டலகேசி. அவனே சொந்த காசில் சூனியம் வைப்பது போல அவளை அணை கட்டவும் அவனது உதட்டை கடித்து வைத்து காரம் அவன் உதட்டில் படும் போது அவன் அலறும் அலறலை பார்க்க ஆர்வமாக இருந்தாள்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று அவளும் மிதப்பாக பார்த்துக்கொண்டிருக்க உண்டு முடித்து பெரிய ஏப்பமாக விட்டான். பாவம் அவள் தான் இறுதியில் அவ்வளவு காரத்தை உண்ண முடியாமல் திண்டாடினாள்.
அவளின் திண்டாட்டத்தை பார்த்து ஐஸ் தண்ணீரை எடுத்து வந்து அவளின் வயிற்று எரிச்சலை தன்னால் முடிந்த மட்டும் தனித்தான் வந்தியதேவன். பகலில் அவள் போட்ட திட்டம் இப்படி இருக்க இரவில் அவனிடம் என்னதான் வீரமாக பேசினாலும் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கவே அவளது உடல் நடுங்கியது. முதல் நாள் அவளை விட்டு வைத்தவன் மறுநாளும் அவனை விட்டு வைக்க என்ன முட்டாளா?
தொடரும்..
சூப்பர்
ReplyDeleteTq sis🧡
DeleteInteresting sis nice ud super kesi unakku idhu thevai ah sollu
ReplyDeleteTq sis🧡
DeleteSema
ReplyDeleteTq sis🧡
Deleteஅச்சோ ஏம்மா கேசி இதுதான் உன்னோட தண்டனையா ஐய்யோ இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கியே.டேய் அந்த பாம்பு என்ன கரடி பொம்மையாட பொசுக்கு பொசுக்குன்னு வீட்டுக்குள்ள கொண்டு வந்து விடுற.ஆனாலும் கேசி எம்புட்டு தைரியம்.அவன் என்னென்ன பண்ணுவான்னு தெரிஞ்சும் அவனை இப்புடி பண்றியேம்மா.குழம்புல காரத்தை போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சியா நீ எதை சாப்பிடுவேன்னு.இப்ப பாரு அவன் என்னவோ ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுடான் நீ தான் அவஸ்தை படுற.அவன் பண்றதெல்லாம் வச்சி பார்த்தா அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான் போல பார்ப்போம்.ஆடவனின் மனநிலை அறிந்திடா பேதையிவள் அவனிடம் சிக்குண்ட காரணத்தால் அவனிடம் கோபமாக நடக்க முயற்சிக்கின்றாள்.
ReplyDeleteஇவளின் முயற்சி அவனிடம் செல்லுபடியாகுமா இல்லை பேதையிவள் அவனின் காதலை அறிந்தூ அவனுடன் இணைவாளா.அச்சோ பத்து கண்டிஷன் என்னம்மா சொல்ற பாயிண்ட் பாயிண்ட்டா செம்ம கேசி.👏🏻👌🏼👌🏼👌👌👏👍🏻👏👏👌🏼👌🏼👏🏻👏🏻👍🏻💜👍🏻💜👍🏻💜👏👌👌🏼👏👏🏻👏👏🏻👏👌🏼👌🏼👏👍🏻💜👍🏻💜👌👌💜💖👌🏼💜👌👌💜👌💖👌👌🏼💖
Tq darlu🧡
Deleteசூப்பர்
ReplyDeleteTq sis🧡
DeleteIvala enna panrathu dev romba kastam ❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
ReplyDeleteTq sis🧡
DeleteThanvinai thannnai sudum sutturuchu Sema Sema unakku ithu thevaiya
ReplyDeleteSuper ka...Sema sema..Sema
ReplyDeleteTq da🧡
DeleteInteresting pa.
ReplyDeleteTq sis🧡
DeleteSuper super
ReplyDeleteAiyooo semaya iruku ma siripa irunthuchu intha ud padikrapo waitng 4 nxt epi
ReplyDeleteSuper sis keep going
ReplyDeleteNaan than annaikke sonnene Kesii unaku vaaila dhan sani nu 🤣
ReplyDeleteSema 👌 don't 🤣🤣🤣🤣🤣🤣எப்பா நல்லா வாங்கினா பழி,எனக்கு ஒரு சந்தேகம் கேசி அவனை விரும்புகிறாலோ 🤣🤣🤣🤣😊😊👌👌👌👌👌 நிலா
ReplyDeleteSemma epi akka 😍😍😍😍
ReplyDeleteSuper 👌👏👍🤣
ReplyDeletekc eppovume nee vaikkira aappu unakke thirumbi varuthu ma
ReplyDeleteKonjam parthu nadanthukko ma
Superb
ReplyDeleteSuperb Vera level epavum Pola interesting than 😍
ReplyDeleteInteresting pa
ReplyDeleteIppadi yaaru Pali vanga matanga ma