14 நெருங்கினா(ள்)ல்?


அனைவருக்கும் மேரி கிறிஸ்மஸ்..  விழாவை சிறப்பிச்சிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. மன்னிச்சு டியரிஸ்🎄🎄🎄🎄🎄

வந்தியதேவன் தனது வேக நடையை குறைத்து மெது நடையாக நடந்து குண்டலகேசியின் அருகே வந்தான். அவன் வாங்கிக் கொடுத்திருந்த உடையை தான் அவள் அப்பொழுது அணிந்திருந்தாள். அணியக்கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால்  இந்த சாதாரண உடை பிரச்சனையால் வேறு ஏதாவது ஒரு எமகண்டம் வந்துவிட்டால் என்ன செய்வது. எதற்கு வம்பு என்று அவன் வாங்கி தந்த அரைகுறை உடையை அணிந்து கொண்டு அவன் எதிரே நின்றாள். வெட்கம் ஒரு புறம் பிடுங்கித் தின்ன அவனை பார்க்க தெம்பில்லாமல் திரும்பி நின்று கொண்டாள். அவளை மெல்ல நெருங்கிய வந்தியதேவன் மெல்லக் குனிந்து அவளின் காதருகே

" உனக்கு இதுல சம்பந்தமா"என்று வினவினான் அவனின் விரல் நுனி கூட அவன் மீது படவில்லை.அவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது அவன் எவ்வளவு பெரிய ரவுடி.. ஒருவேளை டானாக கூட இருக்கலாம்.இல்லையென்றால் மரண தண்டனை கிடைத்து சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முடியுமா. அப்படி ஒருவன் கற்புள்ளவனாக இருப்பானா?இந்நேரம் எத்தனை பேரை பெண்ணாண்டு இருப்பான்.. பல திரைப்படங்களில் தாதா என்றாலே இப்படித்தானே காட்டுகிறார்கள்.. அவளுக்கும் மனதில் அந்த எண்ணம் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவன் எதற்காக தன்னுடைய அனுமதி வேண்டி காத்திருக்கிறான்..

பொறுக்கமுடியாமல் அதனை அவனிடமே கேட்டு விட்டாள்"நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத..நீ தொட்ட மொத பொண்ணு யாரு?  அவ எப்படி நீ தொடும்போது ரியாக்ட் பண்ணா?"பயத்தில் அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.அவள் கேட்ட கேள்வி அபத்தமாக தோன்றினால் அதற்கு பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அவன் அனுபவத்தில் பார்த்த ஒன்றாயிற்றே.

வழக்கத்திற்கு மாறாக அவனோ தணிந்த குரலில் பதில் கூறினான்."இனிமே தான் அந்த பொண்ண நான் தொட போறேன்.அவ எப்படி ரியாக்ட் பண்றாருன்னு காலையில உன் கிட்ட சொல்றேன்.." தான் கற்புள்ளவன் என்று அவன் கூற அதிர்ச்சியில் திரும்பி நின்றால் குண்டலகேசி.  அவளின் நம்பாத பார்வையை கண்டவன்

"நான் என்னோட அம்மாவ பார்த்ததே இல்ல..  எனக்கும் சின்ன வயசுல அம்மா இருந்திருந்தா என் வாழ்க்கை இப்படியா இருந்துருக்கும் அப்படின்னு நெனச்சிருக்கேன்.ஆனா அது எல்லாமே உன்ன பாக்குற வரைக்கும் தான்.அதுக்கு அப்புறம் என் அம்மா செத்ததே நல்லது நினைச்சான். கேவலமான பொறப்புனு தான் என் பொறப்பு நினைச்சுட்டு இருந்தேன்.உன்ன ஜெயில்ல பார்த்தேன். இந்த மாதிரி என் வாழ்க்கை மாறாம இருந்திருந்தா உன்ன பார்த்திருப்பேனா.. சத்தியமா எனக்கு தெரியல. கெட்டதுலயும் ஒரு நல்லது.உன்ன பாத்தது..

இந்த கண்ண பாத்து என்னால பொய் சொல்ல முடியாது.இந்த கண்ண பாத்துக்கிட்டே சொல்றேன். நான் தொட போற மொத பொண்ணும் நீதான் கடைசி பொண்ணும் நீ தான்.உனக்கு ஓகேனா இது நடக்கும்.இல்லனா நான் வெயிட் பண்ணுவேன். என்ன ஏத்துக்குவியா"அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து இந்த வார்த்தைகளை கூறினான் வந்தியதேவன். அவனின் மூச்சுக் காற்றுக்கூட அவள் மீது படவில்லை. அந்தக் கண்களின் வீச்சு மட்டுமே அவள் உயிரை சென்று சல்லடை போட்டு சலித்து கொண்டிருந்தது. கைக்கொண்டு கட்டி அணைத்து இருந்தால் கூட அவள் இம்மாதிரி அவஸ்தையில் சிக்கிருக்க மாட்டாள். என்ன பார்வை இது உயிரை வேரோடு பிடுங்கி அவனை மயக்க உலகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தது.

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே

இதுவரை அவன் மீது இருந்த பய உணர்வு விலகி அவளுக்கே தெரியாத மோன நிலை அங்கே குடி கொண்டது. அவனைப் பார்த்து வெட்கம் கொண்டாள். அந்த வெட்கமே அவனுக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்ட வந்தியதேவன்  வினாடியில் அவளை நெருங்கி தன் நெஞ்சு கூட்டில் அடைத்து கொண்டான். கடவுள் மட்டும் உதிரமாக மாறும் சக்தியை அவனுக்கும் கொடுத்தால் அவளின் ரத்த ஓட்டத்திற்கு  சற்று நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு தேகம் முழுவதும் அவன் ஓடிக் கொண்டிருந்திருப்பான்.ஈருடலும் ஓருடலாக சங்கமித்தது அங்கே.முரடனாக பார்வைக்கு தெரிந்தவன் என்று தொடுகை பஞ்சை விட மென்மையாக இருந்தது.சில வேளைகளில் அவன் தொடுகிறானா என்று சந்தேகம் கொண்டாள் குண்டலகேசி.

ஆண்மையில் மென்மை சேர்த்து
ஆழிப்பேரலையை அவளுக்குள்
ஏற்படுத்தி
ஆகுதி பெருகிட
அவளின் பெண்மையை
உடைத்து செம்மையாக
தன் உயிர் அணுவை
அவளுக்குள் கலந்துவிட்டான்..

நடுநிசி நேரம்.ஏசி குளிர் அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது. தன்னுடைய வெற்று தோள்களை மறைக்க போர்வைக்குள் இன்னும் புதைந்து போனாள் குண்டலகேசி. நிலவின் ஒளி அறை ஜன்னலை தாண்டி உள்ளே படர்ந்தது. தன்னுடைய கன்னத்தில் உரசும் அவனின் மார்பு முடிகளின் இம்சையால் உறக்கம் கலைந்தாள் அவள்.ஆசையாக அவனை பார்த்துக் கொண்டிருந்தால் குண்டலகேசி.முன்பு நடந்த யாவும் அவளது இதயக்கூட்டில் பொக்கிஷமாக பதிந்து போனது.அவன் மீது அவளுக்கும் காதல் உள்ளது என்பதை அவன் தந்த உச்சி முத்தத்தில் கண்டு கொண்டாள்.

பிடிக்காத ஒருவரின் தொடுகை என்றால் அதனை அள்ளி எறிந்து விட்டு ஓடிவிட தான் மனம் அடித்துக் கொள்ளும்.ஆனால் இவனின் தொடுகையை அவள் ரசித்து கொண்டல்லவா இருந்தாள். இன்னும் இன்னும் வேண்டுமென்று அவளின் தேகம் ஏங்கியது என்னவோ உண்மைதான். வெட்கமும் காதலும் ஒரு சேர தன்னை முழுவதும் அவனிடம் தந்து விட்டாள்.  அவனின் முகத்தை இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. முத்தமிடும் போதெல்லாம் கண்களை இறுக்க மூடிக் கொள்வாளே.கரடுமுரடான முகம்.முகத்திலேயே முரட்டுக் களை தாண்டவமாடியது.இரும்பை ஒத்த தேகம்.மெல்ல அவனது இதயத்தைப் ஸ்பரிசத்தாள்.

விடாமல் செய்யும் உடற்பயிற்சியால் கடினமாக இருந்தது தவிர மென்மை சிறிதளவும் தென்படவில்லை. அடித்துப் போட்டதை போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வந்தியதேவன். அவன் முகத்தில் அப்படி ஒரு அமைதி. மூடி இருந்த ஜன்னலை தாண்டியும் உள்ளே வந்த நிலா வெளிச்சத்தில்  அவனது முகத்தை அரைகுறையாக கண்டாள். நெற்றியில் ஆரம்பித்த அவளின் கண்கள் மெல்ல அவனது கழுத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கே அந்த புலி நக சங்கிலி தலையணையில் உரசிக்கொண்டிருந்தது. உறவின் போது அது அவளை உரசி செல்ல கழட்டி வைக்க கூறினாள்.

இது எப்பொழுதும் தன்னுடனே இருக்கும். ஒரு போதும் இதை அவன் பிரிந்ததே இல்லை என்று கூறி தனது லீலையால் அவளை சினுங்க வைத்தான்.. அந்த சங்கிலியை மெல்ல கையில் எடுத்து பார்த்தாள். அப்படி என்ன அதிசயம் இதில் இருக்கிறது..  பிரியவே கூடாது அளவிற்கு இது என்ன அவ்வளவு பெரிய பொக்கிஷமா? அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தால் அந்த சங்கிலியை அவள் ஸ்பரிசிக்க விட்டிருக்க மாட்டான்.  விதி யாரை விட்டது?

அவள் அரைகுறை வெளிச்சத்தில் அந்த சங்கிலியை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாள். நகம் போல இரண்டு பக்கமும் கூறிய கற்களால் செய்யப்பட்டிருந்த பதக்கம் அவளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.  அதனைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது அவளின் விரலின் அழுத்தத்தினால் புலி நக பதக்கத்தில் அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்த குட்டி சாவி அவளின் கண்களுக்கு தென்பட்டது. என்ன இது சாவி மாதிரி இருக்கே..  என அவள் அதனை நன்றாக பார்த்து உருவ முற்படும் போது அவனிடம் அசைவு தெரிந்தது.

அவனின் நெஞ்சில் ஆழப் புதைந்து கொண்டாள் குண்டலகேசி.பயத்தில் நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொண்டது.ஆனால் அவனோ கண்விழித்து அவளைப் பார்த்து புன்னகையோடு அவளை இன்னும் கட்டித் தழுவிக்கொண்டு படுத்து விட்டான்.அவளுக்குதான் உறக்கம் வரவில்லை.ஒருவேளை அந்த குட்டி சாவி அன்று அவள் மர்ம அறையில் பார்த்த பூட்டின் சாவியாக இருக்குமோ? அதனை எப்படி அறிந்து கொள்வது.. இவ்வாறு யோசித்துக்கொண்டே உறங்கி போனாள் குண்டலகேசி.

மறுநாள் காலை விரிந்து அவனே அவளை எழுப்பும் வரை உறங்கி விட்டாள்.வேகமாக எழுந்து குளித்து தன் காலை கடன்களை முடித்து அவன் செய்ய சொன்ன சமையலை செய்து கொண்டிருந்தால் குண்டலகேசி.அவளுக்கு உதவி செய்ய கமலி வந்தாள்.  அவ்வளவு எளிதாக கமலியிடம் எந்த ஒரு விஷயத்தையும் வாங்கிவிட முடியாது. எனவே அவள் வாயைக் கிண்டி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள மூளையை கசக்கினாள் குண்டலகேசி.

"கமலி..ரொம்ப போர் அடிக்குது இங்க..  எப்படி தான் நீங்க எல்லாம் இங்க இருக்கீங்களோ.."

" எங்களுக்கு பழகிருச்சுக்கா.. உங்களுக்கு தான் அண்ணா நாய் குட்டி வாங்கி கொடுத்தாரே.. அது கூட விளையாடுங்க டைம் போயிரும்.. இல்லேன்னா தோட்டத்துல நடக்கலாம். அண்ணா பெர்மிஸ்ஸின் தந்தா பக்கத்துல இருக்குற காட்ல கூட நடக்கலாம். காட்டுக்கு நடுவுல ஒரு குளம் இருக்கு தெரியுமா.. செம்மையா இருக்கும்.. தேவ் அண்ணா கூட ஒரு தடவை சொன்னாரு.. அந்தக் குளத்துல குதிச்சா இந்தக் கோட்டைக்கு வர ரகசிய ரூம் இருக்குனு.. "

 தான் கேட்க வேண்டியது அவள் வாயாலேயே வெளியே வர ஆர்வத்தை அடக்கிக் கொண்ட குண்டலகேசி"இது பெரிய சந்திரமுகி அரண்மனை..இதுல ரகசிய ரூம் எல்லாம் இருக்கா..யாருகிட்ட விடுறிங்கானு ரீலு"

" ஐயோ சத்தியமா அக்கா.. இந்த கோட்டையில ரகசிய ரூம் இருக்கு. ஆனா எங்க இருக்குன்னு எனக்கும் தெரியாது. நான் அந்த குளத்துல குதிச்சு பார்க்கவானு அண்ணா கிட்ட கேட்டேன்.அவரு அப்படி செய்யக்கூடாதுனு சொல்லிவிட்டாரு.. "

"எனக்கு நம்பிக்கை இல்ல கமலி.. நீ சின்ன பொண்ணுன்னு உன்ன  ஏமாத்தி இருக்காரு.நான் கண்ணால பாக்குற வரைக்கும் ரகசிய ரூம் இருக்கின்றத நம்பவே மாட்டேன்.நான் உன் அண்ணன் கிட்ட பர்மிஷன் வாங்குறேன்.நாம ரெண்டு பேரும் அப்புறமா அந்த குளத்துக்கு போலாம்.அங்க போய் ஜாலியா விளையாடலாம்."கமலி சிறுமி என்பதால் குண்டலகேசி விரித்த வலையில் எளிதாக விழுந்துவிட்டாள்.

மதியம் அவன் சமைக்கப்பட்ட உணவு அனைத்தையும் சமைத்து முடித்து அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் குண்டலகேசி. உண்மையில் அவன் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தாலும் உணவை பரிமாறிக் கொண்டே இருந்தாள்."இது என்ன வயிறா இல்ல குப்ப தொட்டியா.."

"மாடு மாதிரி வளர்ந்திருக்க.இத்தனூண்டு தின்னா உனக்கு பத்துமா.நல்லா அள்ளிப்போட்டு சாப்பிடு. அப்போது தான் உடம்பு செம ஸ்ட்ரென்த்தா இருக்கும்.."சொல்லிக்கொண்டே அவள் மேலும் பரிமாற அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவன் அவள் பரிமாறிய உணவை அவளுக்கே ஊட்டி விட்டான்.

அவன் இப்படி செய்வான் என்று அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு யாரும் இம்மாதிரி ஊட்டி விட்டதும் கிடையாது. ஆவுடையப்பன் எழு பெண்களையும் தன்னை சுற்றி அமர்த்தி கொண்டு உருண்டை பிடித்து கையில் தான் கொடுப்பார். சிறுவயதில் தோழிகள் கூறும் போது அவளுக்கு ஏக்கமாக இருக்கும்.ஆனால் இல்லாத ஒன்று இருக்கு ஆசைப்பட்டு பயனில்லை என்பதை அறிவாளியான அவள் கண்டுகொண்டாள்.

அவளின் புதைந்து போன ஆசை இன்று எதிர்பாராதவிதமாக நிறைவேறியது. கண்களில் கண்ணீர் வடிவதை கண்டவன்"என்ன ரொம்ப காரமா இருக்கா.. நான் சாப்பிடருதுக்காக இவ்ளோ காரம் போடாத.உனக்கு எவ்ளோ போடணும்னு தோணுது அவ்ளோ போடு."அவளின் கண்ணீருக்கு காரணம் அவனுக்கும் புரிந்தே இருந்தது. அந்தக் கண்கள் சொன்ன சேதி அனாதையாக வளர்ந்து அவனுக்கு புரியாமல் போகுமா?

 ஒருவழியாக உணவு வேலை முடிந்து அவன் மடி கணினியோடு அமர அவன் முன்னே வந்து நின்றாள் குண்டலகேசி."தேவா.. "சடாரென்று நிமிர்ந்து பார்த்தான்.

" தேவா வீட்ல இருக்க ரொம்ப போர் அடிக்குது. கமலி சொன்னா. பக்கத்துல காட்ட சுத்தி பார்க்க ஜாலியா இருக்கும்னு.அப்படியே அங்க ஒரு குளம் இருக்கு. அதுல போய் விளையாண்ட சூப்பரா இருக்கும்னு...  நாங்க ரெண்டு பேரும் போய்ட்டு வரட்டா"முதல் தடவையாக அவள் வாயில் தனது பெயரை உச்சரிக்க கேட்டவன் அவள் கேட்டதை மறுக்க மனமில்லாமல் சென்றுவர உத்தரவு அளித்தான்.

 சந்தோசத்தில் குதித்து அவளாகவே  அவன் கன்னத்தில் முத்தமிட்டு கமலியோடு குளத்தை நோக்கி நடந்தாள் குண்டலகேசி.

தொடரும் 

Comments

  1. Semma super sis 😍😍😍

    ReplyDelete
  2. Super yana problem pana poralo athuku thandanai yapadi kuduka porano

    ReplyDelete
  3. Saantthama irukkara VD ah.. un aaraaichiyaala Saitthana maatthiradha Kesiiiiii 😪😪

    ReplyDelete
  4. Adhu ena eager namma kesi ku. Andha room ah pakka. Vandhiya devan ruthra thandavam aadama irundha saridhan

    ReplyDelete
  5. Semaaaaa semaaaaa super super 👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

    ReplyDelete
  6. Interesting ud sis nice kesi en ipdi deva ipdi ava kettadhum ok sollita enna panna kathirukalo kesi

    ReplyDelete
  7. Super verithanam 🔥🔥 very interesting 😍😍😍

    ReplyDelete
  8. Interesting epi akka...😍😍😍😍

    ReplyDelete
  9. Super arumai pochu payapulla wanted adivanga pokuthu

    ReplyDelete
  10. Akka ungaluku manasatchiye illa ippadi la kadha eluthi ennoda padippa kedukkurenga😠 enga nila akka story just 1 epi padikalam nu padippa Oram pottutu vantha ondra mani nerama padichitey irukka...... Ayyio😫 ippadi interesting ah kadhaiya kondu pona na exam ku padicha maari tha😫... I like your way of story writing akka...... 6 months ku romba miss panna pora unga story ah😭 bcoz of exam...... So entha story um pritilipi la delete pannidathenga..... . Meeri delete pannenga😠😠😠😠😠 address thedi vanthu muzhu kadhaiyum unga vayala solla vechu keppa ..... Mind it ekkovvv

    ReplyDelete
    Replies
    1. Awasome story akka ella story um different way la elutha ungalala mattum tha mudiyum..... Hats of akka

      Delete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்