34 நெருங்கினாள்(ல்)?
ஹாய் டியரிஸ்.. இனி என் youtube சேனல்ல அப்ப அப்போ vlog போட போறேன். நான் முன்னாடியே சொன்ன மாறி வெறும் கதை மட்டும் இல்லாம அதுல நிறைய விஷயம் இருக்கு. ப்ளஸ் சப்போர்ட் பண்ணுங்க.. சேனல்ல subscribe பண்ணுங்க..👇🏻👇🏻👇🏻👇🏻
அதே கண்கள்..
ஒயிலழகியின் வாழ்வைப் பாழாக்கிய கண்கள். ஜென்மங்கள் எத்தனை கடந்தாலும் அந்த கண்களை அவளால் மறக்க முடியுமா? எத்தனையோ கண்களை அவன் வாழ்நாளில் தாண்டி வந்துள்ளாள். ஏன் சிலர் நீல வர்ணத்தில் லென்ஸ் கூட அணிந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் வெகு சுலபமாக தாண்டி வந்திருந்தாள். இந்த நீல கண்கள் மட்டும் அப்படி என்ன ஒரு பயத்தை அவளுள் ஏற்படுத்துகிறது?
விஷயம் அந்த நீல கண்களில் இல்லை. நீல வர்ண கண்களில் தெரியும் வெறி. அதை எப்படி மறக்க முடியும். அன்று எப்படியோ தப்பித்து விட்டாள். இன்று என்ன ஆகப்போகுதோ தெரியவில்லை. வந்தியதேவன் அந்த நீல விழிக்காரனோடு கடுமையாக சண்டை செய்து கொண்டிருந்தான். அவர்களது அந்தரங்க அறைக்குள் வரும் அளவிற்கு இவனுக்கு எப்படி தைரியம் வந்தது?
குண்டலகேசி இதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். மின்சார இணைப்பு கொடுத்த வேலிகளைத் தாண்டி இவன் எப்படி உள்ளே வந்து இருப்பான்? அதையும் தாண்டி வந்திருந்தால் கூட சுற்றிக்கொண்டிருக்கும் பயங்கரமான வேட்டை நாய் கூட்டத்திடம் இருந்து இவனால் ஒரு அடிகூட எடுத்து வைத்திருக்க முடியாதே? அவளும் தானே இங்கே வந்த புதிதில் தப்பிக்க முயற்சி செய்தாள்.. முயற்சி முயற்சியாகவே போய்விட்டதே.
ஒவ்வொரு அடியும் இடியாக விழுந்து கொண்டிருந்தது இருவரும் மேலே. யார் இதில் மற்றொருவரை வீழ்த்துவார் என்று கணிப்பதற்கு ஒன்றுமில்லை. ஒரு கட்டத்தில் வந்தியத்தேவன் தலையில் சுவரில் மாட்டியிருந்த புகைப்பட சட்டத்தை கழட்டி ஒரே அடி. தலையிலிருந்து இரத்தம் கசிய அப்படியே தலையை பிடித்துக்கொண்டு கீழே முட்டி போட்டு அமர்ந்தான் வந்தியதேவன்.
"தேவா" என்று குண்டலகேசி கட்டிக் கொண்டு ஓட அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் அந்த நீல விழிக்காரன்.குண்டலகேசி அவனை தன் பலம் அனைத்தையும் சேர்த்து வைத்து தாக்கினாள். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இவ்வளவு நேரம் வெறியோடு வந்தியதேவனிடம் சண்டையிட்ட கண்கள் இப்பொழுது அவளை இருக்கமாக கண்டதும் கண்ணீரைக் கொட்டி கொண்டிருந்தது.
இவன் எதற்காக அழ வேண்டும்? பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு இருப்பது நியாயம். ஆனால் இந்த கண்ணீர்? ஒருவேளை போன ஜென்மத்தில் அவனை அற்பாயுசில் கொன்றதிற்காக அழுகிறானா? குண்டலகேசி எப்படியாவது அவனிடமிருந்து விடுபட்டு தன்னவனை அணைத்துக் கொள்ள துடிக்க அவனோ விட்டப்பாடில்லை.
இந்தப் பக்கம் வந்திய தேவன் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை. தன்னவள் கரத்தை அவன் பற்றிக் கொண்டு இருப்பதா தட்டுத்தடுமாறி எழுந்து வந்து குண்டலகேசியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். ஒரு கையை பிடித்து அவன் இழுக்க அவளது மறு கையை நீலவிழிக்காரன் பிடித்துக் கொண்டான். இருவருக்கும் நடுவே குண்டலகேசி சிக்கிக் கொண்டாள்.
"தேவா உனக்கு ஒன்னும் இல்லையே..இவன்.. இவன் அவன் தானே.. ஆனா எப்டி நம்ம வீட்டுக்குள்ள"
"எவனா இருந்தா என்ன.. அழாத பேபி.. இவன நான் சும்மா விட மாட்டேன்.. என்கிட்ட வா.அவன விட்டு தள்ளி வா"
"அறிவு கெட்ட முண்டம். நானாடா வர மாட்டேன்னு சொல்றேன். அவன் விட மாட்றான் என்னை.. எப்படியாச்சும் என்னை புடிச்சி இழு"..
வந்தியதேவன் கடுப்பாகி"டேய் ஒழுங்கு மரியாதையா என் பொண்டாட்டி மேல இருந்து கைய எடுடா நாயே"..
"உன் பொண்டாட்டியா"இப்பொழுது தான் நீல விழிக்காரன் வாய் திறந்தான்.அவன் கேட்ட கேள்வியில் குண்டலகேசி நடுங்கிக்கொண்டே அவனை பார்க்க
"அவன் என் பொண்டாட்டிடா.." என்றான் அசராமல். அதைக் கேட்டதும் குண்டலகேசிக்கு தலையே சுற்றிவிட்டது. போன ஜென்மத்தில் அவளை வேட்டை நாயாக சுற்றி வந்தவன் அவன். அவளை மானபங்கப்படுத்த அனைத்து விதத்திலும் முயற்சி செய்தான். ஆனாலும் அவனின் நிழல் அவள் மேல் படுவதற்குள் தான் அனைத்தும் முடிந்துவிட்டதே. இவன் என்ன உளறிக் கொண்டிருக்கிறான்.அவள் முழித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட நீல விழிக்காரன்
"என்ன குட்டி அப்டி பாக்குற.. என்ன தெரியலையா உனக்கு".. வார்த்தைகள் வேறு மாதிரி இருந்தாலும் இந்த குரல்.. குண்டலகேசிக்கு உலகமே சுற்றியது. திரும்பி வந்தியதேவனை பார்த்தாள்.."என்ன மதுரம் என்ன சந்தேகப்படுறியா"..
நீல விழிக்காரன்"குட்டி அவன நம்பாத.. நான் தான் நந்தன்.. உன்னோட நந்தன்.."
வந்தியதேவன்"டேய் உன்னால அனுபவிச்சது எல்லாம் போதும்.. மதுரம் அவன் சொல்றத கேக்காத. நான் தான் நந்தன். இந்த ஜென்மத்துல வந்தியதேவன்.."
நீல விழிக்காரன்"குட்டி.. என்னடி என் குரல் உனக்கு தெரியலையா.. காலங்கள் கடந்தாலும் என் காதல் உனக்கு புரியலையா.. நான் தான் டி உன் நந்தன்"
வந்தியதேவன்"பேபி அவன் நம்மள பிரிக்கப் பாக்குறான்.. ஏதேதோ சொல்லி உன் மனச கலைக்கிறான்.இவனால நாம பட்டது பத்தலயா.. என்ன நம்ப மாட்டியா.இவன் சொல்றதைக் கேட்டு என்ன சந்தேகமா பாக்குற.. உனக்கு தெரியலையா நான் யாருன்னு"
நீல விழிக்காரன்" குட்டி.. அவன் போலி..அவன் உண்மை இல்லை.. நான் தான் உண்மை.. "
"இல்ல பேபி நான் தான் உன் தேவா.. அவன் நம்மள பிரிக்க பாக்குறான்.."
"நான்தான்"
"நான்தான்"
"நான்தான்"
"நான்தான் உண்மை"
மாறி மாறி இருவரும் நான்தான் நான்தான் என்று அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஐயோ என்று கத்தியபடியே இருவரின் கையையும் உதறினாள் குண்டலகேசி. அவளுக்கு தலை சுற்றியது. அவள் கண்கள் அவளை ஏமாற்றுகிறதா? இந்த நீல விழி அந்த துரை உடையவை. ஆனால் அவன் எதற்காக இவளை குட்டி என்று அழைக்க வேண்டும்?
இவர்களைப் பழிவாங்க இப்படி ஒரு குறுக்கு வழியில் யோசிக்கிறானா?.. மண்டை வலித்து பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.அவள் தடுமாற அவளை தாங்கிப் பிடிக்க இருவருமே ஓடி வந்தனர். வந்தியதேவன் நீல விழிக்காரனை பிடித்து தள்ளி
" அவள தொட்ட சாவடிச்சுருவேன் உன்ன.. நீ யாருடா ஏன் பொண்டாட்டி மேல கை வைக்க"
"டேய் அவன் என் பொண்டாட்டிடா.." மீண்டும் உரிமைப்போராட்டம் நிகள இம்முறை குண்டலகேசி
"அய்யோ போதும் நிறுத்துங்க.. தேவா அவன் என்ன சொல்லிக்கிட்டு இருக்கான். போன ஜென்மத்திலயும் நீ சரி இந்த ஜென்மத்திலயும் சரி நீதானே எனக்கு புருஷன்.. அப்புறம் அவன் எப்படி என்ன அவன் பொண்டாட்டினு சொல்றான்..இங்கே என்ன நடக்குது.."
"நான் சொல்றேன்".. என்ற நீல விழிக்காரன் வந்தியதேவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு" உருவத்திலே வேணும்னா அவன் வந்தியதேவனா இருக்கலாம்.ஆனால் உண்மையான வந்தியதேவன் நான்தான்.என்னோட உடம்புல அவன் இருக்கான்.."
குண்டலகேசி ஒரு பைத்தியத்தை பார்ப்பது போல் அவனை பார்த்தாள். யாரிடம் போய் சொன்னாலும் இதை நம்புவார்களா. இதை நம்ப அவள் என்ன சிறு குழந்தையா? அவனை எகத்தாளமாக பார்த்துக் கொண்டிருந்தவளிடம்
"தோ பாரு குட்டி.. கூடு விட்டு கூடு பாயுற வித்த மூலமா அவன் என் உடம்புக்குள்ள வந்துட்டான்.. உண்மையாவே உன்ன ஜெயில்ல வெச்சு பாத்தது நான்.. அப்பவே எனக்கு எல்லாமே நெனப்புக்கு வந்துருச்சு.. ஆனா சொல்ல முடியல.. என் டான் என்ன பிளான் பண்ணி காப்பாத்திட்டாரு.
உன்ன பாக்க ஆசை ஆசையா வந்தேன். அப்ப இவன் என்ன கடத்திட்டான்.. கூடு விட்டு கூடு பாயுற வித்த மூலமா என் உடம்புக்குள்ள வந்துட்டான்.என்ன பிளாக் மெஜிக் மூலம் வசியப்படுத்தி ஒரு ரேப்பிஸ்டா ஆக்கிட்டான். எப்படி வசியம் தெளிஞ்சதுனு பாக்கறியா.. எந்த வசியத்துக்கும் ஒரு எதிர்ப்பு சக்தி இருக்கும். இவன் எனக்கு போட்ட வசியத்தோட மீட்பு வழி ஒரு கன்னி பொண்ணு கூட நான் உடலுறவு வெச்சிக்கிட்டா வசியம் வெட்டுப் பட்ரும்.
இவன் எனக்கு போட்ட கட்ட அவனோட தம்பி அமர் விடுவெச்சிட்டான்.ஒரு நாள் ஒரு கன்னி பொண்ணு லவ்ன்ற பேருல கரெக்ட் பண்ணி கூட்டியாந்தான். அந்த பொண்ணப் பாத்ததும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அவன அடிச்சு போட்டுட்டு அந்த பொண்ணு கூட.....அவளுக்குள்ள என் ஸ்பெர்ம் செலுத்துன அப்றம் தான் தெரிஞ்சது நான் யாருனு..அதுக்கு அப்றம் இவன தேடி அலைஞ்சேன்.கடைசியா கண்டுபுடிச்சேன்.இந்த இடத்துக்கு என்னால வர முடியல. அவ்ளோ டைட் செக்யூரிட்டி.இன்னைக்கு இவன பொல்லொவ் பண்ணி போனேன். இவன் ஹாஸ்பிடல் போயிருந்தான்.கார் பக்கம் போனா கூட அலாரம் அடிச்சது..
என்ன செய்றதுனு யோசிச்சேன். அப்ப தான் இவன் ஹாஸ்பிடல்ல இருந்து வெளிய வந்து கார எடுத்தான். அதுக்குள்ள ஆட்டோ ஒன்னு பேலன்ஸ் இல்லாம வேகமா வந்து இன்னோரு வண்டி மேல மொத உள்ள இருந்த மாசமா இருந்த பொண்ணு கீழ விழ இவன் அத பாத்துட்டு வண்டிய அப்டியே விட்டு ஓடி போயி தூக்குனான். நான் அந்த சந்தர்ப்பத்த பயன் படுத்திக்கிட்டேன். கார் டிக்கில மறஞ்சிருந்தேன்.அப்றம் இங்க வந்ததும் கார்டன்ல மறஞ்சிருந்தேன்.
குட்டி.. நான் தான் டா நந்தன்.. இந்த ஜென்மத்துல உன் வந்தியதேவன்." அவன் இதைச் சொல்லி முடித்ததும் கடகடவென்று சிரித்தாள் குண்டலகேசி.
" தேவா பாரேன்.. இவன் சொன்ன கதையை படமா எடுத்தா செம ஓட்டம் ஓடும்.. போன ஜென்மத்துல வெந்தது வேகாததுமா தின்ன உனக்கே இவ்ளோ மூளை இருந்தா.. போன ஜென்மத்திலயும் இந்த ஜென்மத்திலயும் காரசாரமா வந்தக்குழம்பு கருவாட்டு குழம்பு ரசம் மோர் தயிர் இப்படி சாப்பிட்ட எங்களுக்கு எவ்ளோ மூள இருக்கும் ..நீ என்ன சொன்னாலும் சரி..உன் கதை எல்லாம் வேற எங்கியாச்சும் போய் சொல்லு.எங்கள விட்ரு.. நீ வெள்ளைக்காரனா இருந்த போன ஜென்மத்துல. எங்க கஷ்டம் புரியலன்னு சொல்லலாம். இப்ப நீயும் எங்கள மாதிரி தானே.
தயவுசெய்து புரிஞ்சுக்கோ.. உன் கால்ல கூட விழுறேன்.. எங்கள விட்ரு.. நான் என் தேவா கூட நிம்மதியா வாழணும்.ரெண்டு ஜென்மம் வாழ்க்கைய இந்த ஜென்மத்தில வாழ்ந்து முடிக்கணும்.. ப்ளீஸ்"
நீல விழிக்காரன் தேவாவை பார்த்து"இப்ப கூட நீ உண்மையை சொல்ல மாட்ட தான.. சொல்ல வைக்கிறேன்.. " என்றவன் தனது கைப்பேசியை எடுத்து அதில் ஒரு காணொளியை ஓடவிட்டான். அந்தக் காணொளியில் அமர் வவ்வால் போல சங்கிலியால் கை கால்கள் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தான். தரையில் அவனுக்கு நேராக கூரான முன் கம்பிகள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
"அந்தக் கம்பியோட கன்ட்ரோல் சிஸ்டத்துல கனெக்ட் பண்ணி இருக்கேன். என் போன்ல இருந்து அதை ஆபரேட் பண்ணலாம்.. இப்ப மட்டும் நீ உண்மைய சொல்லல. உன் தம்பி உன் கண்ணு முன்னாடியே கொடூரமா செத்துப் போய்டுவான்." வந்தியதேவன் அவனை அசராமல் பார்த்துக் கொண்டிருக்க நீல விழிக்காரன்
தனது கைப்பேசி வழி அந்த சங்கிலிகளை ஆப்பரேட் செய்ய அது மெல்ல கீழ் நோக்கி நகர்ந்தது.
தலை தொங்கி போன அமர் முன் மண்டை கூறாக இருந்த கம்பியை தொட்ட வினாடி வந்தியதேவன் கத்தினான்"நோ.. வேணா.. என் தம்பிய ஒன்னும் பண்ணாத.. விட்ரு.."..
குண்டலகேசி அவனை அதிர்ந்து பார்த்தாள். புலி வருது புலி வருது என்று பயந்து கொண்டு இருந்தது போல எங்கே வெள்ளைக்காரன் வந்து விடுவானோ மறுபிறவி எடுத்து என்று அவள் பயந்து போனது எல்லாம் வீண் கதை. அந்த வெள்ளைக்காரன் கூடவே தான் அவள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள். அளவுக்கு மீறிய அதிர்ச்சியினால் அவளுக்கு அழுகை கூட வர மறுத்தது.. ஒருவன் ஜென்மங்கள் தாண்டியும் இம்மாதிரி பழி வாங்க முடியுமா?
வாங்கி விட்டானே?அவனது குரல் கேட்டதும் நீல விழிக்காரன் ஆப்ரேட் செய்வதை நிறுத்தி விட்டான்.
"சொல்லு உன் வாயாலேயே சொல்லு.. நீ யாருன்னு.. நீ வந்தியதேவனா.."
"இல்ல நான் ஹேரி. தருண் ஹெரி..அவன் சொன்னது எல்லாமே உண்மை தான். ஆனா நான் உன்ன பழிவாங்க இப்படி பண்ணல.." குண்டலகேசி ஆடாமல் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க
"நான் உன்ன லவ் பண்றேன் பேபி.. இப்போனு இல்ல.. போன ஜென்மத்துல இருந்து.. உன்னப் பார்த்த அந்த செகண்ட்ல இருந்து.."
அவன் சொல்லியதைக் கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்தாள் குண்டலகேசி.
What a twist????.. super sis
ReplyDeleteSuper yanama epadi twist vajudenga pavam kundu ena saiya pora
ReplyDeleteIthu ena puthu twistuuuuu... Yarda deva olunga solunga da
ReplyDelete😲😲😲😲indha twistah nan expect pannala
ReplyDelete😲😲😲😲😲😲😲😲, indha twistah nan expect pannala
ReplyDeleteYen ma unaku manasatchiye illaiya? Ippadi pandriye ma.... Seekiram adutha epi ya release pannidunga illana................ Vara sedharathuku na porupillaingoo🤷🤷🤷
ReplyDeletePavam kesi 🥺🥺🥺
ReplyDeleteAyyo sis enna ippadi oru twist vechitinga irunthalum super.
ReplyDeleteSeekiram next ud podunga.
Ayyo 😵😵😵😵🤯🤯kesi 😩😩😩 ipadi oru twist ta 😥😥
ReplyDeleteAchooo pavamsis kundalakesi aiyooo Ava evalofeel panirupa achooo ini Ena AAA pogutho😤😖😖😭😭😭😭😭😭
ReplyDelete😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲 Ungala mathiri twist vaika yaralaiyum mudiyathu ponga
ReplyDeleteEagerly waiting for next episode... Interesting
ReplyDeleteEnna sis ,,, story yeh apadiya change panni kondhuporinga,,,super
ReplyDeleteYemma thenumma ennama ipdi oru twist supero supernga
ReplyDeleteEdheyyyyyy.. Love panniya!? 🙄 Sari nee solrathu unmaine vechukalam bt athukaga nee pannathu sarinu aagiduma.. ippovum avala cheat panra thane 😤😤 pavam Kesi nd VD 😓
ReplyDeleteTwist vakkiradhula ungala adichika aale ila eppppa ennna twist idha edhir pakkave illa ipa kesi yaru kuda dha vazhuva pavam ava cha andha nollakanna ennama plan panni ipdi oru vishayam panni irukan cha
ReplyDeleteSuper arumai ennama ippadi oru twist yosikkave illa
ReplyDeleteஎன்னாது துரை அழகியே லவ் பண்ணான 😳😳😳😳😱😱😱😱😱😱😱😱😱👌👌👌👌👌👌👌நிலா செம்ம டுவிஸ்ட்
ReplyDelete