32 நெருங்கினாள்(ல்)?
ஹேய் ஹாய் டியரிஸ்❤️அப்டியே போறப் போக்குல நம்ம செனல்ல subscribe பண்ண மறந்துடாதீங்க.. உங்க ஆதரவுக்கு அட்வான்ஸ் நன்றிகள்💛
ஆவுடையப்பன் உயர்ரக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய பெண்கள் யாவரையும் அந்த முகமூடிகள் ஆவுடையப்பனோடு வர அனுமதிக்கவில்லை.சகோதரிகள் அனைவரும் தங்கள் தகப்பனின் நிலை என்னவாக இருக்கும் என்று வீட்டில் அழுது கொண்டிருந்தார்கள். தங்களுடைய கணவன்மார்களை வாய்க்கு வந்தபடி திட்டிப் பேசி சண்டைக்கு சென்றார்கள்.
ஓசியில் கிடைத்த உணவை உண்டு கொண்டிருக்கும் அந்த கணவன்மார்களும் தங்களுடைய வீரத்தை காட்ட வாய்ப்பு கிடைத்தது என நினைத்து மனைவிகளை போட்டு நையப் புடைத்தனர். பெண்களும் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்பது போல கையில் கிடைத்த ஆயுதங்களை அனைத்தையும் விட்டு அடித்து கணவன்மார்களை ரத்தம் பார்க்க செய்தனர்.
இப்படியே இரு தரப்பினரும் அடித்துக் கொண்டிருக்க திடீரென்று வீட்டிற்குள் மூன்று முக மூடிகள் வந்தார்கள். வந்தவர்கள் கைத்துப்பாக்கியை காட்ட வழக்கம் போல அதனை மிரட்டலாக எடுத்துக் கொண்டவர்கள் தங்களது அடிப் புடி சண்டையை ஆரம்பித்தார்கள்.. அடுத்த வினாடி டுமீல் ஒரு சத்தம்.
அங்கிருந்த முகமூடிகளை தவிர மற்ற அனைவருக்கும் இருதயமே வெளியே வந்து விழுந்த உணர்வு.உண்மையாகவே சுட்டு விட்டார்களா? யார் மீது சூடுப் பட்டது? ஒருவரின் பார்வை இன்னொருவரை தழுவிச் சென்றது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுவரில் மாட்டியிருந்த பூ ஜாடி தான் சிதறி போய் இருந்தது.
"பொம்பளைங்க எல்லோரும் இங்கயே இருங்க.. யோவ் நீங்க அத்தன பேரும் வந்து வண்டில ஏறுங்கய்யா"
"ஏன்.. எங்க பொண்டாட்டிங்கள விட்டு நாங்க வர முடியாது.. அவங்களுக்கு ஒரு பாதுக்காப்பு வேணாமா.. இங்கேருந்து வெளிய போகணும்னா எல்லோருமே போலாம்.. இல்லனா வேணா"வாசு பதறத்தில் கூறினான்.
" நீயா இங்க வந்தியா.. இல்ல தானே நாங்க தானே கூட்டிட்டு வந்தோம்.. " ஒரு முகமூடி கேட்டான்.
" கூட்டிட்டு வரல தூக்கிட்டு வந்தீங்க"வைரமுத்து கடுப்பாக கூறினான்..
" சரி தூக்கிட்டு வந்தோம்.. இப்ப உங்களுக்கு தூக்கிட்டு போயி வண்டியில ஏத்தனுமா இல்ல நீங்களே நடந்து வரிங்களா?" அந்த முகமூடி பேசுவதை பார்த்தால் அடுத்த நிமிடம் தன்னை குண்டுக் கட்டாக தூக்கி விடுவான் என்பது வைரமுத்துவிற்கு புரிந்து போனது. எனவே அவன் ஆண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பெண்களிடம் பத்திரமாக இருக்க கூறி விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.
கண்ணகி பயந்து போய் ஒரு முகமூடியிடம்"அண்ணே எதுக்குண்ணே எங்க வீட்டுக்காரங்கள அள்ளிக்கிட்டு போறீங்க.. திரும்ப வந்து விடுவிங்களா.. இல்ல அப்டியே பேக் அப் ஆ"
"இல்லக்கா உன் புருஷன திரும்பவும் கொண்டு வந்து விட்ருவோம். அவனுங்க என்ன நட்சத்திர ஆமையா..இல்ல அதிர்ஷ்டம் கொடுக்குற மந்திர பொட்டியா? நாங்களே வெசிக்க.. அவனுங்களுக்கு குளிர் விட்டு போச்சு.. கொஞ்சம் குளிர வெச்சு கூட்டிட்டு வரோம்"
"எண்ணே மிதிக்க போறிங்களா.. பாத்து சூதானமா செய்யுண்ணே. படாத இடத்துல பட்டு செடி பட்டு போனாலும் பரவாயில்ல.. உசுரு போயிரு போது".. வளையாபதி சொல்லியதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது..
"அண்ணே எங்க அப்பாவுக்கு ஒன்னும் இல்லயே"மாதவி
"இல்லம்மா பயப்படாதீங்க.."அப்பொழுது தான் எல்லோருக்கும் மனது நிம்மதியில் நிறைந்தது.
"பாய்ண்ணே பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க.. ஒன்னும் அவசரம் இல்ல.. நிறுத்தி நிதானமா ஒரு வாரம் எடுத்து குளிர வெச்சு கூட்டியாங்க.. எங்க அந்த மனுஷன்.. ஆங் அண்ணே சமையலு என்னண்ணே நீயு அவங்க வாய பாத்துட்டு நிக்குற..டீவில அருந்ததீ போட போறாண்ணே. போயி பாப்கார்ன் ரெடி பண்ணு" சிந்தாமணி தன் பங்கிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
அந்த முகமூடிகள் மூவரும் அங்கிருந்து நகர அக்கா தங்கைகள் அனைவரும் தொலைக்காட்சி முன்பு ஆஜராகினர்.. ஆண்கள் அனைவரையும் மூன்று முகமூடிகள் எங்கயோ அழைத்துச் சென்றனர்.ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தி அவர்களை இறங்கச் சொல்ல
"ஏன் சகல.. என்ன ஒதுக்குப் புறமா நம்மள கூட்டிட்டு வந்துருக்கானுங்க.. போட்டு தள்ளிட்டு கிட்னிய லாவிட்டு அப்டியே குழிய வெட்டி பொதச்சிருவாங்களோ"நடுங்கினான் பாபு..
"யோவ் சகல..பல்லு விளக்குனியா நீயு.. உன் நார வாய வெச்சிட்டு சும்மா இருய்யா.. மனுஷனே கொல நடுங்கி போயி நிக்குறேன்.. வந்துட்ட பெருசா அளக்க"சைத்தன்யா பொங்கி விட்டான்..
"ஹேய் என்ன அங்க ஒரே சத்தம்.."
"இல்லண்ணே ஒரே கருவேலம் மரமா இருக்கே.. இங்க நமக்கென்ன ஜோலி.. அவசரத்துக்கு ஒதுங்குனிங்களோ.. எங்களுக்கு வரலண்ணே.. நீங்க மூனு பேரு காத்தாட போய்ட்டு வாங்க..அண்ணே தண்ணி பாட்டில்ல இருக்கா.. இல்ல ஏன் கேக்குறேனா திடிர்னு ரெண்டுக்கு வந்தா எதுல கழுவுவிங்க..இலய பிச்சு தொடச்சு அலற்சி ஆச்சுன்னா ரொம்ப வேதனை பாருங்க.."கோவலன் கூறியதைக் கேட்டு கடுப்பாகி
"டேய் வாய மூடுங்கடா.. இங்க எதுக்கு வந்துருக்கீங்க தெரியுமா"
"நாங்க வரலண்ணே.. நீங்க தான் துப்பாக்கிய காட்டி இழுத்துட்டு வந்திங்க"வாசு இப்படி திருத்திக் கொண்டிருக்கும் போதே செம்மண்ணை சிராய்த்துக் கொண்டு வந்து நின்று ஒரு ஸ்போர்ட் கார். கருவேலம் காட்டுக்குள் காருக்கு என்ன வேலையென பார்த்துக் கொண்டிருக்க கதவை திறந்து இறங்கினான் வந்தியதேவன்.
அவனின் ஆஜான பாகு உடலை பார்த்து மலைத்து போனவர்கள் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க வந்தியதேவன் ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேகமாக வந்து கோவலனை பொளக்க ஆரம்பித்தான். என்ன ஏதேன்றே புரியாமல் கோவலன் அடி வாங்குவதை கண்டவர்களுக்கு புரிந்து விட்டது. வந்திருப்பவன் குண்டலகேசியின் கணவன் என்று.
அவன் கோவலனை நய்யப்புடைக்கட்டும்.அதற்குள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள ஆளுக்கொரு திசையாக ஓட பார்த்தவர்களை கைத் துப்பாக்கியைக் காட்டி சிலையாக நிற்க வைத்தார்கள் முகமூடிகள். தப்பித்து ஓட கூட வக்கில்லாத நிலையில் கோவலனை உரித்த கோழி மாதிரி கருவேலம் மரக் கிளையில் தொங்க விட்டு அடுத்து வைரமுத்துவிடம் ஆரம்பித்தவன் வாசுவிடம் முடித்தான். ஆறு மருமகன்களும் ஆறு ஆயுள் எடுத்தாலும் இந்த அடியை மறக்க மாட்டார்கள்.
அந்த அளவிற்கு அவர்களை நையப் புடைத்து விட்டான் வந்தியதேவன்.அவனது அடியாள் ஆவுடையப்பன் இந்நிலையை தொலைபேசி மூலம் அழைத்து சொன்ன மறுகணமே ரத்தம் கொதித்து விட்டது. தன் தகப்பனின் நிலையாறியாத குண்டலகேசி வேறு அவனுக்காக வேலைகளை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள். போன ஜென்மத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டவள் ஒட்டு மொத்த காதலையும் சேர்த்து இந்த ஜென்மத்தில் அவன் மேல் காட்டி விடும் நோக்கத்தில் இருந்தாள்.
இருந்தாலும் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது. இவர்கள் இருவரும் மறுப் பிறவி எடுக்க நூறில் ஒரு வாய்ப்பாக அந்தத் துரையும் மறுப் பிறவி எடுத்து இருப்பானா? அந்த பயம் அவர்கள் ஆக்கிரமிக்க அதை வந்தியதேவனிடம் பகிர்ந்தாள்..
"ஆமா இது தமிழ் படம் பாரு.. போன ஜென்மத்துல செத்த ஈ கூட மறுபிறவி எடுக்க.. ஓவரா படத்தப் பார்த்து கெட்டு போயிருக்க.."
"யோவ்.. உங்கொப்பன் மவனே.. புருஷனு பாக்குறேன்.. இல்லனா நல்லா கேட்டுற போறேன்.. அப்டி தானயா பரம்பரை பரம்பரையா நடந்துட்டு இருக்கு.. நீயும் நானும் பொறந்தோம். இத வெளிய சொல்லிப் பாரு.. காக்கா கூட வாய் இருந்தா சிரிக்கும்.. ஆனா இது உண்ம தானே.. அப்டி தானே அவனும் காண்டோட செத்துப் போனான். இல்ல நீ போட்டுத் தள்ளிட்ட.எத்தன கதையில படிச்சிருப்பேன். உனக்கு பயமாவே இல்லயா" இதைக் கேட்கும்போது உண்மையில் அவளது உடல் நடுங்கியது.
"ஹேய் சும்மா ஏதாச்சும் சொல்லிட்டு... ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்.. உண்மையாவே அவன் பொறந்துருந்தா என்ன பண்ணிருப்ப"..அவள் உடல் இன்னும் தூக்கிப் போட்டது.
"உன் வாயில நல்லதே வராதா? அவன் பொறக்கவே கூடாது. அப்டியே பொறந்தாலும் பிரேசில்ல பொறந்து அமேசான் காட்ல வாழ்ந்துட்டு போட்டும்.. இந்த பக்கம் எக்காரணம் கொண்டும் காலடுத்து வைக்கவே கூடாது சாமி.. அப்டின்னா என் புருஷனுக்கு மொட்டப் போட்டு அழகு குத்துறேன்"
"நான் உன்ன குத்துவேன்.. ஏன்டி போண்டா நீ அடிச்சிக்க வேண்டியது தானே மொட்ட.. எதுக்குடி என்ன கோர்த்து விடுற"செம கடுப்பாய் கேட்டான்.
"அமேசான் காடுகளில் விளைந்த அறிய வகை மூலிகைத் தைலத்தைக் கொண்டு வளத்த என் கருங்கூந்தல் என்ன ஆவுறது.. உனக்கு என்ன முட்டி வரைக்குமா முடி தொங்குது.."அவளை அடிக்கத் துரத்தி ஓடும் போது தான் அவனின் ஆட்கள் அழைத்து விஷயத்தைக் கூறியது.
ஆவுடையப்பனுக்கு உடனடி சிகிச்சை செய்ய எப்படியோ மனிதர் பிழைத்து விட்டார். ஆனால் இனி ஒரு அட்டாக் வந்தால் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக கூறிவிட்டனர். அடுத்த பாதிப்பு வருவதற்குள் குண்டலகேசியை அவர் கண்முன் நிறுத்தி விடவேண்டும் என நினைத்தான் வந்தியதேவன்.நல்லா இருந்த மனிதனுக்கு என்ன ஆனது என்று அவன் தெள்ளத்தெளிவாக அவனது ஆட்களிடம் கேட்கும்போது அனைத்தும் புரிந்தது.
அந்த ஆறு சோம்பேறிகள் மீது கொலை வெறியே வந்தது. இனியும் அவர்களைவிட்டு வைத்து சோறு போட்டுக் கொண்டிருந்தால் இன்னும் வாய் துடுக்கு மிகுந்து ஏதாவது கூறி விடக்கூடும் என்று அவன் உணர்ந்தான்.. உடல் நோகாமல் ஓசி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே இந்தப் பேச்சு பேசுபவர்கள் சொந்த காசில் பகட்டாக வாழ்ந்தால் மாமனாரையும் கட்டிய மனைவியையும் என்ன பாடுபடுவார்கள்? அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்த பின் இறுதியாக அவர்களை தனி இடத்திற்கு வரவழைத்து பிரித்து எடுத்து விட்டான்.
அதோடு இல்லாமல் அவனுக்கு சொந்தமான ஒரு இடத்தில் அவர்கள் ஆறு பேரையும் அடைத்து வைத்து சோறு இல்லாமல் தினம் மூன்று வேளையும் வரட்டு ரொட்டியும் அரை கிளாஸ் தண்ணீரும் மட்டுமே கொடுக்கச் சொன்னான். அதைத் தவிர அடுத்த ஆறு பேரையும் அவர்களை ஓய்வில்லாமல் அடிப்பதற்காகவே ஐந்து பேரை அங்கே நியமித்தான்.
தொடரும்.
Sema adi pola ellarukum venum inum nalla adi deva
ReplyDeleteTq sis❤️
DeleteSuper
ReplyDeleteTq sis❤️
DeleteSema arumai sariyana theerppu enna pesu
ReplyDeleteTq sis❤️
DeleteAdi kammiya iruke.... innum konjam balama kudunga akka
ReplyDeleteTho poiden da
DeleteEdha edha edha taaa naa edhirpattan
ReplyDeleteTq sis❤️
DeleteSuperb very interesting
ReplyDeleteWaiting for next ud
Tq sis❤️
DeleteSuperb vanthiyadevan👌👌kesi u r rite andha thuraiyum irrukkan enna nadaka pogutho 😳😳
ReplyDeleteSemmaa semmaaaa... Iyooo villain vera poranthutaneyyy
ReplyDeleteTq sis❤️
DeleteSuper ud sis semmmma apdi dha punish pannanum nalla vangunga da enna pechu pesuninga ipa pesungalen pakkalam kesi oda bayam unmai aguma deva avala save pannuvana
ReplyDeleteTq sis❤️
DeleteNalla adi pinni eduthachi pola 🤣🤣🤣 evolo santhosama iruku 👌👌👌👌👌👌👌👌👌👌
ReplyDeleteTq sis❤️
DeleteVerithanam 🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌
ReplyDeleteTq sis❤️
DeleteWow சரியான தண்டனை வந்தியதேவா super 👌👌👌 nila,
ReplyDeleteSuper
ReplyDeleteSuper Punishment..
ReplyDelete👍
Tq sis❤️
Delete6 pera adikka 5 peraa?
ReplyDeleteIlle sis.. Vanthiyadevan than ellorayum adipan
DeleteYou're great VD.. thevai dhan indha veena ponavanungalukku..😂 Emma Kesi nee oru theerkatharisi than po.. andha naaiyum iruku indha jenmatthula.. enna nadakka pogutho... 😶😶
ReplyDelete