35 நெருங்கினாள்(ல்)?
குண்டலகேசி மெல்ல கண் திறக்கும் போது அவள் முன்பு நின்று அவளை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இரு ஆடவர்களும் பலத்த காயமடைந்து இருந்தனர். வந்தியதேவன் உடலில் இருந்த ஹேரிக்கு மூக்கு உடைந்து உதிரம் அவனது ஆடையற்ற மேனியை நனைத்துக் கொண்டிருந்தது.
ஹேரி உடலில் இருந்த வந்தியதேவனுக்கு கன்னம் கிழிந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக ஊற்றிக் கொண்டிருந்தது. அவள் மயங்கின அடுத்த நிமிடமே இருவரும் விழுந்தடித்துக் கொண்டு அவளை நெருங்கினார்கள் தூக்குவதற்கு.
ஹேரி என்று நான் குறிப்பிட்டால் இப்பொழுது வந்தியதேவன் உடலில் இருப்பவன்..
வந்தியதேவன் என்று குறிப்பிட்டால் ஹேரி உடலில் இருப்பவன்.. குழம்பி விடாதீர்கள்.
ஹேரி பதறிக் கொண்டு அவளைத் தூக்க"டேய் ஒழுங்கா தள்ளிப் போடா.. உன்னால தான்டா இவளுக்கு இந்த நெலம"என்று கத்தினான் வந்தியதேவன்.
"இத்தனை நாள் அவ சந்தோஷமா தான் இருந்தா.. உன்ன யாரு இங்க வர சொன்னது. உன்னால தான்டா அவளுக்கு இந்த நிலைமை.. அவளுக்கு மட்டும் ஏதாச்சு ஆகட்டும் உன்ன கொலையே பண்ணிடுவேன்"ஹேரி அவனுக்கு மேல் கத்தினான்.
இருவருக்குள்ளும் யார் அவளை தூக்குவது என்று சண்டை ஆரம்பித்து அது இரத்தக் களரியில் முடிந்தது. இறுதியில் யாருடைய உதவியும் இல்லாமல் குண்டலகேசி அவளாகவே கண் திறந்தாள்.அரவம் கேட்டு இருவரும் சண்டையை நிறுத்தி அவளை வந்து பார்த்தனர்.கண்களை சுருக்கி சுருக்கி விழித்தவள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். சற்று முன்பு வந்தியதேவன் என்று அவள் நம்பியிருந்தவன் உடலலவால் நான் வந்தியதேவன்.
ஆனால் உள்ளே இருக்கும் உயிர் ஹேரியுடையது இப்படியாக கூற அந்த அதிர்ச்சியில் தான் மயங்கி விழுந்ததை நினைவு கூர்ந்தாள். காலை நீட்டி போட்டு அமர்ந்தவள் இரு கரங்களையும் தலைக்கு முட்டுக் கொடுத்து குனிந்து அமர்ந்தாள். அவளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உண்மையா பொய்யா இப்படி நடக்க சாத்தியம் உள்ளதா?
அவள் படித்த மாயாஜால கதைகளில் மட்டுமே இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது.அதை மீறி நிஜ வாழ்க்கையில் நடக்குமா? இல்லை இவர்கள் இருவரும் பொய் சொல்கிறார்கள். இத்தனை நாள் தான் யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அவன் தான் உண்மையான வந்தியதேவன். அவன் தான் போன ஜென்மத்தில் நந்தன்.
உடலை இழந்து விட்டதாக புகார் வாசிக்கும் இவன் கண்டிப்பாக அந்த வெள்ளைக்காரன் தான்.. ஆனால் எதற்காக வந்தியதேவன் அவன் கூறியதற்கு பின் பாட்டு பாட வேண்டும். வவ்வால் போல தொங்கிக்கொண்டிருந்த ஒருத்தனை காணொளி மூலம் காட்டினானே அதை பார்த்து ஏன் வந்தியதேவன் துடிக்க வேண்டும்? தான் யாருமற்ற அனாதை அல்லவா கூறினான்? பின்பு ஏன்?
குண்டலகேசி பரிதாபமாக நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள். மூக்கு நுனி சிவந்து, கண்கள் அதன் பாட்டில் கண்ணீரை சுரந்து, உதடு அவள் கட்டுப்பாடில்லாமல் குளிரில் நடுங்குவது போல நடுங்கி கொண்டிருக்க ஆதரவற்ற குழந்தை போலவே அவள் காட்சி அளித்தாள். அந்த நிலையில் அவளைப் பார்த்த இரு ஆடவர்வர்களுக்கும் மனம் பொறுக்கவில்லை. வந்தியதேவன் அவளை தூக்க போக அவன் கையை தட்டி விட்டாள். அவளை அடிபட்ட பார்வை பார்த்து நிமிர்ந்தான் அவன்.
ஹேரி அவளை தூக்க போக அவனைப் பார்த்து அச்சத்தில் பின்னடைந்தாள்.அவனது இதயமே நொறுங்கி விட்டது.
"ப்ளீஸ் தயவுசெஞ்சு யாரும் என்ன தொடாதீங்க..எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல..நீங்க சொல்றது எல்லாமே உண்மை தானா.. இல்ல ரெண்டு பேருமே பொய் சொல்றீங்களா.. நான் அந்த பெட்டிய தொறந்து பார்த்த எல்லாமே பொய்யா? அப்ப போன ஜென்மம் அப்படின்ற ஒரு விஷயமே இல்லையா? தயவு செஞ்சு சொல்லுங்க.. உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. நான் இத்தனை நாள் யார் கூட குடும்பம் நடத்திட்டு இருக்கேன்.. மொதக் கொண்டு நான் நல்லா இருக்கேனா இல்ல எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா"இதுவரையில் அவளது குரலில் ஒரு துள்ளல் இருக்கும். என்னதான் அவளை கடத்தி வந்த போதிலும் மற்ற பெண்களை போல கத்தி கதறி அழாமல் சமயோஜிதமாக அவள் முடிவெடுத்தாள்.
எந்த நிலை வந்தாலும் அவள் வாய் மட்டும் ஓயாது. அப்படிப்பட்ட வாயிலிருந்து இந்த நொடி வரும் வார்த்தைகள் எல்லாமே மரணத்தின் கடைசி தருவாயில் தன் உயிராக நேசித்தவர்களை விட்டுப் பிரியும் போது வரும் வேதனையை காட்டிலும் மிகக் கொடியதாக இருந்தது.. அவளின் வேதனையை சொல்லில் அடக்க முடியவில்லை. பேசும் போது தொண்டை அடைத்துக் கொண்டதோ?ஒரு கையால் தொண்டையை நீவிக் கொண்டே பேசினாள்.
வார்த்தைகளை கூட அவளால் கோர்வையாக பேச முடியவில்லை. வேதனையின் விளிம்பில் தொண்டை காய்ந்து விட்டது. எச்சிலை கூட்டி விழுங்கி தொண்டையை அவ்வப்போது நனைத்துக் கொண்டே தான் சொல்ல வந்ததை கஷ்டப்பட்டு சொல்லி முடித்தாள். வந்தியதேவன் கொலைவெறியோடு ஹேரியை பார்க்க அவன் அப்படியே முட்டிபோட்டு குண்டலகேசி அருகே அமர்ந்து தலைகுனிந்தபடி இத்தனை நாள் மறைத்த உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.
"என்ன மன்னிச்சிடு பேபி.அவன் சொன்னது எல்லாமே உண்மை தான். நான் வந்தியதேவன் இல்ல. நான் ஹேரி. போன ஜென்மத்துல உன்னோட வெறுப்ப சம்பாதிச்ச துரை.. உனக்கு ஒன்னு தெரியுமா? நீ யாரு எப்படி இருப்ப எதுவுமே எனக்கு தெரியாது. நான் சொல்றது போன ஜென்மத்துல.. அப்போ நான் ரொம்ப கொடூரமானவனா இருந்தேன்.. பிறவியிலேயே வந்த அதிகார ரத்தமா இருக்கலாம்.நம்ம அடிமை இன மக்கள் தானே அப்படின்னு ஒரு அலட்சியமா இருக்கலாம்.
நீ அந்த கர்ப்பிணிப் பொண்ணுக்கும் அவ புருஷனுக்கும் உதவி செஞ்ச. அவங்க எங்க கிட்ட இருந்து தப்பிச்சு போயிட்டாங்கன்னு அவ்ளோ கோவத்துல அவங்கள தேடி வந்தோம்.நீதான் அவங்களுக்கு உதவி செஞ்சனு தெரிஞ்சது. உன் பாட்டி என் காலில விழுந்து கெஞ்சினாங்க. எனக்குதான் மனசாட்சி இல்லையே. அவங்கள மிதிச்சி தள்ளிட்டு போயிட்டேன். ஏன் ஆளுங்க உன்ன எங்கெங்கேயோ தேடுனாங்க.நீ கிடைக்கவே இல்ல.
அதுக்கப்புறம் எனக்கு அவசரமா பிரிட்டன் போற வேலை வந்துருச்சு.. என் ஆளுங்க கிட்ட உன்னத் தேட சொல்லிட்டு தான் போனேன்.. உன்ன நா பாத்ததே கிடையாது. ஆனாலும் என்ன பத்தி தெரிஞ்சு எனக்கு வேண்டாதவங்களுக்கு உதவி செஞ்ச சின்ன பொண்ண பாக்க எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு.. நான் திரும்பி வந்தப்ப நீ கல்யாணம் பண்ணிட்டு எங்கேயோ போயிட்டேனு ஆளுங்க சொன்னாங்க.
ஒரு இந்தியன் கிட்ட நான் தோத்துப் போறதா?நீ இந்த உலகத்தில எங்கிருந்தாலும் உன்ன புடிச்சு இழுத்துட்டு வர்ற சொல்லி ஆளுங்களுக்கு ஆர்டர் போட்டேன். அப்படிதான் நீ காஞ்சிபுரத்துல ஆளுங்க கண்ணல சிக்குன. உடனே எனக்குத் தகவல் கொடுத்தாங்க.. நானும் கிளம்பி வந்தேன்.உனக்கு தாலி கட்டுனவன் உள்ள இருக்கானு தெரிஞ்சது..
பேபி அழுது வடிஞ்ச முகத்தோட உன்ன பாத்தேன். என்ன பாத்து மிரண்டு போன பாத்தியா என் கண்ண உன்மேல இருந்து எடுக்கவே முடியல. எத்தனையோ பேர் கூட பெட் ஷேர் பண்ணிருக்கேன். ஆனா நீ வேற. அப்பவும் இந்த தாட் லஸ்ட்னு நெனச்சு உன்ன படுக்க கூப்டேன். நீ என் முகத்துல காறி துப்புன.
எவ்ளோ தைரியம் உனக்கு.. உன்ன என் காலுல விழுந்து கெஞ்ச வைக்க நந்தனுக்கு பனிஷ்மென்ட் டைட் பண்ணேன். நான் நெனச்ச மாறியே வந்த.என் கிட்ட என் கண்ண பாத்து நீ சொன்ன.
அன்னிக்கு நீங்க சொன்னதுக்கு சம்மதம்னு அந்த ஒரு வார்த்தையில நா உன்கிட்ட அடிமையாயிட்டேன்.நீ வேற ஒருத்தன் பொண்டாட்டினு எனக்கு புரியல. எப்படியும் சுதந்திர போராட்டத்துல அவன் செத்துருவான். அப்றம் உன் வாழ்க்கை?
உன்ன என்னால விட முடியல. ஆனா சுத்தி என் ஆளுங்க இருக்குறப்போ என்னால பேச முடியல. அதான் அப்டி சொன்னேன். உண்மையா என் பிளான் நீ தனியா வருவ.. உன்ன கொஞ்சம் மிரட்டி என் ஆளுங்களுக்கு போக்கு காட்டி யாருக்கும் தெரியாம என் கூட எங்க நாட்டுக்கு கூட்டிட்டு போயிரணும்னு நெனச்சேன். ஐ மீன் கிட்னப். ஆனா அதுக்குள்ள இதோ இவன் உன் பின்னால வந்து என் ஆளுங்களும் வந்து வேற வழி இல்லாம அப்படி நடந்துக்கிட்டேன்.ஆனா பேபி எல்லாமே ஆக்ட்டிங் தான்.
ஆனா அதுக்கு அப்றம் தான் என் கேடுக்கெட்ட புத்தி வேலை செஞ்சது. ஒரு இந்தியன் மைண்ட் செட் எனக்கு தெரியும். புருஷன் முன்னாடி ரேப் செய்யப்பட்டா அவங்க உயிரோடயே இருக்க மாட்டாங்க. அவங்க ஹஸ்பண்ட்டும் அவங்கள தள்ளி வெச்சிருவாங்க. உன்ன அவன் முன்னாடி ரேப் பண்ணா அவன் உன்ன வேணான்னு போயிருவான்.
அதுக்கு அப்றம் உன்ன என் கூட கூட்டிட்டு போலாம்னு நெனச்சேன். எல்லாமே போச்சு.இது எல்லாமே உன் மேல வெச்சா லவ் பேபி..
நீ இல்லாம என்னால இருக்க முடியல. ஒத்துக்குறேன் நான் கெட்டவன் ஆனா உன்மேல வந்த லவ் உண்மை.. எல்லாம் முடிஞ்சு இந்த ஜென்மத்துல ஒரு பஞ்சாபி அம்மாவுக்கும் பிரெஞ்சு அப்பாவுக்கும் பொறந்தேன்.என் அம்மா அப்பவே படிக்க பிரெஞ்சு போனாங்க.. அப்ப அங்க என் அப்பாவ பாத்து லவ் ஆகி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. திரும்ப இந்தியா வரும்போது என் தாத்தா ஒத்துக்கள. ஆனா வேற வழி இல்ல. பையன் இந்தியா வந்து இருக்கணும்னு சொல்லி கண்டிஷன் போட என் அப்பா இங்க வந்து அப்டியே இங்கயே இருந்தாரு.
நான் பொறந்தேன். என் தம்பி பொறந்தான். என் அப்பா சாத்தான் வழிப்பாடு செய்யறவுரு.நிறைய பிளாக் மேஜிக் செய்ற வித்தைய என் அம்மாவுக்கு தெரியாம எனக்கு சொல்லிக் கொடுப்பாரு.என்னோட பதினாஞ்சு வயசுல கூடு விட்டு கூடு பாயுற வித்தய கத்துக்கிட்டேன்.
என் தம்பிக்கு இதெல்லாம் புடிக்காது. அவனுக்கு அப்பா கத்து தரல. என் அப்பா பில்லி சூனியத்துல பாதிக்கபட்டவங்களுக்கு அத எடுக்க உதவி செய்வாரு. சில சமயம் அது எடுக்குறவங்கள அடிச்சிரும். அப்படி தான் என் அப்பா செத்துப் போனாரு. அம்மாவும் ஏன்னு தெரியல. அடுத்த ஒரே வருஷத்துல போய்ட்டாங்க.
தாத்தா தான் எங்கள வளத்தாரு.பஞ்சாப்ல ஒரு கிராமம் எங்க வீடு. அந்த ஊர்லயே பெரிய வசதி படைச்ச குடும்பம்.தாத்தா போன அப்றம் சொத்த எல்லாமே சொந்தக்காரங்க புடிங்கிட்டாங்க. சோத்துக்கே வழியில்ல. தம்பி கூட நாட்ட விட்டே தாய்லாந்து போய்ட்டேன்.
அப்டியே வாழ்க்கை மாறியே போச்சு.எனக்கு உன் நியாபகமே வரல.. ஒரு நாள் யூ டியுப் பாத்துட்டு இருந்தேன்.உங்க டீவி சேனல் சப்ஸ்க்ராய்ப் பண்ணிருந்தேன். அப்ப தான் உன்ன பாத்தேன். நீ ஜெயில் கைதிங்கள பத்தி நியூஸ் பண்ணிருந்த.உன்ன பாத்ததும் கண்ண உன் கிட்ட இருந்து எடுக்க முடியல.
என்னன்னமோ எனக்குள்ள நடந்துச்சு.. சொல்ல முடியல. உடம்பு முறுக்கி போட்டுச்சு.எல்லாமே ஞாபகம் வந்துச்சு..கடைசியா இவன பாத்தேன்.. முன்ன இருந்த நந்தனுக்கும் இவனுக்கும் வித்தியாசம் இருந்தாலும் என்னால உணர முடிஞ்சது இவன் தான் அவனு.
தமிழ் நாட்ல எனக்கு தெரிஞ்ச ஆள வெச்சு இவன பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.நானும் இங்க வந்தேன்.ஒரு நாள் நியூஸ் வந்துச்சு. இவன் ரிலீஸ் ஆயிட்டானு. அப்பவே இவன கடத்திட்டேன்.
சின்ன வயசுல கத்துக்கிட்ட கூடு விட்டு கூடு பாயுற வித்தை மூலமா இவன் உடம்புக்குள்ள வந்தேன். எல்லாம் உனக்காக தான் பேபி. தப்பா வந்தாலும் என் காதல் உண்மை.
உன்ன என்னால விட்டுக் கொடுக்க முடியாது.உன்ன கடத்துனது நான். உன்ன கட்டிப்புடிச்சது நான். கிஸ் பண்ணது நான். உன் குடும்பத்த கிட்னப் பண்ணது நான். உன்ன கல்யாணம் பண்ணது நான். உன் கூட வாழ்ந்துட்டு இருக்குறது நான்"
"ஆனா அந்த உருவம் என்னோட. குண்டலகேசி காதலிச்ச உருவம் என்னோட.. அவ மனசுல எப்பவும் இருக்குறது நான் தான்டா"வந்தியதேவன் உட்சக்கட்ட கோபத்தில் கத்தினான்.
ஹேரி எதுவும் பேசவில்லை.குண்டலகேசியை நெருங்கி அவள் கன்னத்தை ஏந்த போனான். அவளோ அவனை வெறுப்பாக பார்த்து கரத்தை தட்டி விட அவனோ டக்கென்று அவள் கரத்தை பிடித்துக் கொண்டு
"பேபி.. போன ஜென்மம் முடிஞ்சு போச்சு.இப்ப நீ ஆவுடையப்பனோட பொண்ணு. ஹேரியோட பொண்டாட்டி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. உனக்கு முன் ஜென்ம நெனப்பு வரவே கூடாதுனு நெனச்சேன். உண்மையான வந்தியதேவன் மாறி நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்..எல்லாமே உனக்காக..என்ன விட்டு போயிருவியா"..
தொடரும்..எப்படி ஹேரி தமிழ் பேசுறான்னு யோசிப்பிங்க.. அடுத்த ud ல சொல்றேன். அப்றம் இது முழுக்க முழுக்க கற்பனை கதை.
Super sis keep going
ReplyDeleteMmm nyc
ReplyDeleteNext ud sikram podhunga sis
ReplyDeleteNice going
ReplyDeleteSuper
ReplyDeleteSemaaaa semaaaa super super 👌👌👌👌
ReplyDeleteSuperb👌👌👌
ReplyDeleteAchacho ipo yarahhh hero nu ethukurathunu therilayeeee
ReplyDeleteAda keragame.. ivanungala vechittu ennathan panna.. appo Kesi yaaruku??? VD ka.. Harry ka??? 😩😩
ReplyDeleteInteresting ud sis super semmma pavam kesi dha heri panna thappu ipa kondu vandhu enga vittudichu
ReplyDeleteஎம்மாடியோவ் இத நாங்க எதிர்பாக்கவே இல்லை
ReplyDeleteAiyooo ithu ena sodhanaii 🙄apo heroin hero ku sontham illaya?? Hero intha jenmamum yemanthu ponuma?? Paavam Nandhan🥺
ReplyDelete😲😲😲😲😲😲😲😲
ReplyDeleteSuper arumai kesi enna mudivu edukka poraa
ReplyDeleteRompa supper ah pohuthu akka.Appo yaaru akka hero. Na kandu pidichidan hari than hero. Next episode ah sikirama poduge akka. Im waiting
ReplyDeleteஅவன் அந்த அளவுக்கா விரும்பினான்,🥺🥺🥺🥺🥺🥺🥺😳😳😳😳😳😳😳😳 super 👌👌👌👌👌 நிலா
ReplyDelete