பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 16


நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா
காலம் வினாக்கள்தானா
போதும்
அருகினில் வரமணமுறிகிதழ்
கறையுதே

ராஜ் தான் கூறியது போலவே தன்னுடைய கடையில் வேலை செய்யும் வேலையாட்கள் அனைவரும் அழைத்து விருந்து வைத்தான்..நகரில் பிரபலமான ஒரு ஓட்டலில் விருந்து கோலாகலமாக நடைபெற்றது.. ஆரஞ்சு வர்ண கவுன் ஒன்றை தன்னவளுக்காக பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தான். நிலா அந்தக் கவுனை போட்டு ட்ரயல் ரூமை விட்டு வெளியே வர அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ராஜ்.

அவளின் அடர் மஞ்சள் நிற தேகத்திற்கு அந்த ஆரஞ்சு வர்ண கவுன் எடுப்பாக இருந்தது..இடுப்பிலிருந்து பாதம் வரை கொடி கொடியாக சிறு சிறு வெள்ளை ரோஜா மொட்டுக்களை தொங்க விட்டார் போல டிசைன் செய்யப்பட்டிருந்தது அந்த கவுன்.. ஒரு அரைவட்டம் அடித்து காட்டினாள் நிலா. கவுன் குடை வெட்டாக விரிந்ததோ இல்லையோ ராஜின் மனம் விரிந்து பரந்து தன்னவளிடம் சரணடைந்து விட்டது.

ராஜீர்க்கு நிலாவே அழகான ஒரு ஆடையை தேர்ந்தெடு்த்துக் கொடுத்தாள். அவளது ஆரஞ்சு நிற கவுனிற்கு பொருத்தமாக அடர் நீல நிற ஷர்ட் அவனுக்கு பொருத்தமாக இருந்தது.. மிதமான அலங்காரத்தோடு தன்னவளைப் பார்க்கையில் அசந்து போனான் ராஜ். நிலாவும் தன்னுடைய சரும பிரச்சினையை மறந்து சற்று தெம்புடன் அவனோடு விருந்தில் கலந்து கொண்டாள்.

வந்திருந்த வேலையாட்கள் அனைவரும் வயிறார உண்டு அழகான இந்த ஜோடியை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.நிலா பயந்த மாதிரி எந்த ஒரு அசம்பாவிதமும் அந்த விருந்தில் நடக்கவில்லை.அதுவே அவளுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது.. ஸ்வீட்டியும் குமுதாவும் குடும்பத்தோடு வந்திருக்கு விக்ரம் மட்டுமே நிலா சார்பில் வந்திருந்தான். குணாவிற்கு வர விருப்பம் இருந்தது.பிறகு கங்காவிடம் யார் வாங்கிக் கட்டிக் கொள்வது.

தன்னுடைய பெற்றோர் வரவில்லை என்று வருத்தம் உள்ளே இருந்தாலும் கணவனுக்காக அதை மறைத்துக் கொண்டாள் நிலா.. விக்ரம் தனது சகோதரிக்கு ஆறுதல் கூறினான். அவளுடைய தந்தை மாறன் மாப்பிள்ளை பெண்ணிற்காக அழகான மோதிரம் செய்து விக்ரம் கையில் கொடுத்து அனுப்பி இருந்தார். வட்டமான மோதிரத்தின் உள்பக்கம் ராஜ் நடுவே ஹார்டின் சிம்பல் போட்டு நிலா என்று எழுதி இருந்தது.

விக்ரம் மோதிரங்களை எடுத்து ராஜ் நிலா கைகளில் கொடுக்க இருவரும் விருந்தினர்கள் முன்பு அந்த மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.விருந்தினர்களின் கைத்தட்டலோடு அவர்களின் காதலும் அங்கே அழகாக மலர்ந்தது.விழா முடிந்து அனைவரும் கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டனர்.

ஏற்கனவே ஐந்து நாட்களாக நிலாவை விட்டு தள்ளிப்படுத்திருந்தான் ராஜ். இன்று தான் அவளுக்கு சரியாகி விழாவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது. இதற்கு மேலும் மனைவியை விட்டு தள்ளி இருக்க முடியாதவன் வீட்டுக்கு வந்ததுமே அவளை கட்டி அணைத்தான். கணவனின் எதிர்பார்ப்பு அவளுக்கும் சற்றும் குறையாமல் இருந்தது. எப்பொழுதும் அவன் கட்டி அணைத்தால் சினுங்கும் அவள் இன்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இருவருமே தன்னிலை இழக்கும்போது ராஜின் கைப்பேசி அதிர்ந்தது. முதல் முறை அதை கண்டுகொள்ளாமல் விட்டாலும் மீண்டும் மீண்டும் அது ஒலி எழுப்ப யார் என்று எடுத்துப் பார்த்தால் அது குணா.. அழைப்பை ஏற்று ராஜ் காதில் வைக்க அந்தப்பக்கம் அவசரமாக ஒரு தகவல் பரிமாறப்பட்டது..

“பாப்பா நா உடனே போனும். கங்காவுக்கு வலி எடுத்துருச்சாம்.. நான் போய்ட்டு வரேன்.. சிசெரியனு சொல்றாங்க”

“ராஜ் நானும் வரேனே” நெகிழ்ந்த ஆடைகளை சரி செய்து கொண்டு கேட்டால் நிலா.

“வேணாடா அங்க என்ன பேசுவாங்கனு தெரியும் தான..”

“இல்ல ராஜ்..ஆபரேஷனு வேற சொல்ற.. நானும் வரேன். இப்டியே எத்தன நாளுக்கு இப்டி வெட்டிகிட்டு நிக்குறது. பொறக்க போறது நம்ம மருமகனோ மருமகளோ..புள்ள பொறக்கும் போதே ரெண்டு குடும்பமும் வெட்டிகிட்டு நின்னா நல்லாவா இருக்கும்? ப்ளீஸ் ராஜ் நானும் வரேன்”

“டேய் என் அம்மாவ பத்தி தெரிஞ்சுமா இப்டி பேசுற.. புள்ள நல்லபடியா பொறக்கட்டும் அப்றம் நானே கூட்டிட்டு போறேன் சரியா”

“ராஜ்.. ப்ளீஸ்”அவளை விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. அங்கே வந்தால் கமலா கண்டிப்பாக அவளை கேவலமாக பேசக் கூடும் என்று அறிந்திருந்தும் எப்படியாவது கணவனை அவன் குடும்பத்தோடு சேர்த்து விட வேண்டும் என்ற அவளது எண்ணத்தை அவன் மதித்தான்.அதற்காக அவர் எவ்வளவு கேவலமான பேச்சு என்றாலும் அதனைத் தாங்கிக்கொள்ள தன் மனதை தயார் படுத்திக் கொண்டுள்ளாள் என்பதை அறிந்து கொண்டான்.

இருந்தாலும் அவனது மனது கேட்கவில்லை. அங்கே வலியில் துடிப்பது அவனது சகோதரி என்றால் அங்கே போனால் தாங்க முடியாத வலியில் துடிக்க போவது அவனது உயிர் அல்லவா? இதனை அனுமதிக்க அவனால் எப்படி முடியும்? அங்கே இருப்பது எரிமலைக்குழம்பு என்று அவளுக்கு யார் புரிய வைப்பது? இருந்தும் அந்த நெருப்பில் விழுந்து நீந்தி கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மனைவியின் பிடிவாதம் வென்றது.

ராஜ் நிலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.அங்கே கமலா குணா மட்டும் இல்லாமல் காளை பாண்டியன் காம தேனு மற்றும் சிந்துவும் இருந்தார்கள்.ராஜை பார்த்ததும் மலர்ந்த சிந்துவின் முகம் நிலாவை பார்த்ததும் சுருங்கியது.ராஜ் எதையும் கண்டு கொள்ளாமல் குணா அருகே சென்றான்.

“டோன்ட் ஒர்ரி குணா..கங்காவும் பேபியும் நல்ல படியா வருவாங்க.. தைரியமா இருங்க”குணா மற்றவர்களை பார்த்து விட்டு ராஜை பார்த்து கண் காட்டி விட்டு மெல்ல நகர்ந்தான். ராஜ் அவனின் கண் ஜாடையை புரிந்து கொண்டு நிலாவை தள்ளி இருந்த நாற்காலியில் அமர சொல்லிவிட்டு குணாவை பார்க்க சென்றான். நிலா அங்கிருந்த யாரையும் பாராமல் கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

குணா அருகே வந்ததும்”என்ன குணா”

“எதுக்கு ராஜ்.. நிலாவ இங்க கூட்டிட்டு வந்த?”

“ஏன் குணா.. அவ வந்தா என்ன?

“ஐயோ விஷயம் தெரியாம பேசுற.. இன்னைக்கு கங்காவுக்கு டேட்டே இல்ல.. இன்னும் ரெண்டு வாரம் கிட்ட இருக்கு.. வீட்ல எப்பவும் உங்கம்மாவும் அக்காவும் நிலாவ எப்டி தொறத்திட்டு சிந்துவ உனக்கு கட்டி வைக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருகாங்க.. இதுல எங்கப்பன் வேற.. தெரியாதா அந்தாள பத்தி. பயங்கரமா ஏத்தி விட்டுட்டு இருக்காரு..”

“நிலா தான் நா கங்காவ பத்தி சொன்னதும் வரேன்னு சொன்னா.. அவள எப்டி விட்டுட்டு வர முடியும் குணா”

” எனக்கு புரியுது ராஜ். இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா..உங்க அக்கா உன்னோட அம்மாவுக்கு ஐடியா தரா. பேசாம நிலாவ ஏத்துகிற மாதிரி டிராமா போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்.. அதுக்கு அப்புறம் நிலாவ நல்லா பார்த்துகுர மாதிரி நடிக்கணும்..உன்னயும் அவளயே நம்ப வைக்கனும்..அப்றம் நிலா மனுசுல அவ உனக்கு பொருத்தமே இல்லனு சொல்லி புரிய வைக்கணும்..சிந்து உன்கூட அந்நியோன்யமா இருந்தா அத பாத்த நிலா கண்டிப்பாக வெக்ஸ் ஆவா..உனக்கும் சிந்துவயும் நிலாவயும் பக்கத்துல நிக்க வெச்சு பாத்தா யாரு அழகுன்னு தெரியும்.

சோ நீயாவே நிலாவ தொரத்தி விட்ருவேன்னு பிளான் போடுறாங்க.. என்னால இத கேட்டுட்டு சும்மா இருக்க முடியல. வயித்துல புள்ளய வெச்சிகிட்டு இப்படி இன்னொரு பொண்ணுக்கு துரோகம் செஞ்சா அந்த பாவம் என் புள்ளைக்கு வராதா?எத்தன வருஷம் கழிச்சு பொறக்குற புள்ள.. இதுனால தான் இப்போல்லாம் எங்களுக்குள்ள சண்ட வருது..

இன்னக்கி ரொம்ப கடுப்பா ஆயிட்டேன்.உட்டேன் ஒரு அறை.. ஏன்டி நீ எல்லாம் ஒரு பொண்ணா.. இன்னொரு பொண்ணோட குடிய கெடுக்க இப்படி ஆட்டமா ஆடுற.. அந்தப் பொண்ணோட நிலைம உனக்கு வந்தா உன்ன விட்டுட்டு நான் போயிடனுமா.. சொல்லுடி உன்ன விட்டுட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமா. அது உனக்கு ஓகேவா.. வயித்துல புள்ளய வச்சுட்டு இப்படி பண்றியே அது எல்லாம் என் புள்ளய பாதிக்காதா.. அந்தப் பொண்ணு என்ன நீ திங்கற சோத்துல மண்ணள்ளியா போட்டுச்சு.. எதுக்குடி அந்த பொண்ணு மேல உனக்கு இவ்ளோ பொறாம… அப்படின்னு தான் கேட்டேன்.. உடனே உன் அக்கா ஆடுனா பாரு ஒரு ஆட்டம்..

நான் முன்ன மாதிரி இல்லையாம்.. நிலா சரியான கைகாரியாம்..உன்ன மயக்குனது இல்லாம என்னயும் சேத்து மயக்கிட்டாளாம்..அவ நல்லாவே இருக்க மாட்டாளாம். நான் அவள ஏமாத்திடேனாம்.. அப்படின்னு சொல்லி வயித்துல ஓங்கி அடிச்சு இங்க வந்து படுத்து கிடக்கா.. நீ பேசாம நிலாவ கூட்டிட்டு போயிரு.. இந்தக் கூட்டம் எல்லாம் கங்காக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன கும்முறதுக்கு ரெடியா இருக்கு.. நீ நிலாவ இங்க கூட்டிட்டு வந்திருக்க.. டைரக்ஷன் மாறி அந்த பொண்ண வறுத்தெடுவாங்க.”

ராஜ் குணாவை ஆச்சரியமாக பார்த்தான். மனைவி பேச்சிற்கு கோல் இல்லாமல் ஆடும் குரங்கு அவன்.கங்கா கோடு கிழித்தால் அதை தாண்டவே மாட்டான். கங்கா அவனை அடித்தாலோ அல்லது திட்டினாலோ அனைத்தையும் தாங்கி ஒரு இடிதாங்கி போல நிற்பான். அப்படிப்பட்ட குணா இன்று கங்காவை கைநீட்டி அடித்துள்ளான்.. அதுவும் ஒரு பெண்ணுக்கு நியாயம் கேட்டு.. ராஜ் குணாவின் தோளில் கை வைத்து அழுத்தி விட்டு நிலாவை காணச் சென்றான்.

அவன் செல்வதற்குள் காலம் கடந்து விட்டது.. கங்காவிற்கு குழந்தை பிறந்து விட்டது.பெண் குழந்தை என்று கூறிய தாதி அரை மணி நேரம் கழித்து அனைவரும் சென்று குழந்தையை பார்க்கலாம் என்றதோடு மறைந்துவிட்டார்.ராஜ் நிலாவிடம் வீட்டிற்குப் போகலாம் என்று கூறினான். குழந்தை பிறந்துவிட்டது அதன் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று பிடிவாதமாக மறுத்தாள் நிலா.உள்ளே படபடப்பாக இருந்தாலும் தான் அருகே இருக்கும் போது தன்னவளை காயப்படுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை என்று அவளருகில் அமர்ந்து கொண்டான் ராஜ்.

அரை மணி நேரம் கழித்து அனைவரும் கங்கா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார்கள். குழந்தையின் கட்டில் கங்கா படுத்திருந்த கட்டிலோடு இணைக்கப்பட்டிருந்தது. கங்கா உள்ளே வந்த கூட்டத்தை பார்த்து அதில் நிலா இருக்கவும் அவளைக் கடுமையாக முறைத்தாள். பின்பு என்ன நினைத்தாளோ முகத்தை திருப்பிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். என்ன ஏதென்று பதறி அவள் அருகே சென்று குழந்தையை பார்க்க குழந்தை மிகவும் அழகாக இருந்தது. அதன் நெற்றியில் தொடங்கி கன்னம் வரை வலது பக்கம் முழுவதும் கருப்பு மச்சம் போல காட்சி அளித்தது..

கர்மவினையை பற்றி அந்த நிமிடம் குணா கண்ணால் கண்டான். நிலாவிற்கு கங்கா செய்ய நினைத்த துரோகமே தன் குழந்தையை பாதித்து விட்டது என்பதை அவன் நிச்சயமாக நம்பினான்.. ஆனால் திருந்தாத ஜென்மங்கள் சில இருக்கிறது. அதில் இந்த கூட்டமும் அடங்கும். குழந்தையை பார்த்த கமலா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுந்தார். இவ்வளவு நடந்தும் அவர் குழந்தையை ஒரு விரல் கொண்டு கூட ஸ்பரிசித்து பார்க்கவில்லை. யாருமே குழந்தையை தூக்கவில்லை.

குணா மட்டும் குழந்தையை தூக்கி அதனின் மச்சம் இருந்த கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். பின் அந்தக் குழந்தையை தாய் மாமன் கையில் கொடுத்தான். ராஜ் குழந்தையை வாங்கி ஆசை தீர தன் மருமகளை முத்தமிட்டான். நிலா அவனிடமிருந்து குழந்தையை வாங்க கை நீட்ட அடுத்து கமலா விட்ட அறையில் கீழே கிடந்தாள்.

Comments

  1. குழந்தை அப்டி பொறந்ததுக்கு நிலா என்ன பண்ணுவ எதுக்கு அவளை அடிக்கிறாங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்