பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 22

ராஜ் வேறு வழி இல்லாமல் குணாவிற்கு அழைத்து கங்காவை பற்றிய விவரங்களை தெரிவித்தான். அதிலும் அவள் விவாகரத்தை கேட்டதை மென்று விழுங்கி அவன் கூற குணாவும் ராஜ் கூறிய அனைத்தையும் கேட்டு எந்த ஒரு பிரதிபலிப்பும் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்தின் முகவரியை தனக்கு அனுப்பி விடும் படி கேட்டான்.

கண்டிப்பாக குணா வருவது கங்காவை நாக்கை பிடுங்குவது போல் நான்கு கேள்வி கேட்க தான் என்பது ராஜிற்க்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலுமே அவள் இதுவரை நடந்து கொண்ட முறை எதுவும் அவனுக்குமே பிடிக்காது. நாத்தனாரை வெறுத்தாள். தான்தோன்றித்தனமாக ஆடினாள்.

புகுந்த வீடு ஒன்று இருப்பதை மறந்து பிறந்த வீட்டிலேயே டேரா போட்டு விட்டாள். ஒரு பெண்ணுக்கு உள்ள லட்சணம் எதுவுமே அவளுக்கு கிடையாது. எப்போதுமே அகங்காரமாக தான் நினைப்பதை நடத்திக் காட்டும் ஒரு வெறி அவளுள் இருந்து கொண்டே இருந்தது. இறுதி தப்பாக பெற்ற பிள்ளையைக் கூட அழகை காரணம் காட்டி ஒதுக்கி வைத்தது தான் ராஜால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவளுக்கு கிடைத்த இந்த தண்டனை சரி என்றே அவன் நம்பினான். பாவம் அவனது அன்பு மனைவி வெண்ணிலா தான் கங்காவின் நிலையை எண்ணி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாள். அவள் எப்போதுமே இப்படிதான் யாருக்காவது ஏதாவது துன்பம் நேரிட்டால் உடனே முழங்கால் படியிட்டு  அவளின் பிரிய கர்த்தரிடம் முறையிட ஆரம்பித்து விடுவாள்.

கங்காவின் நிலையைக் கண்டதும் வெண்ணிலா அதைத்தான் செய்து கொண்டிருந்தாள். கங்காவின் தோழி அவர்கள் அனைவரையும் தன் வீட்டிலேயே தங்கிக்கொள்ள கூறிவிட்டாள். கங்கா இப்பொழுது குழப்பத்தில் இருக்கிறாள்.அவளது குடும்பத்தை விட்டு எத்தனை நாள் அவள் தனித்திருக்க முடியும்.அவளது மனநிலையை தோழி சரியாக கண்டு கொண்டாள். கங்கா தோழியிடம் கூறாததை எல்லாம் வெண்ணிலா அவளிடம் தெளிவாக கூறியிருந்தாள். கங்காவின் மேல் அவள் தோழிக்கு ஆத்திரமாக வந்தது.. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லுவார்கள். அப்படி இருக்க காக்கைக்கே தன்னுடைய குட்டி மேல் அவ்வளவு பிரியம் இருந்தால் மனித பிறவியாகிய கங்காவுக்கு தன்னுடைய மகளின் மேல் எவ்வளவு பிரியம் இருந்திருக்க வேண்டும்?

ஆனால் அவளோ சாதாரண வெளித் தோற்றத்தைக் கண்டல்லவா தன் மகளை வெறுக்கிறாள்? இருதயாவிற்கு கங்கா பெரும் துரோகம் இழைத்ததாக அந்த தோழி எண்ணினாள்.எனவே கங்காவின் குழப்பத்தை தீர்த்து அவளை உடன் அழைத்துச் செல்லும் வரை அனைவரும் தன் வீட்டிலேயே தங்க வேண்டும் என அவள் அனைவரிடமும் அன்பாக கேட்டுக் கொண்டாள்.

நிலா பிரார்த்தனை செய்து முடிக்கும் வரை அவளை தொல்லை செய்யாமல் அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ராஜ் அவள் பிரார்த்தனை செய்து முடித்ததும்" என்னா பிரேய் பண்ணிட்டியா"

"ம்ம்ம்"

" என்னான்னு பிரேய் பண்ண"

"கங்கா அண்ணி சீக்கிரம் சரியாகனும்..குணா அண்ணா கூட மனசு மாறி வாழனும். பட்டுக்கு நல்ல அம்மாவா இருக்கணும்னு பிரேய் பண்ணேன்"..

"நடக்குமா இதெல்லாம்.. குணா என்னவோ நல்லவன் தான். ஆனா கங்கா அப்டி இல்லையே..கர்மா எப்டி சுத்தி அடிக்குது பாத்தியா பாப்பா.. நா இதுவரைக்கும் கர்மாவ குர்மா மாதிரி நெனைச்சிட்டு இருந்தேன். இப்போதான் தெரியுது அதுக்கு உயிர் இருக்குனு" அவன் மடிமீது ஏறி அமர்ந்த நிலா

"ராஜ்.. நாம செய்யிற எல்லா விஷயத்துக்கும் எதிர்வினை இருக்கும்.. நாம நம்ம மனசுக்கு பட்ட விஷயத்த செஞ்சுட்டு போயிட்டே இருப்போம்..அந்த விஷயம் பெரும்பாலும் தப்பா கூட போகலாம்.ஆனா அத புரிஞ்சிக்க நம்ம ஈகோ தடுக்கும்..  அந்த ஈகோனால பின்னால அனுபவிக்கப் போறது நாமதான்.. அண்ணி பட்டுவ தொட்டுக் கூட பாக்கல.. காரணம் அவளுக்கு பர்த் மார்க் இருக்குன்னு. பர்த் மார்க் ஒரு காமண் விஷயம் தானே. இதை ஏன் அவங்க புரிஞ்சுக்கல..  இதுவே பட்டுவோட உடம்புல எங்கயாச்சும் இந்த பர்த் மார்க் இருந்தா அத இவ்ளோ பெரிய விஷயமா பேசியிருப்பாங்களா சொல்லு.."

"பாப்பா நீ சொல்றது உண்ம தான் யாரு இல்லனு சொன்னா.. ஆனா இத புரிஞ்சிக்க வேண்டியது நாம இல்ல.. கங்கா"

"குணா அண்ணே வந்து என்ன செய்ய போறாரோ.. ஒருவேள டிவோர்ஸ் கொடுத்துட்டா"

"சான்ஸ் இருக்கு. குணா வேணாம்னு சொன்னாலும் கங்கா பிடிவாதமா வாங்கியிருவா"

'என்ன பண்ண போற ராஜ்"

" இதுல நாம பண்ண என்ன இருக்கு.. அவங்க வாழ்க்கை அவங்க தான் முடிவு பண்ணனும்.. "வெண்ணிலா ராஜ் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து விட்டாள். குணா வந்தால் நடக்கும்  பிரளயத்தை எண்ணி இப்போது அவளது நெஞ்சம் நடுக்கம் கொண்டது.

மறுநாளே குணா வந்துவிட்டான்.. அவனைக் கண்டதும் கமலா கழுத்தை வெட்டிக்கொண்டு சென்றார். ராஜ் அம்மாவை முறைத்துவிட்டு குணாவை வரவேற்றான்."என்ன மித்ரா உன் அக்கா ஓ ன்னு அழுவுறா போல"கேலியில் போல் கேட்டான் குணா.

"அழாம என்ன பண்ணுவா குணா.."

"ம்ம் டிவோர்ஸ் கேட்டால்ல.. நா கொடுக்குறேன். ஆனா அதுக்கு முன்னாடி அவள நான் பாக்கணும் மித்ரா. எந்த அழக வெச்சு பெத்த பொண்ண வேணாம்னு தூக்கி வீசுனாலோ அந்த அழகு ஆணவம் எங்கன்னு நா கேக்கணும்.. அவ என்ன பாத்து பேசணும். அப்பதான் டிவோர்ஸ் கொடுப்பேன்".. குணா பிடிவாதமாக கூறிவிட ராஜ் கங்கா தங்கியிருந்த அறை கதவை தட்டி குணா கூறியதை கூறினான்.

"நா அவர பாக்க மாட்டேன்.. யாரையும் பாக்க மாட்டேன்"என கதவை திறக்க மறுத்து விட்டால் கங்கா.ராஜிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த குணாவிற்கு அவள் கூறியது தெளிவாக கேட்டது. கீழே இருந்த கங்காவின் தோழியிடம் சென்றவன் அந்த அறைக்கான ஸ்பேர் கீயை கேட்டான்.. அவளும் எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு யாருடைய அனுமதியும் இல்லாமல் அந்த அறை கதவை திறந்து உள்ளே சென்று கங்காவின் முன்னே நின்றான்.

 பித்து பிடித்தவள் போல கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கங்கா. கதவை திறக்கும் சத்தம் கூட அவளுக்கு கேட்கவில்லை அவ்வளவு தூரம் தனக்குள் மூழ்கியிருந்தாள். குணா அவளருகே வந்து அவளது காலைத் தொடவும் தான் கங்கா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அங்கே குணா மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி கொண்டு நின்றிருந்தான்.

 அவனைக் கண்டதும் போர்வையை எடுத்து தன்னை மம்மி போல போர்த்திக் கொண்டாள்."ஏன் இங்க வந்திங்க.. போங்க வெளிய போங்க"அறையே நடுங்கும் அளவு கத்தினாள் கங்கா.கமலா வேறு ராஜிடம் துடித்துக் கொண்டிருந்தார்.

"ஐயோ என் பொண்ணு எப்படி கதறுறா பாரு.. நா போய் பாக்குறேன் டா.. என்ன விடு"

"ம்மா வாய மூடிட்டு அப்டி போயி ஒக்காரு. அவ ஒன்னும் உன் பொண்ணு இல்ல. குணாவோட பொண்டாட்டி.. அவனுக்கு பேச தெரியும். நல்லதோ கெட்டதோ அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.. நீ போனா கண்டிப்பா கெட்டது மட்டும் தான் நடக்கும். ஏன்னா உன் குணம் அப்டி."

"அட போடா அங்குட்டு.. நா போவேன்.. என்ன போக வேணாம்னு சொல்ல நீ யாரு"கமலா ராஜை சுற்றிக் கொண்டு செல்ல எத்தனிக்கும் அவர் கையைப் பிடித்து இழுத்தவன் அவரை காலியாக இருந்த ஒரு அறையில் தள்ளி கதவை வெளிப்பக்கமாக சாத்தினான்."டேய் கதவ தொறடா.. மித்ரா கதவ தொற"

"ராஜ் என்ன பண்ற.. கதவ தொற"

"வேணா பாப்பா பேசாம இரு.. எங்கம்மாவுக்கு சொன்னா புரியாது. இப்படி செஞ்சா தான் புரியும்.. நீ பேசாம இரு கொஞ்ச நேரத்துக்கு" அவன் இறுகிய குரலில் கூற அதற்கு மேல் பேச நிலாவிற்கு தைரியம் இல்லை..

கங்கா போர்வைக்குள் தன்னை ஒளித்துக்கொண்டிருக்க அந்தப் போர்வையை பிடித்து இழுத்தான் குணா. அவளும் தன் பிடியை விடாமல் இழுக்க இருவரும் தங்களது முழு பலம் கொண்டு மாற்றி மாற்றி போர்வையை இழுத்து இறுதியில் வெற்றி பெற்றது குணா தான். அவளுக்கு தன்னுடைய முகத்தை காட்டாமல் சுவர் பக்கமாக திரும்பி நின்று கொண்டாள் கங்கா.. அப்பொழுதும் அவளை விடாமல் அவள் முன்பு வந்து நின்றான் குணா. கழிவறையை நோக்கி ஓட பார்த்தால் அதற்கும் அவன் விடவில்லை.

 அவள் எங்கே சென்றாலும் அவளின் முகத்தை பார்க்க போராடினான் குணா. ஒரு கட்டத்தின் மேல் அவளது முகத்தை மறைக்க முடியாமல் மிகுந்த கோபத்தோடு " இந்தா பாரு.. எந்த அழகப் பாத்து என் பின்னால நாய் மாதிரி சுத்துனியோ அந்த அழகு இனிமே என்கிட்ட இல்ல.. அந்த வெண்ணிலாவ நான் என்ன எல்லாம் சொல்லிருப்பேன்.. அவ என்ன சூனியம் வச்சாளோ எனக்கும் அவள மாதிரியே ஆயிருச்சு.. அவ வச்சாளோ இல்ல நீ வச்சியோ யாரு கண்டா..

இப்படி அலங்கோலமா நிற்கிறேன்.. இப்ப சந்தோஷமா இருக்குமே.. மனசு சந்தோஷத்துல கொக்கரிக்குமே.. எப்படிடா இவ கிட்ட இருந்து விடுதலை கிடைக்கும்னு துடிச்சிட்டு இருந்துருப்ப.. நீ கஷ்டப்பட வேணாம்.. நானே உனக்கு விடுதலை தரேன்.. சந்தோஷமா அழகான ஒருத்திய பார்த்து கட்டிகிட்டு  நிம்மதியாயிரு.. " தன்னுடைய இந்நிலைக்கு காரணம் என்னவோ குணா தான் என்பது போல அவன் மேல் குற்றம் சாட்டி விட்டு அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள் கங்கா.

 குணா கட்டில் மீது அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்து தெனாவட்டாக சிரித்துக்கொண்டே"அட அட அட என்ன ஒரு பேச்சு..சரி இப்ப எதுக்கு உன்னோட இந்த நிலமைக்கு நான் தான் காரணம்ற அளவுல பேசுற..நானா அந்த வெண்ணிலா பொண்ண வாயிக்கு வந்த மாதிரி பேசினேன்.. நானா அந்த பொண்ணு குடிய கெடுக்க கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சேன்.. ஒரு சாதாரண நிறக் குறைபாட்ட ஆத்தாலும் மகளுமா சேந்து உலகத்துலயே வரவே கூடாது வைரஸ் அளவுக்கு என்னா பேச்சு பேசுனீங்க..

ஏன்டி உன் தம்பிக்கு என்ன கண்ணு பொட்டயா.. அவனே அவனோட ரெண்டு கண்ணால பாத்து தான இந்த பொண்ணு காதலிச்சு கட்டிக்கிட்டான். அப்றம் என்னடி உனக்கும் உங்கம்மாவுக்கும் வந்துச்சு..அவனயும் அந்த பொண்ணயும் கரிச்சு வாயில கொட்டி அவங்கள வாழவே விடாம நாசமாக்கணும்னு எத்தன ஆட்டம்டி.. ஸ்ப்ப்ப்பா சரி அது நாத்தனார் அடிப்புடி சண்ட.. ஜென்மத்துக்கும் நம்ம இந்திய குடும்பத்துல தீராது.. ஆமா இடி விழுந்த மாறி ஒக்காந்து இருக்கியே உன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன்.. நம்ம.. இல்ல இல்ல.. நீ பெத்த பொண்ணு பேரு என்னானு சொல்லு"

 கங்கா ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்து அடிபட்ட பார்வை பார்த்து விட்டு பார்வையை தாழ்த்திக் கொண்டாள். "தெரியல.. நீயெல்லாம் ஒரு அம்மா த்தூ.. அவ பேரு இருதயா.. இருதயமே இல்லாத ஒரு தாய்க்கு பிறந்த அவளோட பேரு இருதயா.. செமயா இருக்குல்ல..இன்னைக்கு உன் மூஞ்சி இப்டி இருக்குனு ஆடுற அழுவுற வாழ்க்கயே வெறுத்த நிலைமையில இருக்கியே இதே மாதிரி தான அந்த வெண்ணிலா பொண்ணுக்கும் இருக்கும்..

அத ஏன் நீ யோசிக்கவே இல்ல.. ஏன்னா திமிரு.. அந்த பொண்ணுக்காச்சும் மூஞ்சில மட்டும் தான் வந்துருக்கு.. உனக்கு ஒடம்பு பூரா இருக்கு.. இனிமே நீ எப்படி வெளிய தலைய காட்டுவ.. வெக்கமா அவமானமா இருக்காது.நீ என்ன பண்ணு பேசாம செத்துரு.. நீயெல்லாம் வாழவே கூடாது அதுக்கு தகுதியும் இல்ல உனக்கு..

நீ செத்துட்டா எதுக்கு டிவோர்ஸ் அது இதுனு அலைச்சல். விஷயம் ஸ்மூத்தா முடிஞ்சிரும். நானும் ரொம்ப அழகான அடக்கமான பொண்ண கேட்டுக்கோ பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்.." அவன் இதைச் சொல்லும்போது கங்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது..

"ஓ காட் கங்கா நீ அழரியா.. உனக்கு அழத் தெரியுமா.. எப்பவுமே அடுத்தவங்கள அழ வச்சு பாக்க தானே உனக்கு தெரியும்.. இப்ப என்ன புதுசா நீயே அழுவுற.. எதுக்கு இப்போ அழுற.. உன் சாவுக்கு நீயே ஒப்பாரி வைக்கிறியா.. இல்ல சாவாம எங்க உசுர எடுக்க போறோமேன்ற ஆதங்கத்துல அழறியா..என்ன கருமமோ உன் இஷ்டம்..

அப்றம் என்ன சொன்ன..ஏன்டி நானாடி உன் பின்னால நாய் மாதிரி சுத்தி வந்தேன்.. உன்ன பிடிச்சி போய்  ப்ரொபோஸ் பண்ணேன். நீயும் என்ன ஏத்துக்கிட்ட..கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு புள்ளய கொடுத்துட்டு டாடா காட்டிருக்கணும். அத விட்டுட்டு கல்யாணம் பண்ணேன் பாத்தியா என்ன சொல்லணும்.. அதகூட மன்னிச்சரலாம்.. உனக்கு அடிமையா நான் இருந்தேன் பாத்தியா அது தான்டி உனக்கு தொக்கா போச்சு..

 இனிமே அழகு அது இது மயிறு மட்டைன்னு சொல்லி ஊர் மேய முடியாது.. கண்ட நாயிங்க கூட சேர்ந்து கிளப்புக்கு போறேன் பப்புக்கு போறேன்னு பொறுக்க முடியாது.. என் காச கரியாக்கி பியூட்டி பார்லர்ல  செலவழிக்க முடியாது.. இனிமே இந்த மூஞ்சிக்கு மேக்கப் போட்டா என்ன போடலைன்னா என்ன.. எல்லாமே ஒன்னு தானே.. எவன் பாக்கப்போறான்.. சரி அது உன் இஷ்டம்.. கடைசியா உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சு பேசிட்டேன்.. அனாவசியமா டிவோர்ஸ் அது இதுன்னு காச செலவு பண்ணாத..எப்படியும் நீ செத்துப் போயிருவ.. எதுக்கு வீணா அலைச்சல்..

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பொண்ணு வீட்டுல தொங்கிராத.. பாவம் அடைக்கலம் கொடுத்த பாவத்துக்கு போலீஸ் கேசா ஆயிடப்போது.. எதுவாயிருந்தாலும் கண்காணாத இடத்துக்கு போயி செத்து தொலைஞ்சிரு".. என்றவன் அந்த அறையிலிருந்து வெளியேறினான்..

 இவ்வளவு நேரம் அவள் அடக்கி வைத்திருந்த கதறல் வேகமாக கரை உடைத்து வெளியே வந்தது. கதறல் கேவலமாக மாறும் வரை தரையில் படுத்து விம்மி கொண்டிருந்தாள் கங்கா.. அவள் செய்த அனைத்து கொடூரமான விஷயங்களும் அவள் கண் முன்னே வந்து சென்றது.. எவ்வளவு பெரிய அபாண்டமான பழியை தூக்கி அவன் மேல் போட்டு விட்டாள்.. அவனது உண்மையான காதலையும் அவனது உண்மையான பாசத்தையும் கண்டுகொள்ளாமல் அவனை அவமானப்படுத்தி விட்டாள்..

 தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறான் என்ற நினைப்பே அவளை இம்மாதிரியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. ஒரு ஆண் ஒரு பெண்ணின் இழுப்புக்கு எல்லாம் வருகிறான் என்றால் அதற்கு காரணம் உடல் சுகம் மட்டுமல்ல.. அவள் மேல் வைத்திருக்கும் அன்பு கூட அதற்கு காரணமாக இருக்கலாமே. நமது சிறு மறுப்பு கூட தன்னவளுக்கு வேதனையை தரலாம் என்பதால் ஒரு தலையாட்டி பொம்மையாக அவனிருக்க நினைத்திருக்கலாமே..

 எல்லாத்துக்கும் சிகரம் வைப்பது போல தான் பெற்ற மகளையே புறக்கணித்தது எவ்வளவு பெரிய பாவம்.. தன்னுடைய குழந்தை உடல் நலமாக பிறந்ததை எண்ணி கடவுளுக்கு நன்றி செலுத்தாமல் அழகாக பிறக்கவில்லையே என்று ஒரு அரக்கியை போல நடந்து கொண்டாளே.. எத்தனை பேர் திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் வருட காலமாக காத்திருக்கிறார்கள். தானும் அம்மாதிரி ஒரு காத்திருப்பை எதிர்பார்த்து குழந்தையை ஈன்றவள் தானே.. கடவுள் கிருபை தன் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. பலன் கிடைக்காமல் வயதாகி தள்ளாடும் வயதில் கூட குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் எத்தனை பேர். அவர்கள் அனைவருக்கும் கிட்டாத வரம் தனக்கு கிட்டியது. அந்த வரத்தை போற்றாமல் காலடியில் தூக்கி கிடத்தி அது எவ்வளவு பெரிய பாவம்.

 தனக்கு மன்னிப்பு கிடைக்குமா.. எப்படி கிடைக்கும் பாவத்தின் மறு உருவாக இருக்கும் தனக்கு மன்னிப்பே கிடையாது.. வெண்ணிலா ஆம் அவளை எப்படி மறந்து போனாள்.. மித்ரன் ஆசைப்பட்டு தானே அவளை திருமணம் செய்து கொண்டான். அவன் வாழ்க்கையை அவனுக்கு முடிவெடுக்க தெரியாதா. தந்தை போன பின் தந்தை ஸ்தானத்திலிருந்து தனக்கு அனைத்தையும் செய்பவன் அவன் தானே. இப்பொழுது கூட தனது வேலை எல்லாத்தையும் விட்டுவிட்டு இங்கே யாருக்காக வந்து அமர்ந்திருக்கிறான்.

 அந்தப்பெண்ணை வாய்கூசாமல் என்னவெல்லாம் சொன்னாள். அது அப்படியே அவள் பெற்ற குழந்தையை தாக்கியதும் இல்லாமல் அவளையே தாக்கி விட்டதே. அவளின் மனம் என்ன பாடுப்பட்டிருந்தால் தனக்கும் தன் மகளுக்கும் இந்த நிலை வந்திருக்கும்.வெண்ணிலாவிடம் மன்னிப்பு கேட்க கூட தனக்கு தகுதி இல்லையே.. குணா சொன்னது உண்மைதான்.. எல்லாமே தன்னுடைய மடத்தனம். இனி உயிரோடு இருந்து என்ன செய்வது.. கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்தாள்.. கை பையில் கையை விட்டு துழாவிக் ஒரு பாட்டிலை கையில் எடுத்தாள்..

 தனக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றதுமே தனது அம்மாவின் தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்து வைத்திருந்தாள் கங்கா.. இப்பொழுது அதை எடுத்து கையில் கொட்டினாள். மொத்தமாக வாயில் போட்டு விழுங்கிட போகும் ஒரு நிமிடம் ஆவலாக அறை வாயிலை திரும்பி பார்த்தாள்..அங்கே குணா நின்றிருப்பான் என்று. அவளின் ஆசை நிராசை ஆனது. அவன் சென்று விட்டான்.உண்மைதான் இவளைப் போன்ற ஒருவளை காதலித்த பாவத்திற்கு அவனுக்கும் இந்த தண்டனை தேவைதான்..

 தண்ணீர் இருக்கிறதா என்று அறையை சுற்றி நோட்டமிட்டாள். அங்கே தண்ணீர் இல்லை. இந்த மாத்திரையை சாப்பிட்டு விட்டு  தனது கைப்பேசியில் ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தன்னுடைய சாவிற்கு யாரும் காரணமில்லை தனக்கு இந்த பிரச்சனை என்றதும் அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த முடிவுக்கு வந்து விட்டதாக ஒரு வீடியோ செய்ய நினைத்தாள். எனவே முதலில் தூக்க மாத்திரை சாப்பிடுவதா அல்லது வீடியோ செய்வதா என்று குழப்பம் அவளுக்கு எழுந்தது. முதலில் வீடியோ எடுப்பது என்ற முடிவுக்கு வந்தவள் கையில் மாத்திரையோடு தன் சாவிற்கு யாரும் காரணமில்லை என்று வீடியோ எடுத்து சேவ் கொடுத்தாள்.

 பின்பு வழியும் கண்ணீரோடு மாத்திரைகளை வாயில் கொட்டிக் கொண்டாள்.. வரண்டு போயிருந்த தொண்டையில் ஒரு மாத்திரை கூட இறங்கவில்லை.. விழுங்க மிகவும் சிரமப்பட்டாள்.. அவளது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவள் செய்த பாவங்கள் எல்லாம் அவளை சுற்றி வட்டமிட்டன. இறுதியாக ஒருமுறை தன் குழந்தையை தூக்கி அதன் பாதத்தில் முத்தமிட ஆசைப்பட்டாள். அம்மாவை மன்னித்து விடு என கூற அவள் மனம் அடித்துக் கொண்டது.

 ஆனால் வேண்டாம்,குழந்தையை பார்த்தால் அவளது முடிவு மாற கூட வாய்ப்பு உள்ளது.. இப்படிப்பட்ட ஒரு அம்மா குழந்தைக்கு இருக்கவே கூடாது..  வெண்ணிலா தன்னுடைய குழந்தையை பெற்று தன்னை விட மேலாக பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை கங்காவிற்கு மேலாக இருந்தது. எனவே மாத்திரைகளை சிரமப்பட்டு விழுங்க முயற்சித்தாள்.. அப்பொழுது அவள் முதுகில் படிரென்று ஒரு அடி விழுந்தது.

எதிர்பாராத இந்த அடியால் அவளது வாயிலிருந்து மாத்திரைகள் அனைத்தையும் துப்பிவிட்டாள்.. அப்பொழுதும் சில மாத்திரைகள் வாய்க்குள் ஒட்டிக் கொள்ள அவளது கன்னத்தை இருபக்கமும் அழுத்திப் பிடித்து அவளது வாய்க்குள் விரலை விட்டு அந்த மாத்திரைகள் அனைத்தையும் வெளியே எடுத்து போட்டான் குணா. அவன் தன்னை விட்டு சென்று விட்டான் என எண்ணியவளுக்கு அவனைக் கண்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"மாமா என்ன மன்னிச்சிருங்க..நா தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்..மன்னிச்சிரு மாமா" மாமா என்பது அவளது அந்தரங்க அழைப்பு.. காதல் பொங்கும் வேலையில் மட்டும் தான் அவனை மாமா என்பாள்.. இப்பொழுது அவள் மனம் முழுவதும் அகங்காரமோ வேதனையோ கிடையாது. அங்கே இருக்கும் கங்கா குணாவின் மனைவி. குணாவின்  காலில் விழுந்து அவள் மன்னிப்பு கேட்க அவளை அப்படியே தூக்கி அணைத்து கொண்டான் குணா..

"ஹேய் எனக்கு தெரியும் நீ திருந்தி வருவேனு.. நான் இவ்ளோ நேரம் ரூமுக்கு வெளிய மறைஞ்சிருந்தேன்.. நீ மாத்திரைய எடுக்கும் போதே வந்திருப்பேன். ஆனா சாவுனா உனக்கு என்னானு தெரியணும். சாவு பயத்துல தான் உன் அறிவு கண்ணு தொறக்கும்.. அதான் வெயிட் பண்ணேன்.. என்ன விட்டுட்டு போய்டுவியா கங்காம்மா"அவனது கண்களிலும் கண்ணீர்.. கங்கா குணாவை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.. அவளது கண்களில் கண்ணீர் வற்றிய பாடு இல்லை. அவனும் பலவாறாக சமாதானம் சொல்லி ஓய்ந்து இறுதியில் அவளது இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.

 இவ்வளவு நேரம் இருந்த மன வேதனைகள் நீங்கி அந்த இதழ் முத்தம் இருவரின் உண்மையான நேசத்தை அங்கே வெளிப்படுத்தியது. அவளது கைப்பேசியை எடுத்து அவள் பதிவு செய்த வீடியோவை நீக்கினான் குணா. கண்ணீரைத் துடைத்து அவள் கை பிடித்து கீழே அழைத்து வந்தான். மேலே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரியாமல் அங்கே அமர்ந்து இருந்தார்கள் ராஜ் வெண்ணிலா கங்காவின் தோழி அனைவரும். கமலா மட்டும் அறைக்குள்ளிருந்து கதவை தட்டி சலித்துப்போய் அப்படியே அமர்ந்து விட்டார்.

 மாடியிலிருந்து இருவரும் ஒன்றாக கைகோர்த்து நடந்து வருவதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் எழுந்து நின்றனர். குணா ராஜை பார்த்து சிரித்துக்கொண்டே கட்டை விரலை உயர்த்திக் காட்ட கங்கா நேராக நடந்து வெண்ணிலாவின் அருகே வந்தாள். வெண்ணிலா அவளை மிரண்டு பார்க்க கங்காவோ வெண்ணிலாவை நோக்கி கை கூப்பிருந்தாள்..

"என்ன மன்னிச்சிரு வெண்ணிலா.. உன்ன ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன்.. உன் நல்ல மனச புரிஞ்சிக்காம பேசுனத்துக்கு தான் கடவுள் நல்ல தண்டன கொடுத்துடாரு.."

"அண்ணி பரவாயில்ல ஏன் பீல் பண்றிங்க.. எல்லாம் சரியாயிரும்.. நீங்க குணா அண்ணே பட்டு எல்லோரும் சந்தோசமா இருந்தாலே போதும்"என்ற வெண்ணிலாவை அணைத்துக் கொண்டாள் கங்கா..

கங்காவின் கண்கள் சோபாவில் படுத்து கொண்டு இவர்களை பார்த்து கொண்டிருந்த பட்டுவின் மேல் விழுந்தது.. முதன் முறையாக தன் குழந்தையை மெய்யான தாய் பாசத்துடன் நெருங்கினாள் கங்கா.மூன்று மாத குழந்தை அவளை தன் பொட்டுக் கண்களால் விழித்து பார்த்தது. கங்கா பட்டுவை தூக்கினாள். பட்டு அழவில்லை. மாறாக தன் தாயின் உடற் சூட்டினை உணர்ந்து கொண்டாள்.

கங்கா கண்ணீரோடு இருதயாவின் பர்த் மார்கில் முதன் முதலில் முத்தமிட்டாள்.ராஜ் சென்று கமலா இருந்த அறைக்கதவை திறக்க அவனை வசைப்பாடிக் கொண்டே வெளியே வந்த கமலா கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..

தொடரும்..






Comments

  1. Sema. Thai kelavi kudaiya kulappa poguthu

    ReplyDelete
  2. Sis semamya iruku sis Thai kilaviya ethdu panunga sis aana semmaya pogthu sis naliku story podunga sis nallaruku sis soooprrr storyyy😺😍😍😍

    ReplyDelete
  3. Ahha semaaaaa super ❤❤❤❤❤❤👌👌👌👌

    ReplyDelete
  4. Nice ppa
    👋👌💐💐💐

    ReplyDelete
  5. Semmma ud sis super guna what a man pasama sonna ivangaluku purinji irukum semmma move guna semmma super sis nce ud

    ReplyDelete
  6. Sena episode....... ❤❤❤❤

    ReplyDelete
  7. Semma epi akka..🥰🥰ganga ava thappa realize pannikita...kamala kum intha mathiri nalla puthiya varanum

    ReplyDelete
  8. குணா சூப்பர் அவளை வேணான்னு விட்டு போகாம அவளை திருத்திட்ட

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்