பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 6

பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு
காவிய மாகிட லாச்சு

“பாப்பா என்ன”

“வேணா ராஜ்.. எதுவும் பேசாத.. கொஞ்ச நேரம் பெட்ல சாஞ்சு ஒக்காரு. உன் கைய இறுக்கமா புடிச்சிகிட்டே உன் நெஞ்சுல சாஞ்சுக்குறேன்..”கமலா பேசிவிட்டு சென்றதும் ராஜ் நிலாவை அணைத்து கொண்டு மன்னிப்பு வேண்ட வாயெடுக்க அவனை மேலே பேச விடாமல் அவன் வாயை தனது வலக் கரம் கொண்டு மூடியவள் இவ்வாறு கூறினாள்..

அவன் நெஞ்சில் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருந்தவளை பிரிக்க மனமில்லாமல் அப்படியே தூக்கிக்கொண்டு பெட்ரூம் உள்ளே சென்றான் ராஜ்.. நிலா கூறியபடியே அவனது கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கண் மூடினாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அவள் அழவில்லை.அவள் அழுதால் அவன் தாங்கமாட்டான். அவனுக்காக அவளுடைய அழுகையை பல்லைக் கடித்து முழுங்கினாள் நிலா.. ராஜின் நிலை அதை விட மோசம். எங்கே தான் வருந்தினால் தன்னைக் கண்டு அவள் மேலும் வருந்துவாளே என்று தன்னுடைய மனத் துயரத்தை தன்னுள்ளே புதைத்து கொண்டான்.

நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாக கையைப் பிடித்துக்கொண்டு இருப்பவளின் மனநிலை அவனுக்கு நன்றாக உரைத்தது.. இருவருமே பேச பயந்து தங்களுடைய அணைப்பை இன்னும் இறுக்கமாக்கி கொண்டனர்.அவள் உச்சந்தலையில் தன் இதழ் பதித்து அதை விலக்க மனமின்றி அப்படியே அமர்ந்து கொள்ள அவளுக்கும் அந்த மோகன நிலை தேவையாக இருந்தது..நேற்று காதல் கடத்தல், காலையில் கல்யாண அலைச்சல் பிறகு கமலாவின் தீ சொற்கள் இப்படி நிலாவை அலைக்கழிக்க தன்னவன் நெஞ்சில் சாய்ந்தவுடன் அவளது கண்கள் நிம்மதியாக மூடிக்கொண்டது.

அவளது தலை முடியை கோதிக்கொண்டே அவளின் கொழு கொழு கன்னத்தை தடவி கொண்டு இருந்தான் ராஜ்.. வெண்ணிலா, ராஜ் மித்ரன் இவர்களின் காதல் தொடங்கிய நாட்கள் ஒரு மாதமே.. அன்று அவளின் வீட்டில் அவளைப் பெண் பார்த்துவிட்டு தன்னுடைய மனதை அவளிடம் உரைத்தவன் குடும்பத்தோடு தன் வீட்டிற்குச் சென்று விட்டான். இரவு வெண்ணிலாவின் சகோதரிகள் அவளை படுத்தி எடுக்க அந்நேரம் பார்த்து அவளுக்கு அழைத்தான் ராஜ். அவனுடன் பேசி விட்டு நிம்மதியாக உறங்கியது நிலா மட்டுமே.

அவளின் குரலைக் கேட்டு தன் உறக்கத்தை தொலைத்தான் ராஜ். அவனால் அவளை விட்டு இருக்கவே முடியவில்லை. இரண்டு நாள் முன்பு கைப்பேசியில் பார்த்த முகம். இன்று நேரில் பார்த்த பின்பு அவன் மனதில் பச்சை குத்தியதை போல ஒட்டிக் கொண்டது.இப்பொழுது அவளது குரலைக் கேட்டதும் தன்னுடைய மனதை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். மல்லாந்து படுத்து விட்டத்தை பார்ப்பதில் என்ன சுகம் என்று வடிவேல் சொல்லியதை போல மல்லாந்து படுத்திருந்தவன் இப்படி படுத்தால் உறக்கம் வராது என்று வழக்கம் போல குப்புறப்படுக்க திரும்பினான்.

சுர்ரென்று வலி அவன் மூளை நரம்பை தாக்கியது. என்னவென்று பார்த்தால் அது அவனின் ஆண்மையின் எழுச்சி.. சாதாரண ஆண்களைப் போல அவனுக்கும் உணர்வுகள் உண்டு.. டீன் ஏஜ் பருவம் வரை கண்ணில் படும் அழகிய பெண்களைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படுவான்.ஆனால் அவர்களை தவறாக எண்ண மாட்டான்.. பின்பு தந்தையை இழந்து குடும்ப பொறுப்பை தனதாக்கிக் கொண்டதும் எப்பொழுதாவது அவனுடைய உணர்ச்சிகள் வெளியே தலைகாட்டும். அப்பொழுதெல்லாம் சுய இன்பத்தால் தன்னுடைய உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக் கொள்வான். ஒரு கட்டம் வரை அதனை பின் பற்றியவன் பின்பு மனதைத் தியானத்தில் செலுத்தி தன்னுடைய உணர்வுகளை அடக்கி வாழக் கற்றுக் கொண்டான்.

முப்பது வயதான அவனுக்கும் இளமையின் கனவுகள் நிறைய இருந்தது. அவற்றை இப்பொழுது உள்ள நவநாகரீக யுவன் யுவதிகளை போல தவறாக பயன்படுத்த அவனுக்கு விருப்பமில்லை.. காதல் காமத்தை இரண்டாகப் பிரித்து காமத்திற்கும் மட்டும் ஒரு மணி நேரம் கூறிவிட்டு தங்களின் உடல் தேவை முடிந்ததும் கைகுலுக்கி விட்டு செல்ல அவனுக்கு நீண்ட நேரம் பிடிக்காது. பல பெண்கள் அவன் உருவம் பார்த்தும் அவன் பழகும் விதம் பார்த்தும் தாங்களே அவனை வலிய அழைத்து இருக்கிறார்கள்..அவனின் நேர்மை அவனை தடுமாற வைக்க வில்லை..

தனக்கென்று ஒருவள் வருவாள் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.தன்னுடைய ஆண்மை அவளை கண்டால் மட்டுமே எழுச்சி அடைய வேண்டும்.அவள் ஒருவளின் பெண்மையை மட்டுமே தனது ஆண்மை அரசாள வேண்டும் என உறுதியாக இருந்தான் ராஜ்.. நிலாவின் புகைப்படத்தை முதன் முதலில் பார்த்த போது கூட அவனிடம் இல்லாத மாற்றம் அவளை இன்று நேரில் சந்தித்த போதும் தடுமாறாத மனம் இப்போது அவனை அறியாமலேயே தடுமாறி தவித்தது. யாரிடமும் உணராத உணர்வுகளை அவளின் குரல் அவனுக்குக் கொடுத்தது.

சங்கடமாக தனது ஆண்மையை பார்த்து”உனக்கு இன்னும் நேரம் வரல.. என்ன தூங்க விடு”என கூறியவன் உறங்க முடியாமல் புரண்டு தவித்து இறுதியில் ஒரு கேஸ் சிகரெட்டை இழுத்து முடித்து உறங்க மணி நள்ளிரவு மூன்றாகி விட்டது..உறங்குவதற்கு முன் நிறைய யோசித்தான் ராஜ்.ஆனால் உறங்கி எழும்போது அவன் மனம் ஒன்றை தீர்மானம் செய்தது. இந்த ஜென்மத்தில் வெண்ணிலா தான் அவனது உயிரில் கலந்த உறவு என்று.

காலையில் எழுந்ததும் தனது கைப்பேசியில் எடுத்தவன் வால்பேப்பராக சிரித்துக் கொண்டிருந்த நிலாவின் முகத்தை ஒரு விரலால் வருடினான்.. மீண்டும் அவனது இடுப்புக்குக் கீழே மாற்றம் ஏற்பட்டது..சிரித்துகொண்டே பாத்ரூம் சென்றவன் ஷவரின் அடியில் குளிர்ந்த நீரை திறந்து நின்று கொண்டு தனது உஷ்ணத்தை தணித்தான்..

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யாரோ ஒருவரிடம் மட்டுமே அவர்களின் உணர்வுகள் தலைதூக்கி போராடும்.. கண்ணில் படுபவரின் மேலெல்லாம் வருவது காம இச்சை.. அதில் துளிகூட காதல் இருக்காது. நாகரீகம் இருக்காது. கேவலமான ஒன்றாக அது இருக்கக் கூடும்.. ஆனால் அது மனித இயல்பு.. ஒரு வயது வந்தவுடன் மனம் பக்குவப்பட்ட பின் யாரோ ஒருவரிடம் நமது உணர்வுகள் நம்மை அறியாமல் வெளிப்படும். மனதிற்குப் பிடித்த ஒரு குரல் கேட்டதும் நமது இதயம் இறக்கை இல்லாமல் பறக்க ஆரம்பிக்கும். ஆண்களாக இருந்தால் தன்னவளின் குரலைக் கேட்டதும் அவளைப் பார்த்ததும் ஏன் அவளை நினைத்தால் கூட அவர்களின் ஆண்மை எழுச்சி பெறும். இது தவறான விஷயம் அல்ல. அந்தப் பெண்ணின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு. உரிமை கலந்த பாசம்.

அதேபோல் பெண்களுக்கும் தன்னவன் கிளர்ச்சியூட்டும் விஷயங்களைப் பேசும் போது வெளியே முறைப்பது போல காட்டிக்கொண்டாலும் உள்ளே அவனுக்கான உரிமையான சிணுங்கள் சிணுங்கிக் கொண்டே இருக்கும்..என்னவளிடம் தானே நான் இப்படி பேச முடியும் என்று ஆண்களும் என்னவன் தானே பேசுகிறான் என்று பெண்களும் நினைத்துக் கொள்வார்கள்.அது உண்மையும் கூட.மற்ற யாரிடமாவது நாம் நமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா? நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒரு பெண் தன்னுடைய இதர உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா..?

அனைத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவு கணவன் என்ற உறவு.. காதலிக்கும் போதும் சரி சிலர் தெரிந்தே காதலிப்பார்கள். இந்த காதல் எந்நேரமும் புட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று.. சிலர் தங்களுடைய காதலில் உறுதியாக நிற்பார்கள் இடி புயல் மின்னல் எது வந்தாலும் தங்கள் துணையை விட்டு செல்ல மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் காதலிக்கும் போதே தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.. அனைவரும் இதை செய்வது தான் ஆனால் சாதாரணமான காதலில் காமம் நிறைய இருக்கும்.. ஆத்மார்த்தமான காதலில் காமத்தோடு சேர்த்து அன்பும் அக்கறையும் மிகுதியாக காணப்படும்.

அன்று அவள் குரலைக் கேட்டதற்கே எழுச்சி அடைந்த தன்னுடைய ஆண்மை இன்று தன் மார்பில் சட்டமாக சாய்ந்து சுகமாக உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு சும்மா இருக்குமா.. ஆனால் இந்த நேரம் அவள் கண்விழித்து என்னைப் பார்த்து விட்டால் எவ்வளவு கேவலமாக நினைப்பாள் என்று எண்ணிய ராஜ் நீண்ட பெருமூச்சுகளை எடுத்து தன்னை சமன் செய்து கொண்டான்.

மனதை ஒரு நிலைப்படுத்தி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.சற்று சரிந்து படுக்கலாம் என்று அவன் அசைய அந்த அசைவில் கண் விழித்தால் நிலா..

“ஐயோ ஸாரி ராஜ்.. உனக்கு மொதுகு வலிக்கும்ல..இரு இப்ப படு” அவன் மேலிருந்து எழுந்து அமர்ந்து கொள்ள அவளைப் பார்த்து முறைத்து வாகாக படுத்துக்கொண்டவன் அவளை இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான்..

“என் மொதுகே உடைஞ்சாலும் சரி.. நீ என்ன விட்டு தள்ளி போகாத..”

“அவ்ளோ ஸ்ட்ரோங்கா நீயு”என்றவள் வேண்டுமென்றே அவன் மேல் ஏறி படுத்து கொண்டாள். பாவம் ராஜ் சத்திய சோதனையில் சிக்கி கொண்டான்.. முப்பது வருட பிரம்மச்சரியம் இப்பொழுதே என்னை விடுவையென்று அலற மனதை அடக்க வழியின்றி தன் மேல் படுத்து தன்னுடைய தாடியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவளின் விரல்களை ஒரு கரத்தால் பிடித்து மறு கரத்தால் அவள் இடை பற்றி அவளை இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி பொசிஷன் சரியாக அமைய அவளின் பருமனான உதடுகளை கப்பென்று சிறை செய்தான்.

நிலா விழிவிரித்து அவனை பார்த்தாள். இதழில் முத்தமிட்டுக்கொண்டே அவளின் வியந்து பார்வையைக் கண்டு கண்ணடித்தான் ராஜ். அதிர்ச்சி விலகி நிலாவிற்கு வெட்கம் வந்து மையலிட்டது.அவளது கண்களும் கிறக்கத்தில் மூடிக்கொள்ள அங்கே முத்த சத்தம் மட்டும் வெகு நேரம் ஒலித்தது..

ராஜின் கரங்கள் அனுமதியின்றி அவள் உடல் மேல் தன் தேடலை தொடர பூஜை கரடியாக ஸ்வீட்டி அழைத்தாள். கைபேசி அழைப்பு கேட்டு ராஜை பிரிந்து எழுந்தாள்..”ஹேய் என்னடி”

“போன் அடிக்குது ராஜ்.. யாருனு பாக்குறேன்”

“அதெல்லாம் முக்கியமாடி..என்ன மாறி நிலைமையில நா இருக்கேன் தெரியுமா..முட்ட கண்ண வெச்சு கொஞ்சம் குனிஞ்சு பாருடி”அவன் தலையில் கொட்டியவள்

“ராத்திரி ராத்திரி..”என்றாள்..

“இப்பவே.. ராத்திரி வர தாங்காது. மாமா பாவம்ல”

“சத்தியமா இல்ல.. ஓடிரு”

“செல்லம் பாப்பா குட்டிம்மா ப்ளீஸ்டி”கெஞ்சினான் ராஜ்

“ஐயோ கருமம் கெஞ்சாத எரும.. ஏதாச்சும் முக்கியமான ஃபோனா இருக்க போது இரு..” அவன் கெஞ்ச கெஞ்ச அவனிடமிருந்து திமிரி எழுந்தவள் அதன் பிறகு ஸ்வீட்டியுடன் தனது பேச்சை தொடர்ந்தாள்.. அந்த நேரம் ஸ்வீட்டி உலகத்திலேயே பெரிய எதிரியாக தோன்றினாள் அவனுக்கு.

ஸ்வீட்டியுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள் பார்வையெல்லாம் ராஜ் மேலேயே இருந்தது. அந்த பார்வை அவளுக்கு புரியாதா என்ன? அவனை இன்னும் ஏங்க வைக்க அவளுக்கு ஆசையாக இருந்தது.. ஆனால் மணி இரவு ஏழாகி விட்டது.. பசி வயிற்றை கிள்ள தொடர்பை துண்டித்தவள் படுத்து கிடந்த ராஜ் அருகே சென்று”ராஜ் பசிக்குது”என்றாள்..

“எனக்கும்”என்றான் அவன் ஏங்கதோடு..

“அது வேற.. இது வேற ராஜ்.. ஏதாச்சும் ஆர்டர் பண்ணு”

“திங்குறதுலயே குறியா இருக்கியே.. குத்து கல்லு மாறி புருஷன் இருக்கேனடி.. என்ன கொஞ்சம் பாரு”

“உன்ன தான பாத்துட்டேன்..இப்ப நீ ஆர்டர் பண்ணல ராத்திரி தனியா படுத்துக்க”

விருட்டென எழுந்து அமர்ந்தவன் வேகமாக உணவை ஆர்டர் செய்ய அடுத்த அரை மணி நேரத்திற்குள் உணவு வந்து சேர்ந்தது.. இருவரும் பொதுவாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் சாப்பிட்டு முடிக்க ராஜ் குளித்து முடிக்க நிலா குளிக்க சென்றாள்..அவள் வருவதற்குள் அறைக்கு ரூம் ஸ்ப்ரேய் அடித்து குட்டி குட்டி லவ் வடிவ மெழுகுவர்த்திகளை ஏற்றி கட்டிலை சுற்றி ஃபைரி லைட் (fairy light) பொருத்தி அந்த அறையை அழகாக மாற்றினான். இதெல்லாம் முன்னேற்பாடாக அவன் வாங்கி வைத்திருந்தது..

நிலா குளித்து ஈர துண்டுடன் வெளியே வர அவளை கண்டவன் நெஞ்சு எகிறி துடித்தது.. அவனை அறைக்குள் எதிர்பாற்க்காத நிலா தடுமாறி தவித்து திருட்டு முழி முழித்து செய்வதரியாது திரும்பி நின்று கொள்ள ராஜ் மெல்ல அவளை நெருங்கினான்.. அவள் வெற்று தோள்களில் இதழ் பதித்து அங்கே சொட்டி கொண்டிருந்த தண்ணீர் துளிகளை உறிந்து அவளை இம்சிக்க நிலா தோய்ந்து போனாள்.. அவளை அப்படியே முன்னால் திருப்பி அவள் தாடையில் கை வைத்து தன்னை பார்க்க செய்தான்..

“கல்யாணம் ஆச்சு இதெல்லாம் உடனே நடக்கனும்னு இல்ல.. ஆனா சும்மா இப்டி டெகரெட் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு..பாப்பா நா உன்ன லவ் பண்றேன்.. இந்த உலகத்துள்ள இருக்குற எல்லாத்தையும் விட எனக்கு முக்கியமானது நீதான்.. என்ன நடந்தாலும் உன்ன நா விட்டு கொடுக்க மாட்டேன்.. ஐ லவ் யூ குட்டிம்மா”என்று அவள் கண்களை பார்த்து கொண்டு சொல்ல சொக்கி போனாள் நிலா..

அவளின் கரம் மெல்ல உயர்ந்து அவன் கழுத்தை கட்டிகொண்டது.. அவளின் கண்களை பார்த்து கொண்டே” உனக்கு ஓகேவா”என்று கேட்டான்.. நிலா சிலிர்த்து போனாள். அவளின் முகம் மெழுகுவர்த்தி ஒளியில் மின்ன கன்னங்கள் இரண்டும் பூரித்து சிவந்தது.ராஜ் குனிந்து அவள் தாடையில் இதழ் பதித்தான். பின் கண்களில். அவள் முகத்தில் வெள்ளையாக இருக்கும் இடங்களில் எல்லாம் மென்மையாக இதழ் தீண்டினான்.

அவள் கால்கள் மடிய அவளை தூக்கியவன் மெத்தையில் கிடத்தி தன் மனைவியை காதல் செய்தே சுகமாக கொல்ல தொடங்கினான். இந்த கொலை தாக்குதலில் யாரை குற்றம் சொல்வது? கொலை செய்ய தூண்டியவளையா? கொலைக்காரனையா? ஆனால் தண்டனை மட்டும் இனிமையாக கிடைக்கும்..

தொடரும்…

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்