பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 17

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட இடைவேளைக்கு பிறகான பதிவு இது. இனி எப்போதும் போல பதிவுகள் வரும் நன்றி.

கங்காவின் குழந்தை மிகவும் அழகாக இருந்தது.  ஆனால் நெற்றி தொடங்கி கன்னம் வரை வலது பக்கம் முழுவதும் கருப்பாய் பெரிய மச்சம் ஒன்று இருந்தது.பெண் குழந்தை. அதும் முகத்தில் இம்மாதிரி மச்சத்தோடு பிறந்தால் அதன் வருங்காலம் என்ன ஆவது?

 நல்ல மனம் படைத்த தாயாக இருந்தால் எப்பேர்ப்பட்ட குழந்தையையும் அரவணைத்து ஆறுதல் படுத்தி தைரியம் ஊட்டி வளர்ப்பாள். கங்காவின் மனம் மிகவும் குறுகியது. ஒரு நாளுக்கு குறைந்தது ஆறு முறையாவது முகத்தை கழுவி  மொய்ஸுராய்ஸ்ட் போட்டுக் கொள்வாள். அவளது அறையில் ஒரு பெரிய கபோட் முழுவதும் அலங்கார பொருட்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அழகுக்கு முதல் உரிமை கொடுப்பவள் கங்கா.

 தன் குழந்தை இப்படி பிறந்து விட்டதே எனும் வேதனையை விட நிலாவுக்கு தன் குழந்தை சற்றும் குறைவில்லாத குறையோடு பிறந்திருப்பதாக எண்ணி மனம் குமைந்தாள்.. குழந்தை பிறந்து அதனை அவள் அருகில் எடுத்து வந்து தாதி படுக்க வைத்து சென்றதில் இருந்து குழந்தையை ஒரு விரலால் கூட ஸ்பரிசித்து பார்க்கவில்லை கங்கா.குழந்தையை பார்த்தாலே அவளது கண்கள் அருவருப்பை சிந்தியது.

 அவளுக்கும் மேலாக இருந்தார் கமலா.பேத்தியை தொட்டும் கூட பார்க்கவில்லை. குழந்தை ஆரோக்கியமாக பிறந்ததே என்று கடவுளுக்கு நன்றி சொல்லாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு லபோ லபோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். குணா இவர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் தன்னுடைய குழந்தையை தூக்கி முத்தம் வைத்து அதனை தாய்மாமன் கையில் கொடுத்தான்.

மருமகளை ஆசையாக கையில் வாங்கிய ராஜ் அவளுக்கு முத்தம் வைத்து கொஞ்சி மகிழ குழந்தையைத் தூக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது நிலாவுக்கு.பொதுவாகவே அவளுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம்.குமுதாவின் மகளான அபியை கூட எந்நேரமும் தன் வீட்டிற்கு தூக்கி வந்து இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டே திரிவாள். குமுதாவே வந்து அபியை வாங்கினால் அன்றி குழந்தையை கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட இவளுக்கு மனமே வராது.

அப்படியிருக்க கொழு கொழுவென்று இருந்த மருமகளை தூக்கி பார்க்க கைகள் பர பரத்தன நிலாவிற்கு. ஆசையாக அவள் கை நீட்ட தன்னவளின் ஆசையை புரிந்துகொண்ட ராஜ் மென்மையாக அவளிடம் குழந்தை நீட்ட ஆசையாக பஞ்சுபொதி ஒன்றை தன் கரங்களில் சுமக்க எதிர்பார்த்த அவளுக்கு கிடைத்தது கமலாவின் கடுமையான அறை. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கமலா  நிலாவை அறைந்திட தடுமாறி கீழே விழுந்தாள் நிலா.

சிந்து வஞ்சதோடு நிலா அடி வாங்கியதை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்க ராஜ் "அம்மா" என்று கத்தியது அந்த அறையைத் தாண்டி வெளியே கேட்டது..  குழந்தையை குணாவிடம் கொடுத்து அவன் திரும்புவதற்குள் கமலா நிலாவின் கூந்தலைப் பற்றி குலுக்கி மேலும் இரண்டு அறை அறைந்தார். வெறியோடு அவளை இன்னும் தாக்க கையை ஓங்க அவரின் கையைப் பிடித்து தடுத்து அவரை தள்ளி விட்டான் ராஜ். கீழே விழுந்து கிடந்த தன் மனைவியை தூக்கியவன் அவளின் இருபக்க கன்னங்களில் தெரிந்த கைரேகை கண்டு வெறியோடு தன் தாயை முறைத்தான்.

"ம்மா இன்னொரு தடவ என் நிலா மேல கைய வெச்ச அவ்ளோ தான் சொல்லிட்டேன்."நிலாவை தன் தோளோடு சேர்த்தணைத்தவன்  கமலாவை நோக்கி ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்தான். இதற்கெல்லாம் அடங்கும் ஆளா கமலா? இன்னும் ஆவேசத்துடன்

"கை வெச்ச என்னடா பண்ணிருவ.. சொல்லு என்ன பண்ணிருவ.. தலைய எடுத்துருவியா.. இல்ல என்மேல கை வெச்சிருவியா.. உன்ன பெத்த அம்மா டா நானு. கண்டவளுக்காக என்ன மிரடட்டிட்டு இருக்க. என்ன நெனச்சிட்டு ஆடுற நீ.. அவள எதுக்குடா இங்க கூடியாந்த?இந்த நாசமாபோறவ கால் பட்ட நேரம் என் மவளுக்கு இப்டி ஒரு புள்ள பொறந்துருக்கு..மனசுலயே கரிச்சு கொட்டிருப்பா போல. அதான் அவ சாபம் தான் புள்ள இப்டி பொறந்துருச்சு.. ஐயோ நான் பெத்த மவளே கிளியாட்டம் இருந்த உன்ன கரைச்சேக்கவே நா எப்பாடு பட்டேன்.

வெளாங்காவெட்டி பயல புருஷனா வெச்சிக்கிட்டு இந்த புள்ளய எப்டிடி கர சேப்ப.. எவன் கட்டுவான்? இந்தா நிக்கிறாலே வெந்த சீக்குக்காரி அவளுக்கு மூஞ்சி வெந்து கெடக்குனா உனக்கு பொறந்ததுக்கு தீஞ்சு கெடக்கு. இத வெச்சிட்டு என்னடி பண்ணுவ. வேணாடி அம்மா சொல்றது கேளு. இத வெச ஊசி போட்டு கொன்னுப்புட சொல்லு டாக்டர."கமலாவின் கூற்றைக் கேட்டு அதிர்ந்து போயினர் அங்கிருந்தவர்கள்.

 குணா வாயைத் திறப்பதற்குள்"வெச ஊசியா.. அட போம்மா. இந்த சனியனுக்காக நான் உள்ள போய் ஒக்கார முடியுமா? இத பாக்கவே எனக்கு புடிக்கல.மாமா இத கொண்டு போய் எங்காச்சும் அனாத ஆசிரமத்துல விடுங்க"உலகில் எந்த தாயும் சொல்லக்கூடாத வார்த்தைகளை தனது பிஞ்சு குழந்தையை பார்த்து உதிர்த்தாள் கங்கா.

"ஹேய்" என்று குணாவின் ஆத்திரமான குரலில் அனைவரது கவனமும் அவன் மேல் படிந்தது. கை முஷ்டி இறுக ஒரு கையால் தன் குழந்தையை மாரோடு அணைத்து கொண்டிருந்தவன் ரௌத்ரகரமாக அங்கே காட்சியளித்தான். வேகமாக கங்கா அருகே சென்றவன் பச்சை நிற கவுனிற்கு மேல் ஒய்யாரமாக தூங்கிக்கொண்டிருந்த தாலியை கையில் பிடித்து அவள் தலை வழியே கழட்டி எடுத்தான். இதனை சற்றும் எதிர்பாராத கங்கா அதிர்ச்சியில் அப்படியே சமைந்து விட்டாள்.

 கமலா குணாவை அடிக்கப் போக அவரைப் பிடித்து ஒரே தள்ளாக தள்ளினான் குணா. தங்கையை தாங்கிப் பிடித்த காளை பாண்டியன் மகனை கண்டிக்க அப்பாவாக கிட்ட வர அவரை அவன் முறைத்த முறைப்பில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றுவிட்டார். அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்"இந்த தாலிய இனியும் கழுத்துல போட்டுக்க உனக்கு உரிம இல்ல.உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணி நீ ஆடுன ஆட்டத்துக்கு எல்லாம் வளஞ்சு கொடுத்தேன் பாத்தியா அதான்டி நான் செஞ்ச தப்பு..

நீயெல்லாம் பொம்பளையே இல்ல.அப்றம் உனக்கு எதுக்கு புருஷன் புள்ள எல்லாம். இனிமே நாங்க உன் வாழ்க்கயில இல்ல நீ சந்தோசமா இரும்மா. வெளிய போ,பப்புக்கு போ,டிஸ்கோ போ நல்லா மினுக்கிட்டு சுத்து யாரும் உன்ன ஏன்னு கேக்க மாட்டாங்க. அவுத்து விட்ட காள மாடு மாதிரி போயி ஊரு மெஞ்சிட்டு வா. உனக்கு உன் ஆத்தா கூஜா தூக்கும்"

"குணா என் அம்மாவ பத்தி பேச நீ யாரு.. அந்த சனியனுக்காக என்ன பகச்சிக்காத. நான் இல்லாம அது வந்துருக்குமா..நம்ம லவ் அவ்ளோதானா.. என்ன வேணான்னு சொல்லிட்டல." பேய் பிடித்த மாதிரி கத்தியவள் படுக்கையிலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓட முயன்றாள். அவளை சிந்துவும் காமதேனுவும் பிடித்துக் கொண்டனர்.

" என்ன விடுங்க என் புருஷனே என்ன வேணான்னு சொல்லிட்டான்.இனிமே நான் உயிரோடு இருந்து என்ன பண்ண.. நான் சாகப் போறேன்..என் சாவ பார்த்து அவன் சந்தோஷப்படுவான். பொறந்த உடனயே அம்மாவ காவு வாங்க பாக்குது இது.. என் தாலிய அறுத்துருச்சு. என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு இன்னும் இது இருந்தா என்னன்னா பண்ணுமோ" பிடித்திருந்தவர்கள் கையை உதறிவிட்டு குணாவை நோக்கி ஓடிவந்தாள் கங்கா.

 வந்தவள் அவன் கையிலிருந்த குழந்தையை பிடுங்க முயற்சி செய்தாள். "இது வேணா குணா.. இது பீட.. இது வேணா கொன்றலாம்" என்று பைத்தியக்காரியைப் போல கத்திக்கொண்டே குழந்தையை பிடுங்குவதில் குறியாக இருந்தாள்.ராஜ் அவளை இந்தப் பக்கம் இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் வெறி வந்தவளைப் போல அவளது ஆவேசம்  அதிகமாக இருந்தது.

 ஒரு கட்டத்தில் குணா கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழ ஆத்திரமடைந்த குணா ஓங்கி விட்டான் ஒன்று கங்காவிற்கு. கன்னத்தை கையால் தாங்கிக் கொண்டு அவனை வெறித்து பார்த்தவளை" இன்னொரு வாட்டி என் குழந்தைய தொட்ட,தொட்ட கைய வெட்டி வீசிடுவேன்.. தாலிய கழட்டி எடுத்துட்டேன்ல.இனி நான் யாரோ நீ யாரோ.. இனிமே உனக்கு இந்த குழந்தை தேவைப்படாது. நானும் தேவைப்பட மாட்டேன். நான் போறேன் உங்கள மாதிரி ஈனப்பிறவிங்க கிட்ட என் குழந்தை வளரக்கூடாது."

"டேய் அம்மா கிட்ட இருந்து பால் குடி மறக்காத குழந்தய பிரிக்காதடா"காளை பாண்டியணை முறைத்த குணா

"யாரு அம்மா இவளா? இவ அம்மாவே இல்ல. அம்மா ரூபத்துல இருக்குற பிசாசு. இவ மூச்சு பட்டாலே என் பொண்ணு கருகி போயிருவா.. த்தூ".. அங்கிருந்து வெளியேற போனவனை தடுத்தாள் சிந்து.

"அண்ணா எங்க போற. அவ என் மருமக. என்கிட்ட கொடு நான் வளக்குறேன்"ராஜ் முன்பு நல்லவள் வேஷம் போட நடித்தாள் சிந்து.அவளது நடிப்பு திறனை கண்டு கொண்டான் குணா.

" யாரு நீயா? நீயும் இந்த பேய் கூட்டத்துல ஒருத்தி தான். உங்க யாரையும் நம்ப போறது இல்ல. ஹேய் கங்கா இனிமே புள்ள புருஷனு சொல்லிட்டு வந்த வெட்டி போட்ருவேன்" அவன் குழந்தையுடன் வெளியேறி விட அவனைத் தொடர்ந்து நிலாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு  வெளியேற சென்றான் ராஜ்.

அவனுக்கு தனது கடமையான சாபம் அளிப்பதை வாரி வழங்கினார் கமலா."பாவி எந்த நேரத்துல என் குடும்பத்துல கால் வெச்சாளோ எல்லாம் நாசமா போச்சு. என் மக தாலிய அறுக்க வெச்சிட்டா. ஹேய் நீ வெளங்க மாட்டடி. நா வயிறு எரிஞ்சு சொல்றேன் நீ வெளங்க மாட்ட.. "நிலா ராஜ் கரத்தை பற்றிக்கொண்டு கண்ணீரோடு அவனை ஏறிட்டுப் பார்க்க

"ம்மா வாய மூடு. இதுக்கும் மேல ஒரு வார்த்த பேசுன நீ செத்தா கூட கொள்ளி போட மாட்டேன். என் பொண்டாட்டியால இல்ல. உங்க கேடுகெட்ட தனத்தால தான் இன்னைக்கு இந்த நிலைம.." என்றவன் நிலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.  வெளியே குழந்தையோடு நின்று கொண்டிருந்தான் குணா.  அவனருகே சென்ற ராஜ் குணா தோள் மேல் கை வைக்க திரும்பிப் பார்த்தான்.

" மித்ரா உனக்காக தான் வெயிட் பண்றேன்..நா வேல விஷயமா பெங்களூரு போணும்.அங்க என் ஃப்ரண்டு ஒருத்தன் இருக்கான்.அங்க போனா கண்டிப்பா வேலை கிடைக்கும்."

"குணா எதுக்கு அங்கெல்லாம் போய் கிட்டு.. நமக்கு தான் இத்தன கடை இருக்கே.இதுல ஒன்னு நீ எடுத்துக்கோ.. அத வேணும்னா உன் பேருக்கே எழுதி தரேன்."

" அது சரிப்பட்டு வராது.அது உன்னோட உழைப்பு.நாங்க வந்து வேலை செஞ்சா சரியா இருக்காது. எனக்கு இதுங்க மூஞ்ச பாக்கவே பிடிக்கல. என் ஃப்ரண்டு கிட்ட இப்ப தான் பேசினேன்.கெளம்பி வா பாத்துக்கலாம்னு சொல்லிட்டான்.நான் போயிட்டு அங்க என்ன நிலவரம்னு பார்த்துட்டு வரேன்.அது வரைக்கும் என் குழந்தைய பாத்துக்குரிங்களா.."

"என் மருமகள நான் பாத்துக்குறேன்..நீ போயிட்டு வா.." ராஜை நன்றியோடு பார்த்தான் குணா.

 நிலாவின் பக்கம் பார்வையை திருப்பி"தங்கச்சி அவங்க பேசினது எல்லாம் மனசில் வெச்சுகாத.அதுங்க எல்லாம் மனித ஜென்மங்களே கெடயாது.அதுலயும் உன் மாமியாரையும் என் பொண்டாட்டியயும் எந்த ஜென்மத்துலயும் சேக்க முடியாது.அவங்க மனசு படிதான் எல்லாம் நடக்குது.

 என் மாப்ள உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ தைரியமா இரு. எக்காரணம் கொண்டும் குழந்தைய என் பொண்டாட்டி கிட்ட கொடுத்துராத..அதே மாதிரி என் தங்கச்சி என்ன தான் நல்லவ வேஷம் போட்டாலும் நம்பாத. அவளுக்கு மித்ரன பழிவாங்கனும்.அதுக்கு தான் இந்த மாதிரி நடிச்சுட்டு இருக்கா. இவங்க சூழ்ச்சியில நீ சிக்கிறாத..  உங்கள நம்பி தான் என் குழந்தைய கொடுத்துட்டு போறேன்"

"நான் பாத்துக்குறேன் அண்ணே. நீங்க போய்ட்டு வாங்க"என்றவள் குணாவிடம் குழந்தைக்காக கை நீட்டினாள்.அவள் கையில் தன் குழந்தையை கொடுப்பதற்கு முன் ஆசையாக அதன் முகவடிவை வருடி நிலா கையில் கொடுத்தான் குணா. அதன்பிறகு அங்கிருந்து தன் வண்டியில் சென்று விட்டான்.குழந்தையைத் தூக்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தார்கள் இருவரும்.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.நிலா குழந்தையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் பிஞ்சுக் கைகளில் முத்தம் கொடுப்பதும் அதனுடைய சிவந்த பாதத்தில் முகம் புதைத்துமாக அவள் இருப்பதை கண்டு புன்னகைத்துக் கொண்டான் ராஜ். பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை தூக்கி வந்தது பெரிய பாவம் தான். ஆனால் குழந்தையை கங்காவிடம் கொடுப்பது மரண தேவனிடம் கொடுப்பதற்கு சமமானது. எந்த நேரமும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம்.

 குழந்தை பெம்பர்ஸை நனைத்து விட்டு சிணுங்க வரும்போதே வாங்கி வைத்திருந்த இன்னொரு பெம்பர்ஸை எடுத்து மாற்றி விட்டு பால் புட்டியை எடுத்து சென்று கழுவியவள் வாங்கி வந்திருந்த குழந்தைகள் பால் மாவினை சுடு நீரில் கலக்கி அதனை நன்றாக ஆற்றி தன் நாவில் வைத்து சுவை பார்த்து எடுத்து வந்து குழந்தையை தூக்கி மடிமீது கிடத்தி அதன் இதழ் கிடையே பூதிங்கை வைத்தாள்.

குழந்தை பசியில் வேகமாக பாலை உறிஞ்சியது..கண்மூடி கொண்டே அது பால் அருந்தும் அழகை விழிமூடாமல் ரசித்தாள் நிலா.. குழந்தை பாலை குடித்து முடித்ததும் அதனை தூக்கி திருப்பி முதுகில் லேசாக தட்ட குழந்தை ஏப்பம் விட்டது. அவள் குழந்தையை லாவகமாக கையால அதனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ்.

 குழந்தையை மீண்டும் படுக்கையில் தூங்க வைத்தவள் ராஜ் அருகே வந்தாள்."ராஜ் நானும் ரொம்ப நேரமா பாக்குறேன்.ஏன் எங்களையே பாத்துட்டு இருக்க"அவள் மருத்துவமனையில் நடந்ததைப் பற்றி கிளறாமல் இயல்பாக பேச அவளது முயற்சியை புரிந்து கொண்டான் ராஜ்.

 அவளது கன்னக் கதுப்புகளை தடவிக்கொண்டே"இல்லடா எப்டி பத்து புள்ள பெத்த மாறி இவ்ளோ எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு உனக்கு"

"உனக்கே தெரியும் தானே எனக்கும் என் தம்பிக்கும் எத்தன வயசு வித்தியாசனு.. நான் சின்ன பொண்ணா இருக்கும்போது என் தம்பிக்கு அம்மா இப்படிதான் பால் கொடுப்பாங்க.  அதையெல்லாம் பாத்து பாத்து என் மூளைல ஸ்டோர் பண்ணி வச்சு கிட்டேன்.அது ஆபத்துக் காலத்துல கைகொடுக்குது"என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ராஜ்.

"உனக்கு வலிகளையா" அவள் கன்னத்தை தடவிக் கொண்டே அவன் கேட்க

"அடிச்சா வலிக்காதா.. ஆனாலும் பரவால்ல. அதனால தா பாப்பா நம்ம வீட்டுக்கு வந்தா.. பாவங்க பாப்பா அம்மா இல்லாம எப்டி. பெத்த புள்ளய கொல்ல சொல்ற அளவுக்கு மோசமானவங்களா அவங்க"

"நாமல்லாம் இல்லன்னா குழந்தய கழுத்த நேரிச்சு அப்பவே கொன்றுப்பாங்க.. குணா திரும்பி வர வரைக்கும் நாம நல்லா பாத்துக்கலாம்"

"இல்ல ராஜ்.அவருக்கு ஒர்க் கெடச்சு பெங்களூரு போய்ட்டா எப்டி வீட்ல குழந்தய பாத்துக்குவாரு. நாமளே பாப்பாவ பாத்துக்கலாம். எனக்கு நம்பிக்க இருக்கு. ஒருநாள் உங்க அக்கா திருந்தி வருவாங்க. ஒரு அம்மாவால குழந்தய விட்டு இருக்க முடியாது.. நீ குணா அண்ணே கிட்ட பேசு"

"ம்ம்ம் பேசி பாக்குறேன். ஆனா கங்கா திருந்துற ஜென்மம் இல்ல.."என்றான் ராஜ்.

தொடரும்..

Comments

  1. Chi avalai oru amma va pappa va poi kolla sollura, ava than apadi na atha petha amma kari kuta apdi than irukka...... Nila um raj um pappa va valakatum......👍

    ReplyDelete
  2. Superb sis.. I thinkBecause if child problems will come to Nila..keep rocking sis..take care of your health..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ச்சே ponungale illa ivalunga 😡😡😡😡nila ne umaiyana nila than 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤

    ReplyDelete
  5. Super sis nice guna ippa adichadha munname senji irukanum ganga kamala indha alavuku povanganu expect pannave illa sindhu un plan success agala pola super sis raj nila baby ah nalla pathupanga super

    ReplyDelete
  6. Enna madhiri alunga ivanga ellam sis papa pavam nila kittayae irrukattum sis story super 👌👌

    ReplyDelete
  7. Sis enna madhiri alunga ivanga ellam papa pavam nila kittayae irrukattum sis story super 👌

    ReplyDelete
  8. Hi sis story SEMA next update kaga waiting 👌👌

    ReplyDelete
  9. ஒரு குழந்தைய எப்டிலாம் பேசுறா அதும் பெத்தவளே என்ன ஜென்மங்களோ அதுங்க மூணு பேரையும் போட்டு தள்ளிடுங்க சிஸ்.... 😠😠😠😠

    ReplyDelete
  10. Ipdiyum oru sila jenmangal irukkuthey enna panna

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்