Posts

தாகம் எபிலாக்

Image
எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது இரு மகள்களும் அப்பாவுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு  என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.. ஆம் பூங்காவனத்திற்கு பிரசவ வலி கண்டு அவளின் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தயாராகி விட்டது.. உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்து கூட மின்னலுக்கு பயமில்லை.  ஆனால் அங்கே ஒரு நிமிடம் கூட அமராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன்னுடைய தம்பியை பார்க்கும் போது தான் எரிச்சலாக வந்தது. "டேய் பைத்தியகாரா! எதுக்குடா இப்படி ஒரு நிமிஷம் கூட உட்காராம உலாத்திட்டு இருக்க.. கொஞ்ச நேரம் அமைதியா உட்காருகிறாயா.. அங்க பாரு அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஒன்னோட எத்தனை வயசு குறைவு? அதுங்கல்லாம் அமைதியா உட்காரல.. உன்ன ஒரு ஆளு புடிச்சி நீவிகிட்டே இருக்கணுமா.." செல்வியும் காயத்ரியும்  வாய் பொத்தி சிரித்தார்கள். " உள்ள போய் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா பாப்பா பொறக்குது? அவளுக்கு வலிக்கும்.. உன்ன உள்ள போடான்னா போக மாட...

தாகம் 35

Image
பூங்காவிற்கு சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. மின்னலின் தனயன் என்பவனுக்கும் சோலை பாண்டியனுக்கும் கூட சிகிக்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. மின்னல் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தான் நாகா. "ண்ணே அண்ணியோட அம்மாவுக்கு சொல்லலையா" மின்னிலிடம் பேச்சில்லை.. நீண்ட நேரமாக அவனிடம் தோன்றிய மயான அமைதி நாகாவை பயமுறுத்தியது. மின்னலை மீறி தேவகியிடம் பூங்காவனத்தின் நிலையை அவனால் கூற முடியாது. பூங்காவனத்திற்கு அழைத்து அவள் அழைப்பை ஏற்காமல் போக மருமகனுக்கும் அழைத்து பார்த்திருந்தார் தேவகி. இருவருமே அழைப்பை ஏற்காமல் இருக்க " அம்மா எதுக்கு இப்படி நீ அவங்கள டார்ச்சர் பண்ற? அக்கா மாமாவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னைக்கு தான் சந்தோஷமா வெளியே போறாங்க.. அவங்க எங்கேயாச்சும் ஜாலியா போயிட்டு இருப்பாங்க.. நீ எதுக்கு அவங்களுக்கு கால் பண்ணி தொல்லை கொடுக்கிற.. சாப்பாடு வேணும்னா அக்காவே ஃபோன் பண்ணிருப்பா.. அவங்களுக்கு சாப்பிட தெரியாதா.. நீ வாம்மா"அம்மாவை அழைத்தாள் செல்வி. " அது இல்லடி எனக்கு என்னமோ படபடன்னு வருது. இவ்ளோ நேரம் நான் போன் அடிச்சா எடுக்காம பூங்கா இருக்க...

தாகம் 34

Image
"விட்ருடா விட்ரு விடு" ஈன சுரத்தில் கேட்டது பூங்காவனத்தின் குரல்.. சோலை பாண்டியன் கண்கள் வியர்வையில் நனைந்த பூங்காவின் ரவிக்கை மற்றும் இடையை வெறிக்க பார்த்தது.. முகமெல்லாம் வியர்வை படிந்து  கூந்தலெல்லாம் களைந்து  பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தாள் பூங்காவனம்.. விழிகள் இரண்டும் மூடிருந்த போதிலும் அவளது இதழ்கள் மட்டும்  "விட்ரு"என உரு போட்டுக் கொண்டிருந்தன. சோலை பாண்டியனுக்கு  பூங்காவனத்தை பார்க்க பரிதாபமாக இல்லை. சொல்லப் போனால் தாபமே மேலோங்கி நின்றது. எத்தனை கால ஆசை இன்று நிறைவேற போகிறது என மிதப்பில் தனது வேஷ்டியையும் சட்டையையும் அகற்றி விட்டு  பூங்காவனத்தின் மேல் படந்தார் சோலை பாண்டியன்.. எதிர்க்கவும் திராணியற்ற நிலையிலும் பூங்காவனத்தின் உடல்  வில்லாய் விரைத்தது.." பொறுத்துக்கோ.. கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சு போயிரும்.. எல்லாம்" மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மூளைக்கும் கட்டளையிட்டாள்.. மரக்கட்டை போல அவள் படுத்திருப்பதை கண்ட சோலை பாண்டியனுக்கு  வெறியேறியது. "கழுத முண்ட, அவ்ளோ திண்ணக்கமாடி உனக்கு? இன்னையோட உன்னோட ஆட்டத்தை அடக்...

தாகம் 33

Image
சமூகத்தில் எந்தவித உதவியும் கிடைக்காத பெண்ணென்றால் அதிலும் ஏழைப் பெண்ணென்றால் அவளுக்கும் அவள் கற்புக்கும் எந்த விதமான  தீங்கிழைக்கவும் ஆண் சமூகத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு பெண்ணை அவளாகவே வாழ விடுங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு  அவள் எங்கே வருகிறாள் எங்கே போகிறாள் அவள் வீட்டிற்கு யார் வருகிறார்களோ போகிறார்கள் என்பதை ஆராய்ந்து உங்கள் வீட்டில் அடுப்பெரிய போகிறதா? அந்தப் பெண்ணின் நிலை தெரியாமலேயே அவளுக்கு நடத்தை கெட்டவள், தாசி என்றெல்லாம் பெயர் வைத்து அழைக்கும் இந்த சமூகம் ஏன் ஆண்களுக்கும் அதே பெயரை சூடவில்லை? கட்டிய மனைவியை கண்டவனுக்கு தாரை பார்க்க தயாராக இருப்பவன் எல்லாம் வெள்ளையும் சொல்லையுமாக உடை அணிந்து  நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடக்க இந்த சமுதாயம் தானே வழி விட்டிருக்கிறது. கேட்டாள் அவன் "ஆண்" என்பான். உடலால் பலமானவன்.. "பெண்" ஆணை பொறுத்தவரை உடலால் பலவீனமானவள். அந்த பலவீனமான குலைந்து நெளியும் உடல் மேல் தான், ஆண் கழுகுகளுக்கு கண். குழைந்து நெளியும்  உடலை கொத்தி தின்ன  அவ்வளவு ஆர்வம்.. "உன் அம்மா எப்படி செத்தா" சோலைப் பாண்டிய...

தாகம் 32

Image
பூங்காவனம் கண்விழிக்கும் போது எந்த இடத்தில் அவள் மயங்கி விழுந்து கிடந்தாளோ அதே இடத்தில் தான் சுருண்டு கிடந்தாள்.. கேட்பார் யாருமற்ற அனாதை போல  சோலை பாண்டியனின் வீட்டு நிலை வாசலில் கர்ப்பிணிப் பெண் மயங்கிக் கிடக்க அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பக்கூட சோலை பாண்டியனுக்கு மனம் வரவில்லை. காலையில் பூங்கா தன் முன்பு தைரியமாக நின்றதுமல்லாமல், தன்னையே எதிர்த்துப் பேசியதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்த இடத்திலேயே பூங்காவை முடித்து கட்டும் அளவிற்கு குரோதம் எழுந்தது அவருள்ளே. இருக்குமிடம் கோவில் என்பதால் தன்னுடைய  வெறி அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.. மகாலட்சுமி வேறு வீட்டில் இல்லை.. அவளுடைய நெருங்கிய தோழி பைரவியின் திருமணத்திற்காக காஞ்சிபுரம் சென்று இருக்கிறாள். நேற்று கிளம்பியவள் இதோடு இன்னும் இரண்டு நாள் கழித்து தான் வீடு வந்து சேருவாள்.. மருத்துவர் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் மகாலட்சுமிக்கு பிள்ளை வலி வரலாம் என்று கூறியிருந்தார். சோலை பாண்டியனின் மற்ற இரு மகள்களும் தங்கையை கவனித்துக் கொள்ள  இன்னும் இரண்டு மூன்று நாட்களி...

தாகம் 31

Image
அன்று முழுவதும் ஏதோ கனவில் மிதப்பதை போல இருந்தது பூங்காவனத்திற்கு. அவளால் மின்னல் வீரபாண்டியனை  கணிக்கவே இயலவில்லை. விதவிதமாக பார்த்து பார்த்து அவள் சமைத்து போட்ட உணவுகளை வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டவன் அவள் வேண்டா வெறுப்பாக செய்து கொடுத்த ரசத்தையும் உருளைக்கிழங்கையும் விரும்பி சாப்பிட்டு இருக்கிறான் என்றால்.. அதைவிட முக்கியமாக  அவனது வார்த்தைகளும் மென்மையான குரலும் அவளை என்னமோ செய்தது.. என்றோ படித்த வாக்கியம் நினைவுக்கு வந்தது.. ஏதாவது ஒன்றை நாம் வேண்டுமென்று கடவுளுக்கு விரதம் இருந்து கண்ணீர் விட்டு வேண்டுவோம். அப்படி நாம் வேண்டும் போது நாம் வேண்டும் பொருள் நமக்கு கிடைக்காது. இறுதியில் கண்ணீர் விடுவே இயலாத கட்டத்தில் கடவுளே இல்லை என்று வெறுத்துப் போய் அமரும்போது நாம் வேண்டியது கையில் வந்து கிடைக்கும். அப்படித்தான் இப்பொழுதும் பூங்காவின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக  அவளது உணவை பாராட்டியவன் மீண்டும் சற்று நேரத்தில் எல்லாம் திரும்ப அழைத்தான். " எங்கயாச்சும் வெளிய போலாமா.. " அவன் பாராட்டியதே ஆச்சரியம் என்றால் இப்படி அவன் கேட்டது தி...

தாகம் 30

Image
கோவிலுக்கு வந்திருந்தாள் பூங்காவனம். மனமெல்லாம் கசந்து வழிந்தது. என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கே புரியவில்லை. மகாலட்சுமி தேவகி இவர்கள் இருவரும் கூறியதை கேட்டு தரம் இறங்கி போய் விட்டோமோ என்கின்ற எண்ணம் அவளை பேயாய் அலைக்கழித்தது.  இந்த மூன்று மாதத்தில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தன்னாலான முயற்சிகளை செய்து விட்டாள் பூங்காவனம். ஒன்றே ஒன்றுதான் அவள் இன்னும் செய்யவில்லை. தேவகி கூறியதைப் போல மின்னலை வசீகரிக்கும் அரைகுறை ஆடைகளை அணியவில்லை. கணவன் முன்பு அப்படி நிற்பதில் அவளுக்கு எந்த வித வெட்கமும் கிடையாது. என்ன சோலை பாண்டிய உங்க அம்மா மயக்கன மாதிரி என்னையும் மயக்க பாக்குறியா? இப்படியான வார்த்தைகள் ஒரு வேலை மின்னலின் வாயிலிருந்து வந்து விட்டால் அதன் பின்பு அவள் உயிர் வாழ்வதில் அர்த்தமே கிடையாது.. அவன் கேட்க மாட்டான் என்று அவளால் இன்று வரை உறுதியாக நினைக்கவே முடியவில்லை. கன்னி விடியின் மீது காலை வைத்தது போல எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பதைப்பதைபோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. எவ்வளவு முயற்சிகள், அவனின் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா? ஒரு முறைய...