தாகம் 21


"சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
பக்தி கொண்டாயடி உன்னை பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி"

காரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி தொடையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

"ஏன்டா மின்னலு" தன் பக்கத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்தவனை அழைத்தார்.

"ஐயா" பவ்வியமாக குரல் கொடுத்தான் மின்னல் வீரபாண்டியன்.

" நான் சொன்னதை பத்தி நீ என்ன நினைக்கிற.."

வாரிசாக தத்தெடுத்தால் மட்டும் பத்தாது. அவனது பெயரில் ஏதாவது குடும்ப சொத்தை எழுதி வைக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்லியிருந்தார்.. சோலை பாண்டியன் ஊரில் பாரம்பரியமாக இருந்த அவரின் விவசாய நிலம் ஒன்றை வேறு வழியே இல்லாமல் மின்னல் வீரபாண்டியன் பெயரில் எழுதி வைத்தார். விஷயம் கேள்விப்பட்டு மின்னல் எவ்வளவோ தடுத்தான் வேண்டாம் என்று. ஆனால் சோலை பாண்டியன் அதனை சட்டை செய்யாமல் தான் நினைத்ததை சாதித்துக் கொண்டார். எப்பொழுதும் அவரது இரண்டாவது மகள் பெயரில் வாங்கவிருந்த சொத்தை  மின்னலின் பெயரில் வாங்குவதற்கு அவனிடம் பேசிக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

குடும்ப சொத்தை மின்னலின் பெயரில் அவர் எழுதி வைத்த பிறகு, இத்தனை காலமாக தொழிலில் அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பரம எதிரி ஒருவன் மாரடைப்பால் இறந்து போனான்.. அதேபோல் மாடிப்படியில் இருந்து வழுக்கி விழுந்த சோலை பாண்டி எனக்கு எந்த வித அடியும் இல்லாமல் தப்பித்து விட்டார்.ஜோசியர் சொன்னது நினைவுக்கு வந்தது.. வாரிசாக ஒருவனை தத்தெடுக்க சோலை பாண்டியனின் பாவமும் அவருக்கு வரவிருக்கும்  சோதனைகளும் அந்த வாரிசுக்கு தான் போய் சேரும் என்று.  எவ்வளவு உண்மை?

டெண்டர் விஷயம் சோலை பாண்டியனுக்கும் தெரிந்திருந்தது. யாரிடம் டென்டரை கொடுப்பது என்று  மின்னல் தலையைப் பியித்துக் கொண்டிருப்பதும் அவருக்கு தெரியும். தனக்கு வரவேண்டிய சோதனைகள் எல்லாம் அவனுக்கு செல்வதில் சோலை பாண்டியனுக்கு பெருத்த நிம்மதி.. இன்னொன்று அவரின் விசுவாசி அவன். எப்பொழுதும் கைவிட்டு செல்லக்கூடாது என்பதால், மேலும் அவன் தன்னை முழுதாக நம்ப வேண்டும் என்பதாலும்  அவன் பெயரில் சொத்தை வாங்கப் போவதாக கூறிக் கொண்டிருந்தார்.

" எதுக்குயா இப்ப தேவை இல்லாம என் பேர்ல சோத்து வாங்குறீங்க.. சின்ன பாப்பா பேர்ல வாங்குங்க.. இத்தனை வருஷம் அப்படித்தானே பண்ணிட்டு இருக்கீங்க? " அமைதியான குரலில் மறுத்தான் மின்னல்.

" நீ சும்மா இருடா.. பேருக்கு உன்னை வாரிசா தத்து எடுத்தன்னு நினைச்சியா.. உண்மையாவே உன்னை என் மகனா தான் நான் இத்தனை காலமா பாத்துட்டு வரேன்.. எனக்கு அப்புறம் யார் இருக்கா சொல்லு? பொட்ட பிள்ளைங்க மூனையும் கட்டி கொடுத்து கடமையை முடிச்சிட்டேன். நாள பின்ன நான் செத்தா கொல்லி போட ஒரு வாரிசு வேணாமா.. என் பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைனா போய் நிற்க  கூட பொறந்தவன் வேணாமா.." இத்தனை காலம் இல்லாமல் இப்பொழுது மட்டும் எதற்கு இந்த வாரிசு என்பதைப் போல அவரை பார்த்தான் மின்னல்.

அவனின் பார்வைக்கு உடனே அர்த்தம் புரிந்து கொண்டார் சோலை பாண்டியன். " அது அதுக்குன்னு ஒரு காலம் இருக்கு. எது எது எப்ப நடக்கணுமோ அது அப்ப கரெக்டா நடக்கும். அப்படித்தான் நீயும்.. நீ என்னடா சொல்றது என் மகன் பேருல நான் சொத்து வாங்குறேன்.." மின்னல் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தைப் பார்த்தார் சோலை பாண்டியன். கடப்பாரையை விழுங்கியவன் போல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் மின்னல்.

" அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன் உனக்கு உன் பொண்டாட்டிக்கும் நடுவுல எப்படி போகுது" அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்பதை புரிந்து அவரை புரியாத பார்வை பார்த்தான் மின்னல்.

"அதான்டா அந்தப் பொண்ணுக்கும் உன் மேல விருப்பம் இல்ல. நீயும் எப்பேர்பட்டவனும் எனக்கு நல்லா தெரியும். ஏதோ நான் சொன்னேன்னு அந்த அன்னக்காவடிய கல்யாணம் பண்ணிக்கிட்ட. அவ உன்கிட்ட மரியாதையா நடந்துக்கறாளா? ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணுடா. என்னையே மூஞ்சிக்கு முன்னாடி கை நீட்டி பேசியிருக்கா..

இன்னும் கொஞ்சம் ஒழுக்கமான குடும்பத்திலிருந்து வந்து இருந்தா என்ன போடு போட்டிருப்பாளோ? ஒழுக்கங்கெட்ட கழுதைக்கு வாய்க்கு மட்டும் குறைச்சல் கிடையாது.. உன்கிட்ட எப்படி எகிறி கிட்ட தான் இருக்காளா" மின்னல் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக வினவினார்..

" என் வீட்ல என்ன நடக்குதுன்னு தான் உங்களுக்கு சுட சுட நியூஸ் வந்திருக்குமே ஐயா" சத்தியமாக மின்னல் இவ்வாறு கூறுவான் என்று சோலை பாண்டியன் எதிர்பார்க்கவில்லை.

"என்னடா.. என்ன என்னமோ சொல்ற" நிதானமாக அவரை திரும்பிப் பார்த்த மின்னல்

"ஏன்ய்யா எல்லாரப்பத்தையும் நுனி விரல்ல தகவல் சேகரிச்சு வைத்திருக்கிற நீங்க என்ன பத்தின தகவலை விட்டு வச்சிருப்பீங்களா? அதுவும் நான் உங்க வாரிசுன்னு சட்டபூர்வமா  அறிவிச்சதுக்கு அப்புறம் நாலு மடங்கு எனக்கு ஸ்பை போட்டிருக்க மாட்டீங்க.." எள்ளல் தெறிக்க கேட்டான் மின்னல்.

" என்னப்பா மின்னலு பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு.. "

"ஐயா நான் எப்பவும் போல தான்யா எதார்த்தமா பேசினேன்.." அதற்கு மேல் மின்னலும் பேசவில்லை சோலை பாண்டியனும் பேசவில்லை.. மின்னல் தான் பேசாமல் பேச மாட்டான் என்பது சோலைப் பாண்டியனுக்கு தெரியும். தன் முன்னால் இதுவரை தலைகுனிந்து பவ்யமாக பேசிக் கொண்டிருந்த மின்னல் முதல் முறையாக தன்னை எள்ளள் தெறிக்க பேசியதை சோலை பாண்டியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. சட்டப்படி வாரிசாக அவனை அறிவித்ததற்கு பிறகு  குளிர் விட்டு போய்விட்டது  என்பதாக எண்ணினார் சோலை பாண்டியன்.

"ஆமா.. அந்த பொண்ணு அதான் டா உன் பொண்டாட்டிய எப்ப என்கிட்ட கொண்டு வந்து விடுவ..சொல்லித்தானே அவளை கட்டி வெச்சேன்".. மின்னலை பற்றி அவருக்கு வந்த தகவலின்படி பூங்காவோடு அவன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து வைத்திருந்தார்.

பூங்கா தனக்கு சொந்தமானவள்.. வேறு வழி இல்லாமல் தான் தனது மஞ்சத்திற்கு வர வேண்டியவை வாரிசாக தத்தெடுத்த இவனுக்கு தாரை பார்க்க வேண்டியதாக போய்விட்டது.

மின்னல் தன்மீது கோபப்படுவான். ஆத்திரத்தில் வார்த்தைகளை தவறாக உபயோகப்படுத்துவான் என்று எண்ணியே சோலைப் பாண்டியன் அவனது தன்மானத்தை சீண்டி விட்டார். ஆனால் அந்த மலை முழுங்கி மகாதேவனோ 

" உடனே அவளை கூட்டிட்டு வந்தா பிரச்சனையாயிடும்யா. கொஞ்ச நாள் போகட்டும் அவ இப்பதான் என்ன நம்ப ஆரம்பிச்சிருக்கா.. முன்ன மாதிரி அவ என்ன யாரும் இல்லாத அனாதையா.. பிரச்சனை வந்தா உடனே மீடியாக்கு போயிருவா.. அவளே தடுக்கி விழுந்து எதாச்சும் ஆனா கூட நான் தான் அவளை என்னமோ பண்ணிட்டேன்னு எல்லாரும் கதை கட்டிருவாங்க. எலக்சன் டைம் வேற. இது முள்ளுல விழுந்த சேலை பதமா தான் எடுக்கணும்.. " மீண்டும் தான் ஒரு அக்மார்க் சோலை பாண்டியனின் அடிமை என்று நிரூபித்தான் மின்னல் வீரபாண்டியன்.

அவனை பெருமிதமாக பார்த்த சோலை பாண்டியன் " எனக்கு தெரியும்டா உன்ன பத்தி. எல்லாமே நடிப்புன்னு சொல்லு. சரி நீ நடிக்கிற அந்த பொண்ணு"..

மின்னலுக்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த உணவுகள்  ஆறிப் போய் இருக்க அதனை பார்த்து பொறுமைக் கொண்டிருந்தாள் பூங்காவனம்..

" என்ன கண்ணு ஆசை ஆசையா புருஷனுக்கு சமைச்ச.. ஒரு வாய் கூட சாப்பிடாம மின்னல் போயிடுச்சு"

"ஹான் வாம்மா மின்னலுன்னு ஒரு போன் வந்துச்சு.. சல்லுனு போயிருச்சு" கடுப்போடு வெளிவந்தது பூங்காவனத்தின் வார்த்தைகள்.

" என்னாச்சு மா ஏதாவது பிரச்சனையா.. "

" இல்லக்கா அந்த சோலை பாண்டியனுக்கு பொறுக்கல. ஒரு போன் வந்ததும் இந்த ஆளும் காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரி அரக்கப் பறக்க ஓடிருச்சு.." முகத்தில் டன் கணக்காக சோகம் வழிந்தது பூங்காவனத்திற்கு.

"கண்ணு நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. இன்ன வரைக்கும் எனக்கே புரியல நீ எப்படி மின்னல் கூட ஒண்ணுமண்ணா இருக்கனு.. உள்ளுக்கு ஏதாவது பிளான் வச்சிருக்கியா.. அதுக்கு தான் நேரம் பார்த்து காத்திருக்கியா" ஒரு மாத காலமாக பூங்காவனத்தை கண்காணித்து வரும் கமலி சந்தேகமாக கேட்டார்.

அவரது கேள்விக்கு பூங்கா கோபப்படாமல் சிரித்துக் கொண்டே" ஆமா பெரிய பிளான் வச்சிருக்கேன் நேரம் கிடைக்கும்போது ஒரே குத்து.. உங்க எம்பி மின்னலு வாய பொளந்துருவான்.. " சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தாள் பூங்காவனம். கமலிக்கு முகமே இருண்டு போனது.

அரண்ட அவரின் முகத்தையும் கண்டவள்" நான் சொன்னதை நம்பிட்டீங்களா.. ஏன்கா நீங்க வேற.. என்னால வேற என்னதான் செய்ய முடியும் சொல்லுங்க? இது என்ன தமிழ் படமா இல்ல கதையா? நான் மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு போறதும் ஹீரோ என் பின்னால தூங்கிக்கிட்டு வர்றதுக்கும்.. ரியல் லைஃப்க்கா.. இதுதான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. அவன்கிட்ட மூஞ்ச தூக்கி வச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்? ஒருவேளை உங்க எம் பி எம் என்ன வேணாம் அந்த சோலை பாண்டியனுக்காக உன் கழுத்துல தாலி கட்டிட்டேன். நான் கிட்ட இந்த தாலிய கலட்டி என் கையில குடுத்துட்டு நீ உன் வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருனு சொன்னாலும் பரவால்ல..

அவரு இதுதான் சாக்குனு தாலி கட்டின மாதிரி, ரெண்டு அறை விட்டு  காது ஜவ்வு கிழிக்கிற மாதிரி தாலியை பத்தி கிளாஸ் எடுத்து,ஸ்ஸ்ப்பா என்னத்த சொல்ல போங்க.. அதனாலதான் அவரு என்ன தொடும் போது நான் தடுக்கல.. தடுத்து இங்க எதுவும் மாறப் போறது கிடையாது.. எப்படியோ அந்த சோலை பாண்டியன் கிட்ட இருந்து நான் தப்பிச்சிட்டேன். என் தங்கச்சி இங்க படிப்புக்கும் இவர்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணியாச்சு.

அவருக்கு தெரிஞ்ச வீட்டுல தான் எங்க அம்மா சமையல் வேலைக்கு போயிட்டு இருக்காங்க.. இவரு எங்க வீட்டு மருமகனா ஆனதிலிருந்து சில்லறை தொல்லைகளும் இல்லாம போயிருச்சு.. என்ன பொறுத்த வரைக்கும் இந்த வாழ்க்கை எனக்கு கடவுளா போட்ட பிச்சை..அதை என்னால முடிஞ்ச அளவுக்கு காப்பாத்திக்குவேன்.. "பூங்காவின் உறுதி கண்டு வாயடைத்துப் போனார் கமலி.

பின்னர்"ஏன் கண்ணு அந்த கட்டையில போறவன் திரும்ப உன் கிட்ட ஏதாவது வம்பு பண்ணா"..

"என் புருஷன தாண்டி என்னை தொட முடியுமாக்கா"அலட்சியமாக சிரித்தாள் பூங்காவனம்.

தொடரும்..


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு

தாகம் எபிலாக்