Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 6


திடுதிடுப்பென்று தன் வீட்டிற்குள் நுழைந்த  ஆட்களை கண்டதும் சோலை பாண்டியனின் முகம் மாறியது..
கூட்டாக சேர்ந்து தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்கின்ற பயம் பூங்காவனத்திற்கு.

அவள் திக்பெருமை பிடித்தது போல நிற்கும்போதே "ஹேய் யார்டா அது? தொறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைஞ்ச மாறி".. கேட்டுக்கொண்டே எழுந்து நின்றார் சோலை பாண்டியன்.

" என்ன தலைவரே, வயசாச்சு போல வந்துருக்கிறது யாருன்னு கூட தெரியலையா? "

சோலை பாண்டியன் பேசியவனை நன்றாக உற்றுப் பார்த்தான். "டேய் சுகு நீயாடா, என்ன இந்த பக்கம்?" வந்திருப்பது யார் என்று தெரிந்ததும் மீண்டும் சொகுசாக அமர்ந்து விட்டார்.

" உங்க வீட்டுக்கு என்ன விருந்து சாப்பிடவா தலைவரே நாங்க வந்திருப்போம்?"

" வேற எதுக்கு இங்க வந்த" சோலை பாண்டியனின் குரலில் கடினம் ஏறியது.

" இந்த பொண்ணு மேல உங்களுக்கு ரொம்ப நாளா  கண்ணுன்னு கேள்விப்பட்டோம். மொத அம்மாவை வச்சிருந்தீங்க. இப்ப பொண்ண வச்சிருக்கீங்க. வயசானாலும் வால சுருட்டிட்டு சும்மா இருக்க முடியல உங்களுக்கு? " சுகு என்று அழைக்கப்பட்டவன் இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசினான்.

" அதுல உனக்கு எங்க வலிக்குது? எனக்கு வயசு ஆச்சு முடியலைன்னா உன்கிட்ட நான் சொன்னனா? எதுக்கு தேவையில்லாத பேச்சு பேசிட்டு இருக்க? மொத எதுக்கு என் வீட்டுக்கு வந்துருக்கே அத சொல்லு?"

" நாங்களும் இன்னும் எத்தனை நாளைக்கு தலைவரே உங்களுக்கு கீழ ஏவுன வேலைய செஞ்சிட்டு இருக்கிறது.. நீங்களும் சட்டுபுட்டுன்னு மேல போய் சேருவீங்கன்னு பார்த்தா இந்த ஜென்மத்துல உங்களுக்கு சாவே வராது போல. இப்படியே மேல போக மாட்டேன்னு நீங்க அழுச்சாட்டியும் பண்ணிட்டு இருந்தீங்கன்னா அப்ப நாங்க எல்லாம் எப்ப உங்க இடத்துக்கு வர்றது?" சோலை பாண்டியனின் கை கைப்பேசியை எடுத்தது. சட்டென்று அவர் கையில் உருட்டு கட்டை ஒன்று வந்து விழுந்தது.

" இந்த இடத்துல நீங்க தனியா தான் இருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கோம் தலைவரே.. பயப்படாதீங்க உங்களை ஒன்னும் செய்ய போறது கிடையாது. எங்களுக்கு தேவை நீங்க கிடையாது. உங்க பக்கத்துல நிக்குதே உங்க தொடுப்பு பொண்ணு".. சுகுவின் பார்வை பூங்காவனத்தை தழுவியது.

பூங்காவனத்திற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. தலையெழுத்தை நொந்துக் கொண்டு அவள் இங்கு வந்தால் இங்கானால் வேறு என்னமோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. பின்வாசல் பக்கமாக ஓடி விடலாமா இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். இன்னொரு பக்கம்  தன்னை இக்கட்டில் நிறுத்தி வைத்து இழி நிலைக்கு ஆளாக்க முயன்று கொண்டிருக்கும் சோலை பாண்டியனின் கையாலாகாத நிலையை வேடிக்கை பார்க்க சொல்லி மனம் கெஞ்சியது.

"சுகு.. வேணாடா ரொம்ப பெரிய தப்பு பண்ற.. யாருகிட்ட பகைச்சிருக்கோம்னு தெரியுதா உனக்கு.. ஒட்டுமொத்த கும்பலையும் கருவருத்திடுவேன்.." கிழட்டு சிங்கத்தின் கர்ஜனையாக தோன்றியது சோலை பாண்டியனின் குரல்.

அதற்கெல்லாம் அசரும் ஆள் சுகு கிடையாது."அய்யய்ய தலைவரே சவுண்ட குறைங்க. வயசான காலத்துல எதுக்கு இப்படி ஹை பிச்சில்ல கத்தி பேசுறீங்க.. எங்ககிட்ட விட்டு வாங்கி செத்தா கூட இந்த வயசுலயும் கத்திய தூக்கி மண்டைய போட்டீங்கன்னு பேரு இருக்கும். கத்தி கத்தியே செத்துப் போனீங்கன்னா தொண்டை தண்ணி வத்தி நீங்க மண்டைய போட்டீங்கன்னு வரலாறு உங்கள காரி துப்பும்" இவ்வாறு கூறியதும் உடன் இருந்தவர்கள் "கொல்"லென்று சிரித்தார்கள்.

"டேய்" சோலை பாண்டியன் பற்களை கடித்தார்." பின்னால ரொம்ப வருத்தப்படுவ சுகு"அவரது எச்சரிக்கையை   அலட்சியப்படுத்தினான் சுகு.

" சும்மா கம்முனு இருங்க தலைவரே.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேனு அடம் பண்ணிட்டு இருப்பிங்க... எங்களுக்கு தேவை உங்க உயிர் கிடையாது. சோலை பாண்டியன் வீடு பூந்தே பொண்ண தூக்கிட்டான் இந்த சுகுன்னு ஒட்டு மொத்த சிட்டியும் என்ன பத்தி தான் பேசணும்.. இதுவும் உங்க கண்ணு முன்னாடியே நடக்கும் போது சோலை பாண்டியன் ஒண்ணுமே செய்ய முடியாத நிலைமையில உட்கார்ந்து வேடிக்கை பாத்தானு மேல இருக்கிற மரியாதை பயம் எல்லாம் போயிரணும். இதுதான் எனக்கு வேணும்  "

சுகு சொல்லியதை கேட்டதும்  பூங்காவனத்திற்கு உயிர் ஊசல் ஆடியது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக விக்கித்து போய் நின்றாள்..

சுகு தன்னோடு வந்தவனிடம் கண் காட்ட அவன் நேராக சென்று பூங்காவனத்தின் கையைப் பிடித்து இழுத்தான்..

"என்ன.. உங்களுக்குள்ள பிரச்சனைனா அத நீங்களே அடிச்சிக்கிட்டு சாவுங்க.. தேவை இல்லாம நடுவுல எதுக்கு என்ன இழுக்கறீங்க..ஆம்பளைங்க சண்டையில பொம்பள மேல ஏன்டா கை வைக்குறே..விட்றா விட்றா என்ன பொறுக்கி நாயே"..தன் கையை பிடித்து இழுப்பவனை சகட்டுமேனிக்கு அடித்தாள்.

ஒரு வினாடியே அவள் கண்களில் பூச்சி பறந்தது. பொரி கலங்கும் அளவிற்கு ஓங்கி அடித்திருந்தான் அவளை..

" என்னடி நானும் பாக்குறேன் பெரிய பத்தினி மாதிரி சீன் போடுற.. சோத்துக்கு வக்கில்லாம கிழவன் கூட படுக்கிற உனக்கே இந்த ஆட்டமா? தொலைச்சிருவேன்" பூங்காவை  கதற கதற இழுத்துக் கொண்டு போக நடப்பதை தடுக்க இயலாமல் பார்த்துக் கொண்டிருந்த சோலை பாண்டியனை திரும்பி பார்த்தாள் பூங்காவனம்.

அவர் அப்பொழுதும் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் இருக்க, காரி உமிழ்ந்தாள் தரையில். அதனை கண்டு சுகு பொங்கி சிரித்தான். பூங்காவனத்தை காரில் ஏற்றியதும் அதுவரை சோலை பாண்டியனை குறி வைத்து பிடித்திருந்த துப்பாக்கியை மீண்டும் சட்டை பையில் வைத்தவன்

" ஒட்டச்சி காரி துப்புற நிலைமையில இருக்கு தலைவரே உங்க நிலைமை.. " அங்கிருந்து அவனும் கிளம்பினான்.

பூங்காவனத்தை சுகுவின் இடத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டாள் பூங்காவனம்..

"அண்ணா ப்ளீஸ் உங்க சண்டைய உங்களோட வச்சுக்கோங்க. தயவு செஞ்சு என்னை விட்ருங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாண்டுறாதீங்க" பூங்காவனம் சுகுவைப் பார்த்து கெஞ்சினாள்.

"தோ பாருமா உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது தான். எங்களுக்கு தேவை சோலை பாண்டியன் முன்னாடியே அவனோட வீடு பூந்து அவன் வீட்டு பொண்ண தூக்கிட்டு வர்றதுதான். மத்தபடி உன்னை எதுவும் பண்ற ஐடியா எல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டீங்கன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு நல்லபடியா இங்க இருந்துட்டு வீடு போய் சேரலாம்.இல்லனு வெச்சிக்கோ"..

"அண்ணா ஒரு வாரமா? என்ன காணும்னு எங்க அம்மா தங்கச்சி எல்லாம் தவிச்சு போயிருவாங்க..ப்ளீஸ்ண்ணா" உண்மையிலேயே மிரண்டு விட்டாள் பூங்காவனம் அவன் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது.

"ண்ணா, சோலை பாண்டியன் வீட்டுல இருந்தவ பத்தினியாவா இருக்க போறா.. இருக்கிற வரைக்கும் நமக்கு கம்பெனி கொடுக்கட்டுமே.." சும்மா இருந்த சுகுவை அருகே இருந்தவன் சீண்டி விட்டான்.

"ஆமாண்ணே பொண்ணு பாக்க தக்காளி பழமாட்டம் இருக்கா.. ஒரு வாரம் இங்க தான் இருக்க போறா.." பூங்காவனத்திற்கு அவர்கள் பேச பேச இன்னும் தன்னுடைய உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதே பாரமாக தோன்றியது.

" கடவுளே என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்ற? நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? தயவு செஞ்சு இந்த நிலைமையில இருந்து என்னை காப்பாத்து. திக்கு இல்லாதவனுக்கு தெய்வம் தான் துணை எங்க அம்மா சொல்லுவாங்க. எந்த திக்கில போறதுன்னு எனக்கு தெரியல. என்ன கட்டி காட்டுல விட்ட மாதிரி நான் எங்கேயோ போனா விதி என்ன எங்கேயோ கொண்டு வந்து நிப்பாட்டுது. நீங்க பேசறத கேட்டா இன்னும் ஏன் உயிரோடு இருக்கேனுனு நினைக்க வைக்குது. உண்மையா இந்த உலகத்துல நீ இருந்தா எப்படியாச்சும் என்ன காப்பாத்து.."

பூங்காவனம் தனக்குள் வேண்டிக் கொண்டிருக்கும்போது அடியாட்களில் ஒருவன் வேகமாக ஓடி வந்து சுகுவிடம் மூச்சு வாங்க கூறினான்..
" என்னடா அலெஸு என்னத்துக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர?"

"அண்ணே.. அவன்.. வந்துட்டான்"..

"யார்ரா"..

"அவன்"

"டேய் ங்கொய்யால அவன் அவனா யார்ரா உங்க அப்பனா? எந்த புடிங்கி நாய் வந்துருக்கு?வந்தவனுக்கு பேரு இல்லையா என்ன".. சுகு கொதளிக்க

"அவன ஏன்டா சுகே போட்டு படுத்தினு இருக்க.. நான் தான் உன் மாமன் வந்துருக்கேன்"குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான் சுகு.


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...