தாகம் 13



மின்னலோடு பயந்துக் கொண்டே அவனது வீட்டிற்கு சென்றாள் பூங்காவனம்..முதல் தடவையாக அவனது வீட்டை பார்க்க வயிற்றில் புளியை கரைத்தது. காரை விட்டு இறங்கவில்லை அதற்குள் அவன் கட்சி உறுப்பினர்கள் ஒரு கூட்டமாக கோசமிட ஆரம்பித்திருந்தனர்.. அவர்களையெல்லாம் தாண்டி கார் லவாகமாய் போர்டிக்கோவை அடைய புயலென காரிலிருந்து இறங்கினான் மின்னல் வீர பாண்டியன்.

ஒரு பக்கம் மீடியா ஆட்கள் குட்டி மைக்கோடு காத்திருக்க இன்னொரு பக்கம் அவனுக்கு மாலையிட்டு பூங்கொத்து கொடுத்தனர் தொண்டர்கள்..

"சார்.. சார் உங்க திருமணத்துக்கு வாழ்த்துகள்.. திடிர்னு சோலை பாண்டியன் உங்கள அவரோட வாரிசா அறிவிக்க காரணம் என்ன சார்? நிழலுலக தாதானு சோலை பாண்டியன சொல்றாங்களே..ஒக்காந்த இடத்துல இருந்தே எந்த கட்சி ஆட்சிக்கு வரும் வரக் கூடாதுனு முடிவு பண்ற வரைக்கும் அவருக்கு எப்படி சார் பவர் வந்துச்சு?திடிர்னு சொல்லாம கொள்ளாம நீங்க திருமணம் செஞ்சிகிட்டது கூட ஏதோ ஒரு அரசியல் நோக்கத்துக்காகனு மக்கள் பேசிக்குறாங்களே?"

"அனாவசியமான கேள்விகெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. வாழ்த்துக்கு நன்றி.. நாகா"

"அண்ணே"

"எல்லோருக்கும் டிபன் ஆர்டர் பண்ணிருக்கல்ல"

"அதெல்லாம் ரெடியா இருக்குண்ணே"

"அப்ப சரி.. எல்லோரும் சாப்டு போங்க"என்றவன் யாருடைய கேள்விகளுக்கும் பதிலே கூறாமல் தன்னுடைய கூறிய பார்வையை நீல நிற கூலர்ஸின் பின்னே சாமர்த்தியமாய் மறைத்து கொண்டு திரும்பி பார்க்க அங்கே பூங்காவை காணவில்லை. வெளியே நிற்கும் கூட்டத்தை பார்த்தே பாவம் மிரண்டு விட்டாள் அவள். அவளை விட்டால் இப்படியே துண்டை காணோம் துணியை காணோமென்று கண் காணாத தேசத்திற்கு ஓடியே விடுவாள்.அப்படியான மனநிலையில் இறுகி போய் அமர்ந்திருந்தாள் பூங்கா.

அவள் பக்கம் கதவை வேகமாக திறந்தான் மின்னல்.. கழுத்தில் அணிந்திருந்த மாலையை இறுக்கமாக பற்றியப்படி அவள் அமர்ந்திருந்தது அவனுக்கு கடுப்பை கொடுத்தது.

குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "மகாராணி கால தொட்டு கீழ எடுத்து வெச்சா தான் வருவீங்களா? இல்ல ரெட் கார்ப்பெட் போடணுமா".. மற்றவர் பார்வைக்கு அங்கே நடப்பது புதுமண தாம்பதிகளின் சல்லாப பேச்சு. ஆனால் மின்னலோ முகத்தில் எவ்வித மாற்றதையும் கொண்டு வராமல் புருவத்தை ஏற்றி இறக்காமல் பற்களை கடிக்காமல் தன்னுடைய கரகரத்த குரலில் அவளிடம் பேச அதற்கு மேலும் காரில் அமர்ந்திருக்க அவள் என்ன பைத்தியமா?

கீழே இறங்கி அவன் பின்னால் தொடர்ந்தாள்.. நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஆற்றி சுற்ற  வா என்றதோடு அவன் சென்று விட்டான். அந்த வா கூட அங்கிருக்கும் ஆட்களுக்காகவே.

"உள்ள வாம்மா.."ஆலம் சுற்றியவர் சற்று தன்மையோடு விளிக்க முகத்தை ஓரளவு சிரித்தப்படி வைத்துக் கொண்டே உள்ளே வந்தாள். வீடு நல்ல பிரமாண்டமாக இருந்தது. சோலை பாண்டியன் வீடளவு இல்லாவிடினும் அதில் பாதி..

உள்ளே வந்தவளை நேராக அந்த பெண் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தார்..

"நீ வந்த நேரம் அவன் மனுசனா மாறாட்டும்".. தீக் குச்சி பூங்காவின் விரலை சுட்டது. அந்த பெண்மணி இயல்பாக தான் கூறினார். ஆனால் அந்த வார்த்தை? அப்படியானால் அவன் மனிதன் இல்லாமல் வேறு என்ன? கை சுட்டதும் சொரணை வந்தது.

"அச்சோ பாத்தும்மா.. விளக்கேத்த கூட சரியா தெரியலையே உனக்கு.. உனக்கு புருஷன விட்டா இந்த ஊரையே ஒரு செகண்ட்ல எரிச்சிட்டு வந்துருவான். நீ என்னடானா?"பூங்காவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் முழித்தாள்.

அவள் முழிப்பதை பார்த்ததும் நாக்கை கடித்துக் கொண்டவர்"நீ விளக்க ஏத்தும்மா.சாமிய நல்லா கும்பிட்டுக்கோ"எனவும் தன் மனதின் அலையை மறைத்துக் கொண்டு விளக்கேற்றினாள். வெறுமனே கைக் கூப்பி

"உன்ன வணங்கவே கூடாதுனு நெனச்சேன். உன் கண்ணு முன்னாடி என் வாழ்க்கைய முடிச்சு விட்டுட்டல. என் அம்மா வேற வழி இல்லாம அவளையே வித்து எங்கள வளத்தா. உனக்கு எத்தன விரதம் எத்தனை பூஜை எத்தன வேண்டுதல்? ம்ம்ம்ம் எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டல..உன்ன மன்னிக்கவே மாட்டேன்.. நீயெல்லாம் பணக்காரனுக்கு மட்டும் தான் ஓடி ஓடி செய்வல.. ஏழைங்கனா இளக்காரம்.. ஆமா ஆமா நாங்க மிஞ்சி போன என்னத்த செய்ய போறோம். கொஞ்சமா நெய் ஊத்தி சக்கர பொங்கல் செய்வோம்.. பணக்காரன் அப்படியா கோடி கோடியா செலவு பண்ணி உனக்கு திருவிழா செய்வானுங்க. என்ன நாங்க பக்தியோட ஒரு புடி சோறு வடிக்குறோம்.. அவனுங்க எல்லாம் ஆட்டமும் ஆடிட்டு உனக்கு கிரகம் தூக்குறானுங்க.. நீ நடத்து.. இனிமே உன் கிட்ட வந்த என்ன என்னானு கேளு"..

"என்னமா.. ரொம்ப நேரமா அம்மனையே பாக்குற.. பலமான வேண்டுதலா? மின்னல் இருக்கானே அவனுக்கு இஷ்டம் தெய்வம் இவங்கம்மா.. இவங்கள கும்பிடாம வீட்ட விட்டு போகவே மாட்டான். கொலையோ கொள்ளையோ எல்லாமே இவங்க ஆசிர்வாததோட தான்.."அந்த பெண் எதார்த்தமாக சொல்ல பூங்கா அதிர்ந்து போனாள்.

"வாம்மா".. என்றவர் அவளை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்..

"ஒக்காரும்மா.. இரு நான் போய் பாலும் பழமும் எடுத்துட்டு வரேன்.."சொன்ன மாறியே நொடியில் பாலும் வாழைப்பழமும் கொண்டு வந்தார்..

"உன் புருஷன கூப்டு வரேன்.. கொஞ்சம் நேரம் இரும்மா"அவர் திரும்ப மடியிறங்கி வந்துக் கொண்டிருந்தான் மின்னல்..

"அப்பாடா நீயே வந்துட்ட.. வாப்பா வா.. இப்படி உன் சம்சாரம் பக்கத்துல ஒக்காரு.."அவன் அமராமல் அவரின் கையிலிருந்தவற்றை கூர்ந்து நோக்கினான். அந்த பார்வை அப்படியே பூங்காவின் பக்கம் திரும்பியது.

அவனின் பார்வையின் வீச்சம் தாங்க இயலாமல் தன்னை போல் எழுந்து நின்றாள் பூங்கா..

"இந்த பால குடிச்சிட்டு பழம் சாப்பிடு மின்னலு.. அப்படியே அவளுக்கும் ஊட்டி விடு"மின்னலின் பார்வையில் ஏக்கத்துக்கும் என்னவோ ஒன்று கொட்டிக் கிடந்தது. அவள் புரியாமல் பார்க்க வெடுக்கென்று அவரின் கையிலிருந்த பால் சொம்பை வாங்கியவன் சுட சுட பாலை அவனே குடித்து முடித்தான்.

"மின்னலு எப்பா"அருகே நின்றவரின் கூக்குரலை பொருட்படுத்தாமல் பழத்தையும் பிடுங்கி வேகமாக தோலை உரித்து தின்று விட்டு தோலை எங்கேயோ வீசிருந்தான்.

"என்னப்பா மின்னலு.. நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா.. உன் பொண்டாட்டிக்கு கொடுக்காம இப்படியா செய்வ.. இரு நான் போய் வேற"

"வேணா"..

"இல்லப்பா இதெல்லாம் சாம்பரதாயம்"

"தேவ இல்ல.. போய் வேலைய பாரு.."என்றவன்

"ஹேய் நீ மேல போ.."உத்தரவிட்டான்..

"எப்பா அந்த பொண்ணு சாப்டுச்சானு தெரியல.. ஒரு வாய் இட்லி"அவரை முறைத்தவன்

"வேற என்ன செஞ்சிருக்க"என்றதும்

"பூரி உனக்கு புடிக்குமே".. என்றார்.

"எடுத்துட்டு வா"என்றான் மின்னல். அவர் வேகமாய் சென்று எடுத்து வர தட்டிலிருந்து ஒரு பூரியை சுருட்டி பூங்கா கையில் திணித்தான்.

"தின்னு".. நாய்க்கு கூட இதை விட நல்ல மாறியாக சாப்பாடு போடுவார்கள்..மனதிற்குள் நினைத்தாள். வெளியே சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை..

"மின்னலு"

"கமலிக்கா வாய மூடு"என்ற போது தான் அவரின் பெயரே பூங்காவுக்கு தெரிந்தது..

"ஹேய் சாப்டு"அவன் மிரட்டவில்லை. அமைதியாக தான் கூறுகிறான். ஆனால் கத்தி கத்தியே பழக்கப்பட்ட குரல் முரட்டுத்தனமாக வெளிப்பட்டது..

வேகமாக பூரியை சாப்பிட்டவள் பேந்த விழிக்க "மேல போ"என்றான் சற்று உறுமலாக.

உடல் தூக்கிப் போட கமலியை பாவமாய் பார்த்தப்படி நடக்க கமலிக்கே மனம் பொறுக்கவில்லை.."மின்னலு நீ செய்றது"

"உன் வேலை என்ன"குரலை உயர்த்தாமல் ஒருவரை ஆட்டிப் படைக்க முடியுமா?

கமலி அமைதியாக பூங்காவை பார்த்தப்படி நடக்க பூங்காவும் அவரை திரும்பி பார்த்தப்படி மாடியில் கால் வைக்க போக தொபிர்..

"அம்மாஆஆ"மின்னல் தூக்கி போட்டிருந்த வாழைப் பழ தோல் அவளை பழி வாங்கிருந்தது. கமலி பதறி ஓடி வந்தார்.

"அய்யயோ என்ன கண்ணு விழுந்துட்டியா..".. அவள் எழ முடியாமல் பின்னந் தொடையில் வலி வின்னென்று தெரிக்க கலங்கிய கண்களோடு மின்னலை திரும்பி பார்க்க அவன் எப்போதோ அங்கிருந்து சென்று விட்டான்.

"அடி பட்ருச்சா கண்ணு.. எந்திரி மொத.."அவளை தூக்கி இடையை தேய்க்க

"விடுங்க ப்ளீஸ்.. அங்க அடியில்ல"..

"ப்ச் கொஞ்சம் இரு கண்ணு.. தைலம் தேய்கிறேன்.. இல்லேன்னா ரத்தக் கட்டு விழுந்திரும்"கமலி பதறி சொல்ல

"வேணா..அவரோட ரூம்"..

"மேல போ.. கருப்பு கலர் கர்டன் போட்றுக்கும் அதான்".. மெல்ல படி ஏறி கமலி சொன்ன அறைக்கு வந்தவளுக்கு கழுதிலிருந்த மாலை பெரும் பாரமாக தோன்ற அதை வெறி கொண்ட வேங்கையாக கழற்றி வீசினாள்.. மாலை பறந்து போக தலையில் சூடிருந்த மல்லிகையை ஆவேசமாக பிடுங்கி அதை ஒரு மூலையில் விட்டு வீசினாள்...

ஆத்திரம் அடங்கவில்லை..அங்கும் இங்கும் அவள் கண்கள் அலைமொத நிலைக் கண்ணாடி முன் தெரிந்தது அவளுக்கு. வேகமாய் அதனருக்கே செல்ல அவளின் தோற்றமே அலங்கோலமாய் தெரிய முடியை இரு கரங்களால் பிடித்துக் கொண்டவள் ஓவென்று கதறி அழுதாள். ஒரே நாளில் அவள் சேற்றில் புரண்ட பன்னியாக மாறி விட்டதை போல ஒரு மாய பிம்பம்..

அழுதாள்.. அழுதாள் கத்தி கதறி முட்டி மோதி அழுது துடித்தாள். மனதாலும் யாருக்கும் துரோகம் நினைக்காதவளுக்கு, கடவுள் ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்தார்? சோலை பாண்டியன் கொதிக்கும் எண்ணெய் என்றால் அவரின் கைக்கூலி மின்னல்  தகிக்கும் நெருப்பல்லவா?

எதை எதையோ நினைத்து அழுதவளுக்கு  அவளின் இந்த பிறவியே பாரமாகத் தோன்றியது.. எங்கிருந்துதான் அந்த பொல்லாத எண்ணம் அவளின் மூளையில் தோன்றியதோ தெரியவில்லை. வேகமாக நிமிர்ந்து மின்விசிறி இருக்கிறதா எனப் பார்த்தாள்..

அவளின் சோதனைக்கு ஏசி பல்லை காட்டியது.. தூக்கிட்டு தொங்கும் எண்ணத்தை குழித் தோண்டி புதைத்தவள் எப்படியாவது மின்னலின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும் வேகத்தில் முன்னிருந்த கண்ணாடியை அருகிலிருந்த பூ ஜாடியை எடுத்து ஒரே அடி.. கண்ணாடி சிதறியது.

அதில் ஒரு பெரிய துண்டாக எடுத்து வெயில் ரத்தம் வலியை தன் கழுத்தில் வைத்து அழுத்தமாக ஒரு கோடு..

தொடரும்


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு

தாகம் எபிலாக்