Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 4


"வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்"

வழக்கம் போல நான்கு வரிகளை கடந்த பின்பே அழைப்பை ஏற்றான் மின்னல்.. அந்தத் தொகுதியின் எம்பி மின்னல் வீர பாண்டியன். இந்த இடத்தை பிடிப்பதற்கு அவன் எவ்வளவு பாடுபட்டான் என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மின்னல் அழைப்பை ஏற்றதும் "டேய் மின்னலு எங்கடா இருக்க" சோலை பாண்டியனின் குரல்  அவன் செவியில் பாய்ந்தது.

"ஐயா இங்கதான் ய்யா.. சொல்லுங்கய்யா போன் பண்ணி இருக்கீங்க." பவ்யமாக வினவினான்.. சோலை பாண்டியனின் வலது கை தான் இந்த  மின்னல். சோலைப் பாண்டியன் காலிலிட்ட வேலையை தலையில் தாங்கி செய்து முடிப்பவன். கடந்த ஐந்து ஆண்டுகளாக சோலை பாண்டியனின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சேர்த்து வைத்திருப்பவன்.

நான்கு முறை சோலை பாண்டியனுக்கு வந்த காலனை இடையில் புகுந்து தடுத்து திருப்பி விட்டவன்.. தன்னை சுற்றி பல பேர் இருந்தாலும் வீர் மீது மட்டும் சோலை பாண்டியனுக்கு தனிப்பட்ட பாசம் என்றே சொல்லலாம். அதனால்தான் அவனை எம்எல்ஏ ஆக்கியதும் இல்லாமல்  எப்பொழுதும் தன்னுடனே வைத்திருக்கிறார்.

கட்சி வேலையை மின்னல் செய்கிறானோ இல்லையோ சோலை பாண்டியன் ஒரு வேலையை சொன்னால் அதனை செய்த முடித்த பிறகு தான் அமருவான் மின்னல்.

"டேய் மின்னலு.. உடம்பு ஒரு மாறியா மத மதன்னு இருக்குடா.."

சோலை பாண்டியன் எங்கு வருகிறார் என்பது மின்னலுக்கு புரிந்தது."ஐயா சொல்லுங்கைய்யா,  இந்த நேரத்துல உங்களுக்கு கம்பெனி கொடுக்க இந்த ப்ரீத்தி பொண்ணால தான் முடியும்.. அவ தான் உங்க மனசுறிஞ்சு பக்குவமா நடந்துக்குவா.. " சோலை பாண்டியன் மனதில் நினைத்ததை வார்த்தைகளால் உதிர்த்தான் மின்னல்.

" இதுக்கு தான்டா எல்லாத்தையும் மின்னலு வேணும்னு சொல்றது.. நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட. மத்தவளுங்க எல்லாம்  இடுப்பு செத்தவளுகளா இருக்காளுங்க.." சலித்துக் கொண்டார் சோலை பாண்டியன்.

" ஐயா ஒரு அரை மணி நேரம் பொறுங்கய்யா.."வீர் சொன்ன மாதிரியே அடுத்து அரை மணி நேரத்தில்  பிரீத்தியோடு சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்தான் மின்னல்..

"ஐயாவ முடிச்சிட்டு நைட்டு உன் வீட்டுக்கு வரவா மின்னல்" கிரக்கமான குரலில் குழைந்தாள் பிரீத்தி. அவளுக்கு மின்னல் மீது எப்போதுமே ஒரு கண்..

மீசையை நீவி கை கடிகாரத்தை சரி பண்ணிக் கொண்டே
"டேய் சுரேஷ்"என அருகே இருந்தவனை அழைத்தான் மின்னல்.

சுரேஷ் என்பவன் ஓடி வந்தான்."ண்ணா'

"சுரேஷு இந்த பொண்ணை அப்புறம் ட்ராப் பண்ணிடு.." பிரீத்தியை திரும்பியும் பாராமல் அங்கிருந்து நகர்ந்தான் மின்னல்.

"பண்றது மாமா வேலை.. இதுல ரொம்ப தான் திமிரு காட்டுற.." ப்ரீத்தி முதுகுக்கு பின்னால் உதிர்த்த வார்த்தைகள் நன்றாகவே மின்னலின் செவிக்கு எட்டியது.

புயல் வேகத்தில் திரும்பியவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கினான். ப்ரீத்தியின் குரல்வலையைப் பிடித்து நெறித்தவன்

" என்ன சொன்ன மாமா வேலையா?  வலுக்கட்டாயமா உன் கைய கால கட்டி தூக்கிட்டு வந்தா உன்ன கூட்டி விட்டேன்? என்னமோ பெரிய பத்தினி மாதிரி சீன் போடுற.. இங்க முடிச்சுட்டு எப்படி இன்னொருத்தன் கிட்ட தானே போக போற.. அப்புறம் என்னடி நாக்கு ரொம்ப நீளுது" மின்னல் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை கண்ட பிரீத்தி நடுங்கி போனாள்.

"மின்னல் ஸா... ஸாரி.. ப்ளீஸ் என்னை விட்டுறு..என்னால மூச்சு விட முடியல.." திக்கித் திணறி வார்த்தைகளை கொட்டியவளை வெறுப்போடு பார்த்தவன் அவள் கரத்திலிருந்து தன் குரல்வளையை விடுவித்தான்..

நேராக வண்டியை எடுத்தவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தான். விலை உயர்ந்த வெளிநாட்டு  மதுபானத்தை எடுத்துக் கொண்டவன்  அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ் கட்டிகளை அதனுள் போட்டான். மெல்லமாக  கிளாசை உறிந்து காலி செய்தவன், அடுத்த ரவுண்டு இருக்கு அதில் மதுவை ஊற்றினான். இம்முறை அருகே இருந்த வீணையை கையில் எடுத்துக் கொண்டான்.

உள்ளே சென்றபோது இசையாக மாறி, அவனது விரல்கள் வீணையின் நரம்பை மீட்ட தொடங்கியது..அவனது உருவம் அசுரத்தனமாக இருந்தாலும் அவன் மீட்டிய ராகம் இன்னிசை மழையாக அந்த இல்லம் முழுவதும் நிரம்பி வழிந்தது. 

மறுநாள் விடியல் அனைவருக்குமே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தது. இரண்டு நாட்கள் கெடு முடிந்த நிலையில் தங்கைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பூங்காவனம்  கதிரின் நாட்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சற்று சீக்கிரமாக கிளம்பி சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.

வீட்டில் மகளின் இந்த நிலையைக் கண்டு தேவகிக்கு மாரடைப்பு வராத குறை ஒன்றுதான். மகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார் தேவகி.

"பூங்கா என்னை மன்னிச்சிருடி நான் பெத்த தங்கமே.. எல்லாமே என்னால தான். ஒரு கேடுகெட்டவனை நம்பி ஓடி வந்தது நான் செஞ்ச மொத தப்பு. சோத்துக்கு வழியில்லாம இந்த ஆள நம்பி  வீட்டுக்குள்ள விட்டது நான் செஞ்ச ரெண்டாவது தப்பு.இன்னிக்கு எல்லா தப்புக்கும் தண்டனையா நான் உயிரோடு இருக்கும் போதே என் பொண்ணுக்கு இந்த நிலைமை..

இனிமே நீ எப்படி வாழுவ? விஷயம் வெளியே தெரிஞ்சா எவன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான்? குடும்பம் குட்டின்னு நீயும் நாலு பேரு மாதிரி நல்லபடியா வாழ வேணாமா.. என்னால முடியலடி. நீ என்னதான்  மனச கரைக்கிற மாதிரி பேசினாலும் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்க என்னால முடியல. இதுக்காகவா உன்ன பொத்தி பொத்தி வளர்த்தேன்? என்ன நடந்தாலும் சரி குடும்பத்தோட விஷத்தை குடிச்சு செத்தாலும் சரி. என் செல்லத்தை நான் பெத்த மகள இந்த நிலைக்கு என்னால ஆளாக்க முடியாது.." தேவகி கத்தி கதறி அழுதார்.

இரண்டு நாட்களாகவே அம்மா மகளுக்குள் இதே பேச்சு வார்த்தை தான். அந்த வீடு போர்க்களமாக மாறிப்போனது. பணத்தை கட்டாவிட்டால் தங்கைகள் இருவரின் வாழ்வை நினைத்து பார்த்தாள் பூங்காவனம். சிறுமிகள் என்றால் விட்டுவிட அவர்கள் என்ன மனசாட்சி கொண்டவர்களா? சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த சிறுமிகளை மொட்டிலேயே கருக்கி விடுவார்கள்..

தன்னுடைய தங்கைகளுக்காக தன்னை பணியும் வைக்க துணிந்து விட்டாள் பூங்காவனம். கதிர் அநியாயத்துக்கு வட்டி கொடுத்து வாங்குபவன்.  ஆனால் அவனிடம் தொழிலில் நேர்மை இருக்கிறது. இம்மாதிரியான நெருக்கடிகளை கதிர் கொடுப்பவன் கிடையாது. கதிர் ஒரு அல்லக்கை. அனைவருக்கும் மேலாக இருப்பது சோலை பாண்டியன். சோழியின் குடுமி சும்மா ஆடாது என்பது போல  சோலை பாண்டியன் ஆட்டுவிக்க கதிர் ஆடிக் கொண்டிருக்கிறான்.

அதனால்தான் குடுமியை சென்று சந்திக்காமல்  அதனை ஆட்டுவிக்கும் சாட்டையை சென்று சந்திக்க முடிவு எடுத்தாள் பூங்காவனம்.. தேவகியின் கதறலை அவள் பொருட்படுத்தவில்லை.

" சாகறது தான் வழின்னா பத்து வருஷம் முன்னாடியே நீ அந்த வழியே தேர்ந்தெடுத்துருப்ப. ஒன்ன வித்து எங்களை வளர்த்த.. இன்னிக்கி என்ன வித்து என் தங்கச்சிங்கள காப்பாத்துற நிலைமையில நான் இருக்கேன். இதுக்காக நான் வேதனை படலை. இதுதான் என் விதின்னு நினைச்சு மனச தேத்திக்கிறேன். இன்னிக்கு எனக்கும் உனக்கும் வந்த இந்த நிலைமை நாளைக்கு என் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் வரக்கூடாது.." அம்மாவுக்கு சமாதானம் கூறியவள் நேராக சோலை பாண்டியனின் வீட்டிற்கு வந்து விட்டாள்.

அவ்வளவு காலையில் பூங்காவனத்தை அதுவும் தன் வீட்டில் எதிர்பார்க்கவில்லை சோலை பாண்டியன். கதிரின் நெருக்கடி தாங்க முடியாமல் தேவகி தான் தன்னை வந்து பார்ப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பூங்காவனத்தை கண்டதும் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியது.

" அடடா யாரு இவ்வளவு காலையில வந்துருக்கிறது.. மதுரை மீனாட்சியே எந்திருச்சு வந்தது மாதிரி இருக்கு.. என்ன கிளி ஒன்னு தான் கையில காணோம்" உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா மதுரை மீனாட்சியவே தப்பா பாப்பிங்க டா..

மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பூங்காவனம்." என்னோட அம்மா கதிர்கிட்ட வட்டி வாங்குனது உங்களுக்கு தெரியும். அவங்க கேரன்டி கையெழுத்து தான் போட்டாங்க. பணத்தை வாங்கின சுஜாதா ஊரவிட்டே ஓடிட்டா.. இப்போ கதிர் பணத்துக்காக எங்கள நெருக்கடி பண்றான்..

ரெண்டு நாள்ல ரெண்டு லட்சம் எங்களால எப்படி கொடுக்க முடியும். அது மட்டும் இல்ல கதிர பொருத்த வரைக்கும் தொழில் விஷயத்துல அவன் நாணயமானவன். இந்த அளவுக்கு கீழ்த்தரமா அவன் இறங்க மாட்டான்.. இதுக்கு பின்னால நீங்க தான் இருக்கீங்க. " சோலைப் பாண்டியன் முகத்துக்கு நேராக கை நீட்டி   பேசினாள் பூங்காவனம்.

ஒரு சிறு பெண் தன் முன்னால் கைநீட்டி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை சோலை பாண்டியனுக்கு.. திமிராக சென்ற சோபாவில் அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு காப்பியை மெல்ல ரசித்து உறிந்தார்.

" ஆமா நான் தான் இவ்வளவுக்கும் காரணம். இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற.. இவ்வளவு கண்டுபிடிச்ச உனக்கு இதுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க தெரியாதா என்ன.. " அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்காவனம்.

" இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் உங்க அம்மாவையே நான் பண்ணிட்டு இருக்கிறது? அவளுக்கும் வயசாகுதா இல்லையா.. செத்த பாம்ப தொடற மாதிரி இருக்கு அவளை தொடுறப்போ.. ச்சை ஒரு வயசுக்கு மேல தானா விலகியிரனும்னு அறிவு வேணாம்.. அப்படி என்ன உடம்பு சோகம் கேக்குது அந்த கிழட்டு சிறுக்கிக்கு". சடார் என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள் பூங்காவனம். என்ன ஒரு அநியாய குற்றச்சாட்டு?

இருப்பவர்களுக்கு இல்லாதவர்களை கண்டால் என்றுமே எகத்தாலம் தான்..

" உன் குடும்பத்தை பத்தி எனக்கு தெரியாதா..  உங்க அம்மாவுக்காகவா இத்தனை வருஷம் கேக்குறப்ப எல்லாம் பணத்தை அள்ளி கொடுத்திருக்கேன்? இன்னிக்கி அவ நாளைக்கு நீ.. நீ அலுத்து போனா உன் தங்கச்சிக்கு எத்தனை வயசு? "டேய் உனக்கு அவ பேத்தி மாதிரி டா.. பூங்காவனத்தின் மனசாட்சி கதறியது.

" நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். இந்த கால பொண்ணு எல்லாத்துக்கும் வேகமா தானே இருப்ப." பூங்காவனத்தின் அமைதி அவரை மேற்கொண்டு பேச வைத்தது..

"சரி கழுத.. எப்போ நீயா வர" நேரடியாக அவரும் விஷயத்திற்கு வந்தார்.

" நாளைக்கு"

"சந்தோசம்.. டேய் சுரேஷு"சுரேஷ் வேகமாக ஓடி வந்தான்.

"ஐயா.." சுரேஷின் காதில் எதையோ கூறினார் சோலை பாண்டியன்.

சுரேஷ் வேகமாக உள்ளே ஓடினான். வட்டியும் முதலுமாக கதிருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து வந்தான்.

அதனை பூங்காவனத்தின் முன்பு தூக்கி போட்டவர்"நாளைக்கு நீயா வர.." அமைதியாக தலையாட்டிய பூங்காவனம் அவர் தூக்கிப்போட்ட பணத்தை கையில் எடுத்தாள்.


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...