Saturday, 5 April 2025

தாகம் 30




கோவிலுக்கு வந்திருந்தாள் பூங்காவனம். மனமெல்லாம் கசந்து வழிந்தது. என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கே புரியவில்லை. மகாலட்சுமி தேவகி இவர்கள் இருவரும் கூறியதை கேட்டு தரம் இறங்கி போய் விட்டோமோ என்கின்ற எண்ணம் அவளை பேயாய் அலைக்கழித்தது.  இந்த மூன்று மாதத்தில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தன்னாலான முயற்சிகளை செய்து விட்டாள் பூங்காவனம். ஒன்றே ஒன்றுதான் அவள் இன்னும் செய்யவில்லை. தேவகி கூறியதைப் போல மின்னலை வசீகரிக்கும் அரைகுறை ஆடைகளை அணியவில்லை.

கணவன் முன்பு அப்படி நிற்பதில் அவளுக்கு எந்த வித வெட்கமும் கிடையாது. என்ன சோலை பாண்டிய உங்க அம்மா மயக்கன மாதிரி என்னையும் மயக்க பாக்குறியா? இப்படியான வார்த்தைகள் ஒரு வேலை மின்னலின் வாயிலிருந்து வந்து விட்டால் அதன் பின்பு அவள் உயிர் வாழ்வதில் அர்த்தமே கிடையாது..

அவன் கேட்க மாட்டான் என்று அவளால் இன்று வரை உறுதியாக நினைக்கவே முடியவில்லை. கன்னி விடியின் மீது காலை வைத்தது போல எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பதைப்பதைபோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..

எவ்வளவு முயற்சிகள், அவனின் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா? ஒரு முறையாவது வாயைத் திறந்து தன்னுடைய சமையல் நன்றாக இருக்கிறது என்று கூற மாட்டானா?  ஆசையாக அவளுக்கு ஒரு பரிசு? அதற்கு எங்கே அவனுக்கு நேரம் இருக்கிறது? ஏன் ஒரு முழம் மல்லிகை பூ வாங்கி இருக்கலாமே? அமைச்சர் என்றால் மல்லிகைப்பூ மனைவிக்கு வாங்கி கொடுக்க கூடாது என்கின்ற சட்டம் இருக்கிறதா?

தினம் கூலி வேலை செய்பவன் கூட மனைவிக்கு தின்பதற்கு தின்பண்டங்களாவது வாங்கி வருகிறானே.. கோடி கோடியை மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதித்து வைத்திருக்கும் இவன் ஒரு கோணி ஊசியை கூட வாங்கி வந்து கொடுக்க மாட்டேன் என்கிறான்.

அவனாக வந்து அணைப்பது கிடையாது. இவள் அணைத்தால் அதை தொடர்வான். இவள் சாப்பாடு போட்டால் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறான்.. கலவி முடிந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொடுத்தால் அமைதியாக அவனும் உறங்குகிறான்..

அவள் உலக கதை ஊர் கதை எல்லாம் அளக்க அவன் தன்னுடைய வேலையில் மும்பரமாக இருக்கிறான். அவள் ஏதாவது புரியாத கேள்வி கேட்டால் மட்டுமே அதற்கு பதில் கூறுவானே தவிர  பூங்காவனத்தைப் போல ஊர் கதை உலகக் கதை எதையும் அவன் பேச மாட்டான். என்ன ஒரே ஒரு ஆறுதல் பாதையில் எழுந்து செல்லாமல் அவள் பேசி முடிக்கும் வரை அவன் அமர்ந்திருப்பது மட்டுமே..

தன்னைப் பற்றிய கவலையில் மூழ்கி இருந்தாள் பூங்காவனம். சுற்றி தெரிந்த மாறுதலை அவள் உணரவில்லை. யாரோ தன்னை குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்த பூங்காவனம்  சட்டென்று தன் சிந்தனையிலிருந்து வெளிப்பட அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அங்கே அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றது சோலை பாண்டியன்.. அன்று ஒரு நாள் மகாலட்சுமி கணவனை இழந்து தாயகம் திரும்பி வந்தபோது சோலை பாண்டியனை அவரது வீட்டில் பார்த்தது.

அதற்குப் பிறகு இத்தனை மாதங்களாக அவள் சோலை பாண்டியனை சந்திக்கவே கிடையாது. மின்னலின் மூலமாக அவ்வப்போது அவரது பெயர் மட்டும் பேச்சின் ஊடே வெளிப்படும். இத்தனை மாதங்கள் கழித்து சோலை பாண்டியனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வேதனைப்பட்டாள் பூங்காவனம்.. சோலை பாண்டியனின் பார்வை நேராகப் பூங்காவனத்தின் வயிற்றை தொட்டு மீண்டது..

அன்னிக்கு செயல் போல் ஒரு கருத்தை வயிற்றின் மேல் வைத்து  தன் குழந்தைக்கு அரண் போல் நின்றாள் பூங்காவனம்..

" என்னம்மா பூங்கா, எப்படி இருக்க? சௌரியமா? ஆள பாத்தே மாசக்கணக்கா ஆகுதே.. உன்ன பத்தி  எப்பவாவது நினைச்சுப்பேன்.. நீ இருக்க வேண்டிய இடம் என்ன ஆனா இருக்குற இடம் என்ன.. ம்ம்ம் ஆளே அடையாளம் தெரியாம மாறி போய்ட்டியே.. குடும்பமே ஒரு தினுசா தான் சுத்திக்கிட்டு இருக்கீங்க..

உன் புருஷன் கிட்ட உன்ன பத்தி பேச்சை எடுத்தாலே ஒரு பார்வை.. நேக்கா என்கிட்டயே பேச்சை மாத்தி பேசுறான்.. எல்லாம் இப்ப தலைகீழா இருக்கு" பூங்காவனம் சோலை பாண்டியனை எரித்து விடுவது போல முறைத்தாள்.

அவரை சுற்றிக்கொண்டு செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியது சோலை பாண்டியனின் குரல்." அவங்க அம்மா தேவகியை இப்ப வீட்டு பக்கத்துலயே காணோம்.. புதுசா எவனையாச்சும் புடிச்சுட்டாளோ.. இல்ல வரக்கூடாத சீக்கு ஏதாச்சும் வந்திருச்சா? வேகமாக திரும்பிப் பார்த்தவள் அக்கம் பக்கம் யாராவது இந்த பேச்சைக் கேட்கிறார்களா என ஆராய்ந்தாள். நல்லவேளையாக சாதாரண நாள் என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாக இருந்தது.

சோலை பாண்டியன் நமட்டு சிரிப்போடு நின்று கொண்டிருக்க " சந்தர்ப்ப சூழ்நிலையால ரெண்டு நாய் மட்டும் தான் எங்க அம்மாவை கடிச்சிருக்கு.. அதுலயும் இரண்டாவது நாய் இருக்கே அந்த நாய் ஊருபட்ட கண்ட தெரு நாயோடெல்லாம் சகவாசம் வச்சிக்கிட்டு  அடுத்தவங்கள பாத்து குறைச்சிகிட்டு கிடக்கு. அதுக்கே எந்த கேடும் வராதப்ப  என் அம்மாவுக்கு என்ன கேடு வரப்போகுது.." வேண்டுமென்றே ஊருக்கே கேட்கும் குரலில் கூறினாள் பூங்காவனம்.. அதனால் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்த பக்தர்கள் இவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தார்கள்.

சோலை பாண்டியன் முகம் கறுத்து சிறுத்தது"ஹேய்.. பொட்ட கழுத என்ன விட்ட வாய்  ரொம்ப தான் நீளுது.. உங்க அம்மா என்ன பத்தினியா.. தே.... தானே" கோவில் என்றும் பாராமல் வார்த்தையை விட்டார் சோலை பாண்டியன்.

"என் அம்மா தே.. னா அவங்கள பாக்க நாக்க தொங்க போட்டு வந்த உங்கள தே...மவனு சொல்லவா".. அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் பூங்காவனம்..

"ஹேய்".. சோலை பாண்டியன் அவளை நெருங்க

" என்ன மறந்து போச்சா நான் எம்பி பொண்டாட்டி.  என் மேல கை வச்சா சோசியல் மீடியம் முழுக்க உங்கள பத்தி தான் பேச்சு ஓடும். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு ரொம்ப நாளா என் மேல கண்ணு என்ன படுக்க கூப்பிடுறிங்கன்னு சொல்லிடுவேன். அதும் கோவில்ல வச்சு காம பேச்சு பேசுறீங்கன்னு சொன்னா  உங்க நிலைமை என்ன ஆகும். உங்கள புண்ணிய ஆத்மா மாதிரி நெனச்சிட்டு இருக்குற உங்க பொண்ணு மகாலட்சுமிக்கு இந்த நிலைமை தெரிஞ்சா" ஆத்திரத்தை அடக்க வழி இல்லாமல் பூங்காவனத்தை எதுவும் கூறவும் முடியாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார் சோலை பாண்டியன்.

கோவில் தலைமை கர்த்தாவை பார்க்க வந்த இடத்தில் தான்  சோகமே உருவாக அமர்ந்திருந்த பூங்காவனத்தை கண்டார் சோலை பாண்டியன். அவளது மேடிட்ட வயிறும்  கவலை தோய்ந்த கண்களும் அவரது கண்களில் படவில்லை. முன்னைவிட அழகாக குழந்தையின் காரணமாக உடல் மினுமினுக்க  பேரழகியாக காட்சி தந்த பூங்காவனமே சோலை பாண்டியின் கண்களில் விழுந்தாள்..

பழைய நினைவில் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அவளிடம் பேச இப்பொழுது அவள் ஒன்றும் அன்னக்காவடி பூங்காவனம் இல்லையே.. அதையேதான் அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள்..

"என்னடி இப்படி பேசிட்ட.. இப்ப பிரச்சனை வந்தா" மூளை அவளை கேள்வி கேட்டது.

" வந்தா வரட்டும் அத பாத்துக்கலாம்.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கிழவனுக்கு பயந்துகிட்டே இருக்க முடியும். கண்ட நாய் எல்லாம் வந்து மேல கை வைக்க புருஷன்னு ஒருத்தன் எதுக்கு அப்புறம் இருக்கான்?" மனம் மூளைக்கு பதில் சொன்னது.

" அப்போ உன்னையே அறியாம நீ உன் புருஷனா மலை மாதிரி நம்புற.. உனக்கு ஏதாவது ஒன்னுனா அவன் வந்து உனக்காக நிற்பான்னு நீ நினைக்கிற.. " இப்பொழுது மூளை எகத்தாளமாக கேள்வி கேட்டது.

"நிப்பானா"மனம் வாடியது.. நம்பிக்கையாக சொல்ல முடியவில்லை.. நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது.. என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்?

" என்ன பதிலையே காணோம் முன்ன மாதிரி அந்த சோலை பாண்டியன் உன் மேல கை வச்சா என்ன பண்ணுவ..".. மூளை மீண்டும் கேள்வி கேட்க 

" செத்துக்கூட போவ ஆனா அதுக்கு முன்னாடி அந்த சோலை பாண்டியனோட உயிரை எடுத்துட்டு தான் போவேன்.."மனதை அடக்கினாள் பூங்காவனம்.

வீட்டிற்கு வந்தவளுக்கு கோவிலில் நடந்த சம்பவமே மீண்டும் மீண்டும் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.அன்று மதியம் வேலை இருந்ததால் வீட்டிற்கு மின்னல் வீரபாண்டியன் வரவில்லை.. அவனுக்கான உணவை  ஆபீஸ்க்கு கொடுத்து அனுப்பி விட்டாள்..

இந்த சில மாதங்களாக மின்னலுக்காக பார்த்து பார்த்து சமைத்தவள் இன்று நடந்த மனப்போராட்டத்தின் விளைவாக ரசமும் உருளைக்கிழங்கு பிரட்டலும் மட்டும் தயார் செய்து அனுப்பி விட்டாள்..

வேலைப்பளுவின் காரணமாக மதிய உணவு வேலை தாண்டி லஞ்ச் பாக்ஸை திறந்தான்  மின்னல்.. " என்னடா சாப்பிட்டியா" பக்கத்தில் இருந்த நாகாவை பார்த்து கேட்டான்.

" நம்ம வீட்ல இன்னைக்கு கருவாட்டு குழம்பு அண்ணா. மொச்சகொட்டை எல்லாம் போட்டு தூக்கலா பண்ணிருந்தா.. நீங்கதான் இவ்ளோ நேரம் கழிச்சு சாப்பிடுறீங்க.. " குறைப்பட்டு கொண்டான் நாகா.

" என்னடா கேரியர் இவ்வளவு சின்னதா இருக்கு. " வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவில் வந்த கேரியரை பார்த்து கேட்டான் மின்னல்.

" தல வாழ இலைல வித விதமா சமைச்சு அடுக்கி சாப்பிட்டா மட்டும் அண்ணி சமையல புகழ்ந்து தள்றீங்களா.. அவங்களும் எவ்வளவு தான் உங்களுக்காக இறங்கி வருவாங்க.. நானும் கொஞ்ச நாளா உங்கள பாத்துட்டு தான் இருக்கேன்.. அண்ணி சமையல் என்ன ருசி தெரியுமா..

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுறேன்.. அவங்களும் முகமே சுளிக்காம இன்னும் வேணுமா இன்னும் வேணுமானு கேட்டு கேட்டு கவனிக்கிறாங்க.. நம்ம வீட்டு நாய் கூட இப்பல்லாம் பிஸ்கட் போட்டா சாப்பிட மாட்டேங்குது. அண்ணி சமையல் செஞ்ச தட்டுல பிஸ்கட் போட்டு கொடுத்தா தான் சாப்பிடுது..

நாய்க்கு கூட அண்ணியோட அருமை தெரியுது. ஆனா நீங்க  "

" என்னடா நாய் கூட சேர்த்து வச்சு பேசுறியா"

" நான் அப்படி சொல்ல வரல. பாவமா இருக்குண்ணா அவங்கள பார்க்க.. ஒவ்வொரு முறையும் ஆசை சமைச்சு உங்களுக்கு பரிமாறும் போது உங்க மூஞ்சியே பாத்துட்டு நிக்கிறாங்க.. ஒரு தடவையாச்சும்  சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குனு சொல்றீங்களா.. எவ்வளவு சந்தோஷப்படுவாங்க" தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டினான் நாகா..  வழக்கம்போல அமைதியாக இருந்தான் மின்னல்.

மின்னலுக்கு இலை போட்டு கேரியரை பிரிக்க போகும்போது நாகாவுக்கு அழைப்பு வந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது எவனோ ஒருவன் பைக்கை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்று விட்டானாம். பெரிதாக அடி ஒன்றும் இல்லை என்றாலும் குழந்தை பயந்து அழுது கொண்டே இருக்கிறதாம். உடனே வரும்படி நாகாவின் மனைவி பதறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு விஷயத்தை மின்னலிடம் கூற, கையில் பணத்தை கொடுத்து உடனே சென்று பார்க்குமாறு பணித்தான்..

கூடவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை அழைத்து குழந்தையின் மீது மோதிய வண்டியின் எண்ணை கண்டுபிடிக்க சொல்லி அந்த நபரை உள்ளே தூக்கி போடுமாறு வேலைகள் பார்த்துவிட்டு கேரியரை திறந்தான் மின்னல்.

முதல் கேரியலில் உருளைக்கிழங்கு பிரட்டல். அடுத்ததாக ரசம். மின்னலின் முகத்தில் பெரிதாக சிரிப்பு தோன்றியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய் விட்டு சிரித்தான்..

சுடு சோற்றில் ரசம் ஊற்றி உருளைக்கிழங்கு பிரட்டலை போட்டு பிரட்டி ஒவ்வொரு கவனமாக வாயில் வைக்கும் போது சொர்க்கமே கண் முன் வந்து போனது போல் இருந்தது..

பூங்காவனம் பெயருக்கு ஏதோ கொறித்து விட்டு கட்டில் மேல் அமர்ந்திருந்தாள். அவள் மனம் முழுவதும் தனக்காக ஒன்றென்றால் மின்னல் நிற்கவே மாட்டானா என்று ஏங்கியது. இந்த உலகத்தில் தனக்கென்று சொல்ல யாருமே இல்லையா? கொஞ்சம் கொஞ்சமாக அவளது சகோதரிகளும் மின்னலின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். தேவகியை பற்றி சொல்லவே வேண்டாம்.

பூங்காவனத்திற்கு பெரிதாக நட்பு வட்டாரமும் கிடையாது. திடீரென்று அத்துவன காட்டிற்க்குள் தனித்து விட்டதைப் போல உணர்ந்தாள் பூங்காவனம். லேசாக தலை சுற்றுவது போல இருக்க கட்டியில் சாய்ந்து விட்டாள்.

அவளது அலைபேசி அழைத்தது.. எந்த நேரத்தில் யார் என்று  எரிச்சலாக போனை எடுத்துப் பார்த்தவள் கண்கள் விரிந்தது.அழைத்தது அவளுடைய கணவன். விதவிதமாக உண்டவனுக்கு ரசத்தை பார்த்ததும் பற்றி கொண்டு வந்திருக்கும். அவளை வதைத்து எடுப்பதற்காக அழைக்கிறான்.  முதல் இரண்டு தடவை அவன் அழைப்பை நிராகரித்தவள் விடாமல் அழைப்பு வரை வேண்டா வெறுப்பாக எடுத்துப் பேசினாள்.

"ஹெலோ.."

" என்ன பண்ற ஏன் போன் எடுக்கல'

" தோணல "

" அப்படின்னா போனை கையில தான் வச்சிருக்க.." சரியாக கண்டுபிடித்து விட்டான்.

" ஆமா எதுக்கு போன எடுக்கணும்.. என்கிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு? நானும் இத்தனை மாசமா பாத்துகிட்டு தானே வரேன்.. ஏதோ பைத்தியக்காரிச்சி மாதிரி நான் தான் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறேன்.. உங்களுக்கு என்ன நகை நட்டு கட்டிக்க துணி வாங்கி கொடுத்தா போதும். வெளி உலகத்துக்கு நான் எம்பி பொண்டாட்டி.

ஆனா உண்மையா நான் யாரு.. அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.. உங்க வீட்ல வேலை செய்ற வேலைக்காரி கூட என்னை விட சந்தோஷமா இருக்கா.. பேசாம அந்த இடத்துல நான் இருக்க கூடாதானு இருக்கு.. இங்க பாருங்க என்னமோ இப்ப மட்டும் இந்த வீட்டுக்காரி ரேஞ்ச்ல நான் இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்கேன்.." வேதனையோடு சிரித்தாள் பூங்காவனம். வழக்கம்போல அந்த பக்கம் அமைதி.

" இப்படி ஊமை படம் காட்டுறதுக்கு எதுக்கு எனக்கு போன் போடணும்."எரிந்து விழுந்தாள் பூங்காவனம்.

" சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.. " இதுவரை பூங்காவனம் கேட்டிராத குரல். இவ்வளவு மிருதுவாக கூட மின்னலுக்கு பேச தெரியுமா.  பாதி குரல் காற்றில் தேய்ந்து மீதி கரகரப்பாக.. அவள் செவியில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கண்கள் விரிய அமர்ந்திருந்தாள்.

"அம்மாடி"

"இப்.. இப்ப நீங்க என்ன சொன்னீங்க"

" அடியே பைத்தியக்காரி.. இத்தனை நாள் எனக்கு பிடிக்குமா பிடிக்காதானு தெரியாம வகைவகையா ஆக்கி போட்டியே.. இன்னிக்கு தான் எனக்கு பிடிச்ச சாப்பாட செஞ்சுருக்க"

" இல்லையே உங்களுக்கு பிடிக்கும்னு கமலா அக்கா" அவனது பேச்சில் குறுக்கிட்டாள் பூங்காவனம்.

" எனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும்.. ஒரு நாளாவது உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டியா.."இல்லையே.. கமலா சொல்லியதை வைத்து அவனுக்கு பிடிக்கும் என்று விதவிதமாக ஆக்கி போட்டாளே..

அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்தவன்"  இருவத்தி அஞ்சு வருஷம் ஆச்சு. என் அம்மா கைல சாப்பிடவே முடியாது நினைச்சுட்டு இருந்தேன்.. இத்தனை வருஷம் கழிச்சு எனக்கே ஒரு குழந்தை வரப் போகுது.  திரும்பவும் சின்ன வயசு வீராவா  என் அம்மா ரசமும் உருளைக்கிழங்கும் வெச்சு பெசஞ்சி எனக்கு ஊட்டி விட்ட மாதிரி..தேங்க்ஸ் அம்மாடி".. அழைப்பை துண்டித்து விட்டான் மின்னல்.

அவன் பேசிய பேச்சில் திட்பிறமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.

தொடரும்


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...