"பிரபல ரவுடி, சென்னையை ஆட்டிப் படித்துக் கொண்டிருந்த தாதா சுகுவின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் காரணம்? போலீஸா? அல்லது இது ஒரு கேங் வாரா? சுகுவின் இறந்த உடலை போலீசார் கண்டுபிடிக்க முயற்சி." இப்படி எந்த சோசியல் மீடியாவை திறந்தாலும் பத்திரிகைகளிலும் சுகுவின் மரணத்தை பற்றி கேள்வி எழுந்தது.
சுகு இறந்ததாக வெளியிடப்பட்ட ஒளிப்பதிவு காணொளிகள் அனைத்து இடங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க ஆனால் அவனின் உடல் மட்டும் எங்கிருக்கிறது என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் வீட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை பழைய சோறில் தயிர் ஊற்றி கடித்துக் கொள்ள சின்ன வெங்காயம் பச்சை மிளகாயை வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மின்னல்.
ஒவ்வொரு வாய்க்கும் சின்ன வெங்காயத்தையும், மிளகாயையும் அவன் ரசித்து கடிக்கும் போது அதனை சற்று தள்ளி தரையில் அமர்ந்திருந்து பார்த்தவாறு இருந்தாள் பூங்காவனம். கையில் வளைந்த சோற்றுத் தண்ணீரை அவன் நாவால் நக்கிக் கொண்டே அவளை பார்த்து
"ன்னா வேணுமா?" என்பது போல் செய்கை காட்ட முகத்தை திருப்பிக் கொண்டாள் பூங்காவனம்.. அவன் சோற்றை சாப்பிட்டு விட்டு மீதமிருந்த நீச்ச தண்ணியை ஒரு கலக்கு கலக்கி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். கடவாயின் ஓரம் வழிந்த நீச்சத்தண்ணீர் அப்படியே அவன் நெஞ்சில் இறங்கி இடுப்பு வேஷ்டியை வந்தடைந்தது.
அதனை பார்த்துக் கொண்டிருந்த பூங்காவனத்திற்கு குமட்டியது..வேகமாக எழுந்து பின்பக்கம் ஓடினாள். கதவை திறந்தவள் அலறிய அலறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.. அங்கே சுகுவின் உடலை இருபதுக்கும் மேற்பட்ட பூனைகள் கடித்து தின்று கொண்டிருந்தன.
மீண்டும் கதவை அடைத்து விட்டு உள்ளே ஓடி வந்தவள் மின்னலின் மீது மோதி தரையில் விழுந்தாள்.
" என்ன குஞ்ச பாத்து பயந்துட்டியா"..
"ஹான்" மிரண்டா விழிகளோடு எழுந்து நின்றாள் பூங்காவனம்..
"கோழிக் குஞ்சிங்கள பார்த்து பயந்துட்டியான்னு கேட்டேன்" தலையை குனிந்து கொண்டாள் பூங்காவனம். நேற்று அவன் மட்டும் இல்லை என்றால் அவளின் கதி என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியவில்லை? ஒற்றையளாய் சுகுவின் படைகளை அடித்து தூசம் செய்தவன், இறுதியில் சுகுவின் கதையை ஒரேடியாக முடித்து விட்டான்.
அதுவும் சுகு, பூங்காவனத்தை பார்த்துக் கொண்டே தன்னுடைய உயிரைத் துறந்ததை இன்னும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் என்ன மனிதனா இல்லை அரக்கனா எவ்வளவு இயல்பாக ஒருவனை வயிற்றில் மிதித்தே கொன்று விட்டான்.. வலுவான அந்த கால்களுக்கு ஒருவனை அழிக்கத்தான் இயற்கை விதித்திருக்கிறதா?
இறந்த சுகுவை வீடியோ எடுத்து அதனை சோசியல் மீடியாவுக்கு பரவ விட்டவன், பிணத்தை அங்கேயே போட்டு வராமல் வேலை மெனக்கட்டு தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.. பூனைகளால் கடித்து கொதறப்படும் சுகுவின் சவத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தது அங்கிருந்த கேமரா ஒன்று.
நடந்த சம்பவங்களை கண்டு நடுங்கி போய் ஒரு ஓரமாக நின்ற பூங்காவனத்தை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான் மின்னல். அடுத்த நொடி அவன் பின்னாலயே பூனைக்குட்டி போல சென்றவள் காரில் ஏறிக்கொண்டாள்.வண்டி எங்கே போகிறது, அடுத்து என்ன நடக்கிறது என்பதை பற்றி எல்லாம் அவளுக்கு அந்த நேரம் மூளையே ஓடவில்லை.
ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இப்பொழுது ஒரு கொலையை கண்ணால் பார்க்கும்படி நேர்ந்து விட்டது என்பது மட்டுமே அவளது சிந்தை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது..
ஊருக்கு ஒதுக்கப்புறமாக இம்மாதிரி தவறுகள் செய்வதற்கென்றே கட்டபட்ட வீடு ஒன்றில் சுகுவின் சவத்தை கொண்டு வந்த போட்டவன் அங்கிருந்து குளிர்சாதன பெட்டியை திறந்து உள்ளிருந்த பீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
ஒரு பாட்டிலை முழுதாக முடித்தவன், திருச்சிக்குள் தயாராக மசாலா தடவி வைக்கப்பட்டிருந்த இரண்டு முழு கோழிகளை எடுத்தான். பெரிய சட்டி ஒன்றை எடுத்து ஒவ்வொரு கோழியாக பொரித்து எடுத்தான்.பெண்ணோருத்தியை காப்பாற்றி அழைத்து வந்தோமே அவளின் நிலை என்னவாக இருக்கும் என்பதை பற்றி எல்லாம் அவனுக்கு கவலை கிடையாது..
பொரித்த கோழியில் பாதியை சுடச்சுட பிய்த்து அவளிடம் நீட்டினான். கண்களில் மிரட்சியோடு சோபாவின் ஒட்டில் அமர்ந்திருந்தவள் அவனை இமை மூடாமல் பார்த்தாலே தவிர அவன் நீட்டிய கோழியை தொடவே இல்லை..
"ம்ம்ம்" மின்னலின் உறுமல் சத்தம் கேட்டு வேகமாக கையை நீட்டினாள் பூங்காவனம். சுட சுட சட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கோழி அவளின் கையை புண்ணாக்கியது. தட்டில் வைத்து கொடுக்கும் அளவுக்கு கூட அவனுக்கு பொறுமை கிடையாது.. கோழிதுண்டினை அவள் கீழே போட்டு விட அவளை கொடூரமாக முறைத்தான் மின்னல்.
"சூடு.. ' இரண்டு உள்ளங்கைகளையும் அவன் முன்பு விரித்து காட்டினாள். பார்க்கவே பயங்கரமாக காணப்பட்டது பெண்ணின் மென்மையான உள்ளங்கை.. அங்கிருந்த பழைய நாளிதழ் ஒன்றினை அவள் மீது தூக்கி எறிந்தான் மின்னல்.
தரையில் விழுந்த கோழியை எடுத்து ஊதியவள் அந்த நாளிதழில் வைத்து விட்டு அப்புறணியாக பார்த்துக் கொண்டிருக்க அவனோ அரை கோழியை முடித்துவிட்டு முழு கோழிக்கு வந்திருந்தான்.. ஒரு பக்கம் பீர் ஒரு பக்கம் கோழியென அவன் பாட்டுக்கு ஆனந்தமாக அந்த இரவை கடத்திக் கொண்டிருக்க பாவம் இங்கே ஒவ்வொரு நொடியும் பூங்காவனத்திற்கு உயிர் போய் உயிர் வந்தது.
" என்ன ஊட்டி விடணுமா" கோழியை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவர்களின் செவிகள் வந்து விழுந்தது மின்னலின் கடுமையான வார்த்தைகள்.
"நான் சாப்பிட்டு முடிகிறதுக்குள்ள நீ சாப்பிட்டு என் கண்ணிலே படக்கூடாது. மீறி பட்ட சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது" அவன் எதை குறிப்பிடுகிறான் என்பது பூங்காவனத்திற்கு புரிந்தது. ஆவி பறக்கும் கோழியினை கையில் எடுத்தவள் ஊதி ஊதி வேகமாக தன்னால் முடிந்தவரை சாப்பிட்டு முடித்தாள்.
எங்கே கொலைகாரன் அவன் சொன்னது போல ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயத்தில் அந்த வீட்டின் ஒரு மூலையில் சென்று பதுங்கி விட்டாள். ஒன்றை கோழிகளை பீரோடு சேர்த்து உள்ளே தள்ளியவன் சோபாவில் நீர் யானையை போல கவிழ்ந்து விட்டான்.
அவன் உறங்கும் வரை காத்திருந்தவள் மெல்ல எழுந்து வந்து வாசல் கதவை திறந்து பார்த்தாள். தேக்கில் செய்த கதவு போல கம்பீரமாக நின்றது. பின் வாசலும் இதே கதி தான். ஜன்னல்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தாள். தப்பித்து ஓடுவதற்கான வழியே அவளுக்கு தென்படவில்லை.
" தப்பிக்க ட்ரை பண்றியா" அவள் பின்னால் முதுகு உரச வந்து நின்று திடீரென்று கேட்ட மின்னலின் குரலில் தூக்கி வாரி போட்டது பூங்காவனத்திற்கு.
குதித்து அவள் திரும்பிப் பார்க்க, அவளின் வலது கையை மடக்கி முதுகு பின்னால் வைத்தவன் பெண்ணவளை தன் நெஞ்சோடு உருசும்படி இறுக்கமாக பிடித்துக் கொண்டு
" அவ்ளோ சீக்கிரம் என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியுமா" அவன் கேட்டது கூட அவளுக்கு பெரிதாக இல்லை அவன் நெஞ்சோடு உரசி கொண்டிருக்கும் தன்னுடைய நெஞ்சை குனிந்து பார்த்தாள். அவளின் பார்வையை தொடர்ந்து அவனின் பார்வையும் பயணித்தது.
பெண்மையின் மென்மை என்னவென்று அறியாதவன் அவன் கிடையாது.. போதை ஏறிய கண்களோடு மேல் சட்டை அணியாமல் அவன் அவளை கிறக்கமாக பார்க்க பூங்காவனத்திற்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.
"அ..அது.. பாத்ரூம் போனும்.. அதான்" வாயில் வந்ததை அடித்து விட்டாள் பூங்காவனம்.
" வாசப்படியில பாத்ரூம் போவியா" தலையை குனிந்து கொண்டாள் பூங்காவனம்.
ஒரு நொடிகள் அவளை தன் பிடியில் வைத்து இம்சித்தவன் என்ன நினைத்தாலும் அவளை விடுவித்துவிட்டு மீண்டும் சோபாவில் சென்று படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
தப்பித்து ஓடும் எண்ணமே அற்று போனது அவளுக்கு. பேசாமல் ஒரு மூளைக்குச் சென்று ஒடுங்கி கொண்டாள். இந்நேரம் தாய் தங்கைகள் இருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துக் கொண்டே எப்படி உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கிப் போனாள்.
காலையில் வெயில் முகத்தில் அடிக்க எழுந்தவள் அங்கே மின்னலின் தோற்றத்தைக் கண்டு அயர்ந்து போனாள். இடுப்பில் வேஷ்டியோடு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் மின்னல். நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்ச கொட்டை இதழ்களோ
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
சுலோகத்தை சொல்லிக் கொண்டிருந்தன. சோலை பாண்டியனிடம் வேலை செய்பவன் வேறு எப்படி இருக்க முடியும்?
அதன் பின்பு சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்தவன் யோகா செய்ய தொடங்கினான். இப்படியே ஒன்றரை மணி நேரத்தை கடத்தியவன் மண்பானை ஒன்றினை எடுத்தான். அதில் பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. வெங்காயமும் பச்சை மிளகாயும் எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்து விட்டான்.
முதலில் சோலை பாண்டியன் அப்புறம் சுகு பிறகு இவன்? யார் இவன் எதற்காக தன்னைக் காப்பாற்றி இங்கே வைத்திருக்க வேண்டும்? எதுவும் புரியாமல் மண்டை காய்ந்தது பூங்காவனத்திற்கு.
அவன் மீது மோதி கீழே விழுந்தவள் சுதாகரித்து எழுந்து நின்று
"சார்.. உங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க தான் என்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எதுக்காக நீங்க என்னையும் உங்க கூட கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னு தான் எனக்கு புரியல. ப்ளீஸ் சார், நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. என்ன விட்ருங்க. அம்மா தங்கச்சிங்க இவங்க மட்டும் தான் என்னோட உலகம்.
நேத்து முழுக்க நான் வீட்டுக்கு போலனு என்ன நினைச்சு ரொம்ப பயந்து போய் இருப்பாங்க. ப்ளீஸ் சார், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க".. பூங்காவனம் கையெடுத்து கும்பிட்டு அவனிடம் கெஞ்ச
"சோலை ஐயா உன்ன விட சொல்லட்டும் அப்புறம் விடறேன் " ஆக இவனும் சோலை பாண்டியனின் கையால் என்பது அப்பொழுதுதான் பூங்காவனத்திற்கு புரிந்தது.
No comments:
Post a Comment