பூங்காவனத்திற்கு மாற்றுத் துணிகளை எடுத்து வந்து கொடுத்தார் கமலி.. புரியாமல் பார்த்த பூங்காவனத்திடம் " தம்பி தான் உனக்கு மாத்து துணி வாங்கியாந்து கொடுக்க சொன்னுச்சு. இப்பதான் கடையிலிருந்து ஆளு வந்துச்சு."..
" அங்க வச்சுட்டு போங்க"
" கண்ணே எப்படியோ உங்க அம்மா வந்து கொஞ்சம் சாப்பாடு ஊட்டி விட்டுட்டாங்க. நான் ஒரு கிளாஸ் பால் எடுத்துட்டு வரேன் அதையும் குடிச்சிடுறியா.." அதிலே ஏதாவது கலந்து இருக்கிறதா என்று சுட சுட கேட்க வாய் துடித்தது. இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் பூங்கா.
" பரவால்ல அக்கா வயிறு ஃபுல்லாச்சு.." கமலி பூங்காவனத்தை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றார்.
" இந்த வீட்ல யாரையும் நம்ப முடியாது. நம்பவும் கூடாது. அம்மா சொன்னது தான் சரி. பூங்கா நீ எந்த தப்பும் செய்யல உன் வாழ்க்கையை வாழாம சாகறதுக்கு.கூலி வேலை செஞ்சாவது அம்மா தங்கச்சிங்கள காப்பாத்துற அளவுக்கு உன் மனசுல தெம்பு இருக்கு. ஆனா அது செய்யவிடாம தடுக்க எவ்ளோ இடைஞ்சல்.
இனிமே எத பத்தியும் கவலைப்பட கூடாது. குழந்தைகளோட பசிக்கு தன்னோட உடம்பு சதையை வெட்டிக் கொடுக்குற தாய் மாதிரி என் அம்மா தங்கச்சிங்களுக்காக என் உடம்ப பணயம் வைக்குறேன்.. ".. குளித்து முடித்து கமலி கொடுத்துச் சென்று சேலையை உடுத்திக் கொண்டாள் பூங்காவனம்.
ரத்த சிவப்பு நிற சேலை அவளது மஞ்சள் நிறத்திற்கு அழகாய் பொருந்தியது.. நெற்றியில் பெரிதாய் பொட்டு வைத்து உச்சந்தலையில் குங்குமம் வைத்து ஈரக் கூந்தலை விரித்து விட்டபடி கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் கமலி. அவர் கையில் நெருக்கமாக தொடுத்த மல்லிகைச் சரம்..
"இந்தாடா கண்ணு பூ வெச்சிக்கோ".. பூங்காவனம் அவரை ஒன்றும் சொல்லவில்லை. கவலையே வந்து ஒரு ஹேர் பின்னை கொண்டு இரு பக்க செவி அருகே இருந்தும் சிறிது முடியை எடுத்து நடுவே கிளிப் குத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகை சாரத்தை வைத்து விட்டார்.
" ரொம்ப அழகா இருக்கடா.. என் கண்ணே பட்றும் போல.." நெட்டி முறித்து விட்டு கமலி சென்று விட அமைதியாக அமர்ந்திருந்தாள் பூங்காவனம். மணி இரவு ஒன்பதாவது பத்தானது பதினொன்று ஆனது. மின்னலுக்காக காத்திருந்த பூங்கா எப்போது உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.
அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவு ஒரு மணி போல வீட்டிற்கு வந்தான் மின்னல்.. வழக்கம்போல அவனுக்காக உறங்காமல் காத்திருந்தார் கமலி..
"வாப்பா மின்னலு.. இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாது..பாவம் உன் பொண்டாட்டி ரொம்ப நேரம் உனக்காக காத்திருந்தா. தூங்கிருப்பாளோ என்னவோ." அரை தூக்கத்தில் பேசினார் கமலி.
"நீ சாப்பிட்டு தூங்கலையா.. எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன்"
" அது என்னவோ ராத்திரி எந்நேரம் ஆனாலும் உன்னை பார்த்தா தான் நிம்மதியா இருக்கு.. சரி நீ போய் கை கால் கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்"
" அவ சாப்பிட்டாளா"
" எங்க மொத அவங்க அம்மா வந்திருந்தாங்க. மக சாப்பிடாம இருப்பான்னு தெரிஞ்சே கையோட சோத்து கூடைய கையோட தூக்கிட்டு வந்திருச்சு அந்தம்மா.. தாயும் மகளும் என்னமோ குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க.. அப்புறம் கொண்டு வந்த சோத்த மகளுக்கு ஊட்டிட்டு அந்தம்மா கிளம்பி போயிருச்சு.. சாப்பாடு இங்க வந்து சாப்பிடுறியா இல்ல மேல கொண்டு வரட்டுமா.. " கண்ணை கசக்கினார் கமலி.
" மேல கொண்டு வந்து வச்சிரு.." சொல்லிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்கு சென்றான் மின்னல்.. வழக்கமான அவனது அறை தான். வழக்கத்திற்கு மாறானது அங்கே பூங்கா மட்டும்தான்.
அவனது கட்டிலில் சாய்ந்து உரிமையாக படுத்து உறங்க பயந்து கொண்டு கட்டில் விளிம்பில் தலை வைத்து தரையில் அமர்ந்தபடியே உறங்கி இருந்தாள்.. அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் விளக்கை கூட போடாமல் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
அதற்குள் கமலி சாப்பாடு எடுத்து வந்து அறையின் விளக்கை போட அப்போது கூட பூங்காவின் ஆழமான உறக்கம் களையவில்லை.. அவரும் அவளை எழுப்பு முயற்சிக்காமல் மேஜை மீது தட்டை வைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினார். சற்று நேரத்தில் வெளியே வந்த மின்னல் கவனம் முழுவதும் பூங்காவின் மேலே பதிந்திருந்தது. ஒரு தடவை அறையை பார்வையால் அலசினான். உடைந்திருந்த கண்ணாடியை தவிர மற்ற பொருட்கள் யாவும் வைத்தது வைத்தபடி இருந்தது..
ஈரத் துண்டால் அவளை சுண்டியடித்தான் மின்னல் வீரபாண்டியன்.. சுளீரென்று அடி விழ வேகமாக கண் திறந்து பதறி எழுந்தாள் பூங்காவனம்.
எதிரே அமைதியான முகத்தோடு நின்று கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன். வீரபாண்டியன் என்பது மட்டும்தான் அவனது பெயர். மின்னல் அவன் மின்னலைப் போல நொடியில் ஒரு வேலையை செய்து முடிப்பான் என்பதால் கட்சியின் சேர்ந்த பின் அவனுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி. அதுவே பின்னாளில் அவனை மக்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவியாக அமைந்தது.
ஆத்திரத்தை உள்ளே மறைத்துக் கொண்டு நிர்மலமான முகத்தோடு அவன் முன்பு நிற்க படாத பாடு பட்டாள் பூங்காவனம்.. ஐந்து நிமிடங்கள் ஆகியும் அவளது நிலையிலும் மாற்றமில்லை, அவனும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்..
" ஒருவேளை நின்னுட்டு தூங்கிட்டானோ.. " குழப்பத்தோடு பூங்காவனம் ஏறிட்டு பார்க்க மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு வைத்த கண் எடுக்காமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் மின்னல். தாடிக்குள் ஒளிந்திருந்த அவனது முகமும் கரும்பாவை அசையாமல் அவளை பார்த்த விதமும் உள்ளுக்குள் திகிலூட்ட வேகமாக மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.
"நாசமா போறவன் எப்படி குறுகுறுன்னு பார்க்கிறான் பாரு.."
" பத்தினியா" திடீரென்று ஒலித்தது அவனின் குரல்.. ஏறிட்டு அவனைப் பார்த்தவள் புரியாமல் விழிக்க
" இல்ல சாபம் கொடுக்குறியே பத்தினியானு கேட்டேன்.." அவனின் கேள்வியில் பூங்காவனத்திற்கு தலை முதல் கால் வரை பற்றி எரிந்தது.
" இன்னும் கொஞ்ச நேரத்துல அதை தெரிஞ்சுக்க தானே போற.. ஸாரி போறீங்க".. அவனின் புருவ மேடு ஏறி இறங்கியது..
" உனக்கு ஓகே"
பூங்காவனம் அமைதியாக இருந்தாள்.. அந்தக் கேள்விக்கு அவளால் மனப்பூர்வமாக பதிலளிக்க முடியவில்லை. பொய் சொல்லவும் நாக்கூசியது. உடனே அவன் முன்பு கூசி கூனிக்குறுகி ஒடுங்கி நிற்பதை போல உணர்ந்தாள் பூங்காவனம்..வைத்த தனது கடினமான பார்வையால் மேலும் சற்று நேரம் சிரமத்திற்கு ஆளாக்கி விட்டு தரையில் சம்மனமிட்டு அமர்ந்தான் மின்னல்.
" எடுத்துட்டு வா"
"சாப்பாடு" அவனின் பார்வையை தொடர்ந்து மேஜை மீது வைக்கப்பட்டிருந்த உணவுப் ட்ரேயில் அவளின் பார்வை விழுந்தது. சென்று எடுத்து வந்து நின்றாள்.
" சாமி கும்பிடுரியா.. சாப்பாட்டை கையில வச்சுட்டு. வை" அவளுக்கு பேராச்சரியமாக இருந்தது. அந்த அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தது அவளின் கண்கள். இருவர் அமர்ந்து உண்ணும் அளவிற்கு சின்னதாக டீ டேபிள் வேறு ஒரு ஓரத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. சோபா சேட் எனக்கென்ன என்று கிடந்தது. அப்படி இருக்கையில் எதனால் இவன் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?
" எனக்கு எந்த விஷயத்தையும் ஒரு தடவை சொல்லித்தான் பழக்கம்" அவன் எங்கே அமர்ந்து சாப்பிட்டால் தனக்கு என்ன என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவள் வேகமாக அவனருகே தட்டை வைத்தாள்..
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளும் அங்கே வெறுமனே நிற்பதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் அவளை பார்த்துக் கொண்டே அள்ளி வாயில் வைத்தான் மின்னல்.. இறுதியாக அவளை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக வாய்குள் விட்டு அவன் சப்பு கூட்ட சேலையை இழுத்துப் பொருத்திக்கொண்டு எங்காவது கண்காணாத தேசத்திற்கு ஓடி விடலாமா என்று கூட இருந்தது..
சாப்பிட்டு முடித்தவன் எழுந்து தட்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றான். தட்டை அலசி வந்து மீண்டும் அதே டிரேயின் மீது வைத்தான். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பூங்காவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் சாவகாசமாக கட்டிலில் அமர்ந்தான். வெறும் கைலி மட்டும் அணிந்திருந்தவனை பார்க்கையில் இப்பொழுது இன்னும் பயம் அதிகரித்தது.
" உன் பேரு என்ன" பூங்கா மயங்கி விழாத குறை தான். பெயர் கூட அறியாமலா அவளை திருமணம் செய்து கொண்டான்..
அவள் யோசித்துக் கொண்டு அமைதியாக நிற்க..
"ம்ம்ம்"
"பூங்காவானம்"..
"என்ன"
"ச்சே பூங்காவனம்" அவளுடைய பெயரே மறந்து விட்டது பூங்காவுக்கு.
"வயசு"..
"இருவது".. என்றதும் அவளை ஏற இறங்க பார்த்தான் மின்னல்..
"சைஸ்சு".. மீண்டும் லைட்டர் ஒலி மட்டும் அந்த அறையில் கேட்டது..
அதற்கு மேல் பூங்காவனத்தினால் பேசாமல் இருக்க முடியவில்லை. என்ன ஆகிவிடப் போகிறது மிஞ்சி மிஞ்சி போனால் உயிர் போகும். உயிர் போகப் போகிறதோ அல்லது மானம் போகப்போகிறதா?.. இரண்டில் எதுவோ ஒன்று இப்பொழுது போகப்போவது உறுதி. அது எதுவாக இருந்தாலும் இவனை சுடச்சுட நான்கு வார்த்தை கேட்காமல் போகக்கூடாது.
" இப்படிக் கேட்க உங்களுக்கு வெக்கமா இல்ல.. ஓட்டு வாங்க வரும் போது மட்டும் பெண்கள் நம் நாட்டின் கண்கள். பாகுபலி மாறி பொம்பளைங்கள யாராவது தொட்டா அவன் கையை இல்ல தலையை வெட்டனும்னு வீர தீரமா வசனம் பேசிட்டு அந்த சோலை பாண்டியனுக்கு கைக்கூலியா இருக்கீங்க. அது உங்க சொந்த விஷயம்.
ஆனா உங்களை நம்பி ஓட்டு போட்ட முட்டா ஜனங்கள்ள நானும் ஒருத்தி. கொஞ்சமாவது எங்க நம்பிக்கையை மதிச்சு நடங்க. உங்க தொகுதியை சேர்ந்தவ தான் நானும்.. வெளியிலிருந்து பார்க்கிறப்ப எல்லாமே நல்லா தான் இருக்கு உள்ள வந்து பார்த்தா தான் அதோட நாத்தம் தெரியுது.. இப்ப என்ன உங்களுக்கு என் உடம்பு வேணுமா. அந்த உடம்பு கொடுக்கிற சுகம் வேணுமா.. எடுத்துக்கோங்க..
ஆனா எனக்கு தயவு செஞ்சு ரெண்டுல ஒரு பதிலை இப்பயே சொல்லுங்க. என்ன உங்க கூட வச்சு வாழ போறீங்களா இல்ல நான் உங்களை விட்டு விலகி போனோமா. எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஏணி வச்சு பார்த்தாலும் எனக்கு உங்களுக்கும் அந்தஸ்து எட்டவே எட்டாது.நீங்க என்ன யூஸ் பண்ணிட்டு உதறி விட்றது. மத்தவங்க மாதிரி பணத்தையோ இல்ல வேற எதையும் நான் உங்ககிட்ட எதிர்பார்க்க மாட்டேன்.
எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னை நல்லபடியா உயிரோடு என் குடும்பத்துக்கிட்ட நீங்க சேர்த்து வச்சுட்டா போதும். இந்த ஊரிலேயே நான் இருக்க போறது கிடையாது.. எந்த விதத்திலையும் உங்களுக்கு நான் தொல்லை கொடுக்க மாட்டேன். ப்ளீஸ் சார்" பேச வேண்டியது தெளிவாகப் பேசி முடித்திருந்தாள் பூங்காவனம்.
சிகரெட்டும் புகைந்து முடிந்திருந்தது. மின்னல் அவள் பேசியதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் மெல்ல எழுந்து நின்றான். அவன் என்ன சொல்லப் போகிறானோ என்கின்ற எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு பூங்காவனம் இருக்க அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான் மின்னல்.
ஒவ்வொரு அடியாக அவன் தன்னை நோக்கி எடுத்து வைக்க அவளையும் அறியாமல் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி எடுத்து வைத்தாள் பூங்கா.. இரண்டு அடிகளில் சேலை பின்னிக்கொள்ள தடுமாறியவளை அவனின் வழிய கரம் தாங்கிப் பிடித்தது.
அவனைப் பொறுத்தவரை மெதுவாக தான் பிடித்திருந்தான் ஆனால் அதுவே அவளுக்கு வலித்தது.. முகம் சிவக்க அவனுடைய பிடியிலிருந்து விடுபட முயற்சி செய்தாள் பூங்கா..
"ஸ்ஸ்ஸ்"என்றவன்
"அப்ப உனக்கு ஓகே"
" உங்களுக்கு வேறு யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசை இருந்திருக்கும். என்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டது ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு அவசியமா இருந்திருக்கும். அதுக்காக நான் உங்களை நிர்பந்தம் படுத்த போறது இல்ல. போலீசு கேஸ்ன்னு உங்கள பயம் கொடுத்த போறதில்லை. உங்களுக்கு தேவை நான் தானே .. திரும்பவும் சொல்றேன் எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னை விட்ருங்க.." எதற்கும் துணிந்தவளை போல அவளும் பேசிக் கொண்டிருக்க திடீரென்று என்ன ஆனது என்றே புரியாமல் விழித்தாள் பூங்காவனம்.
காரணம் அவளின் இதழ்கள் மின்னலின் முரட்டு இதழ்களின் உள்ளே தவித்துக் கொண்டிருந்தன. சிகரெட் புகையின் வாடை பூங்காவுக்கு உமட்டிக் கொண்டு வர அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தாள். அவனின் பிடி இரும்பை ஒத்திருக்க அவளின் போராட்டம் அவனுக்குள் அடங்கி போனது.
No comments:
Post a Comment