சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 11


முதுகு வலிக்க தொடங்க கனவிழித்தான் நீரன். விடிய காலை வேளை. மணியை பார்த்தான் ஐத்தரை என்றது.அவனின் உடல் அசதி இன்னும் கொஞ்ச நேரம் உறங்க சொல்லி கெஞ்சியது. ஆனால் சோபாவில் படுத்திருந்தவனால் அதிக நேரம் தன் உடலைக் குறுக்கி அதில் படுத்திருக்க முடியவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டு தனது அறையை நோட்டமிட்டான். அறை கதவு திறந்து இருந்தது.ஒரு சந்தேகத்தோடு எழுந்து சென்று பார்த்தான். கட்டில் தட்டிப் போட்டு தலையணைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“காலங்காதால இவ எங்க போனா?”தனக்குள் முணுமுணுத்து கொண்டவன் செந்தூராவை அறைக்குள் தேடி பார்த்தான். அங்கே அவள் இல்லை.  பிறகு ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தான். மூன்று அறைகளிலும் அவள் இல்லை.  பின்கட்டுக்கு வந்து தேடிப் பார்த்தான் அங்கும் அவள் இல்லை. மாட்டுகொட்டகை பக்கம் பார்க்க அவன் மனம் இடம் தரவில்லை.எப்படியும் அவள் அங்கே இருக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.இருந்தாலும் ஒரு தடவை அங்கே திரும்பி பார்த்தான். அவனின் செல்ல பசு காமாட்சியும் அதனின் மகள் சுந்தரியும் இவனை தனது அழகிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தன. வீடு முழுவதும் செந்தூராவை தேடி அலைந்தான். அவள் வீட்டில் இல்லை.

“ராவோடு ராவா ஒருவேள அப்பன் வீட்டுக்கே போயிட்டாளோ..”அப்படி நினைக்கவும் அவன் மனம் இடம் தரவில்லை.இன்னும் அவன் பார்க்காத ஒரே இடம் அவனது வீட்டின் மொட்டை மாடி தான். இந்தக் குளிரில் அவள் மொட்டை மாடியிலிருந்து என்ன செய்ய போகிறாள்.. சரி எதற்கும் ஒரு தடவை பார்ப்போமே என்று மேலே சென்றான்.செந்தூரா அங்கேதான் இருந்தாள். பைஜாமாவின் கால்சராயை முட்டி வரை சுருட்டி வைத்துக் கொண்டு சட்டையை முன் பக்கம் இழுத்து ஒரு முடிச்சு போட்டிருந்தாள். முடிச்சின் தயவால் தொடை வரை இருந்த சட்டை இப்பொழுது தொப்புளுக்கு மேல் நின்றது.சிட் அப் செய்து கொண்டிருந்தவளின் உடலில் ஏகதிற்கும் வியர்வை வழிந்து இஷ்டம் போல் ஓடியது.நீரனிற்கு இந்த சின்ன வயதில் இப்படி ஒரு சோதனை வரவே கூடாது..

கட்டிய மனைவி கட்டழகியாக கட்டுக்குலையாத உடலோடு புலராத காலையில் வியர்த்து விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை கண்டால் எந்த கணவனுக்கு தான் ஆசை வராது?நேற்று அங்கே ஒருவன் நின்று பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை கருத்தில் கொள்ளாமல் தனது ஆடையைக் கழற்றி அவன் முகத்திலேயே வீசி விட்டு சென்றாள்.இன்றோ ஆள் பாதி ஆடை பாதியாக குளிர் காற்றில் உடலை வளைக்கிறாள்.

“ஆள் பாக்க குந்தாணி மாறி இருந்தாலும் தொப்பை இல்ல..ப்ச் குட்டியா ஒரு தொப்ப இருந்துருக்கலாம் மெத்து மெத்துனு தல வெச்சு படுத்துருப்பேன் ம்ம்ம்”பெருமூச்சு காலை குளிரிலும் சூடாக வெளியேறியது.அங்கே நின்று பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் தன்னை வெறிக்க வெறிக்க கணவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிந்தே இருந்தாள். வேண்டுமென்றே மேலும் உடலை நெளித்து வளைத்து குதித்து குறுக்கி அவனை தூரத்தில் நிறுத்தி வைத்து என்ன பாடு பட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு பாடாய்படுத்தி எடுத்தாள்.காரிகையின் பெண்ணுடல் மென்மை தீண்ட அவனின் கரங்கள் துடித்தன.

இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. சின்ன வயதில் அவனும் ராசுவும் வெட்கப்பட்டுக்கொண்டே பயந்து பயந்து பார்த்த ஏ க்ரெட் படமும் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி ஆட்டமும் கண்முன்னால் வந்து வந்து சென்றது.லஜ்ஜையே இல்லாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவனை உள்ளுக்குள் நக்கல் சிரிப்போடு கவனித்துக் கொண்டிருந்தால் செந்தூரா. பிறகுதான் அவனை கவனிப்பது போல் கவனித்தவள்

“என்ன ஜமீனு முன்ன பின்ன பொம்பளைங்கள பாத்ததே இல்லயா.. இப்டி ஆட்ட திருடுற நரி மாறி பாக்குறீங்க”துண்டால் துடைத்து வைத்துக் கொண்டே அவனை கேள்வி கேட்டாள்.

“இளம் ஆட்ட அடிச்சா ருசியா தான் இருக்கும். ஆனா ஆடு சம்மதிக்கணுமே..”

“ஆடு சம்மததோடா எல்லாம் நடக்குது”

“அது வேற விஷயம்.இன பெருக்க விசயத்துல ஆட்டுக்கு பூரண சம்மதம் போலையே. நேத்திக்கு இருந்து அதோடு பாடிலேஷனே சரியில்ல”..

“ஆடு கிட்ட வந்தா முட்டி தள்ளிரும் சாக்கிரத”உஷ்ணமாக பதில் வந்தது அவளிடமிருந்து.மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தான் நீரன்.நிலா தேய்ந்த போதிலும் தன்னால் இயன்ற கொஞ்ச நஞ்ச ஒளியை உலகிற்கு கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த அரைகுறை ஒளியில் தன்னுடைய மனைவியை பார்த்தவன்

“என்னங் அம்மணி உடுப்பு இது? நல்லா இருந்த பேண்ட்ட முட்டி வர இழுத்து வுட்டு என்ன பாரு என்ற கால பாருன்னு படம் காடுறீங்க.சரி வுடு கழுதன்னு அப்டியே மேல பாத்தா அபயகரமான பகுதிய எல்லாம் வெட்ட வெளிச்சத்துல காட்டிட்டு இருக்கீங்க..இப்படித்தான் உடம்ப காட்டிகிட்டு உங்க வூட்டுல உடுப்பு போட்டிங்களா”

“ஸட் அப்..நீ படிச்சவன் தானே.. உனக்கு நாகரிகம்னு ஒன்னு இருக்குறது தெரியும் தானே..காலு தெரியுறது வயிறு தெரியுறது எல்லாம் ஒரு விஷயமா”

“இப்டிதான் தான் அம்மணி நீங்கலாம் ஏதோ ஒன்னு பேசிட்டு தெரியுவீங்களே என்ன கருமம் அது.. ஆ பெமினிஷம் (feminism) உடுப்பு போடுறது என் உரிமைன்னு சொல்றிங்க.. சரிதான் ஒம்ம உடம்பு ஒம்ம உடுப்பு நீங்க போட்டுக்குறீங்க.. ஆனா அத வூட்டு குள்ளார போட்டுகிட்டு தாராலமா நடங்க. ஏன் தெருவுல போட்டுட்டு வரீங்க.. என்ன பாரு என் அழக பாருன்னு எதுக்கு காட்டுறீங்க.. தொப்புள்ல பம்பரம் விடலாம்னு மேட்டரே எனக்கு சின்ன கவுண்டர் படத்துல தான் தெரியும்.. அப்டி பட்ட தொப்புள இப்பலாம் சும்மாவே பாக்க முடியுது..மாடர்ன்ற பேருல நல்லா இருக்குற சட்டையை என்னதுக்கு முடிச்சு போட்டு ஒம்ம வயித்த காட்டுறீங்க.. தொப்புள பாத்து பாத்து சலிச்சு போச்சு. முன்னாடி எல்லாம் சேலை கட்டிருப்பிங்க காத்துல முந்தானை லேசா பறக்கும் அந்த அர செகண்ட்ல பட்டும் படாம தெரியும் பாருங்க இடுப்பும் தொப்புளும் எவ்ளோ கவர்ச்சி. இப்ப முக்காவாசி இப்டி அரகுறையா அலைஞ்சு சலிப்ப வர வைக்குதுங்க. இது என்ன உலக அதிசயமா ஊருக்கே காட்ட.. நல்லா கேட்டுக்கோங்க அம்மணி உடுப்பு போடுறது அவங்கவங்க சொந்த விஷயம் தான். ஆனா நீங்களே கவர்ச்சி மாடர்ன் அப்றம் என்னமோ சொல்றாங்களே ஹான் கல்ச்சர் ஷாக் (culture shock)னு இப்டி எல்லாத்துக்கும் வித்தியாசம் தெரியாம நாசமா போறீங்க..எப்ப நீங்க போடுற உடுப்பு ஒம்ம அம்மாவுக்கே அசிங்கமா தோணுதோ அது உலகத்துக்கே கன்றாவியா ஆபாசமா தான் தோணும். ஏன்னா நாம பொறந்ததுல இருந்து நம்மள குளிப்பாட்டி நம்ம வளர்ச்சிய தெரிஞ்சு வெச்சிருக்குறது நம்ம அம்மா தான்”

“ஸ்ப்பா நா என்னா என்ன பாரு என்ற அழக பாருன்னு ஊருக்கே காட்டிட்டு இருக்கேனா இப்போ”

“அப்ப யாரு பாக்க இப்டி காட்டுறீங்க”

“நீ…”வார்த்தையை அத்தோடு மென்று முழுங்கி விட்டாள். ஆனால் அவன் விடாமல்

“நீயா.. என்ன நீ.. நீன்னு என்ன சொல்ல வந்திங்க..நீ பாக்க காட்டுறேனு சொல்ல வந்திங்களா”

“சீ சீ.. ஆச தான் பொழப்ப கெடுக்குமாம்..நீரா நீ ஓவரா பேசுறேன்னு சொல்ல வந்தேன்.. ச்சே காலங்காதால உன்ற மூஞ்சில முழிச்சு என் நாளே நாசமா போ போவுது..உன்ன ஆரு மேல வர சொன்னா”

“எனக்கு மட்டும் ஆசையா காலையில பன்னி மூஞ்சில முழிக்க.. நீங்க என்ற ரூமுக்குள்ள போயி கதவ சாத்திபுட்டிங்க. மத்த ரெண்டு ரூமுலையும் அடப்பா கெடக்கு. நா எங்கன போயி படுக்க. ரா முச்சுடும் சோபால படுத்து குறுக்கு ஒரே வலி.. கண்ணு தொறந்து பாத்தா ரூமு கதவு தொறந்து கெடக்கு. வீடு முழுக்க தேடுனேன். எங்க ஒருவேள ஒம்ம அப்பன் வூட்டுக்கு போய்ட்டிங்களானு ஒரு சந்தேகம் வந்துச்சு”இதை சொல்லிக்கொண்டே அவள் முகத்தை பார்க்க அவளுக்கோ வேர்த்து வழிந்தது.

“ஒரு எட்டு உன்ற வூட்டுக்கு போலாம்னு நெனச்சேன் சரி ஒரு வாட்டி மேல பாத்தா என்னானு பாத்தேன்.. ஏன் கண்ணு உனக்கு தான் என்னிய புடிக்காதே.. பொறவு எதுக்கு உன்ற அப்பன் கிட்ட அப்டி பேசுன.. அவன் என்ன வெட்ட வந்தா பேசாம கம்முனு நிக்காம என்னத்துக்கு என்ன காப்பத்துன”உடல்பயிற்சி செய்யும்போது வழியாத வியர்வை இப்பொழுது ஏகத்துக்கும் வழிந்தது அவளுக்கு.. திக்கி திணறி என்ன பதில் கூறுவதென்று முழித்தாள்.பெரிய கயல் விழிகளை அவளை உருட்டி பேந்த விழிப்பதை கண்டவனுக்கு காதல் கரை புரண்டு ஓடியது. அந்த கண்களில் விழுந்து உயிரையே தொலைத்து விடும் வேட்கை எழுந்தது. அடிவானம் சிவக்க தொடங்கியது.. மாடியில் சுற்றிலும் கொடிகளில் நீரனின் வேஷ்டிகள் காய்ந்து கொண்டிருந்தன.

அதன் நடுவில் இவர்கள் சாம்பாஷைனை நடைபெற்று கொண்டு இருந்தது.அவள் முகத்தில் துளிர்ந்த வியர்வை கழுத்தில் வழிந்து உள்ளாடையை நனைத்து வயிற்றில் இறங்கி தொப்புளில் தேங்கி நிற்க நீரனின் ஆண் மனம் அங்கேயே பாய் போட்டு படுத்து விட்டது..இதை எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவள். அவன் கேள்விக்கு தக்க பதிலை எவ்வாறு கூறுவதென யோசித்து கொண்டிருந்தாள். நீரன் மெல்ல மெல்லமாக அவளை நெருங்கினான். அவனின் அசைவை உணர்ந்து அவனை ஏறிட்டு பார்க்க அவளருகில் சுவாசம் தொடும் தூரத்தில் நின்றான்.அந்த நெருக்கம் இந்த வேளையில் அவளுக்கு மயக்கத்தை கொடுத்தது. அவன் மேல் உள்ள காதல் காலம் கொடுத்த வலிகளை அந்த நேரம் மானமே இல்லாமல் மறந்து மயங்கி நின்றது.இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்க அங்கே வார்த்தைகள் ஊமையாகி போனது.நீரனின் சூடான மூச்சு அவள் நெற்றியை தொட்டது. அவன் நெஞ்சில் பாதியளவே இருந்த அவளின் உருவம் அவனை அண்ணார்ந்து பார்க்கையில் நீரனுக்கு சிரிப்பு வந்தது.அவன் முன்னால் ஓரடி எடுத்து வைத்தான்.அவள் பின்னால் ஓரடி எடுத்து வைத்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இப்படியே நகர்ந்து மாடிக்கு செல்லும் படிக்கு வர இப்பொழுது செந்தூரா மேல் படியில் நிற்க அவள் உயரத்திக்கு ஏதுவாய் அவன் ஒரு படி இறங்கி நின்றான்.அப்படியும் முடியாமல் அவளை நோக்கி குனிந்தவன் அவளின் குவிந்த இதழில் தன்னிதழை பதித்து விட்டான்.அவள் சுட்ட கை இன்னும் ரணமாக இருந்தது. அவளோ உணர்ச்சி மிகுதியில் அந்த கையிலேயே தன் கையை வைத்து அழுத்த வலி உயிர் போனாலும் நீரன் உதட்டை எடுக்கவில்லை.எந்தளவுக்கு கையில் வலி கூடியதோ அந்த அளவுக்கு முத்தத்தின் வேகத்தை கூட்டினான். ஒரு கட்டத்தில் செந்தூரா தடுமாற அவளை விலகினான். அப்பொழுது தான் தன் கையில் ஈரத்தை பார்த்தவள் நீரனின் தோள் பட்டையை பார்த்தாள். அவளுக்கு புரிந்து விட்டது. அவனுக்கு எப்படி வலித்திருக்கும்?

“நீரா ஸாரி நீரா.. நா ஏதோ தெரியாம..”

“ஹேய் ஒன்னும் இல்லடி பதராத”

“இல்ல நீயாச்சும் சொல்லிருக்கலாம் எவ்ளோ ரத்தம் அய்யோ”அவளுக்கு அழுகையே வந்து விட்டது.நீரனின் சமாதானங்கள் அவளிடம் எடுப்படவில்லை. அவனை பிடித்து படியில் அமர வைத்தவள் ஓடி சென்று கொடியில் தொங்கிய அவனுடைய வேஷ்ட்டி ஒன்றை உருவி வந்து அதை கிழித்து அவனது ரத்தம் வரும் இடத்தை சுற்றி சுற்றினாள்.

“ஏன்டி நல்ல வேஷ்ட்டிய கிழிச்ச”

“ஆமா பிச்சையா எடுக்குற ஒரு வேஷ்டி வாங்க வக்குள்ள உனக்கு”அவனை கடிந்து கொண்டு சுற்றியவள்”இன்னும் கொஞ்சம் விடியட்டும் ராசு கூட கிளினிக் போய்ட்டு வந்துரு..தையல் பிரிஞ்சிருஞ்சுன்னு நெனைக்குறேன்.. ஏன்டா உனக்கெல்லாம் சொரணையே இல்லயா..நா ஏதோ இதுல கைய புடிச்சு அமுக்கி புட்டேன். உனக்கு சொல்ல தெரியாது..”

“என் உதடு இப்ப தான் கன்னி கழிஞ்சது. அந்த நேரத்த அனுபவிக்கமா ஆபாசகுணமா கெடுக்க சொல்றியா”

“உன்ன ஆரு கேட்டு உதட்ட எச்சி பண்ண.நா ஏதோ திங்கிங்ல இருந்ததால கவனிக்கல.. இனிமே இப்டி பக்கத்துல வந்து பாரு கொன்றுவேன்”..

“அப்டியா நீங்க சொன்னா சரிங்க அம்மணி. அவள் அவனின் முன் நின்று கொண்டு பேச அவளது இடையை இரு பக்கமும் பிடித்து இழுக்க அவள் வயிறு இவன் முகத்தில் மோதியது. அவனின் இதழ்கள் அவளது தொப்புளில் தனது முத்திரையை பதித்தது.அதிர்ந்து நகர்ந்தவள் அவன் தலையில் கொட்டி விட்டு ஓடியே விட்டாள்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்