சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 16


ஈராக் போர் போல நீரன் தொடந்து குண்டு மேல் குண்டு போட பாளஸ்தின் போல் செந்தூரா செய்வதரியாது தவித்து நின்றாள். இதுவரை அவன் சொல்லி கொண்டிருந்தவைகள் அனைத்தையும் செவி உள் வாங்கி அதை நேராக மூளையிடம் சேர்ப்பித்து கொண்டிருக்க தேவையில்லாமல் மனமோ அவன் தன்னை எதற்கு இவ்வளவு உண்மை தெரிந்தும் வம்பாடியாக திருமணம் செய்து கொண்டான் என்பதில் குழம்பி தவித்தது.நீ ஏன் வீணாக தவித்து திணறுகிறாய் நானே என் திருவாயால் சொல்கிறேன் ஒரேடியாக அனைத்தையும் கேட்டு நெஞ்சு வலியால் சுருண்டு விடாதே என்ற பார்வையோடு நீரனே தொடர்ந்தான்.

“செர்ரி ராசு சின்ன வயசுல இருந்தே என்ற கிளோஸ் ஃப்ரன்ட்டு..என்னால இப்ப அவன் உசுரும் ஆபத்துல ஊசலாடுது.. அதையும் சொன்னாதான் உனக்கு புரியும்.. இனி நா எதயும் மறைக்க விரும்பல..என்ற மட்டமான பரம்பரை சாபத்துல இன்னொரு ட்விஸ்ட்டு இருக்கு. உண்மையான காதல் தம்பதியால தான் செலய அந்த ராசாவோட ஜீவ சமாதில வைக்க முடியும். ஆனா அதுக்கு முன்ன செலய கண்டு புடிக்கணுமே..அதுக்கும் அந்த ஓல சுவடியில எழுதி இருந்துருக்கு. நமக்காக உயிரையே கொடுக்குற நண்பன் ஒருத்தன் வேணும். அவன் அந்த ராணி மாறியே ஒரு பொம்மைய செஞ்சு அலங்கரிச்சு அதுக்கு முன்னாடி நெருப்பு மூட்டி தன்னோடு கைய அறுத்து ரத்தத்த அந்த நெருப்புல வுடுனும். என்னோட நண்பனுக்காக என்ற உயிரயே நா கொடுக்க ரெடியா இருக்கேன்.தயவு செஞ்சு செல எங்கன்னு எங்களுக்கு க்ளூ கொடுன்னு கேக்கணும்.அதோட இல்லாம ரத்த சத்தியம் பண்றேன். என் நண்பனோட சாபத்த நானும் பங்கு போட்டுக்குறேன்.. ஒரு வேல அந்த செலய கண்டு புடிச்சு இந்த சாபத்த நா போக்கலன்னா எனக்கும் அதே சாபம் வரட்டும்னு சத்தியம் பண்ணனும். அப்டி பண்ணதும் அந்த பொம்மைய நெருப்புல போடணும்.பொம்மை கருகி எரிஞ்சு சாம்பல் ஆனதும் அந்த சாம்பல எடுத்து தண்ணில கலந்து மாளிகை முழுக்க தெளிக்கணும். அப்டி தெளிக்கும் போது எந்த இடத்துல அந்த தண்ணி செவப்பா மாறுதோ அங்க தான் செல இருக்கும்.ராசு உசுர பணயம் வெச்சு செலய கண்டு புடிச்சு கொடுத்தான்.இப்ப நாம சாபத்த சரி பண்ணலேன்னா அது ராசு வம்சத்தையும் விடாது. அப்றம் குட்டிம்மா நா இப்ப சொல்ல போறத கேட்டு என்ன வெட்டுனாலும் சரி குத்தி போட்டாலும் சரி நா ஏத்துக்குவேன். ஆனா என்ன வெறுத்துடாதம்மா..”

அவனின் பீடிக்கையை கண்டு”அப்ப இவ்ளோ நேரம் நா ஒன்ன வெறுக்கலன்னு எப்டி தெரியும் உனக்கு?”அவளின் நிதானம் அவனை தடுமாற வைத்தது.ஒருவேளை அதிர்ச்சி காரணமாக இருக்கலாமென எண்ணியவன்

“இல்லடா என் செந்தூரா எதையும் எடுத்தோம் கவுந்தோம்னு செய்ய மாட்டா.. முழுசா என்ன பத்தி தெரிஞ்சு தா அவ முடிவெடுப்பானு எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கு”

“ஓ சொல்லுங்க ராச பரம்பரை.. அடுத்த குண்டு என்ன”அவளின் இளக்காரம் அவனை சொல்ல விடாமல் வாயை அடைத்தது.. எப்படி எடுத்து கொள்வாளோ என்ற பயம் நெஞ்சை குடைந்தது. ராசு காலில் விழுந்து மன்றாடி வேண்டினானே அவன் பேச்சை அப்போதே கேட்காமல் போனது எவ்வளவு பெரிய தப்பு.. தக்க சமயத்தில் நண்பன் கூறிய கூற்றை கேட்டிருந்தால் இப்பொழுது என்னவள் முன்பு இந்த தலைகுனிவை ஏற்பட்டிருக்குமா? சும்மாவே அவளின் நாவு கூர் தீட்டிய குத்தீட்டியாக என்னைக் குத்திக் கிழிக்க தயங்காது..  இப்பொழுது இந்த உண்மையைச் சொன்னால் நார் நாராகக் கிழித்து மூளைக்கொறு திசையாக வீசிவிட மாட்டாளா..இவ்வளவு சொல்லியாயிற்று இன்னும் இது ஒன்றுதான் என்ன நடந்தாலும் சரி இனி இவளிடம் எதையும் மறைக்க அவன் மனம் விரும்பவில்லை.அவள் அளவு அவனுக்கும் காதல் இருந்தது.ஆனால் அந்தக் காதலின் ஆழம் அவளைப் போல் அல்ல..  அப்படிப்பட்டவளிடம் இத்தனை நாள் உண்மையை மறைத்ததை பெரும் குற்றமாக நினைத்த நீரன்

“செந்தூரா அது.. அது என்னனா உண்மையா லவ் பண்ற ஜோடியால தான் இந்த சாபத்த போக்க முடியும்னு சொன்னேன்ல..என்ற குடும்பத்துலயே அப்டி ஒரு ஜோடியே இல்ல.. என்ற அப்பா அம்மா கூட அந்தளவுக்கு லவ் பண்ணல..உண்மையான காதல நா உன்கிட்ட தா பாத்தேன். அன்னிக்கி தோப்புல்ல உன்ற லவ்வ என்கிட்ட சொன்னப்போ வேணான்னு சொல்லி உன்ன அசிங்கமா பேசுனேன். என்ற கூட அந்த மாறி இருக்க சொன்னேன். இப்டி சொன்னா எந்த பொண்ணா இருந்தாலும் செருப்ப கழட்டி அடிச்சிட்டு போயிருவா நீயும் அதான் செய்ய போறேன்னு நெனச்சு மனச கல்லாக்கிட்டு சொன்னேன்.ஆனா நீ அதுக்கும் சரின்னு சொல்லி என்கூட படுக்கைய பங்கு போட ரெடியா இருந்த.உன்ற கண்ணுல தான் செந்தூரா காதல்னா என்னன்னே நான் தெரிஞ்சிகிட்டேன்.. அடங்காப்பிடாரி பிசாசு ராட்சசி திமுரு புடிச்சவ அப்டினு உன்ன ஊரே கரிச்சு கொட்டும். ஆனா உன்ன நிமுந்து பாக்க அம்புட்டு பயலும் அப்டி பயந்து சாவனுங்க..உன்ற ஒத்த பார்வைக்கே அவனுங்க உசுரு உறஞ்சு நிக்கும்.அப்டி பட்ட உன்ற கண்ணு என்ன பாத்தா மட்டும் கனிவா மாறும். உண்மையான அன்பு என்னிக்கும் மாறாது. அது பல துரோகத்த பாக்கும் எதிரிய சம்பாரிக்கும்.. ஏமாந்து நிக்கும் ஆனா அது தோத்து போகாது.. கடவுள் ஒன்ன கதற கதற புடிங்கிட்டு இன்னொன்ன நமக்கே நமக்குன்னு நாம துவண்டு விழற நேரத்துல தாங்கி புடிக்க சரியா கொடுப்பாரு..என்ற குடும்பத்துல ஆரோ செஞ்ச பாவம் என்ற தலையில விழுந்துருச்சு. அத கேட்டு நா சாவ போறேன்னு உறுதியா நம்புனேன். அதான் நெஞ்சு நெறைய ஆச இருந்தும் அன்னிக்கு அப்டி பேசுனேன். இதுல இருந்து வெளிய வரவே முடியாதுனு நெனச்சேன்.

ஆனா எனக்காக ராசு இந்த தியாகத்த செஞ்சான். அவன் உசுரும் ஆபத்துல இருக்க என்ன உசுரா லவ் பண்ற பொண்ண எங்கன்னு தேடுவேன். அப்டியே கொழபத்துல தவிச்சிட்டு இருந்தப்போ நீ படிச்சு முடிச்சு ஊருக்கு வந்த. வந்தவ கம்முனு இல்லாம என்ன வேவு பாக்க ஆள வெச்ச. அத நா கண்டுபுடிச்சிட்டேன்.நீ எதுக்கு இப்டி பண்றேன்னு தெரிஞ்சிக்க உனக்கே தெரியாம உன்ன பொல்லொவ் பண்ணேன்.நா பாக்காதப்போ என்ன பாக்குற உன்ற திருட்டு கண்ணு..என்ற கிட்ட ஏதாச்சும் பொண்ணு பேசுனா வேற ஒரு காரணத்த உண்டு பண்ணி அந்த பொண்ணு குடும்பத்தையே போட்டு ஆட்டி படைச்ச.. நா பீர் தவிர வேற எதைச்சும் குடிக்க மாட்டேன்னு தெரிஞ்சு வைன் ஷாப் ஓனர் கிட்ட நா எப்ப கேட்டாலும் பீர் இல்லனு பொய் சொல்ல சொல்லி மெரட்டுனது எல்லாமே உன்ற மனசுல நா இருக்கேனு காட்டி கொடுத்துச்சு.உன்ற லவ்வோட ஆழம் புரிஞ்சது.ஆனா நீ என்ற கிட்ட பேசவே மாட்ட.. என்ன பண்ணி உன்ன பேச வைக்கலாம்னு யோசிச்சேன். தப்பா எடுத்துக்காத செந்தூரா. சுடுகாட்டுல குடுக்குடுப்பக்காரன் பேச்சை கேட்டு வசிய மை செஞ்சு எடுத்துட்டு வந்து ராத்திரி ஆருக்கும் தெரியாம உன்ற வூட்டுக்கு வந்து மண்டையில தடவிட்டேன்.அதனால தான் நீ கோபமா பேசுனாலும் என்ற கிட்ட பேசுன.. எனக்கு தெரியும் நீ பேசுனா போதும் பிரச்சனை முடிஞ்சிரும்னு.நீயும் பேசுன..கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்குற மாறி என்ன அவமான படுத்த நெனச்ச. அப்டியே செஞ்ச.. நானும் இதுக்கு மேல விட்டா டைம் போயிரும்னு உன்ன கடத்திட்டு போயி கல்யாணம் பண்ணிகிட்டேன். சாத்தியமா சொல்றேன்டி ராசு இதுல வராம இருந்திருந்தா காலம் பூரா மொட்ட பயலா இருந்துருப்பேன். என்ற வம்சம் என்னோட அழிஞ்சு போயிருக்கும்.. அவன் என்ன பாவம் பண்ணான்.. அவனுக்காக உன்னயும் இதுல இழுத்து விட்டு என்ன மன்னிச்சிருடி”

நீரன் கால் மடக்கி தரையில் அமர்ந்து பிச்சைக்காரனை போல அவளை பார்த்து கொண்டிருந்தான்.ஆக குழந்தை பிறந்தால் அவள் இறந்து விடுவாள்.. குழந்தை பிறக்குமா முதலில்.. நேற்றைய உறவில் தன்னுடைய உயிர் நீரை அவளின் கருப்பையில் அவன் சேர்க்கவே இல்லையே. ஜீவ நீர் வெளியேறும் சமயம் அதனை வெளியே எடுத்து விட்டானே. அவள் ஏன்னென்று கேட்டதற்கு முத்தமிட்டு கொஞ்சி மலுப்பினானே… மீண்டும் மீண்டும் உறவு கொண்ட போதிலும் அதையே தானே செய்தான்.. பாம்பு குட்டி பிறந்து விடுமோ என்று பயப்படுகிறான் என நினைத்தாலே. அவளுக்கு சாவு மணி அடிக்காமல் இருக்க அல்லவா முன்னேச்சரிகையாக இருந்திருக்கிறான்..இவனின் அறிவு ஏன் இவனுடைய முன்னோர்களுக்கு இருக்கவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஒரு பெண்ணை பலிக்கொடுத்து உள்ளனரே.. ஆனாலும் இவன் யோக்கியமா என்ன?

“சரி எந்த பொம்பள கிட்ட புள்ள பெத்துருந்தாலும் அவங்க ஆண்மை போயிருக்குமா”

“ஆமா”

“கல்யாணமே பண்ணாம இருந்துருக்கலாமே”

“வாரிசு இல்லாம போயிரும்ல”

“பெரிய வாரிசு.. வீணா போன மசுரு வாரிசு.. த்து கேடு கெட்ட பரம்பரைடா உன்ற பரம்பரை.. ஊரு முன்னாடி பெரிய ராச பரம்பரனு சீன் போடுவாரு உன்ற அப்பா. இப்டி அப்பாவி பொண்ணுங்கள சுயனலத்துக்காக கட்டி வாரிசு பொறந்ததும் அவங்கள அலுங்காம குலுங்காம சாவடிச்சிருவீங்க. ஊரு முன்னாடி ஆம்பளன்னு காட்ட ஒரு புள்ளய பெத்துக்குவீங்க.. வெக்கமா இல்ல.. நா அந்த ராணி இடத்துல இல்லாம போய்ட்டேன்..இருந்திருந்தா அந்த கேடு கெட்ட சிறுக்கிய அடிச்சே கொன்றுப்பேன்.. சுயநலம் புடிச்ச பேயு.. அவ வம்சம் தானே நீங்கலாம் பொறவு நீங்க மட்டும் எப்டி இருப்பிங்க..என்னடா மொறைக்குற.. உனக்கு எம்புட்டு தகிரியம் இருந்தா எனக்கே வசியம் வெச்சிருப்ப.. ஆ த்து..”அவளின் எச்சில் அவன் நெற்றியில் பட்டு மூக்கில் வழிந்தது.. அதனை துடைக்க கூட தோன்றாமல் சிலையாக நின்றான்.”இதுக்கு எதுக்குடா ராச பரம்பரன்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா திரியனும்..நாண்டுக்கிட்டு தொங்க ஒரு மொழம் கயிறு கிடைக்கல உனக்கு..என்ற நம்பிக்கைய ஒடச்சிட்டியேடா”என்றவள் சுவரில் நீரனின் ராஜ வம்ச வாரிசுகளின் புகைப்படங்கள் தலையில் பாகையோடும் பெண்கள் அணியும் சுடிதார் போல் ஆடையில் போஸ் கொடுத்து சுவரில் வரிசையாக சட்டமிட்ட புகைப்படத்தின் உள்ளே தொங்கி கொண்டிருக்க அவற்றின் கீழே பெரிய சவுக்கு சாட்டையை எடுத்து வந்து நீரனை உரித்து விட்டாள்.

ஒவ்வொரு அடிக்கும் தூணாய் நின்றானே ஒழிய அவளை தடுக்கவில்லை. அடித்த அடியில் சுருண்டு விழுந்தவனை பாவமே பார்க்காமல் அடித்து வெளுத்து எடுத்தவள் சாட்டையை தூக்கி வீசி விட்டு உள்ளே சென்று விட்டாள். விழுந்த இடத்தில் சட்டை கிழிந்து வேஷ்டி அவிழ்ந்து வாயில் ரத்தம் வழிந்து உடலெங்கும் வரிகுதிரையின் அடுத்த வாரிசாக சுருண்டு கிடந்தான் நீரன். கண்மூடி கிடந்தவனின் முகத்தில் சுடுனீரில் முக்கி பிளிந்த துணி ஒன்றால் ஒத்தடம் கொடுக்கப்பட்டு இருக்க பட்டென்று கண்விழித்தான்.நீரன் ஒரு விஷயத்தை அவளிடம் கூறவில்லை. இதை சொல்லியதற்கே சாட்டை பிரிந்து தனியாக கிடக்கிறது. இதில் அவள் அப்பன் செய்த வேலையை சொன்னால் என்ன செய்வாளோ.. இனி அவன் அடிவாங்க தெம்பு வேண்டும் அதற்கு ஆட்டு கால் சூப் குடித்து உடலை தேற்ற வேண்டும். பின்பே அவளிடம் தில்லையில் திருவிளையாடலை பற்றி கூற வேண்டுமென நினைத்தவன் வலியின் தாக்கத்தில் கண்மூடி கிடந்தான்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்