சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 14


மின்சாரம் பாய்ந்தது நீரனின் உடலில் இந்தப் பெண் சாரம் அவன் மேல் மோதியதும்.. அவள் வந்து மோதிய வேகத்திற்கு ஏனோ தானோவென்று அவன் கட்டி இருந்த கைலி அவில தயாராகி நிற்க அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டவன்

“ஏனுங்க அம்மணி என்னங்க ஆச்சு.. ஏன் இத்தன போர்ஸ்ஸா என்னிய வந்து கட்டிக்கிட்டு நிக்குறீங்க?”அவளிடம் பதிளில்லை. பதில் கொடுக்கும் நிலையிலும் அவள் இல்லை. சற்று முன் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும்  அவளின் இயல்பை தொலைக்கு ஏதுவாய் இருந்தது.காலையிலிருந்து இரவு வரை அவள் பட்ட பாடு அவள் மனதிற்கு மட்டுமே தெரியும்.ஒரு பைத்தியக்காரியைப் போல் படித்திருந்தும் புருசனுக்கு ஒன்று என்றதும் பாமர பெண் மாதிரி அவள் இதயம் கண்டதையும் எண்ணி கவலைக் கொண்டது. அவன் மேல் அளவு கடந்த நேசம் கொண்ட நெஞ்சம் சாபம் என்பது உண்மையா பொய்யா என்று கண்டறியும் முன்னரே அவன் உயிருக்கு ஆபத்து என்றதும் ஊமையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.அவள் கண்ணீர் தன் மார் ரோமத்தை தாண்டி நெஞ்சில் சுட

“அம்மணி ஏனுங்க.. இங்க பாருங்க”என அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான் ஒரு கையால். அவளோ அவனை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.  கண்ணீர் இன்னும் அதிகமாக அவன் மார்பை நனைத்தது.

“செர்ரி என்ன ஆச்சு.. ஏன் அழவுற.. உங்கப்பாரு ஞாபகம் வந்துருச்சா.வேணும்னா போயி பார்த்துட்டு வா..” அவள் கண்ணீருக்கு காரணம் தெரிந்தும் அதை காட்டிகொள்ளாமல் வேண்டுமென்றே அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான்  நீரன்.

“நீரா நீ ஏதாச்சும் என்றகிட்ட மறைக்குறியா”

“ம்ஹும்.. சத்தியமா இல்ல”

“ஆரு மேல சத்தியம்? என்ற மேல சத்தியமா சொல்லு”

“என்ற மேல சத்தியமா”

“ப்ச் உன்ற மேலயா சத்தியம் பண்ண சொன்னேன்.. என்ற மேல பண்ணு”

“அதான்டி என்ற மேல சத்தியமா”

“நீரா..”அவன் நெஞ்சிலிருந்து பிரிந்தவள்

“வேணும்னே நீ இப்டி பண்ற நீரா..”.. அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்து”இப்ப சொல்லு என்ற கிட்ட என்ன மறைக்குற”… இவ்வளவு நேரம் அவளிடம் விளையாடி கொண்டிருந்தவன் இப்பொழுது அழுத்தமாக அவளை பார்த்தான்..

“இந்த கண்ணால இப்டி பாக்காத செர்ரி.. மறைக்குற விஷயத்த சொல்ற குள்ள செத்து போயிருவேன் போல”..

“என்ன டைவெர்ட் பண்ண பாக்காத நீரா.. சொல்லு என்ற மேல சத்தியமா இல்ல இல்ல என்ற பொண்டாட்டி செந்தூரா மேல சத்தியமா நா ஒரு விஷயத்தையும் மறைக்குலன்னு சத்தியம் பண்ணு”

“பைத்தியக்காரி நான்தான் சொல்றேன்ல.. நான் எதையும் உன்கிட்ட மறைக்கல கண்டதையும் போட்டு மனச குழப்பிக்கிற.. நீ இப்படி அழுவறத உங்கப்பன் பாத்தா என்ன எட்டாக பிரிச்சு எட்டு ஊருக்கு தூக்கி வீசிடுவான்..”

“நா உயிரோடு இருக்குற வர உன்ன தொடுற தகிரியம் எவனுக்கும் கெடையாது நீரா.. யாரா இருந்தாலும் ஏன் எங்கப்பாவாவே இருந்தாலும் சரிதான் என்ன தான்டி தான் உன்ன தொடணும்..”

“கண்ணு என்னங்க நா சொல்ற டைலாக் எல்லாம் நீங்க அடிச்சு விடுறிங்க.. பொறவு புருஷன்னு நா எதுக்கு இருக்கேனுங்க”

‘இது டைலாக் இல்ல நீரா.. நீ என்றகிட்ட சொல்ல மாட்ற.. சத்தியமும் பண்ண மாட்ற..ஆனா எனக்கு தெரியும்.”

“என்னங்க அம்மணி தெரியும்”

“உனக்கு ஒரு சாபம் இருக்கு நீரா.. அத ஏன் என்ற கிட்ட சொல்ல மாட்ற. பொண்டாட்டின்னா உனக்கு மூடு வந்தா உடனே உன்கூட வந்து உன்ன சந்தோச படுத்தன்னு மட்டும் தானு நெனச்சிட்டு இருக்கியா? என் உடம்ப காட்டி உன்ன சூடேத்தி வெறும் செக்ஸ் பண்ணி, எப்பவும் கொஞ்சி கொழவி இப்டி இருக்கத்தான் பொண்டாட்டியா? இதுக்கா நீ என்ன கல்யாணம் பண்ணி கிட்ட? கடத்தல் கல்யாணமோ காதல் கல்யாணமோ..கல்யாணம்னா அர்த்தம் ஒன்னு தானே..அந்த கல்யாணத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியலன்னா பரவால்ல.. இப்ப நா சொல்றேன்.உன்ற சந்தோசம் மட்டும் இல்ல உன்ற கண்ணீரிலும் எனக்கு பங்கு இருக்கு… அந்த கண்ணீர துடைக்க நா இருக்க மாட்டேன்.. அந்த கண்ணீரே வராம பாத்துக்க நா இருப்பேன்..உன்ற தனிமைக்கு ஆறுதலா நா இருக்க மாட்டேன்..தனிமை உன்ற கிட்ட வராம நா பாத்துக்குவேன்..உன்ற வெறுமைக்கு துணையா நா இருக்க மாட்டேன்.உன்ன நிறைவா நா பாத்துக்குவேன்.. உன்ற வாழ்க்கை இணையா நா இருக்க மாட்டேன்.. உன்னோட நிழலா நா இருப்பேன்..உன்ன பழிவாங்க கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா முடியல.. ஒவ்வொரு தடவயும் நீ கிட்ட வரும்போது என்ற காதல் தான் முந்திரி கொட்ட மாறி முண்டியடிச்சு வெளிய வருது.. உன்ன பாக்குற எல்லா நொடியும் உனக்குள்ள கரைய தான் ஆச படுறேன்..எனக்கு சக்தி இருந்தா உன்ன என் எச்சியா மாத்தி என் நாக்கு கீழயே வெச்சிருப்பேன் நீரா..என்ன அப்டி பாக்குற.. ஊரே பாத்து பயப்படுற பொண்ணு உன்கிட்ட இப்டி பேசிட்டு இருக்கேனேனு ஆச்சரியமா இருக்கா..நீன்னு வரும்போது நா மென்மயா ஆயிடுவேன் நீரா.. உனக்கு என்ன பிரச்சனயோ எனக்கு தெரியல. நீ சொல்ல மாட்ற சொல்லவும் வேணா.. ஒரு நாள் எனக்கு தெரியும் அப்ப பாத்துக்குறேன். ஆனா நீரா இப்ப நா உனக்கு சத்தியம் பண்ணி தரேன்.உன்ற சாபம் எப்டி பட்டதா இருந்தாலுமே உன்ற கூட நின்னு அதுல இருந்து உன்ன வெளிய கொண்டு வருவேன்..எந்த காரணத்த கொண்டும் உன்ன விட்டு நா போக மாட்டேன் நீரா”நீரனின் கால்கள் வலுவிழந்த நடுங்கியது. நின்ற இடத்திலேயே கால் மடக்கி அமர்ந்தான். இப்படி ஒரு காதலா? அவனால் நம்ப இயலவில்லை..

இதற்கு தான் தகுதியானவன் தானா புரியவில்லை..கண்கள் தெளிவாக இருந்தது மாறாக நெஞ்சம் கலங்கி தவித்தது. எதையாவது பிடித்து கொண்டால் தேவலாம் போல் இருக்க சுற்றும் முற்றும் தேடினான். அவனை புரிந்து கொண்ட செந்தூரா நீரனின் தலையை தன் வயிரோடு அணைத்து கொண்டாள். அவனுக்கும் அதுவே தேவையாக இருக்க அவளை இடையோடு கட்டி கொண்டான்.சில நிமிடங்கள் சென்ற பின் மெதுவாக எழுந்து நின்றான்.. “நீரா சாப்டியா”

“இல்ல..”

“உன்ன சாப்ட சொல்லிட்டு தானே போனேன்”

“உனக்காக வெயிட் பண்ணேன்”

“சரி வா..”அவனுக்கு பரிமாறி அவளும் தனக்கு தட்டு வைத்து உண்டு முடித்து அனைத்தையும் சுத்தப் படுத்தி படுக்கைக்கு வர அரைமணி நேரம் ஆனது. நீரன் வழக்கம் போல் அவனரையில் படுத்திருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் செந்தூரா..

“அம்மணி நீ இங்க என்ன பண்ற.. தூங்கலையா”

“தூங்க தான் போறேன் நீரா”என்றவள் அவனருகில் வந்து படுத்து கொள்ள நீரன் விழுக்கென எழுந்து அமர்ந்தான். ஏற்கனவே அவள் பேசிய அனைத்தும் அவன் குற்றவுணர்வை தூண்டி விட்டிருக்க இப்பொழுது பெரும் பாவியாகியது போல உணர்ந்தான்

“செர்ரி என்னடி இப்டி பண்ற.. எப்பவும் போல உன்ற ரூமுக்கு போடி”

“எங்க படுக்கணும் எப்டி படுக்கணும் எல்லாம் உன்ற பொண்டாட்டிக்கு தெரியும்.. நீங்க மூட்டிட்டு படுங்க”என அவன் கையை பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்தாள்.. அவன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தன்னை நிலைப்படுத்தி கையை ஊன்றி சமாளித்தான்.

“சரி நீ படு நா வெளிய படுக்கறேன்”அவன் கைலியை சுருட்டி பிடித்தவள்

“நீரா ஏன் தள்ளி தள்ளி போற? நா நெருங்கி நெருங்கி வரறதால சீப்பா நெனச்சிட்டியா.. இப்ப இல்ல லவ் ப்ரொபோஸ் பண்ணும் போதும் நானாவே சொன்னதால தான் அவ்ளோ கேவலமா பேசுனியா.. பரவால்ல எனக்கு தெரியும் நீ என்ன லவ் பண்ற.. உன்ற கண்ணுல என்ற மேல இருக்குற காதல் தெரியுது நீரா.. இப்டி நெஞ்சு முழுக்க காதல வெச்சிக்கிட்டு ஏன் மருகி நிக்கணும்.. நாம வாழ்க்கய வாழலாம் நீரா”எழுந்து நின்று வேறு புறம் திரும்பி கொண்டவன்

“ஒன்னும் வேணா.. நீ என்ன பழிவாங்க தான வந்த.. அத சரியா செய்ய மாட்டியா..எனக்கு இப்போதைக்கு இது வேணா..உன்ன ஹர்ட் பண்ண கூடாதுன்னு இருக்கேன்.. பண்ண வைக்காத. என்ன இப்டி நம்பாத செர்ரி. நா அதுக்கு தகுதியானவன் இல்ல.. ப்ளீஸ்”

“நீரா என்ன பாரு”

“நா என்ன சொல்லிட்டு இருக்கேன்.. இப்ப உன்ற முகரைய பாக்குறது முக்கியமா”

“என்னிய பாக்க பயமா நீரா”சட்டென்று திரும்பி பார்த்தான். அசந்து இல்லை அதிர்ந்து நின்றான்.. நைட்டி அணிந்திருந்தவள் இப்பொழுது வெறும் உள்ளாடையோடு அதும் கீழாடையோடு மட்டுமே நிற்க நீரனுக்கு பேச்சே வரவில்லை.பொதுவாக அவன் மிகவும் நல்லவன். வாலிப வயது இளைஞர்கள் பார்ப்பதுபோல் காமத்தை தூண்டும் படங்களை கூட அவன் பார்த்ததில்லை. முதல் முதலில் அவன் பார்க்கும் பெண் அவனது மனைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணுப்பவன் நீரன்.. என்னதான் செந்தூராவை அவன் சீண்டினாலும் அவளை தவறான எண்ணத்தில் என்றுமே அவன் கண்டதில்லை. கணவனாக உரிமையோடு ரசித்திருக்கிறான். ஆனால் கணவன் பார்வை அவன் பார்த்ததில்லை. இப்பொழுது அவள் நின்ற கோலத்தைப் பார்த்தவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.நெஞ்சம் படீரென அடித்துக் கொண்டது.வியர்த்துக் கொட்டியது.கை கால்கள் நடுக்கம் கொண்டது.நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

தவறு செய்யும் விடலைப் பையனைக் போல் அந்த நேரம் அவன் நிலையை உணரந்தான்.. இப்ப என்ன செய்றது.. போர்வையை எடுத்து அவ மேல போத்தணுமா? ஏன்டி இப்படி செஞ்சேன்னா நாலு அற விடணுமா..? இல்ல தங்க சிலை மாறி நிக்குறவள அள்ளி கட்டி புடிச்சு இச்சு இச்சுனு முத்தம் கொடுக்கனுமா? ஒன்றுமே புரியவில்லை.பெரு மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் படுத்தி கொண்டான். பின் நிதானமாக”ஏன் செந்தூரா இப்படி பண்ற”

“பண்ணனும்னு தோணிச்சு.. உனக்கு தெரியுமா நீரா.. எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு வயசு வர அம்மா தான் குளிப்பாட்டி விடுவாங்க..தினம் இல்லனாலும் எண்ண தேய்ச்சு குளிப்பாட்டுவாங்க. ஆனா எனக்கு அப்படி இல்ல.. எனக்கு ஒரு அஞ்சு வயசு வரைக்கும் கண்ணம்மா குளிப்பாட்டி விடுவா.. அதுக்கப்புறம் அந்த சின்ன வயசிலேயே நானே குளிச்சுக்குவேன்..எண்ணை தேச்சு விடறேனு கண்ணம்மா எவளயோ சொல்லுவா..ஆனா எனக்கு பிடிக்காது..கண்ணாடியில கூட என்ன முழுசா நான் பாத்ததே இல்ல.. என்னமோ தெரியல என்ன பாக்க எனக்கே கூச்சமா இருக்கும்.. அப்படி நான் பாக்க வெட்கப்பட்ட என்னோட உடம்ப இப்ப உன்கிட்ட காட்டுறேன்னா அது ஏன்னு எனக்கு தெரியல..எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. எனக்கு இப்போ நீ வேணும். இத்தன வருஷம் நானே பாக்காத என் உடம்ப நீ பாக்கணும்னு தோணுது.. நீ சொன்னியே முன்ன நான் இதுக்கு அலையறேனு..தயவு செஞ்சு அப்படி நினைச்சிறாத.. எனக்கு இப்போ நீ வேணும் நீரா” இத்தனை ஆண்டுகாலம் மனசுக்குள்ளே பூட்டி வைத்த காதல் கை கால் முளைத்த குமரியாகி கணவனின் கண் முன்னேயே தன்னை அள்ளி எடுக்க கூறுகையில் காதலன் அவன் என்ன செய்வான்..

இரண்டே எட்டில் அவளை நெருங்கி அள்ளி அணைத்துக் கொண்டான்.. அவனது வெற்று மார்பில் அவளது பெண்மையை அழுத்தி பதிய காதல் கொஞ்சம் கொஞ்சமாய் காமமாக உருமாறியது.. உச்சந்தலையில் ஆரம்பித்த அவனின் இதழ் ஊர்வலம் அவள் இதழில் சற்று நேரம் ஓய்வெடுத்து சங்கு கழுத்தில் இறங்க நிற்க திராணியற்று தடுமாறினால் செந்துரா. அவளை படுக்கையில் கிடத்தி தனது தொடு உணர்ச்சியின் மூலம் அவளின் சிலிர்ப்பை முதலில் அறிந்து கொண்டான்.. உடலெங்கும் அவன் இதழ்கள் பதிய பெயருக்கு ஏற்றார் போல் செந்தூர நிறமாகினால் செந்தூரா..”செர்ரி என்ன பழிவாங்களையா”

“எனக்கு உன்ன எப்டி பழிவாங்குறதுனு தெரியல நீரா..”அப்பாவியாக பதில் சொல்லியவளின் இதழ்களில் சொக்கி போனான் நீரன்.

“நா சொல்லி தரட்டா”

“ம்ம்ம்.. ஆனா நா உன்ன கண்டிப்பா பழிவாங்குவேன் நீரா.”

“நீ பழிவாங்கு செல்லம் மாமா வேய்ட்டிங்.. அதுக்கு முன்னாடி நா எப்டி பழிவாங்குறேன்னு பாரு” பழிவாங்கும் படலாம் விடியல் வரை தொடர்ந்தது..தன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தவளை கண்ணீர் வழிய பார்த்திருந்தான் நீரன். மனமோ நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டன்னு சபித்தது.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்