சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 17


“மச்சான் எதுக்குடா என்ன வர சொன்ன..” என்று கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தான் ராசு.. அங்கே ஹாலில் வெறும் தரையில் அடிப்பட்டு உடம்பெல்லாம் வீங்கி பரிதாபகரமாக கிடந்த நண்பனை கண்டு

” அய்யோ மச்சான் என்னடா இப்படி கெடக்க..ஆருடா உன்ற மேல கைய வெச்சது.. ஆளு ஆருன்னு மட்டும் சொல்லு அவன ஒரே போடா போட்டு தள்ளிருறேன்” நீரனின் அருகே மண்டியிட்டு அவன் கையைப் பிடித்துக்கொண்டு வீர வசனம் பேசினான் ராசு. உடல் வலியில் உறக்கம் கொள்ளாமல் புரண்டு படுத்து கொண்டிருந்தவன் ராசுவின் குரலைக் கேட்டு கண்விழித்து

“டேய் மொக்க நீ ஏன்டா இங்க வந்த.. “

” நீதானடா என்ன வர சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்த.. என்னாச்சோ ஏதாச்சோனு ஓடியாரேன்”

“நா ஒரு மெசேஜூம் அனுப்புலயே”நீரன் குழப்பமாக ராசுவின் முகத்தை பார்க்க

” நான்தான் அனுப்புனேன்” என்று ஒரு குரல் அவர்களுக்குப் பின்னால் கேட்டது.. நீரனுக்கு புரிந்து விட்டது அடுத்த பலியாடு ராசு என்று.. மச்சான் ஓடிடு என்று அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டது செந்தூராவின் குரல்..

“என்னங்க நீங்க உங்கள ஒழுங்கா சோபால படுக்க வெச்சிட்டு தானே குளிக்க போனேன்..அங்க ஒடுக்காம படுக்காம கீழ விழுந்து பொறண்டு கிட்டு கெடக்கிங்க.. உங்கள வெச்சிக்கிட்டு ப்ச்.. அண்ணே கொஞ்சம் புடிங்க அவர சோபால படுக்க வைப்போம்.. இன்னொரு தடவ இந்த மாறி செஞ்சீங்க” இதுவரை இருந்த கனிவான குரல் மாறி கடைசியில் சொன்ன வார்த்தையில் ஒரு மிரட்டல் தெரிந்தது..ராசுவிடம் அவன் எச்சரிக்கை செய்யக்கூடாது என்பது அந்த மிரட்டலில் வெளிப்பட்டது.ராசுவிற்கு ஒன்றும் புரிப்படவில்லை..

“மச்சான் என்னடா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ ஒண்ணுமே சொல்லாம படுத்து கெடக்க.. எப்படிடா அடிபட்டுச்சு.. இந்த அடிய பார்த்தா ஆரோ உன்ன உரிச்சு உப்பு தடவிருக்காங்க போல..”

“அண்ணே அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாசாரம்.. நீங்க வாங்க அவர புடிங்க மொத..” ராசு கண்களால் நீரனிடம் அப்படியா என்று வினவ அவனும் வேறுவழியின்றி செந்தூரா கவனிப்பதை பார்த்துவிட்டு ஆமாம் என்று கண்களால் கூறினான்.. செந்தூராவை பற்றி முழுதாக அறிந்திருந்த ராசு, நீரன் ஏதாவது வாயை கொடுத்து அதில் கடுப்பான செந்தூரா அவனை உரித்து எடுத்திருக்க வேண்டும் என்பதை ஒரு வாராக கவனித்திருந்தான்.. அல்ல ஒருவேளை உண்மையை கூறி விட்டானா .. அப்படி உண்மையை சொல்லி இருந்தால் இந்நேரம் அவள் அவளது அப்பா வீட்டிற்கு சென்று இருக்க வேண்டுமே.. ராசு உடனே நீரனை தூக்கி சோபாவில் கிடத்தினான்… செந்தூரா அவனை

“அண்ணே பின்னாடி கொடி கம்பி அருந்துருச்சு..எனக்கு இவர அடிச்சதுல கைய தூக்க முடில.. கொஞ்சம் கட்டி கொடுத்துருங்க “… ராசு பீதியோடு நீரனை பார்க்க

“அவர என்ன பாக்குறீங்க.. போங்க போயி கம்பிய நல்லா இழுத்து கட்டுங்க”…அவள் மிரட்ட மண்டை முழுவதும் கேள்வியுடன் கிணற்றடிக்கு சென்றான் ராசு..

“செர்ரி அவனுக்கும் இதுக்கும்”நீரன் ஆரம்பித்தவுடன் தலையில் கட்டிருந்த துண்டை உருவி அவன் முகத்தில் வீசிவிட்டு உள்ளே சென்றாள். ராசு கொடி கம்பியை இழுத்து கட்டிவிட்டு நீரனிடம் வர அவளும் மூவருக்கும் சேர்த்து காபி போட்டு எடுத்து வந்தாள்..

” அண்ணே இந்தாங்க காபி.. நீங்களும் எடுத்துக்கோங்க.. “

” ஐயோ எதுக்கு அம்மணி நான் வரும்போதே எங்க வீட்ல குடிச்சிட்டு தான் வந்தேன்.. “

” ஏன் எங்க வீட்டுல குடிச்சா தீட்டுப்பட்ருமா.. மூடிட்டு எடுத்துக் குடிங்க..”நீரனுக்கு என்னடா இவ இப்படி உபசரிக்கிறா.. இது எங்க போய் முடியப் போகுதோ என்று பீதியுடன் காபியை எடுத்துக் கொள்ள குழம்பி விடை புரியாமல் ராசு ஒரு காபியை எடுத்து கொண்டான்.. உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் பயந்த மாதிரி எதுவும் இல்லை காபி அவ்வளவு நன்றாக இருந்தது… குடித்து முடித்த ராசு

“அம்மணி சொல்றனேனு தப்பா நினைக்காத.. அவன் உன்ற புருஷன். இப்படியா கொத்தடிமய போட்டு அடிக்குற மாறி அடிப்ப..படாத எடத்துல பட்டு ஏடா கூடமா ஏதாச்சும் ஆயிருந்தா.. சேதாரம் ஆருக்கு.. பாத்து பக்குவமா நடந்துகோம்மா.. மச்சான் நா அப்ரம் வரேன்டா.. பாத்துக்கோ”ராசு மனம் கேளாமல் கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான்.. செந்தூரா ஏதும் பேசாமல் காலிக் கோப்பைகளை எடுத்து கொண்டு அடுப்படிக்கு சென்றாள்.. நீரன் என்ன சொல்லி அவளை சமாதானப் படுத்துவது என்று யோசித்துக்கொண்டே படுத்திருக்க அந்த வேளையில் அவன் வயிற்றில் சுளீர் என்று ஒரு வலி.. வயிற்றை கலக்க ஆரம்பித்ததும் தட்டுத்தடுமாறி எழுந்து கழிவறைக்குச் சென்றவன் அப்பொழுது உணர்ந்து கொண்டான் இது அவன் மனைவியின் கைகாரியம் என்று.. அடித்து துவம்சம் பண்ணி ஒருவழியாக தவழ்ந்த நிலையில் கட்டிலில் விழுந்தவன் ராசுவிற்கு அழைத்தான்..

“மச்சான் எங்கடா இருக்க”

“வீட்டுக்கு வரும் போது லேசா கலக்க ஸ்டார்ட் பண்ணிச்சு மச்சான். அத கண்டுக்காம வீட்டுக்கு வந்தேன்.. வண்டிய கூட ஸ்டாண்ட் போட்டு நிறுத்துல கலகுனிச்சு பாரு ஒரு கலக்கு.. கக்கூஸ்ஸுக்கு வர குள்ள கொஞ்சூண்டு வேட்டியிலயே போய்ட்டேன் மச்சான்.. இவ்ளோ நேரம் கக்கூஸ்ல இருந்து ஜஸ்ட் ஒரு நிமிஷம் முன்னாடி தான் வெளிய வந்தேன்.. நீ”

“நானும் தான் மச்சான்”

“இது சத்தியமா அந்த பொம்பள ஹல்க் பாத்த வேல தானே.. உண்மய சொல்லிட்டியா”

“அத சொன்னதுக்கு தான் சாட்டய எடுத்து என்ன உரிச்சு எடுத்துபுட்டு சுடுதண்ணி வெச்சு ஒத்தடம் கொடுத்து சோபால படுக்க போட்டு ரொம்ப வேர்க்குதேன்னு குளிக்க போனா..அப்பதான் உன்ன வர சொல்லி என்ற போன்ல இருந்து மெசேஜ் பண்ணிருப்பா போல”

“மச்சான் உன்ன உரிச்சா சரி..வை மீ மேன்”

“நீயும் தானடா இதுக்கு ஒடந்த..கட்ன புருஷனால அடிச்சு வைத்தால போறதுக்கு காபி கொடுத்துருக்கா.. நீ அல்லக்கைனால வெறும் காபியோட நிறுத்திருக்கா.. என்ன மச்சான் சலசலப்பு சத்தம் ஜாஸ்தியா கேக்குது..”

“நீ சொல்றப்பையே கலக்க ஆரம்பிச்சிடுச்சு மச்சான்.. எதுவா இருந்தாலும் வந்து பேசுறேன் போன வையு”.. நீரனுக்கும் கலக்க அவனும் கழிவறைக்கு ஓடினான்.. வெகு நேரம் கழித்து தட்டுத் தடுமாறி ஹாலுக்கு வந்தவன் அங்கே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த செந்தூராவை

” ஏன்டி இப்படி பண்ண.. வெறி புடிச்ச மாதிரி அப்படி அடிச்சல்ல.. பொறவு என்ன மயித்துக்கு பேதி மருந்த காபியில கலந்த.. அடிபட்ட உடம்பு இப்ப இதை எப்படிடீ தாங்கும்”

“ம்ம்ம் நேத்து விதவிதமா என்ன செய்யும் போது தாங்குன உடம்பு இந்த அடிக்கும் நாலைஞ்சு வாட்டி பாத்ரூம் போனத்துக்குமா தாங்காது.. அதெல்லாம் தாங்கும்..ஹான் அப்றம் நா போறேன்.. சமைச்சு வெச்சிருக்கேன் ஒழுங்கா எடுத்து முழுங்கு”

“ஹேய் செர்ரி எங்கடி போற”

“உன்ற சுயநலத்துக்காக என்னிய யூஸ் பண்ண உனக்கு என்ன கேள்வி கேக்க உரிம இல்ல நீரா.. நீ ஒரு செல்ஃபீஸ்..உன்ற கேடு கேட்ட குடும்ப ரத்தம் தானே உன்ற உடம்புலயும் ஓடுது.. உண்மயா என்ன லவ் பண்ணிருந்தா இப்டி பண்ண மனசு வருமா.. சரி வேற வழியில்ல.. அப்பவும் நீ என்ன பண்ணிருக்கணும்.. என்ற கிட்ட சொல்லிருக்கணும்.. இந்த மாறிடி இப்டி இப்டி என்ற குடும்பத்து மேல சாபம் இருக்குனு சொல்லிருக்கணுமா இல்லயா..அப்டி சொல்லிருந்தா உன்ற நேர்மய பாராட்டிருப்பேன்..என்ற நீரன நெனச்சு கர்வப்படிருப்பேன்.. ஆனா நீ சீ.. இத்தன நாளு நா என்ன நெனச்சிட்டு இருந்தேன் தெரியுமா..எங்கப்பாக்கு உன்ற நெலத்து மேல கண்ணு. ரொம்ப வருசமா உன்ற அப்பா கிட்ட கேட்டுகிட்டே இருக்காரு.உங்கப்பா கொடுக்கவே இல்ல.. அதனால பொது எடத்துல பாக்குற நேரம் அவமான படுத்துவாரு.. நெறைய எடஞ்சல் கொடுத்தாரு.. அதெல்லாம் மனசுல வெச்சிக்கிட்டு தான் எங்கப்பாவ பழிவாங்க என்னிய கல்யாணம் பண்ணேனு நெனச்சேன். இல்ல நா உன்ன சுட்டதால கூட இருக்கும்னு நெனச்சேன்.. ஆனா இப்டி நெனைக்கவே இல்லயே நீரா.. உனக்கு என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துச்சு..என்ன புடிக்கலையா.. நா அழகா இல்லையா.. என்ற காதல் பொய்யின்னு நெனைக்குறியா..இப்டி தான் சாபனு நீ சொல்லிருதா நா என்ற உசுர கூட கொடுத்துருப்பேனே நீரா.. ஏன் சொல்லல.. ஏன்”.. அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமர்ந்த இடத்திலிருந்தே அவனை நேர் பார்வை பார்த்து அவள் கேள்விகளை கேட்க என்னவென்று பதில் சொல்லுவான்..

தலைகுனிந்து அமர்ந்திருந்தான் நீரன்.”சரி எல்லாம் வுடு.. கல்யாணம் பண்ணிட்ட.. நேத்து நமக்குள்ளார அது நடந்துச்சே அப்பயாச்சும் நீ சொல்லிருக்க வேணா..ஓ எப்டி சொல்லுவ நீரா.. நீயும் ஆம்பள தான.. உங்க பொருக்கி குடும்ப ரத்தம் உனக்குள்ளயும் ஓடுதுல.. படுத்து ஒரு புள்ளய கொடுத்து நானும் ஆம்பளடா ஒரு புள்ளய பெத்துட்டேன்னு ஊரு சனம் முன்னாடி காட்டிக்கணும். எந்த பாவமும் செய்யாத நானு நாண்டுக்கிட்டு பாடையில போனும் அதானே..”

“ஹேய் இல்லடி நா சொல்றத”

“இல்லன்னா வேற எப்டி ஆஹான் பொம்பள சொகம்.. என்னங்க ஜமீனு நேத்து நானே வந்து கட்டிகிட்டதும் கட்டுப்படுத்த முடியல போல.. அதான் பாஞ்சிட்டிங்களா..எப்டி நீங்க நெனச்ச மாறி ஒத்துழைச்சேனா..திருப்தியா இருந்துச்சா இல்ல பாதி திருப்தி தான் ஆச்சா.. எனக்கு படிப்புல இருந்து ஆர்வம் செக்ஸ்ல இல்ல.. அரசல் புரசளா ஃப்ரண்ட்ஸ் பேசிக்குறது காதுல விழும்.. ஆம்பளைங்களும் உங்க ஆணுறுப்ப சுவைச்சா ரொம்ப புடிக்குமாமே.எனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. அந்த குறை என்னத்துக்கு உங்களுக்கு.. வாங்க வந்து இப்டி படுங்க. அதையும் செஞ்சிட்டு நா போய்ட்டே இருக்கேன்.. எப்படியும் நா ஒரு புள்ளைய பெத்து கொடுத்தா உங்களுக்கும் அது ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும் தான் யூஸ் ஆகும்.. பாவம் இந்த ஆசய எங்க போயி தீத்துக்குவிங்க.. ம்ம்ம் ச்சு.. வாங்க நீரா நா ரெடியா இருக்கேன்”நீரன் சலனமற்ற பார்வையோடு அவளை நெருங்கி வந்து அருகில் அமர்ந்து கொண்டான்..

இருவரும் பார்வையை விலக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..நீரன் அவளின் பின் கழுத்தில் கையை விட்டு தன் முகத்தருகே இழுத்து இவ்வளவு நேரம் தன்னை கேவலமாக பேசிக்கொண்டிருந்த இதழ்களை வன்மையாக சிறைப்பிடித்தான்.. செந்தூரா அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளினாள்.. அவன் பின்னந்தலையில் கை வைத்து அவன் கையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தில் அங்கு சில முடிகள் அவள் கையோடு வந்தது.. அவனது நெஞ்சிலும் கழுத்திலும் தனது நகங்களை வைத்து காயப்படுத்தினாள்.. ரத்தம் வரும் அளவுக்கு அவன் கையிலும் நெஞ்சிலும் கில்லி வைத்தாள்.. இவ்வளவு அவள் வேதனை கொடுத்தும் அவன் அசராமல் அவள் இதழ்களை வன்மையாக சிறை பிடிப்பதாக எண்ணி கொண்டு மென்மையாக முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.. ஒருகட்டத்தில் அவளாலே முடியாமல் அவனுள் அடங்கி போனாள் .. அவர்களின் முத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. அவளை விட்டு விலகியவன் தன்னுடைய உதட்டை அவள் உதட்டில் உரசும் படி

“நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோ.. இதுக்கெல்லாம் நா கோபப்பட மாட்டேன். என்ன பேசிட்டு நீ மட்டும் சந்தோஷமாவா இருக்க போற.. இந்த வாய் என்கிட்ட வீராப்பு பேசும் ஆனா இந்த கண்ணுக்கு என்ன காதலிக்க மட்டும் தான் தெரியும்.. நீ பேசு செல்லம்.. உன்ற மனசுல இருக்குற எல்லாத்தையும் எவ்வள முடியுமோ அவ்வளவும் கழுவி ஊத்து.. என்ன எவ்வளவு முடியுமோ அவ்வள கேவலமா பேசு..ஆனா என்ற கூட சேர்ந்து உன்னயும் நீ கேவலப்படுத்தி பேசாத.. நான் செஞ்சது தப்புதான்.. இல்ல தப்பு கூட இந்த பெரிய பாவம்..எனக்கு வேற வழி தெரியல செந்தூரா.. ஒரு அப்பாவி பொண்ண கல்யாணம் பண்ணி எதுவுமே சொல்லாம அவ கூட குடும்பம் நடத்தி எனக்கு ஒரு வாரிச அவகிட்ட என்னால பெத்துக்க முடியும்.. ஆனா இந்த சாபம் நாளைக்கு என் பையனுக்கும் வரும்.. இதுக்கு ஒரு முடிவே இல்லாம போய்ட்டே இருக்கும்.. எனக்கு தெரிஞ்சு உண்மையான காதல் என்ற செந்தூரா என்ற மேல வச்சிருக்கிற காதல்.. இந்த உலகத்திலயே ஏன் இந்த பிரபஞ்சத்திலயே இப்படி ஒரு காதல யாருமே பாத்துருக்க மாட்டாங்க.. நான் உன்ற மேல வச்சிருக்கிற காதல விட நீ என்ற மேல சொல்லவே முடியாத அளவுக்குபாசம் வெச்சிருக்க.. இப்படி ஒரு காதலால மட்டும்தான் அந்த சாபத்திலிருந்து விமோசனம் அடைய முடியும்.. இப்போ நீ என்ற மேல வச்சிருக்குற மாதிரி அந்த ராணியும் அவங்க புருஷன் மேல பாசம் வெச்சிருந்தாங்க..

இந்த மாதிரி கண்மூடித்தனமான காதலால தான் இப்படி ஒரு சாபமே வந்துச்சு..இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல.. வா டாக்டர் கிட்ட போயி உனக்கு ஒரு இன்ஜக்ஷன் போட்டுக்கலாம்.. நான் உனக்கு டிவோஸ் தரேன்.. என்ன டிவோர்ஸ் பண்ணிட்டு உன்ற அப்பா சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கோ..ராசு அவன் தலையெழுத்து இப்படித்தான் இருக்கணும்னா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்.. என்ன மன்னிச்சிடு செந்தூரா.. உன்ற புருஷனுக்காக நீ பொத்தி பொத்தி வைச்சிருந்த உன்னோட கன்னித்தன்ம என்னால போகணும் எழுதியிருக்கு.. நீ எங்கேயும் போக வேணா.. நா போயி வக்கீலை பார்த்துட்டு அப்படியே டிவோர்ஸ்க்கு என்ன எப்படின்னு கேட்டுட்டு வரேன்.. லேட் ஆச்சுனா சாப்ட்டு தூங்கு”நீரன் அவள் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருப்பதை பார்த்து அவளின் உச்சியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு உடைமாற்றி வெளியே சென்றான்.. அவன் சென்றது அவள் பார்வை வட்டத்தில் விழுந்தாலும் அவனை தடுப்பதற்கு அல்லது அவனிடம் ஏதாவது பேசுவதற்கு திராணியற்று சிலைபோல் அப்படியே அமர்ந்திருந்தாள் செந்தூரா..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்